topic_image


இரவு மீந்து போகும் பச்சரிசி சாதத்தை கொண்டு வடாம் /வற்றல் செய்ய முடியுமா? அப்படியானால் எப்படி செய்வது?


saadam vadaam
ஆகஸ்டு 4, 2007 - 11:13pm - வழங்கியவர் Shanthi

அன்புள்ள யுவரானிக்கு,
தாரளமாக சாதத்தில் வற்றல் செய்யலாம்.
மீதமான சாதத்தை 4 பச்சை மிளகாய் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். புளிப்பு வேண்டுமானால் 1 லெமன் பிழிந்து வற்றலாக பிழியவும். நன்கு காய வைத்து எடுக்கவும்.

பச்சரிசி சாத வடாம்..
ஆகஸ்டு 18, 2007 - 6:55pm - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் யுவா,
எப்படியிருக்கே? எங்கே ஆளையே காணோம்? சாதத்தை நன்றாக கையால் பிசைந்து கொண்டு, பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், நசுக்கிய பூண்டு 2, நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து பிசைந்து, சிறிது சிறிதாக கிள்ளி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொரித்தெடுத்தால், சூப்பரா பக்கோடா போல் வரும்.
அன்புடன்,
செல்வி.

மீந்து போன சாதத்தில்
நவம்பர் 6, 2007 - 2:27pm - வழங்கியவர் Jaleela Banu

டியர் யுவராணி
இரவு மீந்து போன சாதத்தில் வற்ற்ல் செய்யும் முறை கூட்டஞ்சோறில் ஜலீலா என்ற குறிப்பில். அதில் பார்க்கவும்.
கொடுத்துள்ளேன்.
ஜலீலா

சோற்று வற்றல்
நவம்பர் 6, 2007 - 2:32pm - வழங்கியவர் Jaleela Banu

யுவராணி சோற்று வற்றல் என்று கொடுத்திருப்பேன்.
ஜலீலா