கோவா பொங்கல்
இந்தக் குறிப்பினைக் கொடுத்ததும் நாகை நாராயண அய்யர் அவர்களே. ஒரு பரீட்சார்த்தமான முயற்சியில் கிடைத்த இந்த உணவு, பிற்பாடு அனைத்து விசேசங்களிலும் தவறாது இடம் பெரும் உணவாகிவிட்டது.
தேவையானப் பொருட்கள்
பாசுமதி அரிசி - அரைக் கிலோ
கோவா(சீனி சேர்க்காதது) - 350 கிராம்
சீனி - ஒரு கிலோ
நெய் - 300 கிராம்
முந்திரி - 25 பருப்புகள்
திராட்சை - 20
குங்குமப்பூ - இரண்டு சிட்டிகை
செய்முறை
தேவையானப் பொருட்கள்
பாசுமதி அரிசி - அரைக் கிலோ
கோவா(சீனி சேர்க்காதது) - 350 கிராம்
சீனி - ஒரு கிலோ
நெய் - 300 கிராம்
முந்திரி - 25 பருப்புகள்
திராட்சை - 20
குங்குமப்பூ - இரண்டு சிட்டிகை
செய்முறை
- அரிசியைக் களைந்து பொங்கல் வைக்கும் பதத்திற்கு நீர் விட்டு கொதிக்க விடவும்.
- கோவாவை ஒரு வாணலியில் இட்டு நன்கு சுண்ட வதக்கிக் கொள்ளவும். அரிசி வெந்து கொதிக்கும் போது கோவா மற்றும் சீனியைப் போட்டு நன்குக் கிளறவும்.
- இனிப்பினை விரும்புகின்றவர்கள் இன்னும் ஒரு கால் கிலோ சீனியைச் சேர்த்துக் கொள்ளலாம்.
- கோவாவை வதக்காமல் போட்டால் பொங்கல் மிகவும் நீர்த்து, இளகிப் போகும். சீனி வேறு சேர்ப்பதால் அதுவும் நீர்த்துப் போகச் செய்யும்.
- சீனி கரைந்து சாதத்துடன் கலந்ததும், முக்கால் பாகம் நெய்யினை ஊற்றி கிளறிவிட்டு தீயைச் சற்றுக் குறைத்துக் கொள்ளவும்.
- மீதமுள்ள நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து, நெய்யுடன் சாதத்தில் கொட்டிக் கிளறிவிடவும். குங்குமப்பூவினையும் சேர்த்துக் கொள்ளவும்

0 Comments:
Post a Comment
<< Home