![]() மன்றத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட ஒரு விவாதத்தின் தொடர்ச்சியாக இதனை எடுத்துக்கொள்ளலாம். மேற்கொண்டு இங்கே கலந்துரையாடலாம். தயவுசெய்து இந்திய தேசப்பற்றினை காண்பிக்கின்றேன் என்று ஒரேடியாக "இந்திய வாழ்க்கைதான் பிடிக்கும்" என்று கருத்துக்கள் வைக்க வேண்டாம். உங்கள் மனதைத் தொட்டு உண்மையான கருத்துக்களை எடுத்து வையுங்கள். கேட்ட சர்டிபிகேட்ஸ், கேட்காத காகிதங்கள், கிடைக்குமா கிடைக்காதா தவிப்பு, கிடைப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை எப்படியாவது செய்தல், எதை இழந்தாவது இதை பெற வேண்டும் என்ற ஆர்வம், அப்படி இப்படி எல்லா பகீரதப் பிரயத்தனமும் செய்து, ஒருவழியாய் க்ரீன் கார்டு வாங்கி அப்பாடா என்று மூச்சுவிட்டுவிட்டு, இப்ப சொல்றேன், இந்தியா மாதிரி ஒரு நாடு, அங்க உள்ள வாழ்க்கை உலகில் எங்கேயும் இல்லை என்று உங்கள் தேசப்பற்றைக் காட்டி புலங்காகிதம் அடையச் செய்யவேண்டாம். "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.." என்று கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன? வெறும் பணத்திற்காக மட்டும்தான் நீங்கள் வெளிநாட்டில் வசிக்கின்றீர்களா? அப்படி பணத்திற்காகத்தான் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் இந்தியாவில் யாரும் சம்பாதிப்பதே இல்லையா? இல்லை இந்தியாவில் சம்பாதிக்க எனக்கு திறமை இல்லை என்பதை ஒத்துக் கொண்டு நீங்கள் வெளிநாடு சென்றீர்களா? இல்லை உங்கள் திறமைக்கு இங்கே அங்கீகாரம் இல்லை என்று நினைக்கின்றீர்களா? இந்தியாதான் சிறந்த நாடு என்பவர்கள் வேறு வழியில்லை, இங்கே பிறந்துவிட்டோம், அதனால் அப்படித்தானே சொல்லியாக வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்கின்றீர்களா? உண்மையில் இந்தியாவில் உங்களுக்கு பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? பிரச்சனைகள் என்ன? தீர்வுகள் என்ன? இந்தியா வளரும் நாடு என்று சொல்லியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்ள போகின்றோம். எந்த நாடு வளராத நாடு? எந்த நாடு வளர்ந்து முடிந்துவிட்ட நாடு? எல்லா நாடுகளுமே வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள்தானே.. நாம் ஒரு படி ஏறுவதற்குள் மற்றவர்கள் நான்கு படி மேலே போய்விடுகின்றார்களே.. ஏற்கனவே ஒரு பெரிய இடைவெளி இருக்கின்றது. இதில் முன்னேற்ற விகிதம் இப்படி 1:4 என்று இருந்தால் நாம் என்று அவர்களை தொடுவது? இதற்கு என்ன செய்யவேண்டும்? எங்கே தவறுகள்? அனைத்தையும் ஆராயலாம்.. வாருங்கள். எழுதிடுங்கள் உங்கள் எண்ணங்களை.. அக்டோபர் 18, 2007 - 10:56am - வழங்கியவர் admin
|

