அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Sunday, April 24, 2005

குணுக்கு

திருமதி. மனோ சாமிநாதன் வழங்கிய காரம் இது. மயக்கும் மாலை பொழுதில் சூடாகக் கொறிப்பதற்கு சிறந்தது இந்த 'குணுக்கு'.

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கை பிடி
கொத்தமல்லித்தழை - அரை கப்(பொடியாக அரிந்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் தனித்தனியே போதுமான நீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு அரிசி மூழ்கியுள்ள நீரை இறுத்து வற்றல் மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து மசிய அரைக்கவும்.
  • பின் பருப்புக்களை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து ஒன்று பாதியாக அரைத்தெடுக்கவும்.
  • வெங்காயங்களை மெல்லியதாக, நீளமாக அரிந்து இந்த மாவில் கொத்தமல்லி, கறிவேப்பிலையுடன் சேர்த்துக் கலக்கவும்.
  • எண்ணையை வாணலியில் ஊற்றி சுடவைக்கவும்.
  • மாவை சிறுசிறு துணுக்குகளாய் எண்ணெய் கொள்ளும் வரை போட்டு பக்கோடா போல பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

1 Comments:

  • At 8:34 PM, Anonymous said…

    superb!!!!!!!
    my mother prepared this, last week.we all liked this very much
    Thank U

     

Post a Comment

<< Home