அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Monday, April 18, 2005

அரிசி பருப்பு சுண்டல்

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - கால் கிலோ
பயத்தம் பருப்பு - 200 கிராம்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி துருவியது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் அரிசி, பயத்தம் பருப்பு இவற்றை வாணலியில் தனித்தனியே பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  • பின் வேறொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • கொதித்த பின் வறுத்து வைத்துள்ள அரிசி, பயத்தம் பருப்பு இவற்றை போட்டு வேக விடவும்.
  • உப்பு தேவையான அளவு சேர்த்து அரிசி, பயத்தம்பருப்பு இவற்றை குழைய விடாமல் முக்கால் பதத்திற்கு10 நிமிடம் வேக விடவும். (தண்ணீர் இல்லை என்றால் சிறிது ஊற்றி கொள்ளவும்).
  • வெந்த பின் இதை வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், மிளகாய் (சிறியதாக நறுக்கிப் போடவும்) இவற்றை தாளித்து, வடிகட்டிய அரிசி பயத்தம் பருப்பில் போட்டு கிளறவும்.
  • பின் தேங்காய் துருவல் கறிவேப்பிலை இவற்றை போட்டு கிளறவும். இது சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

0 Comments:

Post a Comment

<< Home