அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Monday, April 04, 2005

தக்காளி தொக்கு

தயிர், எலுமிச்சை சாதங்களுக்கு மட்டுமன்றி இட்லி, தோசை, சப்பாத்தி மாதிரியான உணவுகளுக்கும் சரியான துணை பதார்த்தம் இது. ஒருமுறை செய்து பாட்டிலில் அடைத்து வைத்துவிட்டால் நீண்ட நாளைக்கு வரும். நீங்கள் உபயோகப்படுத்துவதைப் பொறுத்து.

தேவையானப் பொருட்கள்

தக்காளி - கால் கிலோ
மிளகாய்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
உப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை

  • வெறும் வாணலியில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதி வந்ததும், தக்காளிகளை போட்டு மூடி 3 நிமிடம் வேக விடவும்.
  • பின்பு ஆறவிட்டு தண்ணீரை வடித்து தக்காளியில் மேல் தோலை உரித்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வெறும் வாணலியை வைத்து நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி கடுகு போட்டுத் தாளிக்கவும்.
  • கடுகு வெடித்தவுடன் பெருங்காய தூள் சேர்த்து நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த தக்காளி விழுதை அத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • இதில் தனி மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு 2 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • இறுதியில் பூண்டை உரித்து நன்கு தட்டிப் போடவும்.
  • ஊற்றிய நல்லெண்ணெய் திரண்டு விழுதிலிருந்து வரும் வரை நன்கு கிளறி பின் இறக்கி வைக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home