எறால் மசாலாக் கறி
கடல் உணவிலேயே அனைவருக்கும் பிடித்தமானது 'இறால்' உணவுதான். முட்கள் பிரச்சனை, இரண்டு கையிலும் இழுத்துப் பிடித்து கஷ்டப்படுதல் என்றெல்லாம் இல்லாமல், எளிதாய் சாப்பிட வசதியான, சுவையான உணவு. சுவையைப் போல விலையும் சற்று அதிகம்தான்.
தேவையானவை
எறால் - ஒரு கிலோ
எண்ணெய் - அரை கப்
பூண்டு விழுது - நான்கு தேக்கரண்டி
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி (நறுக்கியது) - 2 கப்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
சீரகம் - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - அரைத்தேக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கால அளவு: 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
வழங்கியவர்: திருமதி. ஜீவா மோகன்தாஸ், சென்னை.
தேவையானவை
எறால் - ஒரு கிலோ
எண்ணெய் - அரை கப்
பூண்டு விழுது - நான்கு தேக்கரண்டி
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி (நறுக்கியது) - 2 கப்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
சீரகம் - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - அரைத்தேக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் எறால்களை தோல் நீக்கி, நன்கு கழுவிச் சுத்தம் செய்து, நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை தோலுரித்து, சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- கறிவேப்பிலையை கழுவிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காய்த் துருவலை சிறிது தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- சீரகம், வெந்தயம், மிளகு அனைத்தையும் சேர்த்து அம்மியில் வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடேறியதும், மிதமான சூட்டில் வெங்காயத்தினைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
- அத்துடன் பூண்டு, இஞ்சி விழுதினைச் சேர்க்கவும். அதில் உள்ள நீர் ஆவியாகும் வரை வதக்கவும்.
- பிறகு தக்காளியும் உப்பும் சேர்த்து, சற்று தீயை அதிகமாக்கி வதக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- தக்காளி நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து, தேங்காய் விழுது, கறிவேப்பிலைப் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பிறகு அதில் எறால்களைச் சேர்த்து, நன்கு கலக்கி, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தீயை சற்று அதிகப்படுத்தி மிதமாக வைத்துக் கொள்ளவும்.
- மிகவும் வற்றியது போல் இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். எறால்கள் நன்கு வேகும் வரை தீயில் வைத்து இருக்கவும்.
- எறால்கள் வெந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
கால அளவு: 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
வழங்கியவர்: திருமதி. ஜீவா மோகன்தாஸ், சென்னை.

0 Comments:
Post a Comment
<< Home