இணையத்தில், தென்னிந்திய உணவுகள்
குறித்து ஏதேனும் தேடுதல் நடத்தியவர்களுக்கு திருமதி. மனோ சாமிநாதன்
அவர்களின் பெயர் மிகவும் பரிச்சயமானதாக இருக்கும். அதிகம் அறிந்திராதவர்களுக்கு
இவரைப் பற்றி ஒரு சிறு முன்னுரை.
தஞ்சை மண்ணில் பிறந்த இவர், கடந்த 29 ஆண்டுகளாக வசிப்பது வளைகுடா
நாடாகிய "ஷார்ஜா"வில். கணவர் திரு. சாமிநாதன் அங்கு ஒரு தென்னிந்திய
உணவு விடுதியினை நடத்தி வருகின்றவர். ஒரே அன்பு மகன் திரு. மதன்மோகன்,
சுவிட்ஸர்லாந்தில் உணவுவிடுதி மேலாண்மை துறையில் முதுகலை பட்டப்படிப்பு
படித்துவிட்டு, தற்போது துபாயில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில்
பணியாற்றி வருகின்றார். இப்படி குடும்பமே உணவுத்துறையில் இருக்க,
அவரது சிந்தனை, நோக்கம் எல்லாம் எப்போதும் உணவுப் பற்றின ஆராய்ச்சியிலேயே
இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதோடு மட்டுமன்றி, எஞ்சிய நேரங்களில்
இவரது பொழுதுபோக்குகளாய் ஓவியம், தையல், இசை, கிரிக்கெட் ஆகியவற்றை
வைத்துள்ளார். |
 |