குணுக்கு
திருமதி. மனோ சாமிநாதன் வழங்கிய காரம் இது. மயக்கும் மாலை பொழுதில் சூடாகக் கொறிப்பதற்கு சிறந்தது இந்த 'குணுக்கு'.
தேவையானப் பொருட்கள்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கை பிடி
கொத்தமல்லித்தழை - அரை கப்(பொடியாக அரிந்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேவையானப் பொருட்கள்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கை பிடி
கொத்தமல்லித்தழை - அரை கப்(பொடியாக அரிந்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் தனித்தனியே போதுமான நீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
- பிறகு அரிசி மூழ்கியுள்ள நீரை இறுத்து வற்றல் மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து மசிய அரைக்கவும்.
- பின் பருப்புக்களை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து ஒன்று பாதியாக அரைத்தெடுக்கவும்.
- வெங்காயங்களை மெல்லியதாக, நீளமாக அரிந்து இந்த மாவில் கொத்தமல்லி, கறிவேப்பிலையுடன் சேர்த்துக் கலக்கவும்.
- எண்ணையை வாணலியில் ஊற்றி சுடவைக்கவும்.
- மாவை சிறுசிறு துணுக்குகளாய் எண்ணெய் கொள்ளும் வரை போட்டு பக்கோடா போல பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

1 Comments:
At 8:34 PM, Anonymous said…
superb!!!!!!!
my mother prepared this, last week.we all liked this very much
Thank U
Post a Comment
<< Home