அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Tuesday, December 21, 2004

அசோகா

அல்வாவிற்கும், கேசரிக்கும் இடைப்பட்டப் பதம். சுவையில் இரண்டினையும் மிஞ்சி நிற்பது.

தேவையானவை

பாசிப்பருப்பு - ஒரு கப்
தண்ணீர் - இரண்டரை கப்
சர்க்கரை - இரண்டு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
நெய் - ஒன்றரை கப்
முந்திரிப்பருப்பு - 15
கிஸ்மிஸ் - 10
கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை
சாரப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி
ஜாதிக்காய்ப்பொடி - அரைத்தேக்கரண்டி

செய்முறை

  • பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பைக் கழுவிப் போட்டு, இரண்டரைக் கப் தண்ணீர் விட்டு, வெயிட் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
  • பருப்பு நன்றாக குழைவாக வேகவேண்டும். வெந்த பருப்பில் சர்க்கரைச் சேர்த்து, அது கெட்டியாக துவங்கியதும் கீழே இறக்கி வைக்கவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், சலித்த சுத்தமான கோதுமை மாவைப் போட்டு வறுக்கவும்.
  • அந்த மாவுடனேயே முந்திரி, திராட்சை, சாரப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து விடவும்.
  • மாவின் மீது சிறிது தண்ணீர் தெளித்தால் "னொய்" என்ற சப்தம் வரும். அதுவே சரியான பதம்.
  • அப்படி சரியான பதம் வந்த பிறகு இறக்கி, பாசிப்பருப்புக் கலவையில் கொட்டிக் கிளறவும்.
  • அத்துடன் கேசரிக்கலர் சேர்த்து, மீதமுள்ள நெய்யையும் ஊற்றி,ஏலப்பொடி, ஜாதிக்காய்ப்பொடியையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிடவும்.

0 Comments:

Post a Comment

<< Home