மக்மல் பூரி
பூரி என்ற பெயரில் ஒரு இனிப்பு வகை இது. குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவர். மாலை நேர தேனீர் விருந்துகளுக்குத் தோதான பட்சணம்.
தேவையானவை
மைதா மாவு - கால் கிலோ
சர்க்கரை - கால் கிலோ
தேங்காய் - 1 மூடி
அரிசிமாவு - 50 கிராம்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - ஒரு சிட்டிகை
கலர் பவுடர் - அரைத்தேக்கரண்டி
செய்முறை
தேவையானவை
மைதா மாவு - கால் கிலோ
சர்க்கரை - கால் கிலோ
தேங்காய் - 1 மூடி
அரிசிமாவு - 50 கிராம்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - ஒரு சிட்டிகை
கலர் பவுடர் - அரைத்தேக்கரண்டி
செய்முறை
- தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
- தேங்காய் பாலை மைதா மாவில் ஊற்றி, உப்பு சேர்த்து பூரி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசிமாவில் நெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- மைதா மாவு உருண்டைகளை பூரி போல் தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பூரி மேல் சிறிது அரிசிமாவைத் தடவி அதன்மீது மற்றொரு பூரியை வைக்கவும்.
- அதன்மீதும் அரிசி மாவினைத் தடவி மேல் மற்றொரு பூரியை வைக்கவும். இப்படியே ஐந்து பூரிகளை வைக்கவும்.
- அதனை சேர்த்து உருளையாக உருட்டவும். பிறகு அதனைக் குறுக்காக 3 அல்லது 4 துண்டுகளாக வெட்டவும்.
- ஒவ்வொரு துண்டையும் பூரி கட்டைக் கொண்டு, வெஜிடபிள் பப்ஸ் தோற்றத்திற்கு லேசாக தேய்த்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு தண்ணீராக இல்லாமல் கெட்டியாக இருக்குமாறு காய்த்துக் கொள்ளவும்.
- பாகில் கலர் பொடியைச் சேர்த்துக் கொள்ளவும். பொரித்து வைத்துள்ள பூரித் துண்டுகளை எண்ணெய் வடித்து பாகில் போட்டு எடுக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home