அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Wednesday, May 11, 2005

முத்துப் புலவு

தேவையானப் பொருட்கள்

ஜவ்வரிசி - அரை கிலோ
உப்பு - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - பாதி
பட்டை - 2
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - சிறிது
பிரிஞ்சி இலை - சிறிது
நெய் - 100 கிராம்
ரவை - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்

செய்முறை

  • ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு அதை குளிர்ந்த தண்ணீரில் 2 மணி நேரம் ஊற விடவும். பிறகு அதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  • முந்திரிப்பருப்பை பொடி செய்யவும். இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகத்தை ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விடவும்.
  • எல்லாம் சேர்த்து கொதித்ததும் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு 10 நிமிடம் கழித்து, வெந்த ஜவ்வரிசி போட்டு முந்திரிப் பருப்பு தூளைப் போட்டு நன்கு கிளறி விட்டு இறக்கவும்.
  • இதுவே முத்துப்புலவு இதை வெஜிடபுள் சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

0 Comments:

Post a Comment

<< Home