தேவையானப் பொருட்கள்
- புரோகோழி - 1 பெரியது (500 g)
- மாஜரின் - 1 மே.க
- உப்பு - 1/2 தே.க
- தண்ணீர் - 1/2 டம்ளர்
|
செய்முறை
- புரோக்கோழியை அப்படியே பெரிய பெரிய மொட்டாக தண்டுடன் வெட்டவும். கீழ்த் தண்டையும் பாதியாக பிளந்து வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்டுப்பகுதி கீழே நிற்கும்படியாக மொட்டுக்களை அடுக்கவும்.
- உப்பைத் தண்ணீரில் கரைத்து விடவும் .
- மாஜரினையும் போட்டு மூடியால் மூடி அடுப்பில் வைக்கவும்.
- தண்ணீர் நன்கு கொதித்தபின், 5 நிமிடங்கள் அடுப்பில் விடவும். பின் அடுப்பை நிற்பாட்டவும். மேலும் 5 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் மூடியை நீக்கி விடவும்.
- ஒரு தடவை மெதுவாக குலுக்கி, பிரட்டி விடவும்.
- தொடர்ந்து மூடியபடி இருந்தால் அவிந்து கரைந்துவிடும், சுவை போய்விடும்.
- கடும் பச்சை நிறமாக இருந்தால்தான் சுவையாக இருக்கும்.
- ஆறியதும் சாப்பிடலாம்.
|
குறிப்பு:
தண்டை மெதுவாக குத்திப் பார்த்தாலே தெரிந்துவிடும், அவிந்துவிட்டதா என்று. இதை பச்சையாககூட உண்கிறார்கள்.
வழங்கியவர்
அதிரா
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நிமிடங்கள் |
12 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -