அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Sunday, February 20, 2005

கசோடி

பெயரே வித்தியாசமா இருக்கு இல்ல? வட இந்திய அயிட்டம் இது. 'காரக் கொழுக்கட்டை' ன்னு நாம சொல்லிக்கலாம்.

தேவையானப் பொருட்கள்

மைதா - அரைக் கிலோ
பாசிப்பருப்பு - 125 கிராம்
டால்டா - 150 கிராம்
எண்ணெய் - ஒரு கிலோ
மிளகாய்த்தூள் - 25 கிராம்
மல்லித்தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரைத் தேக்கரண்டி
சோம்புத் தூள் - அரைத் தேக்கரண்டி
மல்லித்தழை - அரைக் கட்டு
சோடா உப்பு - கால் தேக்கரண்டி

செய்முறை

பூரணம்:
  • பாசிப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு வடிகட்டி ஒன்றிரண்டாக வருமாறு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 75கிராம் எண்ணெய் ஊற்றி, அரைத்த பாசிப்பருப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சோம்புத்தூள், முக்கால் தேக்கரண்டி உப்பு ஆகிய எல்லாவற்றையும் கொட்டி 5 நிமிடத்திற்கு இளம் சூட்டில் கிளறவும்.
  • சட்டியை இறக்கி மல்லிக் கீரையை பொடியாக நறுக்கிப் போட்டு நன்கு கிளறி, உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.


  • மேல் மாவு:
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவினைக் கொட்டி, அதில் டால்டாவை உருக்கி ஊற்றி நன்கு தேய்த்துப் பிசறவும்.
  • அத்துடன் அரைத் தேக்கரண்டி உப்பு, சோடா உப்பு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் (தேவையெனில் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்)ஆகியவற்றைச் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.
  • பிறகு அவற்றை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையையும் நன்கு அகலமாகத் தட்டி அதற்குள் பூரணத்தை வைத்து மூடி உருட்டி மீண்டும் வடை மாதிரி தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள வடைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பாதாம் நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

0 Comments:

Post a Comment

<< Home