| ஆந்திர உணவுகள் நாவில் மட்டுமல்ல,
கண்களிலும் நீரை வரவழைக்ககூடியவை. காரணம், அதில் சேர்க்கப்படும் அதிகப்படியான
காரம். பெரும்பாலான ஆந்திர மக்கள் காரம் அதிகம் சேர்ப்பதை விரும்புகின்றனர்.
ஆந்திர ஆவக்காய் ஊறுகாய், கோங்குரா சட்னி, பருப்புப் பொடி இவையெல்லாம்
ஆந்திர மக்களின் அன்றாட உணவில் தவறாது இடம் பெறுபவை. தலைநகர் ஹைதராபாத்
மொகலாய உணவுகளான கபாப் மற்றும் பிரியாணிக்கு பெயர் போனது. |