அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, April 01, 2005

கருப்பட்டி வடை

கருப்பட்டி வடை வாசனை ஊரையே விருந்துக்கு அழைக்குமாம். வாழைப்பழம், நெய், சர்க்கரை சேர்த்து இந்த வடையை பிசைந்து சாப்பிட்டால் சுவை இருமடங்கு அதிகரிக்குமாம். செய்து, ருசித்துப் பார்த்துவிட்டு உண்மையா என்று கூறுங்கள்.

தேவையானப் பொருட்கள்

உளுந்து - 200 கிராம்
கருப்பட்டி - 150 கிராம்
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சரிசிமாவு - ஒரு மேசைக்கரண்டி
பூவன் பழம் - ஒன்று
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - கால் லிட்டர் (பொரிக்க)

செய்முறை

  • உளுந்தையும் துவரம்பருப்பையும் நன்றாக கழுவி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
  • கருப்பட்டியைப் பொடிக்கவும். ஊறியப் பருப்பை ஒரு வடிதட்டில் தண்ணீர் போக வடிக்கவும்.
  • பிறகு கிரைண்டரில் உளுந்தையும், வாழைப்பழத்தையும் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும். அவ்வப்போது கையை தண்ணீரில் நனைத்து தள்ளி விட்டு கொண்டே இருக்கவும்.
  • பருப்பு பாதி அரை பட்டவுடன் கருப்பட்டியை சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும். கருப்பட்டி நீர்க்கும் என்பதால் தண்ணீர் விடத் தேவையில்லை.
  • உளுந்து நன்றாக அரைப்பட்டு மாவு பந்து போல் வந்ததும் எடுத்து பச்சரிசி மாவும், உப்பும் சேர்த்து பிசையவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடானவுடன் மாவை மெல்லிய வடைகளாகத் தட்டி நடுவில் துளையிட்டு பொரித்து எடுக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home