மனோகரா போளி
மனோகரம் என்றால் பூந்தி கொண்டு செய்யப்படும் லட்டுவின் பெயராம். இது லட்டு கொண்டு (லட்டை உடைத்து பூந்தியாக்கி) செய்யப்படும் போளி. போளிக்குள் பூந்தி என்று கவித்துவமாக(!) பெயர் வைக்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன்.
தேவையானப் பொருட்கள்
லட்டு அல்லது பூந்தி - 200 கிராம்
தேங்காய் துருவியது - கால் கப்
ஏலக்காய் - 4
மைதா மாவு - கால் கிலோ
நல்லெண்ணெய் - 50 கிராம்
கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை
தேவையானப் பொருட்கள்
லட்டு அல்லது பூந்தி - 200 கிராம்
தேங்காய் துருவியது - கால் கப்
ஏலக்காய் - 4
மைதா மாவு - கால் கிலோ
நல்லெண்ணெய் - 50 கிராம்
கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை
- மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் கேசரிப்பவுடர், உப்புத்தூள், கால் கப் தண்ணீர் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி எல்லாவற்றையும் நன்றாகச் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- நன்கு பிசைந்து மாவினை இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
- தேங்காய் துருவல், ஏலக்காய், உடைத்து போட்ட லட்டுகள் எல்லாவற்றையும் மிக்ஸியில் சுழற்றி எடுத்து ஒரு வாணலியில் கொட்டி லேசாக சூடு படுத்தவும்.
- ஆற விட்டு சிறுசிறு உருண்டைகள் செய்து வைக்கவும்.
- அதே போல மைதாவை கொஞ்சம் பொரிய உருண்டைகளாக செய்து கையினால் விரித்து, கொழுக்கட்டைகளுக்கு பூரணம் வைப்பது போல் உள்ளே பூந்தி கலவையை வைத்து மறுபடியும் உருட்டிக் கொள்ளவும்.
- உருண்டைகளை ஒரு வாழை இலையில் வைத்து வட்டமாக தட்டி எடுத்து, தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊற்றி, இறுபுறமும் பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும்.

1 Comments:
At 3:37 AM, துளசி கோபால் said…
மகனே மனோகரா பொங்கி எழு:-))))
Post a Comment
<< Home