topic_image


புகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்?
கணவன், மாமனார், மாமியார், மற்ற உறவுகள், பிரச்சனையே இல்லை.

உங்களுடைய அனுபவத்தில் யாரால், எந்த மாதிரியான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தது. அதனை எப்படி சமாளித்தீர்கள் என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். அதேபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் மற்றவர்களுக்கு உங்கள் அனுபவங்களும், ஆலோசனைகளும் பயன் தரலாம்.

குறிப்பு:

இனி வரும் வாக்கெடுப்புகளின் தலைப்புகள் அனைத்தும் மன்றத்தில், இங்கே விவாதிக்கப்படும். வாக்கு மட்டும் அளித்தவர், தன்னுடைய சுய விளக்கத்தையும் அளிப்பதற்கு இந்த விவாதப் பக்கம் பயன்படும்.


சகோதரர் அட்மினுக்கு,
ஆகஸ்டு 29, 2007 - 4:17am - வழங்கியவர் thalika

வாக்களிப்பை பற்றின விவாதத்திற்க்கு மட்டும் நம்ம லாகின் பேர் இல்லாம யார் வேனா பேசர மாதிரி இருந்தா இன்னும் கொஞ்சம் பயமில்லாம மனசில இருக்கரது சொல்லலாம்..உங்களுக்கும் உன்மையான பதில் அப்ப நிறைய்ய கிடைக்கும்னு நினைக்கிரேன்...
அதாயது வாக்களிக்கும்போதே ஒரு பேஜ் ஓபெனாகி அங்கே comments நம்ம பேர் இல்லாம கொடுக்கரதா இருந்த கொஞ்சம் தைரியமா பேசலாம்..கை அரிக்கிது எழுத..ஆனா பயமா இருக்கு தப்பா நெனச்சுகாதீங்க..இது வெரும் சஜெஷன் தான்

பிரச்சனைக்கு வழிகள்
ஆகஸ்டு 29, 2007 - 5:31am - வழங்கியவர் admin

உங்களது பிரச்சனை புரிகிறது. யார் வேண்டுமானாலும் பதிவுகள் கொடுக்கலாம் என்று கொண்டுவந்தால், மிகவும் மோசமான பதிவுகள் எல்லாம் இங்கே விழும். கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம். பெயர்ப்பதிவு செய்யாமல் கருத்து தெரிவிக்கக்கூடிய விருந்தினர் பதிவேட்டை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியும். அதில் விழும் தேவையற்ற பதிவுகளை நீக்கவே தனியாக ஒரு ஆள் தேவைப்படுகிறது. சரி, உங்களது பிரச்சனைக்கு சில தீர்வுகள்.

1. பிரச்சனை உங்களது என்று சொல்லி கருத்து தெரிவிக்காதீர்கள். எனக்கு தெரிந்த தோழி ஒருவருக்கு.. என்று ஆரம்பிக்கலாம்.(இனி நீங்கள் உண்மையிலேயே உங்கள் தோழியின் பிரச்சனையை சொன்னாலும் யாரும் நம்பபோவதில்லை :-))

2. இந்த மாதிரி இடங்களில் பதிவுகள் கொடுப்பதெற்கென்றே தனியாக ஒரு பெயர் பதிவு செய்துகொள்ளுங்கள். (இப்படியும் சிலர் செய்கின்றனர். ஆனால் அட்மினை ஏமாற்றுவது மட்டும் கொஞ்சம் கஷ்டம்.)

3. இவை எல்லாவற்றையும் மீறி, நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்று சொல்லி, தைரியமாக வருவது வரட்டும் என்று உண்மையை உண்மையான பெயரில் எடுத்துரைக்கலாம். (உங்களுக்கு ஒரு பெரிய வசதி, வீட்டில வேற யாருக்கும் தமிழ் படிக்கத் தெரியாதுங்கிறது. அப்புறம் என்ன கவலை. சும்மா தூள் கெளப்புங்க.. அதுசரி, வோட்டிங்ல உங்க வாக்கு எதுக்கு? 1, 2, 3 or 4?)

Guess we got many more
ஆகஸ்டு 29, 2007 - 7:39am - வழங்கியவர் Dsen

Guess we got many more better things to do in this world than discussing abt such topics... Moreover, don't we have problems with our parents, siblings etc when we r with them?... but we still love them & many wouldn't like to talk such negative things abt them in a public forum... But somehow when it comes to our in-laws & family, attitude seems to be different... just my observation/view... This topic, to me, is in bad taste...

கலகம்
ஆகஸ்டு 29, 2007 - 7:46am - வழங்கியவர் thalika

அட ஆளப்பாரு...எங்க பக்கத்து வீட்டு பாட்டி சொன்ன மாதிரி நான் எல்லாத்துக்கும் குத்துவேன்

மாமியார்
ஆகஸ்டு 29, 2007 - 7:54am - வழங்கியவர் easwari

இதில் மாமியாருக்குதான் அதிக ஓட்டுகள் விழப்போவது நிச்சயமாக தெரிந்த ஒண்று. எனக்குகூட கலியாணம் ஆகி வந்த புதுசில் மாமியாருடன் ஒத்து வரவேயில்லை. ஆனா, கடந்த பதினைந்து வருடமாக எங்களுக்குள் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அவர் இறந்து 15 வருடங்கள் ஓடிவிட்டது. புகுந்த வீடு என்றாலே மாமியார் பிரச்சனை தானாகவே வந்துவிடும் போல தெரிகிறது. இந்த மன்றத்தில்கூட சகோதரிகள் சிலர் வருத்தப்பட்டு சில விசயங்களை சொல்லி இருந்தார்கள். எனக்கு வாழ்க்கையில் நடந்தவற்றையும் மற்றவர்கள் அனுபங்களை கேள்விப்பட்டும் அந்த மாமியார் என்ற வார்த்தையை கேட்டாலே மனதில் ஒரு பெண் ஹிட்லரின் உருவம்தான் வருகிறது. இதில் கொடுமை என்ன என்றால், அடுத்த வருடத்தில் நானும் மாமியார் ஆகிவிடுவேன். மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே ங்கிறது சும்மா சொல்லப்பட்டது அல்ல. அதில யோசிக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு. இப்படி மருமகளா இருந்து மாமியாராகிற பெண்கள் தன்களுக்கு வந்த கஷ்டங்களை வச்சு தங்களுக்கு மருமகளா வர்ற போறவகிட்டே நாம் எப்படி நடந்துக்கணும்னு நினைக்க மாட்டாங்களா? இப்ப நான் அப்படிதான் நினைக்கிறேன். நாளைக்கு எனக்கு மருமகளா வர்றபோறவகிட்ட என்கிட்டே என் மாமியார் நடந்துகிட்ட மாதிரி நடந்துக்க கூடாதுன்னு நினைக்கிறேன். அவங்க எப்படியெல்லாம் இருக்கணும்னு நான் நெனைச்சேன்னோ அந்த மாதிரி எல்லாம் நான் இருக்கனும்னு நினைக்கிறேன். ஆனா, நிஜத்துல என்ன நடக்கும்கிறதை இப்பவே சொல்ல முடியாது. நான் நல்லமாதிரி நடந்துகிட்டாலும் எனக்கு கொடுமைக்கார மாமியார் பட்டம் கிடைக்கலாம். காலம்காலமா எதிரிகள் மாதிரி இருக்கிற ஒரே ஒரு உறவு இந்த மாமியார், மருமகள் உறவுதான் போல இருக்கு. இதை சரிசெய்வதற்கு வழியே இல்லையா?

இந்த விவாதம் (ஓட்டெடுப்பு) தேவையா?
ஆகஸ்டு 29, 2007 - 5:48pm - வழங்கியவர் arrsekar

இந்த விவாதம் (ஓட்டெடுப்பு) தேவையா என்பது என்னுடைய பனிவான கேள்வி. இதே கருத்தை Dsen-ம் கூறி இருக்கிறார். (சென் சீன நாட்டினரா?) இந்த ஓட்டெடுப்பினால் என்ன லாபம்? இது போன்ற தலைப்பிலான் விவாதங்களோ, ஓட்டெடுப்புகளோ, சமுதாய முன்னேற்றத்தை தடை செய்யும் என்பது என்னுடைய கருத்து.
என்ன சொல்கிறீர்கள்?

அன்புள்ள DSen அவர்களுக்கு,
ஆகஸ்டு 29, 2007 - 5:52pm - வழங்கியவர் admin

அன்புள்ள DSen அவர்களுக்கு,

கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அது எங்கும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்துகின்றவன். உங்கள் தனிப்பட்ட கருத்தினை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால், அதற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கின்றேன்.

"இது போன்ற தலைப்புகளை விவாதிப்பதைவிட நாம் செய்வதற்கு சிறந்த விசயங்கள் உலகில் எவ்வளவோ உள்ளன" என்ற தங்களின் வார்த்தைகள் ஒருவரின் கோபத்தை எளிதில் தூண்டிவிடும் என்றாலும் நான் கோபப்படாமல் இதற்கு விளக்கம் அளிக்கின்றேன்.

முதலாவதாக, காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் நேரம் வரை, பயனுள்ள விசயங்களையே செய்து கொண்டிருக்கும் ஒருவரை கட்டாயப்படுத்தி, அடித்து இழுத்து வந்து இந்த உரையாடலில் தாங்கள் கலந்து கொண்டே தீரவேண்டும் என்று இங்கே யாரும் துன்புறுத்தவில்லை. இங்கே மன்றத்தில் பதிவுகள் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று இருக்கையில், இந்த பயனில்லாத விவாதத்தில் இப்படி ஒரு பதிவினைப் போட்டு தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்திருப்பதை காட்டிலும், அனைவருக்கும் பயனுள்ள புதிய விவாதங்களை மன்றத்தில் நீங்கள் தொடங்கியிருக்கலாம்.

இரண்டாவதாக, உலகில் உள்ள அனைவருக்கும் பயனுள்ள, சிறந்த விசயம் எது என்பதை தீர்மானிப்பவர் Dsen ஒருவர் மட்டுமே என்று இருந்தால், நான் இது போன்ற பதிவுகள் கொடுப்பதற்கு முன்பு அவரிடம் ஒரு அனுமதி வாங்கிவிட்டு வெளியிட்டு இருப்பேன். ஆனால், மனித ருசிகள் மாறுகின்றதே.. என்ன செய்வது? உங்களுக்கு வீண் என்று தோன்றும் சில விசயங்கள் மற்றவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளாக இருக்கிறது.

சரி இப்போது வாக்கெடுப்பிற்கான விளக்கம். எனக்கு வாக்கெடுப்பிற்கு ஆலோசனைகள் வழங்கி சகோதரிகள் சிலர் நிறைய தலைப்புகள் கொடுத்து இருந்தனர். கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஒரு சகோதரி அவருக்கு இருந்த வித்தியாசமான பிரச்சனையை குறிப்பிட்டு தனக்கு மட்டும்தான் இப்படியா என்பது போல் கேள்வி எழுப்பியிருந்தார். எனக்கும் அவரது பிரச்சனை நடைமுறையில் அதிகம் கேள்விப்படாததாக இருந்ததால் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் அவர் கொடுத்திருந்த தலைப்பை அப்படியே கொடுக்காமல் சற்று மாற்றி இந்த தலைப்பை கொடுத்தேன்.

இந்த மன்ற விவாதத்தின் நோக்கம்:

மேலே ஒரு சகோதரி குறிப்பிட்டு இருந்ததுபோல், இதில் மாமியார் என்பதற்குதான் ஓட்டுகள் அதிகம் விழும் என்பது நானும் எதிர்பார்த்ததுதான். இந்த ஒரு பிரச்சனை முற்றுபெறாத பிரச்சனையாக இருக்கிறது. நிறைய இடங்களில் காரணங்களே இல்லாமல் வெறும் ஈகோ பிரச்சனையாக இருக்கின்றது. பெரும்பாலான பிரச்சனைகள் மனம் சம்பந்தப்பட்டது.

இங்கே மன்றத்தில் கலந்து கொள்பவர்களில் நிறைய மருமகள்கள் இருக்கின்றனர். நிறைய மாமியார்களும் இருக்கின்றனர். பிரச்சனையே இல்லாமல் குடும்பம் நடத்துபவர்கள் தங்களால் எப்படி முடிகின்றது என்பதையும், பிரச்சனையுள்ளவர்கள் எந்த மாதிரி பிரச்சனைகள் எழுகின்றன, அதை எவ்வாறு அவர்கள் சமாளித்தார்கள் என்பது பற்றியும் நிறைய எழுதலாம். பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அதிலிருந்து மீள்வதற்கு வழிகள் கொடுக்கலாம். மற்றவர்களின் பிரச்சனைகளை கேட்கும்போது பிரச்சனை தனக்கு மட்டுமல்ல என்பது போன்ற ஒரு அற்ப ஆறுதல் அடையலாம். (இதைத்தான் தலைப்பு கொடுத்திருந்த அந்த சகோதரியும் கேட்டிருந்தார்.) சிலருக்கு மற்றவர்கள் பிரச்சனையை கேட்கும்போது நாம் பரவாயில்லை என்பது போன்ற ஒரு ஆறுதல் உணர்வு தோன்றும்.

உங்களது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி நீங்கள் வெளியிட்டுவிட்டாலும், உங்களது கருத்து அடுத்து இங்கே பதிவுகள் கொடுக்க வருபவர்களை யோசிக்க வைக்குமே என்ற எண்ணத்தில் இதை பதிய வேண்டியது அவசியமாகிறது.

விளக்கம் தேவை
ஆகஸ்டு 29, 2007 - 5:56pm - வழங்கியவர் admin

//சமுதாய முன்னேற்றத்தை தடை செய்யும் என்பது என்னுடைய கருத்து//

எப்படி என்பதை விளக்குவீர்களா?

இதோ என்னுடைய விளக்கம்
ஆகஸ்டு 29, 2007 - 6:17pm - வழங்கியவர் arrsekar

மனிதர்களுக்கு பிரச்சினைகள் இல்லாத இடம் ஒன்று உண்டு என்று கூறுவது மிகவும் கடினமாகும். ஒவ்வொரு இடத்திலும், காலகட்டத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொன்டுதான் இருக்கிறது. இது இப்படி இருக்கும்போது, ஏன் மாமியார்-மருமகள் பிரச்சினை பல ஆன்டுகளாக பெரிது படுத்தப்படுவதோடு, ஒரு கேலிப்பொருளாகவும் மாறி விட்டது. இது போன்ற கேலி துனுக்குகளும் மறைந்த பாடில்லை. இதனால், இன்றைய தலைமுறையினர், மாமியார் என்றாலே, ஏதோ எதிரியைப் பார்ப்பது போலவும், ஆரம்பத்திலயே அடக்கி வைக்காவிட்டால், தனக்கு ஆபத்து என்று நினைக்கின்றனர். இதே போலவே, மாமியார்களும் நினப்பதால்தான், பிரச்சினை பெரிதாகிற்து. இதை தடுக்க நம்மல் முடிந்த சிறு உதவியாக, இது போன்ற தலைப்புகளை தவிற்கலாம்.

நீங்களே சொல்லிட்டீங்க
ஆகஸ்டு 29, 2007 - 6:33pm - வழங்கியவர் vinnie

//ஏன் மாமியார்-மருமகள் பிரச்சினை பல ஆண்டுகளாக பெரிது படுத்தப்படுவதோடு, ஒரு கேலிப்பொருளாகவும் மாறி விட்டது. இது போன்ற கேலி துணுக்குகளும் மறைந்த பாடில்லை. இதனால், இன்றைய தலைமுறையினர், மாமியார் என்றாலே, ஏதோ எதிரியைப் பார்ப்பது போலவும், ஆரம்பத்திலயே அடக்கி வைக்காவிட்டால், தனக்கு ஆபத்து என்று நினைக்கின்றனர். இதே போலவே, மாமியார்களும் நினப்பதால்தான், பிரச்சினை பெரிதாகிற்து. //
நீங்களே சொல்லியிருக்கீங்களே இந்த காரணங்களுக்காகத்தான் இந்த விவாதம் அவசியமாகிறது. இதனால் நாம் பிரச்சனையை பெரிதாக்கவில்லை. ஒரு தீர்வு கிடைக்குமா என்றுதான் பார்க்கிறோம்.

நன்றி சேகர்
ஆகஸ்டு 29, 2007 - 6:39pm - வழங்கியவர் admin

உங்கள் பதிவில் உள்ள பாதி உண்மையை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இந்த பதிவின் நோக்கம் பிரச்சனையை பெரிது படுத்துவது அல்ல. பிரச்சனை இருப்பவர்களுக்கு தீர்வு கொடுப்பது. இது நிச்சயம் கேலி துணுக்கு அல்ல. இங்கே எந்த உறவையும் கேலி செய்ய விரும்பவில்லை.

பெயர் குறிப்பிட நான் விரும்பாவிடினும் மன்றத்தில் சிலர் தங்களது பிரச்சனைகளை ஏற்கனவே தெரியப்படுத்தி இருக்கின்றார்கள். அந்த பிரச்சனைகளுக்கு பலர் நல்ல தீர்வுகளையும் கொடுத்து இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக கூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.

நீங்களே குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். ஒருவரை ஒருவர் எதிரியாக பார்ப்பதால்தான் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றது என்று. நிச்சயம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், அவர்கள் அப்படி எதிரியைப் போல் பார்த்துக் கொள்வதற்கு காரணம் இது போன்ற விவாதங்கள் என்பதில் எனக்கு ஏற்பு இல்லை.

அப்படி அவர்கள் எதிரியாக பார்த்துக் கொள்ள காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை நாம் இங்கே ஆரோக்கியமாக விவாதிக்கலாம். அதில் தவறில்லையே.. இதனால் நாம் இழக்கப் போவது என்ன? இந்த ஆரோக்கிய விவாதங்களின் மூலம் இதனை படிக்கும் பலர் இருதரப்பையும் நன்கு புரிந்து கொள்ளலாமே. விவாதம் என்று தலைப்பிட்டுவிட்டதால் ஏதோ தரப்பு நியாயங்கள் எடுத்துரைக்கும் சண்டை என்ற எண்ணம் வந்துவிடுகிறதோ.. வேண்டுமானால் விவாதம் என்பதை மாற்றி கலந்தாலோசித்தல் என்று தலைப்பிடலாம் என்று எண்ணுகின்றேன்.

//ஏன் மாமியார்-மருமகள் பிரச்சினை பல ஆன்டுகளாக பெரிது படுத்தப்படுவதோடு, ஒரு கேலிப்பொருளாகவும் மாறி விட்டது//

பிரச்சனைகள் உண்மையில் இருப்பதால் அவை பெரிதுபடுத்தப்பட்டதா.. இல்லை பெரிது படுத்தப்பட்டதால் பிரச்சனைகள் உருவாகின்றதா என்று கேட்டால் கோழியா, முட்டையா கதையாகிவிடும்.

மாமியார் மருமகள் பற்றி உலகத்தில் ஒரு தவறான மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது, அதனால்தான் பிரச்சனைகள் வருகின்றது என்றால் நாம் அதனை இங்கே தெரிவிக்கலாமே.

ஆக மொத்தத்தில் இந்த பதிவின் தெளிவான நோக்கம் பிரச்சனைகள் இருப்பின் அதற்கு தீர்வு கொடுத்தலே. கண்டிப்பாக பிரச்சனைகளை பெரிதுபடுத்துவதற்கு அல்ல.

ஆச்சரியம்
ஆகஸ்டு 29, 2007 - 6:47pm - வழங்கியவர் admin

சகோதரி வானதி அவர்களுக்கு

இரண்டு பேரும் ஒரே கருத்தை ஒரே நேரத்தில் பதிந்திருக்கின்றோமே.!!

Great men think alike ன்னு சொல்வாங்களே.. இதுதானா?! :-)

பிரச்னையில்லாத விவாதம்...
ஆகஸ்டு 29, 2007 - 6:55pm - வழங்கியவர் senthamizh selvi

அன்புள்ள அட்மின் அவர்களுக்கு,
அருமையான விவாதத்தை கொடுத்துள்ளீர்கள். இன்று 90% வீடுகளில் நடக்கிறப் பிரச்னை. (இல்லை என்பவர்கள் பொய் சொல்லுகிறார்கள்). தொலைக்காட்சி மெகா தொடர்களே இதை நம்பித்தான் ஓ(ட்)டிக் கொண்டிருக்கின்றன! மேலும் தங்கள் வாக்கெடுப்பில் மாமியாரை விட பிரச்னைகளே இல்லை என்று சொல்பவர்களே அதிகம் பேர்களாகவுள்ளனர் (இப்போதைக்கு), எனவே இந்த வாக்கெடுப்பு தேவையற்றது என சொல்வது தேவையற்றது. இந்தப் பிரச்னைகளையும் தீர்வுகளையும் படிப்பவர்களாவது பின்னாளில் நல்ல மாமியார்களாகவும், இன்_லாஸ்களாகவும் விளங்க ஏதுவாகவிருக்குமே.
ஆங்கிலத்தில் வரும் பதிவுகள் நீக்கப்படும் என்று சொன்னதாக ஞாபகம். ஆனால் இன்னும் நிறையப் பதிவுகள் ஆங்கிலத்திலும், தமிங்கிலத்திலும் வந்த வண்ணமுள்ளது. தங்களுக்கு நேரமில்லையென்று நினைக்கிறேன், இருப்பினும் சகோதரிகள் தமிழில் எழுத சிறிதளவேனும் முயற்சி எடுத்துக் கொண்டாற்போல் தெரியவில்லையே. தமிழினிடையே இது போன்ற ஆங்கில மொழி கலப்பு என்னவோ போலுள்ளது. ஏதேனும் மாற்று ஏற்பாடு உள்ளதா? தவறேதுமிருந்தால் மன்னிக்கவும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

விவாதிப்போம்
ஆகஸ்டு 29, 2007 - 7:09pm - வழங்கியவர் vinnie

நீங்க ஒரு தனி ஆளாக (ஒரு நியாயமான கருத்துக்கு) போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். இந்த நேரத்தில் சகோதரி உதவாவிட்டால்... அதான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால் நீங்களும் அதையே விளக்கமாக எழுதியிருக்கீங்க.

ஆதரவிற்கு நன்றி
ஆகஸ்டு 29, 2007 - 7:37pm - வழங்கியவர் admin

செல்வி அக்கா அவர்களுக்கு,

நன்றிகள் ஆயிரம். இந்த வாக்கெடுப்பு வைத்த எனக்கு ஆதரவாக உங்களைப் போன்ற சிலர் இருப்பது கொஞ்சம் நம்பிக்கையை தருகிறது. இந்த வாக்கெடுப்பை காரணம் காட்டி எங்கே ஒட்டுமொத்தமாக எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவார்களோ என்று பயந்துவிட்டேன்.

இந்த விவாதத்தில் தவறு எதுவும் இல்லை என்று நான் உறுதியாக நம்புவதால்தான் இதை நீக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை. அதனால்தான் விடாப்பிடியாக எனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கின்றேன். இதில் தவறு இருப்பதாக என் மனதில் பட்டிருந்தால் எப்போதோ மன்னிப்பு கேட்டு விவாதத்தை நீக்கியிருப்பேன்.

(இன்னமும் சப்ஜெக்ட் உள்ளேயே போகலை.. அதுக்குள்ள எத்தனை பதிவுகள் பார்த்தீர்களா? இந்த விவாதமே தேவையா இல்லையாங்கிற விவாதத்தை எப்ப முடிச்சு எப்ப நாம எடுத்துக்கிட்ட தலைப்பை விவாதிக்கிறது?!)

தமிழில் நன்கு டைப் செய்ய தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் பதிவுகள் கொடுத்தால் அவற்றை நீக்க நேரிடும் என்று குறிப்பிட்டு இருந்தேன். அதை நிஜத்தில் செய்ய கொஞ்சம் துணிச்சல் வேண்டும். இல்லையேல், நான் கோபத்தில் இருக்க வேண்டும்:-) சிலர் சுட்டிக்காட்டினால் தவற்றை உணர்ந்து சரி செய்து கொள்கின்றனர். சிலர் ஓரளவிற்கு முயற்சி செய்கின்றனர். சிலர் எடுத்தவுடனே Sorry Admin ன்னு ஆரம்பித்துவிடுகின்றனர். விரைவில் அனைவரும் தமிழில் டைப் செய்ய ஆரம்பிப்பர் என்று எப்போதும் போல் இப்போதும் நம்புகின்றேன். ஒன்றிரண்டு முறை முயற்சி செய்துவிட்டு கஷ்டம் என்று ஒதுங்கிவிட்டவர்களுக்கு நான் காட்ட விரும்பும் உதாரணம் சகோதரி தளிகா அவர்களைத்தான்.

வேறு சில யுக்திகளைக் கையாண்டு அனைவரும் தமிழில் டைப் செய்யவேண்டிய அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தலாமா என்று யோசிக்கின்றேன். வேறு மாற்று ஏற்பாடுகள் தங்கள் வசம் இருந்தால் தெரிவிக்கவும்.

(நீங்கள் பழையபடி இரவு நீண்ட நேரம் கண்விழிக்கின்றீர்கள் போலிருக்கின்றதே?)

ஊர்பாசம்
ஆகஸ்டு 29, 2007 - 7:45pm - வழங்கியவர் admin

ஆஹா, தங்கச்சி.. எனக்கு உண்மையிலேயே புல்லரிக்குது.. இருந்தாலும் நீங்க ரொம்பவே நல்லவங்களா இருக்கீங்க..

என் கருத்து
ஆகஸ்டு 29, 2007 - 8:22pm - வழங்கியவர் ANITHASHANTHI

ஹலோ அட்மின் அவர்களே,
இந்த வாக்கெடுப்பில் பிரச்சணை இல்லைனு அதிக வோட் வந்துருக்கு...இது ஆச்சர்யமான விஷயம்.....
ஆனால் என்னால இத நம்பமுடியல.(செல்வி அக்கா சொன்ன மாரி பொய் சொல்ராங்களோ?)
சரி விஷயத்துக்கு வரேன்..கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போய் இனிமே இது தான் உன் வீடு சொல்றாங்க..யாராலையும் முதல ஒத்துக்கவே முடியாது. 21 வருஷம் என் வீட்டுல ராணி மாரி இருந்தேன்.(இப்பொ எதுவும் குறையல...ஆனா எங்க அப்பா வீடு மாதிரி வராது).எனக்கு பிரச்சனை என் நாத்தனார்(என் ஹஸ் ஓட ஒரே தங்கச்சி. என்ன விட வயசுல சின்னவங்க...) அவங்களுக்கு எதாவது வேணும்னா மட்டும் தான் எங்களுக்கு போன் பண்ணுவாங்க.( டிஜி கேமரா, லாப்டாப் ..இந்த மாரி).சரி ஆரம்பத்துல நானும் கண்டுக்கல....இப்பொ அவங்க கணவருக்கு என்ன என்ன வேணுமோ அதையும் கேக்கராங்க. (பிசினஸ்க்கு பணம்,கார் வாங்க,வீடு கட்ட). என்னால பொறுத்துக்கவே முடியலை.(இன்ன்னும் நிறைய இருக்கு....)என் ஹஸ் கிட்ட கிளி பிள்ளை கிட்ட சொல்ற மாரி நமக்கும் ஒரு குடும்பம் வரும்.கொஞ்ச காசு சேத்து வைக்கனும்னு ஓயாம சொல்லி கிட்டு இருக்கேன். என் ஹஸ் கிட்ட அவங்களுக்கு பாசமா? உரிமையா? எதுவும் புரியல.

அனிதா

மாமியார் அம்மாவை போல யோசிக்க கத்துக்கனும்
ஆகஸ்டு 29, 2007 - 9:02pm - வழங்கியவர் harshini

நிறைய மாமியார்கள் வர மருமகள பொண்ணா பாக்கறதில்ல. இதனால தான் வர மருமகளுக்கும் அவங்கள பிடிக்காம போய் அப்புறம் நிறைய பிரெச்சனைகள்.
உதரணத்திற்க்கு, கல்யாணம் ஆன உடனே கர்ப்பம் ஆகனும் அப்படின்னு விரும்பறாங்க. அப்படி ஆகலன்னா உடனே அது இதுன்னு பேசறாங்க. இதுவே அவங்க பொண்ணுன்னா எதுவுமே பேசமாட்டாங்க. ஏதாவது ப்ராப்லம் இருந்தாக்கூட மறச்சு வெச்சு பாத்துப்பாங்க.
அப்படியே கர்ப்பம் ஆகி ஏதாவது மிஸ்கேரேஜ் ஆச்சுன்னா உடனே இனி எப்பவுமே குழந்த பொறக்காதோன்னு யோசிக்கறாங்க. மிஸ்கேரேஜ் ஆன சோகத்துல இருக்கற அந்த மருமகளுக்கு அறுதல் எதுவுமே சொல்லாம அதுக்கப்புறம் ஒவ்வொரு மாதமும் இதே கேள்வி. கொஞ்ச நாள் வெயிட் பண்ண்னும்னு சொன்னாக்கூட நம்ப மாட்டாங்க. தினமும் அந்த பொண்ணு இதனால எவ்வளவு வேதனப்படும்கறதே புரின்சிக்கமாட்டாங்க. அந்த பொண்ணுக்கு கூட பயம் வந்துரும் இனி நமக்கு குழந்த பொறக்குமா இல்லையான்னு.
இதுவே அவங்க பொண்ணுனு வெச்சுகிட்டா அவளுக்கு இது போல நடந்த்திருந்த எத்தனை ஆறுதல் வார்த்தைகள் சொல்வாங்க தெரியுமா. இது ஏதோ சும்மா சொல்லல. என்னோட தோழிகள் நிறய பேருக்கு கூட இப்படி நடந்திருக்கு. இபொ குழந்த பொறந்தவுடன எல்லாம் சரி ஆயிடுச்சு. இன்னொன்னு அவங்ககிட்டயும் எதிர்பார்ப்புகள் குறன்சு போச்சு.

இதுவே நம்ம பழக்க வழக்கத்துல ஏதாவது மாற்றம் வேணும்னா நாம அதுக்கு முயற்சி பண்ணி அவங்கள சந்தோஷப்படுத்த மூடியும்.ஆனா அவங்க எது முடியாதோ அத எதிர்ப்பார்க்கறப்ப தான் பிரெச்சனைகள் வருது.

முக்கியமானது.:- ஒரு பொண்ணு 21 வருடங்களுக்கு மேல இன்னொரு வீட்டுல இருந்து, இந்த வீட்டுக்கு வரா. இவங்க பல வருடங்கள் இதே வீட்டில், இப்பொ உள்ள நபர்களுடனே தான் இருக்கறாங்க. கொஞ்சம் விட்டுகொடுக்க முயர்ச்சி பண்ணனும். பெரியங்கள பாத்து தான் சின்னவங்க கத்துக்க முடியும். பெரியவங்களே சரி இல்லன்னு வெச்சுக்கோங்க சின்னவங்க அதையே reflect தான் பண்ணுவாங்க.

DSen அவங்களூக்கு:-

//Guess we got many more better things to do in this world than discussing abt such topics... Moreover, don't we have problems with our parents, siblings etc when we r with them?... but we still love them & many wouldn't like to talk such negative things abt them in a public forum... But somehow when it comes to our in-laws & family, attitude seems to be different... just my observation/view... This topic, to me, is in bad taste...
//
அப்பா, அம்மா மற்றும் சகோதரர்களை பற்றி நாம ஏன் தவறா சொல்றதில்ல தெரியுமா? அவங்கள நேருக்கு நேர் எதிர்கொண்டு நம்மால பேச முடியும். வெளீயில பேசி யாரோட ஆதரவும் தேட வேண்டிய அவசியமில்ல. அவங்களோட சண்ட போடமுடியும். அவங்க கிட்ட நம்ம விவாதிக்க முடியும். இங்க மாமியார் கிட்ட இதுபோல சென்சு பார்க்க முடியுமா. அவங்க பொண்ணு கிட்ட அவங்க விரும்பற அனைத்தும் மருமகள் கீட்ட இருந்த அத விரும்பமாட்டங்க. மாமியார் கிட்ட சண்ட போட்டா"மாமியார் மருமகள் சண்டை"னு தான் பார்க்க முடியுது.

சகோதரர் சேகர் அவர்களுக்கு,

//இந்த விவாதம் (ஓட்டெடுப்பு) தேவையா என்பது என்னுடைய பனிவான கேள்வி. இதே கருத்தை Dsen-ம் கூறி இருக்கிறார். (சென் சீன நாட்டினரா?) இந்த ஓட்டெடுப்பினால் என்ன லாபம்? இது போன்ற தலைப்பிலான் விவாதங்களோ, ஓட்டெடுப்புகளோ, சமுதாய முன்னேற்றத்தை தடை செய்யும் என்பது என்னுடைய கருத்து.
என்ன சொல்கிறீர்கள்?
//

சமுதாய முன்னேற்றம் என்பது எப்ப ஏற்படும்னு சொல்லுங்க. இதுபோல விவதங்களும், அதுக்கான தீர்வுகளும் தெரிந்தால் தானே. விவாதங்களும் தீர்வுகளும் இல்லையேல் சமுதாயம் எப்படி முன்னேறும் சொல்லுங்க? ஒன்னுமே யோசிக்காம நாம இருந்தா, ஒன்னுத்த பத்தியும் தெரியாம இருந்தா சமுதாயம் முன்னேற்ரம் என்பது கஷ்டம். இதுபோன்ற விவாதங்களும் அதுக்கான தீர்வுகளும் அவசியமே.
ஆண்கள் எல்லாரும் ஒதுங்காம பதில் குடுத்தா இன்னமும் நல்ல தீர்ப்பு தெரியும். உங்க அம்மாவும் மாமியார் தானே. உங்க மனையும் மருமகள் தானே. இந்த விவாததிற்க்குரிய தீர்வு நீங்க தான் கொடுக்க முடியும்னு நினக்க்கிறென். ஏன்னா இரண்டு பேரையும்நேரா பாத்துட்டு அவங்க விருப்பு வெருப்புகல நல்லா தெரிஞ்சு வெச்சிருப்பீங்க இல்லயா. நாங்க எல்லாம் எங்கள(மருமகள்) பத்தி தான் நினச்சி பேசுவோம். நீங்களொ யார் சரிங்கறத பத்தி பேசலாம் இல்லயா.

உங்க குடும்பத்துல இந்த ப்ராப்லமே இல்லயா? அப்படி இருந்து எப்படி சமாளீச்சீங்க? இல்ல எப்படி சமாளிக்கறீங்க? இப்படி ஆலோசனைகள் கொடுத்தீங்கன்னா எங்க வீட்டுகாரங்களுக்கு உபயோகமா இருக்கும். இந்த ப்ரெச்சனைகள சமாளிக்க உங்க அம்மா என்ன பண்ணுவாங்க? உங்க மனைவி என்ன பண்ணுவாங்க? எங்களொடு பகிர்ந்துக்கலாமே.
இதை மட்டும் நீங்க பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு எத்தனை சகோதரிகள் கிடைப்போம் தெரியுமா ? :)

அன்புடன்
ஹர்ஷினி :)

வாழ்த்துக்கள்
ஆகஸ்டு 29, 2007 - 10:09pm - வழங்கியவர் Manohari

அன்பு தம்பி திரு அட்மின் அவர்களுக்கு, மிகவும் நல்ல விவாதமாக இந்த முறை வாக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள். இதில் இடம்பெற்றுள்ள தலைப்பு நிச்சயமாக வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே நமது நேயர்கள் மனந்திறந்து அவர்களுடைய அனுபவங்களை கூறுவதனால் நீச்சயம் பலரும் பயனடைவார்கள் என்ற தங்களின் விருப்பம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்.

என்னுடைய வாக்கு பிரச்சனையில்லை என்பதற்கு தான். காரணம் என்னுடைய விசயத்தில் புகுந்த வீட்டில் ஏதாவது பிரச்சனை இருந்ததா என்று கேட்டால் அது நானாகத்தான் இருந்திருப்பேன். காரணம் எந்த நேரமும் அம்மா வீட்டாரை நினைத்து அழுதுக் கொண்டிருப்பேன் அது ஒன்று தான் பிரச்சனை எனக்கும் அவர்களுக்கும். என்னைப் பற்றி ஏதாவது கூறி என் கணவர் புலம்பினால் கூட எனது மாமியார் மற்றும் வீட்டிலுள்ளவர்களும் என் கணவரைதான் சாந்தப்படுத்துவார்கள் எனது நிலைமையை எடுத்துரைப்பார்கள். கணவனுக்கு வெறுப்பு ஏற்ப்படாமல் நடந்துக் கொள் என்று எனக்கு அறுவுரையெல்லாம் வழங்குவார்கள்.எனது முகத்தில் சிறு வாட்டமிருந்தாலும் தனது தாயாரை துளைத்தெடுத்து விடுவார்கள் எனது மாமியார்.மேலும் எனக்கு எனது அம்மாவின் ஞாபகம் வராமல் இருக்க ( தலை கசக்கி விடுவதிலிருந்து) எனது மாமியாரும் அவரது தாயாரும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னென்ன அரும்பாடு பட்டார்கள் என்பது நினைக்கும் பொழுது, நிச்சயமாக எனக்கும் எனது மருமகள்களுக்கும் ஒரு பிரச்சனையும் வராது என்று உறுதியாக கூறுவேன்.

ஆகவே பிரச்சனையில்லை என்று கூறுபவர்கள் எல்லோரும் பொய் சொல்கின்றார்கள் என்று சகோதரி செல்வி அவர்கள் கூறியிருப்பது வருந்தத்தக்கது. என்னைப் பொருத்தவரையில் இந்த விவாதத்தின் நோக்கமே, வாக்கெடுப்பில் அவரவர் அளிக்கின்ற வாக்கைப் பற்றிய விளக்கத்தை கூறும்படியான ஒரு வாய்ப்பாகவே நினைத்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டால் நிச்சயம் அனைவருமே பயனடையலாம் என்றே நினைக்கின்றேன். இதுப் போலவே இனி வரும் வாக்கெடுப்புக்களையும் நல்லதொரு விவாதமாகவே தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?
ஆகஸ்டு 30, 2007 - 12:16am - வழங்கியவர் DEVA

இதில் என்னுடைய கருத்து, அனுபவம் எல்லாமே பிரச்சனை இல்லை என்பதுதான். நாம்தான் நமக்கு பிரச்சனையாக இருக்க முடியுமே தவிர, மற்ற என்ன கஷ்டங்கள் யார் கொடுத்தாலும் தெளிவான சிந்தனையுடன் அணுகினால் அதனை விரட்டி அடித்து விடலாம். இதில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது கஷ்டம் என்பது வேறு , பிரச்சனை என்பது வேறு. பிரச்சனை என்று மனதில் நினைத்தால் அது தீர்வு கான எளிதான விஷயமாக இருக்காது.

எனக்குத் திருமணம் ஆன சில வருடங்களுக்கு குழந்தை வேண்டாம் என்று இருந்தபோது, சொந்தங்களும், மாமியார் முதலிய புகுந்த வீட்டினரும் அதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்காக என்றும் கவலைப்பட்டதில்லை. அப்போது கவலைப்பட்டு என்னுடைய நிகழ்கால சந்தோஷத்தை இழக்க விரும்பவில்லை. ஒரு வேளை எனக்கு குழந்தையில்லாத நிலைமை இருந்து, கணவர் கேட்டிருந்தால் பிரச்சனையாக கருதியிருப்பேன் என்று நினைக்கிறேன். அப்போதும் அதற்கு என்ன தீர்வு என்று தெளிவான மனதுடன் தான் யோசித்திருப்பேன். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது. இன்று யோசித்தாலும், இப்போது இருக்கும் பொறுப்புகள் நிறைந்த, தூக்கம் இழந்த காலத்தைக் காட்டிலும், குழந்தை பிறப்புக்கு முன்னால் இருந்த வாழ்க்கையே நினைத்துப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ள மிகவும் இனிதாக இருக்கிறது. குழந்தை இல்லை என்று மற்றவர்கள் சொல்லிக் காட்டுகிறார்களே என்பதற்காக கவலைப்பட்டு டென்ஷனானால், அதுவே உடல் நலனை பாதிக்கும்.

கணவருடன் பிரச்சனை, சண்டைகள் என்றாலும் அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட அதற்கு தீர்வு காணுவது மட்டுமே பிடிக்கும். புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் உள்ள பெரிய வேறுபாடே இங்கே பெண்கள் விட்டுக் கொடுக்கும் இடத்தில் இருக்கின்றனர். பிறந்த வீட்டில் அது தேவையில்லை. அதேபோல் புகுந்த வீட்டினரால் பிரச்சனை என்று சொல்வதைவிட அவர்களை எப்படி கையாளுவது என்று தெரிந்துக் கொண்டால் நல்லது. அப்படி கொஞ்சம் கூட அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள முடியாத மனிதாபிமானம் இல்லாத கேரக்டர்ஸ் (அது கணவனாக இருந்தாலும்) என்றால் மட்டும் விலகிப் போவது நலம்.

நான் பிரெக்னண்டா இருக்கும்போது, அதுவரை குழந்தை இன்னும் இல்லையா என்றவர்கள் , அந்த பிரச்சனையை இனி பேச முடியாது என்பதால் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆரம்பித்து விட்டார்கள். என்னவோ நான் பாக்டரி வைத்து தயாரித்துக் கொடுப்பதைப் போல. நான் இதற்கென்றே எனக்கு பெண் குழந்தைப் பிறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. பிரச்சனை என்று விலகிப் போவதைக் காட்டிலும், அதை கண்டு ஒன்றும் சொல்ல முடியாமல் அடங்கிப் போவதைக் காட்டிலும் கணவரின் துணையோடு அதை எதிர்கொள்வதே புத்திசாலித்தனம். நம் வாழ்க்கை நம் கையில்தான். அதற்காக மாமியாரோடு சண்டையோ, நாத்தனாரோடு மனஸ்தாபமோ கூடாது. கணவரை மட்டுமே பிடிக்கும் என்று சொல்வதைக் காட்டிலும், அவரைப் பெற்றவர்கள், கூட பிறந்தவர்கள் என்று புகுந்த வீட்டினரை அனுசரித்துப் போவது நலம் அனைவருக்கும். நட்டவுடன் பலன் கொடுக்கும் செடியல்ல வாழ்க்கை. பொறுமை அவசியம். எப்படிப் பட்டவர்களுக்கும் நல்லவர்களை புரிந்துக் கொள்ள ஒரு காலம் வரும். சிலர் மரணப்படுக்கையில்தான் அதை உணருவார்கள். ஆனால் அதுவும் நமது பொறுமைக்குக் கிடைத்த வெற்றியென்றுதான் சொல்ல வேண்டும்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, அப்படி என்ன இது Bad Taste , தேவையில்லாத விவாதம் என்று நினைக்கக் காரணம் என்ன? இது ஒன்றும் அந்தரங்கமான, கேட்கக்கூடாத வாக்கெடுப்பு இல்லையே( அப்படிப்பட்ட வாக்கெடுப்புக் கூட சிலருக்கு முக்கியமான பிரச்சனையாக இருக்கலாம்). ஐநா சபை, அணுசக்தி ஒப்பந்தம், நாட்டு நிதி நிலைமை என்று பேசினால் வீட்டுப் பிரச்சனை சரியாகிவிடுமா? வீடு நன்றாக இருந்தால்தான் ஒரு நாடு நன்றாக இருக்கும் என்று சொல்லக் கேட்டதில்லையா? குடும்பப் பிரச்சனைக்குதான் முக்கியமாக Negotiation, Communication என்று ஒரு Sales Executive க்கான தகுதி தேவை. இது நமக்கு தேவையில்லை என்று நினைக்கும் பல விஷயங்கள் பலருக்கு வாழ்க்கை பிரச்சனை. என் தம்பியுடன், அக்காவுடன் குடுமிப்பிடி சண்டையெல்லாம் நடக்கும். இப்பவும்கூட அவ்வப்போது சண்டைகள் போடுவதுண்டு. ஆனால் என் நாத்தனார், கொழுந்தனாரோடு அப்படி சண்டை போட முடியுமா? புகுந்த வீடு என்பது வேறு. அங்கே என்னதான் நன்றாக பழகினாலும், அம்மா வீடுபோல் வராது. கணவர் சரியில்லை என்றால் மட்டுமே அது பெரிய பிரச்சனையாக கருத வேண்டிய அவசியம் இருக்கிறது. யாருடன் நமது வாழ்க்கை முழுதும் இருக்கப் போகிறோமோ அதுதான் சரியாக இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்முடன் வாழ்க்கை முழுதும்( இப்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் குறைவு) இருந்தால் கூட இடைவெளி என்று ஒன்று இருக்கும். எனவேதான் அந்த உறவுகளிடன் சில சமயம் நடிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

பிரச்சனை இல்லை, இருக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் அவரவர் சொந்த அல்லது மற்றவர்களுடைய அனுபவங்களை சொல்லி அதை அவர்கள் அதை எப்படி சமாளித்தார்கள், என்ன தீர்வு என்று சொன்னால் , வாக்கெடுப்பின் நோக்கம் நிறைவேறும். இதனைத்தான் பாபு அவர்கள் வாக்கெடுப்புக்கான விளக்கமாக முதலிலேயே கொடுத்திருக்கிறார்கள். காரணத்தை விளக்கமாக சொல்லி ஆரம்பிக்கப்பட்ட வாக்கெடுப்புக்கு மீண்டும் எதற்கு என்று கேள்வி கேட்பது தேவையற்றது என்பது என் கருத்து.

"இந்த
ஆகஸ்டு 30, 2007 - 12:59am - வழங்கியவர் Dsen

"இந்த விவாதம் (ஓட்டெடுப்பு) தேவையா என்பது என்னுடைய பனிவான கேள்வி. இதே கருத்தை Dsen-ம் கூறி இருக்கிறார். (சென் சீன நாட்டினரா?) இந்த ஓட்டெடுப்பினால் என்ன லாபம்? இது போன்ற தலைப்பிலான் விவாதங்களோ, ஓட்டெடுப்புகளோ, சமுதாய முன்னேற்றத்தை தடை செய்யும் என்பது என்னுடைய கருத்து.
என்ன சொல்கிறீர்கள்?"

Naan china ponnu ellam illai... sutthamaana kalappadam illadha India ponnu...;) :lol:

"கருத்துச்
ஆகஸ்டு 30, 2007 - 1:48am - வழங்கியவர் Dsen

"கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அது எங்கும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்துகின்றவன். உங்கள் தனிப்பட்ட கருத்தினை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால், அதற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கின்றேன்.

"இது போன்ற தலைப்புகளை விவாதிப்பதைவிட நாம் செய்வதற்கு சிறந்த விசயங்கள் உலகில் எவ்வளவோ உள்ளன" என்ற தங்களின் வார்த்தைகள் ஒருவரின் கோபத்தை எளிதில் தூண்டிவிடும் என்றாலும் நான் கோபப்படாமல் இதற்கு விளக்கம் அளிக்கின்றேன்.

முதலாவதாக, காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் நேரம் வரை, பயனுள்ள விசயங்களையே செய்து கொண்டிருக்கும் ஒருவரை கட்டாயப்படுத்தி, அடித்து இழுத்து வந்து இந்த உரையாடலில் தாங்கள் கலந்து கொண்டே தீரவேண்டும் என்று இங்கே யாரும் துன்புறுத்தவில்லை. இங்கே மன்றத்தில் பதிவுகள் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று இருக்கையில், இந்த பயனில்லாத விவாதத்தில் இப்படி ஒரு பதிவினைப் போட்டு தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்திருப்பதை காட்டிலும், அனைவருக்கும் பயனுள்ள புதிய விவாதங்களை மன்றத்தில் நீங்கள் தொடங்கியிருக்கலாம்."

Dear admin,

Thanks for the suggestion...I guess I don't fit into the group well... So, I'll better stop with visiting the site for recipes & topics useful to me... I stand by my words & would like to spend my time as productive as possible... If not always in a useful manner, I would like to think & do/discuss postive things than dwell on things tht can create negative vibrations within me...:)

"இரண்டாவதாக, உலகில் உள்ள அனைவருக்கும் பயனுள்ள, சிறந்த விசயம் எது என்பதை தீர்மானிப்பவர் Dsen ஒருவர் மட்டுமே என்று இருந்தால், நான் இது போன்ற பதிவுகள் கொடுப்பதற்கு முன்பு அவரிடம் ஒரு அனுமதி வாங்கிவிட்டு வெளியிட்டு இருப்பேன். ஆனால், மனித ருசிகள் மாறுகின்றதே.. என்ன செய்வது? உங்களுக்கு வீண் என்று தோன்றும் சில விசயங்கள் மற்றவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளாக இருக்கிறது. "

I'm not here to interfere with anyone's freedom or taste... Tht's not my job either... I posted my opinion... likewise others can post theirs too... I guess I made the mistake of typing 'we' in place of 'I' in my first post...am sry abt tht... :)

"உங்களது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி நீங்கள் வெளியிட்டுவிட்டாலும், உங்களது கருத்து அடுத்து இங்கே பதிவுகள் கொடுக்க வருபவர்களை யோசிக்க வைக்குமே என்ற எண்ணத்தில் இதை பதிய வேண்டியது அவசியமாகிறது."

I don't understand how it can affect others coming here to post their opinions... If they think discussing on this topic is of use to them, they'll definitely post here... I don't think my opinion will stop others from posting their opinions...

"DSen அவங்களூக்கு:-

அப்பா, அம்மா மற்றும் சகோதரர்களை பற்றி நாம ஏன் தவறா சொல்றதில்ல தெரியுமா? அவங்கள நேருக்கு நேர் எதிர்கொண்டு நம்மால பேச முடியும். வெளீயில பேசி யாரோட ஆதரவும் தேட வேண்டிய அவசியமில்ல. அவங்களோட சண்ட போடமுடியும். அவங்க கிட்ட நம்ம விவாதிக்க முடியும். இங்க மாமியார் கிட்ட இதுபோல சென்சு பார்க்க முடியுமா. அவங்க பொண்ணு கிட்ட அவங்க விரும்பற அனைத்தும் மருமகள் கீட்ட இருந்த அத விரும்பமாட்டங்க. மாமியார் கிட்ட சண்ட போட்டா"மாமியார் மருமகள் சண்டை"னு தான் பார்க்க முடியுது."

Fine... So if this discussion can be of use to ppl, I'll be more than happy...:) I have been able to discuss things smoothly with my MIL so far... maybe I'm lucky to have such a MIL...:)

"எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, அப்படி என்ன இது Bad Taste , தேவையில்லாத விவாதம் என்று நினைக்கக் காரணம் என்ன?"

Dear Deva,

To me, I don't believe in discussing my family problems with others... even with my closest of friends... I believe I should be able to solve my problems myself & most of the time, when a third party gets into it, it's going to agitate the other family members concerned & will further aggravate the issue... So to me, the idea of discussing such issues in a public forum is not my cup of tea...

Note: I'll not be posting replies to any more Qs tht is posted on my opinion... I guess I've explained myself clearly...I'll better do something tht's to my taste...:) Good luck to you all...:)

இதுவும் ஒரு கருத்துதான்
ஆகஸ்டு 30, 2007 - 3:18am - வழங்கியவர் DEVA

Dsen அவர்கள் தன்னைப்பற்றி சொன்னதிலேயேகூட ஒரு கருத்தும் இருக்கிறது. அது நமது பிரச்சனைகளை அடுத்தவரிடம் சொல்லிப் புலம்புவதை விட நாமே கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பது. இதனைத் தான் இங்கிருக்கும் அனைவரும் வலியிறுத்துகிறார்கள். இதில் எங்கே பர்சனல் விஷயங்களை அலசுவது வந்தது என்பது புரியவில்லை. மேலும் நன்கு படித்த, தெளிவான சிந்தனை உள்ளவர்களுக்கே தன் பிரச்சனையை தானே பார்த்து கொள்வது சாத்தியம். நானும் இதுவரை யாரிடமும் சொல்லி ஆலோசனை கேட்டதும் இல்லை. அதற்காக மற்றவர்கள் அடுத்தவர்களின் ஆலோசனை கேட்பது சரியல்ல என்ற தனது சொந்த அபிப்பிராயத்தை ஒரு பப்ளிக் Forum ல் தெரிவிப்பது மட்டும் சரியா( இதற்கு நிச்சயம் Dsen ன் பதிலை எதிர்பர்க்கவில்லை)? அது சரியென்றால் இதுவும் சரியே. சொந்த அனுபவித்திலிருந்து கற்றுக் கொண்டதை வைத்தே மற்றவர்களுக்கு எந்த ஆலோசனையும் கூற முடியும். அது அலுவலகமாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி. யாரும் மூன்றாம் மனிதர் தன் குடும்பத்தில் நுழைந்து ஆலோசனை சொல்வது பிடிக்காது. ஆனால் ஒரு புத்தகம் படிப்பது போல , இப்படி சில விஷயங்களைப் படிப்பதும் நிறைய பேருக்கு மன நிம்மதியையும், தெளிவான சிந்தனையையும் தரலாம். இது என் சொந்த அபிப்பிராயம் இல்லை. பத்திரிக்கையிலும், பிறர் சொல்ல கேட்டதும்தான்.

hi deva,
ஆகஸ்டு 30, 2007 - 4:03am - வழங்கியவர் Janaki2411

ஹய் தேவா,

நலமா? எல்லாருக்கும் உடனே பதில் அளித்து அசத்தீரீர்கள். projectல் கொஞ்சம் ப்ரீ ஆகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

என்னுடைய சருமம் எண்ணெய் பசை கொண்டது. எப்பொழுதும் dull ஆகவே இருக்கிறது, முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும். pigmentationம் இருக்கிறது அதற்கும் வழி சொல்லுங்கள்.

jaanaki

டியர் ஜானகி
ஆகஸ்டு 30, 2007 - 4:11am - வழங்கியவர் DEVA

இன்று பிரீயா கொஞ்சம் இருந்ததுக்கு சேர்த்து வெச்சு நாளை சாயங்காலம் வரை வேலை தலையில் விழுந்துடுச்சு. நாளைக்கு இன்னொரு ஸ்டேட்டுக்கு போகணும். உங்க மெயிலுக்குக் கூட உடனடியா என்னால் பதில் சொல்ல முடியல. ஸாரி. உங்களுக்குன்னே தினமும் செய்துக் கொள்ளக்கூடிய அத்தனை அழகுக் குறிப்புகளும் இன்று இரவு மெயிலில் அனுப்பப் பார்க்கிறேன். இனி ப்ரீ என்பதே இல்லைன்னு நினைக்கிறேன். உங்களுக்கும் இனி இது தெரியும். இங்கே ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் வரை ரொம்ப அதிக வேலை இருக்கும். டிசம்பர் மாதம் குறையும். மீண்டும் பிப்ரவரி வேலை அதிகம் வந்துடும்.

தங்கமான மருமகள்
ஆகஸ்டு 30, 2007 - 4:32am - வழங்கியவர் thalika

இங்க என்னுடைய கனவருடைய அம்மா,அப்பா,அக்கா,தம்பி எல்லாரும் இருக்காங்க....எனக்கு ப்ரச்சனையா ச்சேசே......இல்லவே இல்ல ..நம்புங்க
எனக்கென்னவோ முதன்முதலா நாம காலடி எடுத்து வெக்கிரப்போ நாம பழகும் விதம் எப்படியோ அப்படி தான் எல்லம் அமையும்னு நெனக்கிரேன்..சரிய தவரான்னு பெரியவங்க சொல்லுங்க...
அதாவது நான் ரொம்ப நல்ல பொன்னு,அடக்கமான இளிச்சவாயி மருமகள் அப்படின்னு பேர் எடுக்கனும்nu முதல்லயே குனிஞ்சு ..குனிய வெச்சு குத்தினாலும் சிரிச்சுட்டு இருந்தா அவங்க்ளுக்கே "ஆன் இது ஒரு எருமை மாடு..என்ன செஞ்சாலும் இது அசையாம இருக்கும்னு"மனசுல நெனச்சுக்குவாங்கன்னு தோனுது...
அதே தொடக்கத்துலயே நாம இஷ்டமோ ,வெறுப்போ அதை எக்ஸ்ப்ரெஸ் செஞ்சா "இல்ல இவ கிட்ட நம்ம வேலை நடக்காது"அப்டின்னு தோனும்..மருமகளும் சரி கனவர் குடும்பத்தவரும் ஒன்னுக்கொன்னு விட்டு குடுத்து பழகிக்குவாங்கனு தோனுது..மொத்ததில் ரெண்டு பேரும் பேலென்ஸ்டா இருக்கனும்...இதை என் தோழியின் அனுபவத்திலிருந்து சொல்ரேன்:-D
நாம யாரோ அப்படியே இருங்க போகிர இடத்திலயும்..நல்ல மருமகள் பட்டமெல்லாம் யாரும் நமக்கு தரப் போரதில்ல...நம்ம கடமை எதுவோ அதை செஞ்சுட்டு...கொஞ்சம் ஃபோன் பன்னி அம்ம அப்பாட்ட //thiz girl is pinching me//ந்னு சின்னபுள்ளதனமா வத்தி வெக்காம அவங்க நிலமைலயும் இருந்தும் இடையிடையே கொஞ்சம் யோசிச்சு பாக்கனும்....அப்படின்னு நினைக்கிரேன்

டூர் போலயா?
ஆகஸ்டு 30, 2007 - 4:36am - வழங்கியவர் thalika

தேவா நாம இன்னும் டூர் போலயா? (இப்ப மனசுக்குல்ல தேவா "நானே சாப்பிட கூட நேரம் கெடைக்காம இருக்கேன் ..உனக்கு டூர் கேக்குதா டூர் "அப்டின்னு தான சொல்ரீங்க??கள்ளி புரியுது:-D

நன்றி தேவா
ஆகஸ்டு 30, 2007 - 4:38am - வழங்கியவர் Janaki2411

வேலையின் நடுவிலும் பதில் அனுப்பியதற்கு நன்றி.

ஜானகி.

ஜானகி & தளிகா
ஆகஸ்டு 30, 2007 - 4:48am - வழங்கியவர் DEVA

ரெண்டு பேருமே ஆன்லைனில் தான் இருக்கீங்களா? நான் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு கையால் அடிக்கிறேன். இன்னைக்கு லஞ்சே லேட்டாயிடுச்சு.
தளிகா டூரெல்லாம் வேணாம். எதிர்பாராம வந்தாதானே நல்லா இருக்கும். அட்மின் நான் எழுதினதை கொஞ்சம் அவுட் ஆக்கிட்டதால அதை அனுப்பல. இனிமேல் நேரம் கிடைக்கும்போதுதான் எழுதணும். ஹேமா இல்லாம கற்பனை சரியா வரல. ரொம்ப சின்சியரா நல்லா பொண்ணா படிச்சுட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். தளிகா, அது நிஜமாவே பிரெண்ட் கதைதானா? பிரெண்ட் பேரு ரூபினாவா(சும்மா)?

நீங்க ஏன் முகத்திற்கு எதுவும் செஞ்சுக்காம இருக்கீங்க தளிகா(அதை யார் சொல்றதுன்னு தெரியல. பாதி நாள் நானும் மறந்துடுவேன்). ஆனால் எது எப்படியோ இரவு முகம் கழுவி லோஷன் போட மட்டும் மறக்க மாட்டேன். உங்களுக்கு ஈசியா சில குறிப்பு எழுதி அனுப்பறேன். லேட்டானா கோச்சுக்காதீங்க.

ஜானகி உங்களுக்கும் தான்.

dear deva
ஆகஸ்டு 30, 2007 - 5:05am - வழங்கியவர் thalika

ச்சேசே கோவிச்சுக்க மாட்டேன்...நானும் ஒத்தகைல தான் இவ்ளோ நேரமா அடிக்கரேன்...என் பொண்ணு கைல தூங்கரா....கை வலிக்கிது....ஐய்யா சாப்பாடா....சமக்கவே நேரம் இல்ல தேவா:-(சாப்பாடுனாவே இப்ப உயிர விடரேன்
வாணியும் ,ஹேமாவெல்லாம் என்னமோ தயாரெடுப்புல இருக்காங்கன்னு நெனைக்கிரேன்..இங்க இப்ப தான் காலைல 9 மனி ஆகுது...
நான் ஏன் எதுவும் செய்யரதில்லன்னு எனக்கே தெரீல..என்னவோ பெர்ரிய நேச்சுரல் ப்யூட்டின்னு மனசில ஒரு நெனப்போட அலஞ்சுட்டு இருந்தேன்....ஒரு 3 வருஷம் முன்னாடி என்னை பாத்து பொறாமை பட்டவங்க நிறைய்ய பேர் இருந்தாங்க..இப்ப என் முகரைய பாக்க எனக்கே சஹிக்கல.அதான் பயந்து போய் உதவி கேட்டேன்...சாவதானமா அனுப்புங்க...நேத்து கொஞ்சம் அவகடோ தேச்சேன்..அப்ரம் கொஞ்சம் சாப்பிட்டேன்...இன்னக்கி முடீல எதையாவது தேக்கனும்...எங்க ..என் பொண்ண படுக்க வெச்சுட்டு போனா 5 நிமிஷத்துல பின்னாடியே வந்துடும்..அப்ரம் கனக்குதான்
அது என் தோழி..இன்னும் நம்பலியா??:-)

79 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »