topic_image


இந்த உலகில் உயிரனங்கள் உருவானதா, படைக்கப்பட்டதா என்பது குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, அப்படி உருவான/படைக்கப்பட்ட உயிரனங்களை (பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிர்கள்) மனிதன் தனது பசிக்கு கொன்று இரையாக்கிக் கொல்லுதல் ஏற்புடையதா? மரம், செடி கொடிகள் போன்று ஓரறிவும் இல்லாமல், மனிதன் போன்ற ஆறறிவும் இல்லாத இந்த ஜீவன்களை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்ளுதல் நியாயமா?

அசைவ உணவுகள் என்று ஒன்று இல்லாவிட்டால் உலகம் என்னவாகும்? எல்லோரும் சைவர்களாக இருத்தல் இயலுமா? எது உண்மையில் சைவம்? எதில் நன்மை அதிகம்? இதைப் பற்றியெல்லாம் இங்கே விவாதிக்கலாம். ஒரு சைவராகவோ, அசைவராகவோ இருக்கும் நீங்கள் உங்களின் நிலை பற்றி மற்றும் இங்கே குறிப்பிடவும். நீங்கள் சாப்பிடுகின்றீர்களா, இல்லையா? அப்படி சாப்பிடுவதில் உங்களுக்கு ஏதேனும் சஞ்சலங்கள் இருக்கின்றதா? அசைவம் சாப்பிடுகின்றவர்கள் தாங்கள் செய்வது தவறு என்ற குற்ற உணர்வுடன் சாப்பிடுகின்றீர்களா? சைவம் சாப்பிடுகின்றவர்கள் வேறு வழியில்லாமல் சைவம் மட்டும் சாப்பிட வேண்டியுள்ளதே என்று என்றாவது வருந்தியிருக்கின்றீர்களா? குடும்பத்தினர் அனைவரும் ஒரு நிலை சார்ந்து இருக்கும்போது தாங்கள் மட்டும் வேறு ஒரு நிலை எடுத்து இருக்கின்றீர்களா.. இவற்றை பற்றியெல்லாம் சுவாரசியமாக இங்கே உரையாடலாம்.

முக்கிய குறிப்பு: இது எங்கள் மதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது, இதை எங்கள் மதம் வேண்டாம் என்கின்றது என்று மதங்கள் சொல்வதை யாரும் இங்கே சொல்லவேண்டாம். இதில் உங்கள் கருத்து என்ன என்பதை மட்டும் தெரிவிக்கவும். நீங்கள் சார்ந்துள்ள மதம், வேதங்கள் சொல்வதை இங்கே குறிப்பிட்டு விவாதிக்க வேண்டாம். அவை விவாதத்தை திசை திருப்பும். அப்படிப்பட்ட பதிவுகள் உடன் நீக்கப்படும்.


புலால்
நவம்பர் 4, 2007 - 2:50pm - வழங்கியவர் haleema

புலால் உண்ணாமை சாத்தியமில்லை என்பதே என் கருத்து.ஏனெனில் நீரில் பல பாக்டீரியாக்கள் உள்ளது.உயிர் கொல்லக் கூடாது எனில் நீர் அருந்த முடியாது.சுடு நீர் அருந்தும் போது சூப் போட்டு குடிக்குரோம்.மாமிசம் தவிர்த்து தாவர உணவு சாப்பிடலாம் என்று யாரும் கூறினால் தாவரங்களுக்கும் உயிர் உள்ளது.மாமிசங்களை அறுக்கும்பொது அதன் வின்ட் பைப்பில் அருத்தால் அதற்கு வலி இருக்காது.அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

சாத்தியமானதை சிந்திப்போம்!
நவம்பர் 4, 2007 - 4:31pm - வழங்கியவர் Asma

உலகில் உள்ள யாவும் மனிதனுக்காக படைக்கப்பட்டவை. அதில் தனக்கு தேவையானவற்றை, தான் விரும்புவற்றை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்ளலாம். ஆக, உணவுக்காக பிற உயிரினங்கள் கொல்லப்படுவது இந்த முதல் வகை. இரண்டாவது வகை, மனிதன் தனக்கு தீங்கு தரக்கூடிய உயிரினங்களைக் கொல்வது. இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் உயிரினங்களைக் கொல்வது கூடாது. துன்புறுத்தக்கூடாது. உண்பதற்காக அறுக்கும்போது கூட, மற்ற வகையில் கொல்லாமல், கத்தியைத் தீட்டி கூர்மைப்படுத்திக்கொண்டு, எப்படி அறுத்தால் அவை வலியை உணரமுடியாதோ அப்படி முறையாக வதையின்றி அறுப்பதே சிறந்தது.

'எல்லா உயிரினங்களும் உயிர்வாழ புலால் உண்ணுவதை தவிர்க்கவேண்டும்' என்பது வெறும் வாய் வார்த்தைக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். மனிதன் உயிர்வாழ அவனுக்காக படைக்கப்பட்ட உயிரினங்களை உண்பது சுயநலமோ, உயிர்வதையோ அல்ல. ஏனென்றால், உயிரினங்கள் என்றால் கால்நடைகள், பறவைகள், செடி கொடி போன்ற தாவர இனங்கள் அனைத்தையுமே குறிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தாவரங்கள் எல்லாம், கால்நடைகள் மற்றும் பறவைகளைப் போல வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளாததால், அவற்றை உண்பதை புலால் உணவு தவிர்ப்போர் உயிர்வதையாக கருதுவதில்லை. வளர்ந்து, காய்த்து, பூத்து, இனவிருத்தியும் செய்யக்கூடிய தாவர இனங்களை சாப்பிடுவது மட்டும் உயிர்வதையாகாது என்று சொல்வோர், தாவரம் என்பது உயிரினம் கிடையாது என்றும் சொல்லப்போகிறார்களோ என்னவோ?

மனிதனின் உணவுத்தேவைக்காக உயிரினங்களை கொல்லலாம் என்பதில் வேண்டுமானால் புலால் உண்போரும் உண்ணாதவரும் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். ஆனால், பல சமயங்களில் உயிரினங்களை கொல்வதில், வதைப்பதில் அறிந்தோ அறியாமலோ யாருக்குமே கருத்து வேறுபாடு வருவதில்லை. எல்லா உயிர்களும் உயிர்வாழவேண்டுமென்றால் எந்த சந்தர்ப்பத்திலும் உயிரினங்களைக் கொல்லக் கூடாது. ஆனால் அது நடப்பதில்லை. உதாரணத்திற்கு,

- நம் உணவுகளை, பயிர்களை உண்ணுகிறது என்பதற்காக எலிகளை,அந்துப்பூச்சிகளைக் கொல்கிறோம்.

- எறும்பு, மூட்டைப் பூச்சி, கொசு போன்றவை நம்மை கடிக்கிறது என்பதால் மட்டுமே அதன் வாழ்க்கையை முடித்துவிடுகிறோம்.

- மனிதன் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக, மருத்துவ பரிசோதனையின்போது பல உயிரினங்களை பலி கொடுக்கிறோம்.

- தீங்கு தரும் தேள், பாம்பு போன்றவற்றைக் கண்டாலே அது நம்மை தீண்டுவதற்கு முன் விரட்டி, விரட்டி அவற்றைக் கொல்கிறோம்.

- மனிதனுக்காக தயாரிக்கப்படும் எத்தனையோ தடுப்பூசிகள், அவற்றிற்கு தேவையான பல உயிரினங்களைக் கொன்று தயாரிக்கப்படுகிறது.

- மீனின் ஈரலிலிருந்து தயாரிக்கப்படும் மீன் மாத்திரைகளை, உடம்புக்கு அந்த சத்து தேவை என்று எடுத்துக்கொள்கிறோம். அப்போதுமட்டும் மீன்கள் தன் உயிரை இழக்காமலே ஈரலைக் கொடுக்கிறதா?

- ஏன், பட்டு சேலைக்கட்டி பந்தாவாக வலம்வர ஆயிரக்கணக்கான பட்டுபூச்சிகளைக் கொல்கிறோம்.

இவை மட்டும் நியாயமா? எல்லா உயிர்களும் உயிர்வாழ அசைவ உணவுகளை தவிர்த்தல் மட்டும் போதாது. கொதிக்க வைத்த தண்ணீரைக் கூட மனிதன் அருந்தக்கூடாது. ஏனெனில், அதிலும் உயினங்கள் உள்ளனவே!? கண்ணுக்கு தெரியாவிட்டால் மட்டும் அவை உயிரினமாகாதா? இப்படியெல்லாம் ஜீவகாருண்யம் பேசினால், மனிதன் என்ற ஜீவனே முதலில் அழியக்கூடிய ஆபத்துகள்தான் அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.

சரி, 'தாவரங்கள் கால்நடைகளை விட குறைந்த அறிவு கொண்டவை, அதற்கு இரத்தம் ஓட்டப்படுவதில்லை, அதனால் அவற்றை உண்பது தவறில்லை' என்று அசைவம் தவிர்ப்போர் நியாயம் சொல்கிறார்கள், அதனால் எல்லோரும் தாவர உணவுகளை மட்டுமே உண்ணப்போகிறோம் என்றே (கற்பனையாக) வைத்துக்கொள்வோம். அப்போது,

- முதலில் கால்நடைகள் பெருகும்.

- அவற்றிற்கு தேவையான தாவர உணவுகளை பெருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

- கிலோ 10, 20 ரூபாய்க்கு கிடைக்கும் காய்கறிகள், கீரைகள் என்று எல்லா தாவர வகைகளும், இன்றைய உலகில் இருக்கக்கூடிய மக்கள் தொகைக்கு பார்த்தால், கிலோ எத்தனை ரூபாயில் முடியும் என்பதே கணிக்க முடியாது.

- அதனால் அவற்றை வாங்கி உண்ண முடியாமல், கால்நடைகள் உண்ணக்கூடிய தாவரங்களாவது கிடைக்குமா என்று மனிதன் அல்லாடும் நிலை ஏற்படும்.

- உணவுக்காகவே மனிதன் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைக்கூட ஏற்படும். தாவர உணவை மட்டுமே உண்ண, மூன்றாம் உலகப்போரே ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :-)

- தாவரங்களே இல்லாத கடுமையான குளிர்பிரதேசங்களில் வசிப்போர், தன் வயிற்றுப் பசியைத்தீர்க்க தாவரங்களைத் தேடி எங்காவது தஞ்சம் புகுவதற்கோ அல்லது அப்படியே செத்து மடியவோதான் நேரிடும்.

மொத்தத்தில் உணவு பஞ்சம் உலகமெங்கும் பூதாகரமாக உருவெடுக்கும். மனிதனும் வாழ முடியாது, தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய கால்நடைகளும் வாழமுடியாது. ஆக செயல்படுத்த சாத்தியமானதை சிந்திப்போம்! அதையே செயல்படுத்தவும் செய்வோம் என்று கூறி முடிக்கிறேன்.

asma sister
நவம்பர் 4, 2007 - 11:30pm - வழங்கியவர் haleema

dear asma sister
u typed whatever i think.i am wondering how u typed in tamil lot.may almighty shower his blessings upon u

கொன்றால் பாவம் தின்றால் தீரும்
நவம்பர் 5, 2007 - 1:46am - வழங்கியவர் ahmed

அஸ்மாக்கா எல்லாவற்றையும் விவரித்து விட்டார்கல்..நான் சொல்ல ஒன்னும் இல்லை.

உலகம் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் போகிரது. சொ நார்மல் லைப் சைகில் இப்படி தான் போகும் as follows...

மனிதன் இறந்த பின் பயிர்கு உரமாகிரோம்..பயிர் விலைந்து மனிதன் மற்றும் பல உயிர்கலுக்கு உனவாகிரது..அதே போல் எல தழைகல உண்ட ஆடு மாடுகலை மனிதர்கல்லுக்கு உனவாக உண்கிரார்கள்..சோ அது தான் "life cycle'.

- இன்னும் பல விலக்கங்கலுடன் வருவோம் வெல்வோம்..-- வற்டா..
- அஹ்மது
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

சாத்தியமானதை நான் சொல்றேன்
நவம்பர் 5, 2007 - 8:32am - வழங்கியவர் hariram

// நீக்கப்படுகின்றது //

சார் ஒரு நிமிஷம்...!
நவம்பர் 5, 2007 - 1:07pm - வழங்கியவர் Asma

கருணைக்கடல் மாதிரி பேசிட்டு, "எனக்கு யாரும் பதில் கொடுக்க வேண்டாம். கேள்வியும் கொடுக்க வேண்டாம்" னு வர்ற பதில கேட்காம காதப் பொத்திட்டு போனா எப்படி? கொஞ்சம் வேல இருக்கு, இதோ முடிச்சிட்டு வந்திடுறேன்.உங்களுக்கு மனசில பட்ட மாதிரி எங்களுக்கு பட்டத நாங்களும் சொல்லணும்ல...?

சைவ உணவுல இல்லாத சத்து எதுவுமே இல்ல...
நவம்பர் 5, 2007 - 1:38pm - வழங்கியவர் ambika_dt

இது என்னோட சொந்த அனுபவம்.. நான் அசைவம் சாப்பிடும் குடும்பத்தை சேர்ந்தவள்.. என்னுடைய 5ஆவது வயதில் அசைவம் சாப்பிட தொடங்கினேன்.. சில மாதங்கள் இருக்கும்,எங்கள் அம்மாச்சி ஊருக்கு திருவிழாவிற்கு சென்றிறுந்தோம்.அங்கு கடவுளுக்கு பலி கொடுப்பதை நேரில் பார்த்தேன்.. அந்த கொடுமையெல்லாம் பாக்கறதுக்கு திடமான மனசு வேணும்.. அன்றிலிருந்து நான் அசைவம் சாப்பிடுவதில்லை(எப்படி அப்படி தோனிச்சுன்னு தெரியல).. எங்கம்மா தான் ரொம்ப திட்டினாங்க,அப்பாவிற்கு ரொம்ப சந்தோஷம்.. நல்ல வேளை யாரும் கம்ப்பெல் பன்னல.. சின்ன வயசு தானே பெரியவளான சாப்பிடுவான்னு விட்டுட்டாங்க.. கொஞ்சம் வளந்ததும் மருபடியும் எங்கம்மா சாப்பிட சொல்லி கம்ப்பெல் பண்ணினாங்க..(சத்து வேணுமாம்..) எங்கப்பாதான் எனக்கு சப்போர்ட் பண்ணினார்..(அவரும் 20 வருடமாக அசைவம் சாப்பிடுவதில்லை).. இது வரைக்கும் நான் சைவமே சாப்பிடுகிறேன்..இனிமேலும் அப்படித்தான்... என் கணவர் அசைவம் சாப்பிடுபவர்,அவங்க அம்மா சாப்பிட மாட்டாங்க(மாமியார்).நானும் சைவம் என்பதால் என் மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம்.. கல்யாணத்திற்கு பிறகு மாறி விடுவேனென்று என் தோழிகள் சொல்வார்கள்.அவருக்காக கூட நான் அசைவம் சமைப்பதில்லை... என்னவருக்கும் நான் அசைவம் சாப்பிடாதது சந்தோஷமே.

அசைவம் சாப்பிடாததால் என் தோழிகள் நிறைய பேர் கிண்டல் பண்ணுவார்கள். நீ என்ன ரொம்ப ஆச்சாரமா?வீட்டுல சாபிடுவாங்கள்ல?ரொம்ப பிகு பண்ணாதன்னு சொல்லுவாங்க.. நானும் பதிலுக்கு நீங்களெல்லாம் காட்டு மிராண்டிக்கன்னு சொல்ல வாய் வரும்.. என்ன செய்ய சில நேரங்களில் நாம் நினப்ப்பதை நம்மால் செய்ய முடிவதில்லை. என் கணவரின் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தோம்.. அவங்களும் உங்களுக்கு எப்படி ஞானம் வந்தது?எந்த மரத்தடியில உக்கார்ந்தீங்கன்னு கிண்டல் பண்ணினாங்க.. ஆனா நான் சைவம் என்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு ...

சரிதான்..
நவம்பர் 5, 2007 - 1:47pm - வழங்கியவர் ambika_dt

அசைவ உணவு ருசி இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு.. சைவ உணவை விட அது ருசியிலும் ,சத்திலும் எந்த விததிலும் அதிகம் இல்ல.. நாற்றம் தான் மிச்சம். ஆட்டையோ,கோழியையோ செல்லமா வளத்துட்டு அத கொல்ல எப்படி தான் மனசு வருமோ?தெரியல.. அத வளக்குறதே கொல்லத்தான் என்று தெரியாமல் அதுவும் அவங்க பின்னாடியே போகும்.. கொஞ்சம் கோவமா சொன்னாலும் ஹரிராம் சொன்னது சரிதான்..

உங்க
நவம்பர் 5, 2007 - 3:02pm - வழங்கியவர் haleema

உங்க மனசுக்கு பட்டது போல எங்க மனதுக்கு பட்டதையும் பேசுவோம்.
புலி பசித்தாலும் புல் திங்காது.காரணம் அதன் பல் வரிசை கூர்மை.அதன் குடல் அமைப்பு தாவரத்தை செரிமானம் செய்ய முடியாது.அது போல் தாவரம் சாப்பிடும் விலங்குகளான ஆடு மாடுகளுக்கு பல் வரிசையும் குடல் அமைப்பும் தாவரம் மட்டும் சாப்பிடும் நிலையில மட்டும் படைக்கப் பட்டுள்ளன.மனிதனுடைய பல் வரிசையும் குடல் அமைப்பும் எதையும் சாப்பிடும் வகையில் படைக்கப்பட்டுள்ளன.
ஒரு மனிதன் அசைவம் சாப்பிடுவது சரி இல்லை என்ரு வாதுக்கு வைத்துக் கொன்டாலும் அவன் தாவிரமும் சாப்பிடக் கூடாதுதான்.தாவிரத்தை அறுத்து உன்டாலும் அதுவும் அழும்.அதற்கும் வலி இருக்கும்.என்ன செய்வீர்கள்?

ஜீவ காருண்யம் பேசுகிறீர்கள்.மாடு தன் குட்டிக்கு வைத்திற்கும் பாலை மட்டும் குடிக்குகிறீர்கள்.கறக்குறீர்கள

அதற்கு வலி இருக்காதா?
சொல்லுங்கள் கோழியின் முட்டை ஸைவமா?

என்னோட கருத்து
நவம்பர் 5, 2007 - 4:53pm - வழங்கியவர் admin

அப்பு கண்ணா,

என்னுடைய கருத்தை சொல்ல நினைத்தால் அதை என் பேரிலேயே சொல்லும் தைரியம் எனக்கு இருக்கிறது. உங்களைப் போல் பெண் பெயரில், சிநேகிதி, ஷில்பா, ஷமி என்றெல்லாம் வரப்போவதில்லை மிஸ்டர் சிராஜ். எத்தனை முறை குட்பை சொன்னாலும் மீண்டும் மீண்டும் வருவேன் என்று அடம்பிடித்தால் எப்படி? இதற்கு மேல் எப்படி விரட்டுவது?

ஹரிராம் அவர்களே!
நவம்பர் 5, 2007 - 5:50pm - வழங்கியவர் Asma

'நல்லா பதில் கொடுத்துட்டோம், இப்போ நாக்கை பிடுங்கிக்குவாங்க, இல்ல நாலு பேர் கைக்கொட்டியாவது சிரிப்பாங்க'ன்னு உங்களுக்கு ஒரு நப்பாசை இருக்கலாம். எங்கே உங்களுக்கு யாராவது பதில் கொடுத்தா பேசுவதற்கு கருணைங்கிறத தவிர வேற சரக்கு இதற்கு மேல் ஒன்றுமில்லையே என்று, முடிக்கும்போது "எனக்கு யாரும் பதில் கொடுக்க வேண்டாம், கேள்வியும் கொடுக்கவேண்டாம்"னு வேற பெரிய முற்றுப்புள்ளியா வச்சிட்டு போயிட்டீங்க. நீங்க திருப்பி வந்தாலும் சரி, வராட்டாலும் சரி பதிலுன்னு இருந்தா நாங்க கொடுக்கதானே வேணும்..?

//நாம செய்யற தப்புக்கு நாம் எப்படி வேணும்னாலும் வெளக்கம் கொடுத்துக்கிட்டு நம்மை நாமே சமாதானப்படுத்திக்கலாம்.//

தப்புன்னு நீங்க முடிவு பண்ணிட்டா அது தப்பா ஆயிடாது சகோதரரே! அசைவம் சாப்பிடுவது சரியா தவறாங்கிறதை அந்தந்த அரசாங்கமோ அல்லது உங்களை விட கருணைக் குணம்படைத்த எத்தனையோ அமைப்புகளோ முடிவு செய்யட்டும், பேசிக்கலாம்.

//இவங்களுக்கு எப்பவும் இதே வேலை.. தலைப்பு என்னங்கிறதை பார்த்து பேசவே மாட்டாங்க. பட்டுப்புடவைக்கு புழுவை கொல்றது நியாயமா, இல்லையாங்கிறது இங்க தலைப்பு இல்லை. சாப்பிடறதுக்கு உயிரைக் கொல்றது சரியா தப்பாங்கிறதுதான் தலைப்பு.//

யெஸ் ஆர் நோ சொல்லிட்டு போற வெறும் வாக்கெடுப்பு அல்ல இது. சாப்பிடுவதற்காக கொல்வதற்கே நியாயமான்னு கேள்வி வரும்போது, அதோடு சேர்ந்த எல்லா விஷங்களையும்தான் கேட்கும்படி வரும். "தாக்க வர்ற மிருகத்தைக் கொல்றதையும், அதுபாட்டுக்கு போய்கிட்டு இருக்கிற மிருகத்தை கொல்றதையும் ஒரே தட்டில வச்சு நியாயம் பேச முடியாது" என்று நியாயம் பேசும் நீங்கள், பட்டுப்பூச்சி விஷயத்தில் மட்டும் 'இது இங்கே தலைப்பு அல்ல' என்று நழுவுவது ஏன்? அதை தவறென்று ஒத்துக்கொண்டால், நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் கூட கால்நடை, பறவைகளின் உயிர்கள் போக்கப்பட்டுள்ளன என்ற உண்மையையும் ஒத்துக்கொள்ள நேரிடுமேன்னு அச்சமா?

// - மனிதன் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக, மருத்துவ பரிசோதனையின்போது பல உயிரினங்களை பலி கொடுக்கிறோம்.

- மனிதனுக்காக தயாரிக்கப்படும் எத்தனையோ தடுப்பூசிகள், அவற்றிற்கு தேவையான பல உயிரினங்களைக் கொன்று தயாரிக்கப்படுகிறது.

- மீனின் ஈரலிலிருந்து தயாரிக்கப்படும் மீன் மாத்திரைகளை, உடம்புக்கு அந்த சத்து தேவை என்று எடுத்துக்கொள்கிறோம். அப்போதுமட்டும் மீன்கள் தன் உயிரை இழக்காமலே ஈரலைக் கொடுக்கிறதா? //

நான் ஏற்கனவே சொன்ன இந்த விஷயங்களுக்கெல்லாம் பதில்சொல்ல உங்களால் முடிந்தால் சொல்லவேண்டியதுதானே? அத விட்டுட்டு 'குழந்தைய கொல்லுங்க, குடும்பத்த கொல்லுங்க'ன்னு நவீன ஹிட்லராக பேசுறீங்களே?!

நீங்கள் அசைவம் உண்ணவில்லை என்பதற்காக அன்பு, பாசம், நன்றி என்றெல்லாம் கால்நடைகளை மனிதனுக்கு, அதுவும் ஒரு குழந்தைக்கு சமமா பேசுகிறீர்களே? மற்ற உயிரினங்கள் சாவில் உங்களுக்கும் பங்கில்லை என்று திட்டவட்டமாக உங்களால் சொல்லமுடியுமா? உங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களை பாருங்கள். சோப்பு, டூத் பேஸ்ட், ஷேவிங் க்ரீம்ஸ், ஸ்வீட்ஸ் என்று எத்தனையோ பொருட்களில் கால்நடைகளின் கொழுப்புகள் சேர்க்கப்படுகிறதே? அவைகளை வாங்கவே மாட்டீர்களா?லெதர் ஷூக்கள், லெதர் பர்ஸ், பேகுகள் பயன்படுத்தவே மாட்டீர்களா? ஆட்டின் மண்ணீரலினால் தயாரிக்கப்படும் டானிக்குகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்யும்போது அதை உதாசீனப்படுத்துவீர்களா? சீனியில் மாட்டின் எலும்புகளைக் கலந்து தயார் பண்ணுகிறார்களே, அதையும் தொடமால்தான் இருக்கிறீர்களா? கேட்டால், தலைப்பு 'உணவுக்காக கொல்வது' பற்றிதான் என்று கூறி தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுடைய பாணியில் 'தாக்க வர்ற மிருகத்தைதான் கொல்லணும், அதுபாட்டுக்கு போய்கிட்டு இருக்கிற மிருகத்தை கொல்லக்கூடாது' ன்னா, ஏன் அதுபாட்டுக்கு போய்கிட்டு இருந்த மிருகத்தை கொன்று செய்த பொருட்களை மட்டும் பயன்படுத்துறீங்க? உங்களுக்கு தேவைன்னா கண்டுக்க மாட்டீங்க, தேவையில்லாட்டி கருணையைக் கொட்டி காட்டுவீங்களா?

//கால்நடைகளை சாப்பிடலைன்னா அதுங்க இனப்பெருக்கம் செஞ்சு நாட்டுல கால்நடையா மேயுமாம். யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்கறாங்க. இதை கண்டுபிடிச்ச அக்காவுக்கு கொடுக்க மாட்டேங்கிறாங்களே.//

அக்காவுக்கு நோபல் பரிசு கிடைக்க என்ன கரிசனம் இந்த தம்பிக்கு?!!! மீண்டும் ஒருமுறை அதைப் படித்துப் பாருங்க தம்பி...! கால்நடைகளை சாப்பிடுவதற்கு இதை காரணமாக நான் சொல்லவில்லை. "அசைவ உணவுகள் என்று ஒன்று இல்லாவிட்டால் உலகம் என்னவாகும்? எல்லோரும் சைவர்களாக இருத்தல் இயலுமா?" என்ற அட்மின் அவர்களின் கேள்விக்கு பதிலாகத்தான், அதன் பின்விளைவுகளைத்தான் இங்கே சொன்னேன். உங்க அறிவுக்கு அது சரியாக படாவிட்டால், அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?

//நீங்க சாப்பிடாதா சிங்கம், புலி, கரடி, நாயெல்லாம் இன்னைக்கு இனபெருக்கம் செஞ்சு நாடு முழுக்க மேஞ்சுக்கிட்டா இருக்கு.//

நீங்க சொன்ன, இன்னும் சொல்லாத எத்தனையோ விலங்குகள் மனிதர்களால் சாப்பிடப்படாமலும், அதேசமயம் இனப்பெருக்கமாகி நாடுமுழுக்க மேயாமலும் இருக்கிறதே, இதன் அறிவியல் உண்மை நம்மை வியக்க வைக்கிறது! காட்டு விலங்கினங்கள் அழியக்கூடாது என்பதற்காக என்னதான் பாதுகாப்பு கொடுத்து, தேடி அலையாமலே தினம் தினம் உணவுகளும் கொடுத்து வளர்க்கிறார்களே, ஏன்? மனிதன் சாப்பிட ஏதுவான ஆடு, மாடு, மான், ஒட்டகம் போன்ற சில கால்நடைகளைத் தவிர மற்ற விலங்கினங்களின் இனப்பெருக்கம் வெகு குறைவானது என்பதால்தான்! அதேசமயம் சாப்பிடத்தகுதியான மேலே சொன்ன அந்த கால்நடைகள், மனிதனின் கவனிப்பு இல்லாமலேயே விரைவில் பெருகக்கூடியவை!இதைத்தான் "கால்நடைகள் பெருகும்" என்று சுருக்கமாக சொல்லியிருந்தேன். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தால் போதும் என்று நினைத்தேன். உங்களிடத்தில் விளக்கமாகத்தான் சொல்லவேண்டியுள்ளது.

//கிலோ 10,20 ரூபாய்க்கு கிடைக்கும் காய்கறிகள் எல்லாம் விலை ஏறுமாம். அதற்காக அம்மணி உயிரைக் கொன்னு சாப்பிடுறாராம். இன்னைக்கு நீங்க வாங்குற ஆட்டுக்கறி கிலோ 150 ரூபாயை தாண்டி போச்சு. இன்னைக்கும் ஒரு கட்டு கீரை ஒண்ணரை ரூபாய்க்கு கிடைக்குது. //

இங்கு உங்களை அறியாமலே ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறீர்கள்! இன்றைக்கு அசைவம் சாப்பிடுபவர்கள் அதிகமாகி வருவதால்தான் ஆட்டுக்கறி, மாட்டுக்கறியின் விலை ஏற்றமெல்லாம்! இன்று முட்டையைக் கூட அசைவமில்லைன்னு சொல்லி சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இதேபோல் சைவம் சாப்பிடுபவர்களாக அனைவரும் மாறினால், உங்களுக்கு இப்போது ஒன்றரை ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு கட்டு கீரைக்காக உங்களின் சொத்துக்களை விற்று சாப்பிடும் நிலைக்கூட ஏற்பட வாய்ப்புள்ளது தம்பி! 'இப்போ சைவம் மட்டும் சாப்பிடுறவங்க சாத்தியமில்லாமலா சாப்பிடுறாங்க'ன்னு நீங்க ஒரு சின்ன வட்டத்தைப் போட்டு அதுக்குள்ள யோசிக்காம, ஒட்டுமொத்த உலக மக்களையும் மனதில்வைத்து விரிவா யோசிச்சு பாருங்க! அதற்காக நாங்க யாரையும் கம்ப்பெல் பண்ணவுமில்லை, நாங்க சைவ உணவுகளை வெறுப்பவர்களும் அல்ல.

//தண்ணியில் பாக்டீரியா இருக்காம், அதனால தண்ணியே குடிக்ககூடாதுன்னு அறிவுபூர்வமா வாதாட உங்களை விட்டா வேற யாராலயும் முடியாது. தண்ணியில இருக்கிற கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா ருசியா இருக்குகிறதுக்காக யாரும் தண்ணி குடிக்கிரது இல்ல.//

அப்படீன்னா பிற உயிர்களைக் கொல்வது ருசிக்காக இருந்தால் மட்டும்தான் அது குற்றம், மற்றபடியுள்ள உங்க சுயநலனுக்காக கொல்லலாம் என்கிறீர்களோ :-/

//தாவர உணவுக்காக மூன்றாம் உலகப்போர் வருமாம். இப்படி படிக்கிறவங்க எல்லாரையும் சின்னப்புள்ளையா நினைச்சிக்கிட்டு எழுத எடம் கிடைச்சதுன்னு எதாவது எழுதக்கூடாது. //

எது எதுக்காகவோ அடித்துக் கொள்ளும் மனிதன், தாவர உணவை மட்டுமே உண்பதினால் பஞ்சநிலை ஏற்படும்போது, தன் ஒரு ஜான் வயிறு காய்கிற நிலை வரும்போது, கண்டிப்பாக சிறு சண்டைகளும் போராக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை. யாரும் இங்கே வாயில் விரல் வைத்தால்கூட கடிக்கத் தெரியாத சின்னப்புள்ளையில்லை. நீங்க புரிஞ்சிக்கிட்ட விதம்தான் சின்னப்புள்ளத்தனமா இருக்கு. :)

//உலக ஜனம் மொத்தத்துக்கும் தேவையான காய்கறி உற்பத்தி பண்ண இன்னைக்கு உலகத்துல இடம் இருக்கு வசதி இருக்கு. //

உங்க வார்த்தையை நீங்களே மீண்டும் படிச்சுப் பாருங்க தம்பி! "இன்னைக்கு உலகத்துல இடம் இருக்கு வசதி இருக்கு" தான். யார் இல்லேன்னா? எல்லோரும் சைவமா மாறினாலே தெரியும், "அன்றைக்கு" எப்படி இருக்கும்னு...? :-)

//கழுத்துல சரியா வெட்டினா அதுக்கு வலிக்காதாம்... அந்த ஆடு உங்ககிட்டே வந்து சொன்னுச்சு..........நம்புறதுக்
கு எல்லாரும் மடையன்ங்க இல்லை.//

குழந்தையையும் கால்நடைகளையும் சமமாக நினைக்கும் நீங்கதான் அந்த பரிசோதனைய செஞ்சு பார்த்துக்கணும். இந்த கோரமான எண்ணமெல்லாம் உங்களைப்போல் எங்களுக்கு கனவிலும் வராது காருண்யவானே (?) ! உங்க கருணையின் லட்சணம் உங்க எழுத்திலயே தெரியுதே? ஆடு வந்து எங்க கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை. அறிவியல் உலகத்தின் முடிவுகளே எங்களுக்கு சொல்கிறது. பாவம், உங்களின் பரிசோதனைக்கு உங்க குழந்தையாகட்டும், வேற குழந்தையாகட்டும் பலியாகிவிடப்போகிறது என்ற அச்சத்தில் அதையும் உங்களுக்கு இங்கே சொல்கிறேன், கேளுங்கள்.

கால்நடைகள் முறையாக அறுக்கப்படும்போது, இரத்தக் குழாயும் மூச்சுக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு, வலியை மூளைக்கு கடத்திச் செல்லும் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை. உடலில் உள்ள சதைப் பாகங்கள், இரத்தமில்லாமல் சுருங்குவதால் ஏற்படும் மாற்றத்தால்தான் அறுக்கப்பட்ட அவை துள்ளுவதும், துடிப்பதுமே தவிர வலியால் அல்ல! இந்த அறிவியல் உண்மையை நம்புறவங்க நம்பட்டும். நாங்க என்ன மடையன்களான்னு கேட்பவர்கள், குழந்தைகளுக்கும் வலியை சொல்லத் தெரியாது என்பதால், வக்கனையாக கருணைப்பேசும் வாயுள்ள ஜீவன்கள் தனக்குத்தானே செக் பண்ணிக்கொள்ளட்டும். அதைப்பற்றி எங்களுக்கென்ன கவலை?
(அப்படி பேசுபவர்களுக்கு இப்படிதான் பதில்பேசமுடியும். மற்ற யாரையும் புண்படுத்த அல்ல.)

//இனபெருக்கத்துக்காக உயிர் வதைன்னா, இன்னைக்கு மனுச பெருக்கம்தான் நாளுக்குநாள் அதிகமாயிட்டு போகுது...... அதுகூட ருசியாத்தான் இருக்கும்.//

இதற்கும் முன்னுள்ள பத்தியை மீண்டும் படித்துப் பார்த்துக்கொள்ளவும். புரிந்தால் சரிதான்.

//அடுத்த முறை கறி சாப்பிடுறப்ப, அது எப்படி கதறக் கதற அறுக்கப்பட்டதுங்கிறதை நினைச்சிக்கோங்க.....கேவலம் நம்ம நாக்கு ருசிக்காக இப்படி வயித்துக்குள்ளே போகுதுன்னே ஒரு நிமிசம் நினைச்சு பாருங்க.. அது போதும்..//

உங்கள் கருணையுள்ளம் (?) மனிதனை மனிதனே கொன்று வஞ்சம் தீர்ப்பதின் பக்கம் திரும்பட்டும். உங்களைப்போன்ற ஒரு மனிதனைக் காப்பாற்றிய புண்ணியமாவது உங்களுக்கு கிடைக்கும். அத செய்யாம நாக்கு ருசி, மூக்கு ருசி, கேவலம்னு பேசி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்காதீங்க.

........
நவம்பர் 5, 2007 - 5:57pm - வழங்கியவர் thalika

........

என்னை வைத்து ஒரு விளையாட்டு
நவம்பர் 5, 2007 - 6:49pm - வழங்கியவர் admin

ஹரிராம் என்ற ஒருவர் உண்மையா என்பதை மட்டும் நான் உறுதி செய்துகொண்டால் எனக்கு மேலும் சில விசயங்களை முடிவு செய்ய இயலும். அப்பு, ஹரி இருவர் ஐபியும் ஒன்று அல்ல. இரண்டும் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்றது. இன்னும் சில (வி)ஷமிக்கள் ஊடுருவி இருக்கின்றார்கள் என்றுதான் தோன்றுகின்றது. அவர்களின் திறமையையும் கொஞ்சம் பாராட்டியே ஆகவேண்டும்.

அவர்கள் நினைத்து நடத்திய நாடகத்தில் அவர்களுக்கு ஓரளவிற்கு வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இங்கே நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பும் விசயம் ஒன்றுதான். நீங்கள் கெடுக்க நினைக்கும் அளவிற்கு பெரிய நல்ல பெயரை நான் சம்பாதித்து வைத்திருக்கவில்லை. என்னுடைய மாறுபட்ட கருத்துக்களால் ஏற்கனவே நிறைய பேருக்கு நான் பிடிக்காதவன் ஆகிவிட்டேன். இன்னும் சில விவாதங்களில் கலந்துகொண்டால் எல்லோருக்கும் பிடிக்காதவன் ஆகிவிடுவேன். நீங்கள் சிரமப்படவே வேண்டாம்.

சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் உயிரைக் கொல்லாதீர்கள், புலால் உண்ணாதீர்கள் என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவு கொடுத்து இருந்தார். அதனைப் பார்த்து சகோதரி தளிகா அவர்களும் இதையே அடுத்த வாக்கெடுப்பிற்கு தலைப்பாக்கினால் என்னவென்று கேட்டு எழுத, நான் அதையே வாக்கெடுப்பிற்கு கொண்டு வந்தேன். இது மிகச் சாதாரண தலைப்பு. இதைவிட சூடு கிளப்பும் தலைப்புகள் நிறைய கைவசம் இருக்கிறது. ரேட்டிங்கை (?!) உயர்த்த அந்த தலைப்புகள்தான் எனக்கு உதவும். இதை நான் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை.

சப்போர்டை வாபஸ் வாங்குகிறேன்..
நவம்பர் 5, 2007 - 10:32pm - வழங்கியவர் ambika_dt

ஹரிராம் என்ற பெயரில் வருபவரின் நோக்கம் அட்மின் அண்ணாவின் பதிவிற்கு பிறகு புரிந்தது.. அஸ்மா வின் பதிவு அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.. ஆனால் அவர்களுக்கு தெரியாது,நம் தோழிகளின் நட்பின் வலிமை..

அம்பிகா

தவறு இல்லை
நவம்பர் 5, 2007 - 11:10pm - வழங்கியவர் harshini

ஒவ்வொரு வகையான மிருகங்களையும், ஒவ்வொரு விதமாக பிரித்துள்ளார்கள் :-)

ஆடு, முயல் போன்றவை ஹெர்பிவொரஸ்,
சிங்கம், புலி போன்றவை கார்னிவொரஸ்,
மற்றும்
மனிதன் ஆம்னிவொரஸ்

மனிதன் ஆம்னிவரஸ் என்று சொல்வதன் காரணம் மனிதன் செடி கொடிகளையும் சாப்பிடுவான், ஆடு, முயல் போன்ற ஹெர்பிவொரஸ் ஜந்துக்களையும் சாப்பிடுவான் :-)

ஆக உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும், இது உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்று உள்ளது:-) மனிதனை தவிர :-) அதனால் அசைவம் சாப்பிடுவது தவறு ஒன்றும் இல்லை என்பது தான் என் கருத்தும்:-)

அம்பிகா சொன்னது போல தான் எனக்கும் நடந்தது :-) சின்ன வயதில் உறவினர் குழந்தைக்கு மோட்டை போடும் நிகழ்ச்சியில் பலி கொடுக்கப்பட்ட ஆட்டை பார்த்த நாளிலிருந்து நான் அசைவம் உண்டதை நிருத்திவிட்டேன் :-) ஆனால் இன்று உண்ண வேண்டும் என்று முயற்சி செய்தும் முடியாமல் உள்ளது :-) என் தோழிகளும், நீ புண்ணியம் செய்தவல், அதனால் தான் இப்படி இருக்க முடியுதுன்னு சொல்லிடறாங்க. ஆனா நான் சாப்பிடனும் தான் நினக்கிறேன்.

சில விஷயங்கள் மீன்களில் தான் கிடைக்கும். Omega -3 fatty acids எனப்படுவது. மூளைக்கு அது மிகவும் நல்லது. பிறக்க போகும் குழந்தைக்கும் நல்லது :-) அப்படி இருக்கும் போது மீன் உண்ணாதவர்கள் கூட அந்த மாத்திரையை உண்கிறார்கள்.

சிங்கம், புலியெல்லாம் மானை கொன்று சாப்பிடுகிறது என்பதால் அவையெல்லாம் நல்லவை அல்ல என்பது அல்லா :-) அவற்றின் உயிர் வாழ அது அவசியம் :-) என்பதால்.

அந்த காலத்தில் வாழ்ந்த ஷத்ரியாஸ்(shathriyaas) மான், புலி அனைத்தையும் வேட்டை ஆடினார்கள். அவர்களுக்கு அந்த வீரம் வரக்காரணம் அவர்கள் உண்ட மாமிசம் தான் :-) கோவில் பூஜை, புலவர்கள், போன்ற மென்மையான வேலை செய்தவர்கள் மட்டும் சைவம் மட்டுமே உண்டார்கள். காரணம் அவர்களுக்கு வீரசெயல்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை :-) இன்னொன்ன்று அவர்கள், பூண்டு, வெங்காயம் போன்றவைகளையும் அறவே தவிர்த்தார்கள் :-)

ஆக அசைவம் உண்பதினால் நம் உடலுக்கு நல்லது உண்டு. அதிகம் உண்பதினால் கேடு உண்டென்றாலும்[எதுவாக இருந்தாலூம் அதிகம் உண்ணக்கூடாது இல்லையா:-)], அளவோடு உண்பதினால் உடல் வலிமை அதிகம் ஆகும் :-) அதனால் தவறு ஒன்றும் இல்லை :-)

முனிவர்கள் எல்லாம் கூட மானின் தோலின் மீது, புலியின் தோலின் மீது தான் இருந்து தவம் செய்துள்ளார்கள். அப்போது அவற்றை கொள்ளாமல் முடியாது அல்லவா?

உடலுக்கு சில பொருட்களின் அவசியம் உண்டு, அவையனைத்தும் நமக்கு ஒரு வழியில் கிடைக்கும் போது அந்த வழியில் சென்று அவற்றினை பேற்று ஆரோக்யமாக வாழ்வதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்.

இன்னொன்றும் சொல்லவேண்டும் :-) அரசர்கள் செய்த அளவிற்க்கு இன்று நாம் வேலை செய்வதில்லை. அதனால் தான் அசைவம் குறைவாக சாப்பிடவேண்டும் என்கிறோமே ஒழிய. அசைவம் உண்வதினால் கேடு என்பதினால் அல்ல:-)

முக்கியமான விஷயம் :- எல்லா மனிதர்களும் செடி கொடிகள் மட்டுமே உண்டால் ஒரு மாற்றமும் வராது என்று சொன்னவருக்காக. செடி கொடிகள் மட்டும் உண்பவர்களால் கடினமான வேலை எதுவும் செய்ய முடியாது. கொள்ளன் செய்யும் வேலை, வீடு கட்டும் தொழிலாளர்கள், உயிரை பணயம் வைத்து செய்யும் வேலைகள். இவை அனைத்தும் செய்பவர்களூக்கு தேவையான உடல்வலிமை செடி கொடிகள் உண்வதினால் கிடைக்காது:-) ஆதலால் தான் வீரம், வலிமை தேவையானவர்கள், அவர்கள் செய்யும் வேலை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், செய்யக்கூடிய அந்த பவர் செடிகொடிகள் உண்பதீனால் வராது :-) அதனால் தான் அப்படி வீர செயல்கள் செய்தவர்கள், அதாவது அரசர்கள், போர் வீரர்கள், இவர்களை சத்ரியர்கள் என்று அழைப்போம், அசைவம் உண்டார்கள். இன்றும் அவ்வளவு கடினமான வேலை செய்பவர்கள் அசைவம் இல்லாமல் உண்ணமாட்டார்கள்.

அப்படி செடிகொடிகளை மட்டும் உண்டால் கடினமான வேலைகளை செய்ய முடியாதா, என்றால், முடியாது என்பது தான் விடையாக இருக்கும். ஆகையால், அவர் அவர் தேவைக்கேற்றபடி, அவரவர்கள் அசைவம் உண்கிறார்கள்.

உணவிற்காக பிற உயிர்களை கொல்வது சரியா?
தவறில்லை என்பதே என் கருத்து.
ஏனென்றால் நம் பிறவி அந்த வகையைச்[ஆம்னிவொரஸ்] சார்ந்தது :-). அப்ப்டி தவறென்றால் சிங்கம் புலி கூட வேட்டை ஆடக்கூடாது தானே :-)

[பின் குறிப்பு:- கார்னிவொரஸ், ஆம்னிவொரஸ், ஹெர்பிவொரஸ் - தமிழில் என்ன சொல்வார்கள் என்று தெரியாது :-)]

அன்புடன்
ஹர்ஷினி :)

வாழ்கை சக்கரத்தை மாற்ற முடியாது.
நவம்பர் 6, 2007 - 1:25am - வழங்கியவர் ahmed

அசைவம் (உயிர்கலை கொன்று சப்பிடுவது) : தவரு என்றும், சைவம் ( அதுவும் உயிர்கலை கொன்று சாப்பிடுவது) சரி என்றும் யாராலும் மாற்ற முடியாது. இரன்டிர்கும் சரி சமமான சரியும் தவரும் உள்ளது.

அசைவம் சாப்பிடுவோர் ஆடு, மாடு, கோழி, மீன் ...இவைகலை தான் சாபிடுகிரோம்.

எவ்வலவோ விஞ்யானம் ஆராய்ச்சி செய்தும் இதர்கு முடிவு சொல்ல முடியாது.

; )) அஹ்மது :-))
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

அட்மின் பெயரில் புல்லுருவிகள்
நவம்பர் 6, 2007 - 3:32am - வழங்கியவர் RSMV

யாரோ வேண்டும் என்றே admiin, jolluadmin என்று பெயர் கொண்டு புதிதாக இணைந்து கொண்டு இருக்கிறார்கள்.முகத்துக்கு நேரே பேச முடியாதவர்கள். அட்மின் கவனிக்கிரீகளா?

வணக்கம் பாபு அண்ணா,
நவம்பர் 6, 2007 - 3:59am - வழங்கியவர் Muthulakshmi

கவனியுங்கள் சீக்கிரம். யாரோ பெயர் கொடுக்காமல் உங்களை திட்டி எழுதுகிறாகள். ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள். முதலில் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. சீக்கிரம் கவனியுங்கள்.

இணையதள உரிமையாளர்கள் :-(
நவம்பர் 6, 2007 - 4:39am - வழங்கியவர் raghu nandhan

மதிப்பிற்குரிய சகோதரிகளுக்கு,
மன்றத்தில்வரும் விஷயங்களுக்காக அதிகமாக உணர்ச்சிவசப்படவோ, வருத்தப்படவோ தேவையில்லை. ஏனென்றால் இணையங்களின் வளர்ச்சிக்காக இணைய உரிமையாளர்கள் வழக்கமாக இவ்வாறு செய்வது வழக்கம்.நானும் ஒரு இணையதளத்தில் பணிபுரிபவன் என்பதால் இதை நிச்சயமாக என்னால் கூற இயலும். இணையதள உறுப்பினர்களின் தகவல்களை நிர்வகிப்பவர்கள் அறியமுடியும். ஆனால் அங்கத்தினர்களுக்கு அந்த வசதி இல்லாததால் இதைப் புரிந்துகொள்ள இயலாது.

பல கணினிகளிலிருந்து பல பெயர்களில் விவாதம் செய்வது தளத்திற்கு ஒரு விறுவிறுப்பைக் கொண்டுவருவதற்கான வியாபார யுத்தி.அங்கத்தினர்கள் பார்வையிடும் நேரத்திற்கேற்ப இணையதளத்தின் வருவாய் உயரும். இப்படி ஏதேனும் பிரச்சனை என்றால் நாம் வேலையை மறந்து கணினியே கண்ணாக உட்கார்ந்திருப்போமல்லவா? அதுதான் இணையதளத்தின் வெற்றி.அதனால் வீணாக உங்களைக் குழப்பிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

அட்மினுக்கு நெட் கனெக்ஷன் பிரச்சனை
நவம்பர் 6, 2007 - 5:53am - வழங்கியவர் DEVA

அட்மினுக்கு தற்சமயம்(நேற்று மதியத்திலிருந்து நெட் கனெக்ஷன் சரி வர இல்லாததால்) நெட் கனெக்ஷன் இல்லாததால் அறுசுவையை பார்வையிட இயலவில்லை. நெட் கனெக்ஷன் வந்ததும் பதிவுகளை பார்ப்பதாக சொன்னார். நான் இந்தப் பதிவுகளைப் பற்றி சொன்னதும் நெட் கனெக்ஷன் வந்ததும் பார்வையிடுவதாக கூறினார்.

ஒரே குழப்பம்..!
நவம்பர் 6, 2007 - 10:57am - வழங்கியவர் Asma

இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை :-O எப்போதும்போல் விவாதத்தில் கருத்துக்கள் எடுத்துவைக்கப்பட்டன. எதிர் கருத்துக்கள் காரமாக வந்தபிறகு, மீண்டும் பதில் கருத்துக்களும் காரமாக வைக்கப்பட்டன. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால், திடீரென்று 'ஹரிராம்தான் அட்மின்' என்று யாரோ ஒரு 'அப்பு' குட்டையை குழப்ப, அட்மினின் பதிலில் அதற்கு தெளிவு கிடைத்தது.

யாரந்த ஹரிராம்? 'ஹரிராம்' என்பவர் உண்மையாக இருந்தால், அட்மினின் பதிவுக்கு பிறகு அவர் பதில் போட்டிருக்கவேண்டுமே? வாய்கிழிய பேசியவர் இப்போது எங்கே? அதென்ன ஜொல்லுஅட்மின் என்ற பெயரில் தலைப்பையும் நாய், பேய் என்று அநாகரிகமாக போட்டு, பதிவை அதைவிட அநாகரிகமாகப் போட்டு...இதெல்லாம் அசிங்கமாக இல்லையா? இது ஆண்களே கலந்துக்கொள்ளாத ஒரு இணைய தளம் கிடையாதே?! இதில் கலந்துக் கொள்ளும் பெண்களும் (உலகமே பார்க்க முடிந்த இணைய தளத்தை) அவரவர் வீட்டு ஆண்களுக்கு தெரியாமல் ரகசியமாக கலந்துக் கொள்ளவுமில்லையே! அதற்கு தேவையும் இல்லையே? ஏன் இப்படி கொச்சைப்படுத்துகிறீர்கள்? அதனால் என்ன லாபம் பெறப்போகிறீர்கள்? தேவையில்லாத இப்படிப்பட்ட தலையீடுகளால், வளர்ந்துவரும் எந்த தளத்தையும் முன்னேறவிடாமல் தடுக்க யாராலும் முடியாது. தனிப்பட்ட கோப, தாபங்கள் ஏதுமிருந்தால், ஏன் இந்த பொது இடத்தில் வந்து காட்டவேண்டும்? அட்மின் அண்ணனே! உங்களுக்கு தெரிந்தால் இவை அனைத்திற்கும் நீங்கள்தான் தயவுசெய்து எங்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும்.

வாதம்
நவம்பர் 6, 2007 - 5:28pm - வழங்கியவர் rasia

நான் வாதம் பண்ண வரவில்லை,ஆனால் வாதம் பண்ணுபவர்கள் வக்கிரமான வார்த்தையை உபயோகிக்க கூடாது,ஒரு பிராணியுடன் குழந்தையை ஒப்பிடுவது, அதை இப்படி கற்ப்பனை பண்ணிஎழுதுவது //எங்கே உங்க வீட்டு குழந்தையை கூப்பிட்டு சங்கில கரெக்டா அறுத்துப்பாருங்க.. அதுக்கு வலிக்குதா வலிக்கலையான்னு தெரியும்அவங்க குழந்தைங்கள்ல ரெண்டு மூணை எடுத்து வந்து, திருதிருன்னு முழிச்சுக்கிட்டு அழகா சிரிக்குமே அந்த பாப்பாவோட கழுத்து சங்கை மெதுவா பிடிச்சி, சத்தமே வராம, வலியே இல்லாம அறுத்து, குபுக்குனு வர்ற இரத்தத்தை பாத்திரத்துல பிடிச்சு உப்பு, கறியை கை கால்னு வெட்டி, சமைச்சு சாப்பிட்டு பாருங்க. அதுகூட ருசியாத்தான் இருக்கும்// அய்யோ எப்படி ஒரு மனிதனால் கற்ப்பனை பண்ணி எழுதமுடியும் இப்படியும் வக்கிர குணம் உள்ளவருக்கு ஜீவ காருன்யம் பத்தி பேச என்ன அருகதை இருக்கிறது?பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் நிறைய வேறு பாடு உள்ளது,நம் நாட்டில் மிருக வதை கூடாது என்று சட்டம் உள்ளது,சரி ஏன் நம் நாட்டில் மிகுதியானோர் அசைவம் சாப்பிடுகிறார்கள்?தடை செய்யவில்லையே?எப்பொழுதும் இரு கருத்துடையோர் உள்ளனர் அவரவர் கருத்தை நாகரிகமான வார்த்தைகளைக்கொண்டு வாதம் செய்யுங்கள்!அநாகரிகமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது!

கல்லி வல்லி
நவம்பர் 6, 2007 - 6:49pm - வழங்கியவர் thalika

தோழிகளே இது போன்ற அநாகரீகமான வார்த்தைகளும் பதிவுகளும் எல்லா தளங்களிலும் வந்து விழும்...அறுசுவையில் மட்டும் தமிழில் இருப்பதாலும் அட்மின் உஷாராக இருந்து தளத்தை கவனிப்பதாலும் இது போன்ற அசிங்கமான பதிவுகளை அதிகம் பார்க்கமுடிவதில்லை...
எதனால் யாருக்கு இதனால் என்ன பயன் என்று நாம் குழம்பவும் வேண்டாம் ..
நேரில் மனநோயாளிகளை நாம்பார்த்ததுன்டு..ஆனால் ஒரு சிலர் பார்க்க பழக சராசரி ஆள்களாக இருந்து இணையதளம் என்று வந்து விட்டால் மறைந்திருந்து முகம் தெரியாமல் கண்டபடி அசிங்கம் பேசி ரசிப்பதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம்..
அட்மின் ஜொள்ளா இருந்தாலும் கல்லா இருந்தாலும் நம்மை ஒரு விதத்திலும் அது பாதிக்கப் போவதில்லை...இங்கே வருகிரோம் சமையல் குறிப்பை பார்க்கிரோம் சமைக்கிரோம், மன்றத்தில் முகம் தெரியாத பலருடன் நெறுங்கிப் பழகுகிரோம்..அதற்கான நன்றி அவருக்க நம் மனதில் எப்பொழுதும் உண்டு...
அவருக்கு மறைந்திருந்து கொண்டு எழுத வேண்டிய அவசியமும் இல்லை.
அதனால் நாம் இவற்றை அலட்சியப்படுத்திவிட்டு எப்பொழுதும் போல் பேசுவோம்

சகோதர,சகோதரிகளே!
நவம்பர் 6, 2007 - 7:40pm - வழங்கியவர் rasia

சகோதர,சகோதரிகளே
இந்த வாதத்தில் சில விஷமிகள் ஊடுருவலால் தேக்க நிலை இருக்கிறது துஸ்மனைக்கண்டால் தூர விலகுவது போல் அவர்களின் பதிவயும் அலச்சிய படுத்துங்கள்,தொடருங்கள் உங்கள் வாதத்தை....!

சகோதரி அஸ்மா அவர்களுக்கு
நவம்பர் 6, 2007 - 10:56pm - வழங்கியவர் admin

அன்பு சகோதரி அஸ்மா அவர்களுக்கு,

விளக்கம் கேட்டிருந்தீர்கள். இதற்கு பெரிதாக விளக்கம் கொடுக்கமுடியாது. கொடுக்கவும் விருப்பம் இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், வளர்ந்து வரும் எல்லா தளங்களும் சந்திக்கும் பிரச்சனைகள் இவை. இதை லட்சியம் செய்யாதீர்கள். இப்படி எல்லாம் நடந்தால், அந்த தளம் நல்ல வளர்ச்சியை அடைந்துவருகின்றது என்று அர்த்தம். அறுசுவை ரேட்டிங், வருமானம், வளர்ச்சி என்றெல்லாம் பேசுகின்றவர்கள் மனதில் என்ன மாதிரியான எண்ண ஓட்டங்கள் இருக்கும் என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். இவர்களுக்கு அறுசுவையில் என்ன இருக்கின்றது என்பதை பற்றி கவலை கிடையாது.

அறுசுவை என்ற ஒரு இணையத்தளம் மன்றத்தில் நடக்கும் ஒரு வாக்கெடுப்பு விவாதத்தை வைத்துதான் வளர்ந்து வருகின்றது என்பது இவர்கள் எண்ணம். அதை குலைத்தால் ஏதேனும் மாற்றங்கள் உண்டாக்க முடியுமா என்பதை முயற்சி செய்கின்றார்கள். இவர்களில் யாரும் எனக்கு பரம்பரை எதிரிகள் கிடையாது. என்னால் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. பின்னர் எதற்காக இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்று யோசித்தால் கிடைக்கும் ஒரே விடை - புகைச்சல்தான் :-)

அலெக்சா ரேங்கிங்கின் படி அறுசுவை தளம் தமிழ் இணையத்தளங்களில் 15 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னால் இருப்பவர்கள் அத்தனை பேரும் தினமலர், தினத்தந்தி, குமுதம்.. போன்ற பத்திரிக்கை ஜாம்பவான்கள். வெறும் சமையல் சம்பந்தமான ஒரு இணைய தளம் முதல் 20 இடங்களுக்குள் வந்திருப்பது பெரிய விசயம், இதை அறுசுவை முதல் பக்கத்தில் கோடிட்டு காட்டு என்று சிலர் எனக்கு ஆலோசனை கூறினர். எனக்கு விருப்பம் இல்லை. காரணம், இந்த ரேங்க்கிங் ஒரு மாதிரிவாக்கெடுப்பு போல உத்தேசமான கணக்கு. மிகத்துல்லியமானது அல்ல. அடுத்து நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கின்றது. இதனை இப்போது பறைசாற்றவேண்டாம் முதல் 10 இடங்களுக்குள் வந்தால் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்று கூறி மறுத்தேன். இப்போது இந்த புகைச்சல் பேர்வழிகளுக்காக அதனை விளம்பரம் செய்தால் என்னவென்று தோன்றுகின்றது. எனது நெட் கனெக்சன் சரியாகட்டும். இன்னும் எரிய விடுவோம் :-)

இதில் ஒரு சுவாரஸியமான உண்மை என்னவென்று தெரியுமா? இணையத்தளங்களுக்கு எப்போதும் அதிக ஹிட்ஸ் கிடைப்பது அதன் எதிரிகளால்தான். சாதாரணமாக வருபவர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை மட்டும்தான் பார்வையிடுவார்கள். இவர்களோ ஒவ்வொரு முறையும் மொத்த தளத்தையும் பார்வையிடுவார்கள் :-) நான் தளத்தை பார்க்க மறந்தால்கூட இவர்கள் ஒருநாள் தவறாமல் பார்த்துவிடுவார்கள்.

இவர்களை அலட்சியப்படுத்துங்கள்.

நண்பர் ரகு அவர்களுக்கு
நவம்பர் 6, 2007 - 10:58pm - வழங்கியவர் admin

உங்களுக்கு நிச்சயமாக தெரிந்த, நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் கடைபிடிக்கும் வியாபார யுக்திகளை எல்லாம் வெளியிட்டு இருக்கின்றீர்கள் :-) நேயர்கள் பார்வையிடும் நேரத்திற்கேற்ப வருமானம் ஈட்டும் இணையத்தளத்திற்காக பணிபுரிகின்றீரா..!! அது என்ன மாதிரி இணையத்தளம் நண்பரே.. அறுசுவையிலும் அப்படி எதாவது செய்ய வழி இருந்தால் சொல்லுங்கள். மன்றம் என்பது அறுசுவைக்கு ஒரு கூடுதல் இணைப்பு. அவ்வளவுதான். அதுவே அறுசுவை கிடையாது நண்பரே. மன்றத்தில் அதிகம் பங்குகொள்கின்றவர்கள் 10 அல்லது 15 பேர்தான். இங்கே இந்த பதிவை போட்டுவிட்டு பாதுஷாவைப் பற்றி தேடுதல் நடத்தியிருக்கின்றீர்களே.. அதுதான் உண்மையில் அறுசுவையின் பலம். எனது உழைப்பு முழுக்க அது சம்பந்தமாகத்தான் இருக்கின்றது.

உங்கள் வியாபார யுக்திகளை நீங்கள் வீட்டிலும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்றுதான் எனக்கு தெரியவில்லை. எனது மனதில் சில நாட்களாகவே உறுத்தல்களாய் இருக்கும் சில விசயங்களை இங்கே பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன் நண்பரே. வெளிநாடா, இந்தியா உரையாடல் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது சில நாட்கள் நான் மௌனம் சாதித்து, மன்றம் பக்கம் வராமல் இருந்தது நினைவுள்ளதா? சர்வர் பிரச்சனை என்று காரணம் சொன்னாலும் உண்மை பிரச்சனை என்ன தெரியுமா? எதிர்பாராமல் ஏற்பட்ட அதிர்ச்சி, அதனால் மனதில் உண்டான காயம்.

அந்த விவாதத்தில் மிகத் தீவிரமாக வாதாடிக்கொண்டிருந்த எனது சகோதரி, திடீரென வேறு பெயரில் வந்து, சம்பந்தமே இல்லாமல் அநாகரீகம், வேடிக்கை பார்க்கின்றாயா? மாடு கதை தெரியுமா? கொடுத்திருக்கும் பாரதியார் பாட்டை படித்துவிட்டு உனது தளத்தைப் பார் என்றெல்லாம் வேண்டுமென்றே எழுத்து பிழைகளுடன் எழுதினாரே.. நினைவிருக்கின்றதா? முதலில் அதை யாரோ ஒருவர் எழுதியுள்ளார் என்று அலட்சியப்படுத்திய நான், பின்னர் எழுதியது எனது சகோதரியாக நான் நினைத்து வந்தவர்தான் என்று தெரிந்த போது எவ்வளவு வேதனை அடைந்தேன் தெரியுமா? அந்த வார்த்தைகளுக்காக நான் வருந்தவில்லை. எவ்வளவோ மோசமான சொற்களால் தாக்கப்பட்டிருக்கின்றேன். அதையெல்லாம் அலட்சியப்படுத்தி எறிந்து சென்றிருக்கின்றேன். ஆனால், இங்கே உண்மையிலேயே காயப்பட்டேன். காரணம் சொன்னவர் யார், என்ன நோக்கம் என்ற உண்மை தெரிந்ததால். அதுவரையில் அந்த விவாதத்தில் நான் பெரிதாக எதுவும் சொல்லியிருக்கவில்லை. மேம்போக்காக எனக்கு வெளிநாடு பிடிக்கும் என்று சில கருத்துக்கள் சொல்லியிருந்தேன். அதற்காக என் மீது வந்த கோபமா? எனக்கு அப்போது இருந்த ஒரே கேள்வி, ஏன் இவர் இதை செய்தார்? அப்படி கோபம் இருந்தால் அவர் பெயரிலேயே சொல்லி இருக்கலாமே..

அடுத்தடுத்து நடந்த விசயங்கள் இன்னும் சுவாரசியமானவை. மீண்டும் அவர் பெயரில் வந்து, "நிதி சகோதரி, நீங்களும் யூஏஇ யா, நீண்ட நாள் அனுபவம் போலிருக்கிறதே" என்றெல்லாம் போலியாக பாராட்டிக்கொண்டு, எந்த இடம் என்றெல்லாம் கேள்வி கேட்டு.. நல்ல நாடகம் ஆடினார். அதோடு நிறுத்தியிருந்தால்கூட பரவாயில்லை. பாவம் அட்மின். அவரை விட்டுவிடுங்கள் என்று என் மீது பரிதாபம் வேறு காட்டியிருந்தார். உண்மை தெரிந்துகொண்டு படிக்கும் எனது மனநிலை எப்படி இருந்திருக்கும் யோசித்துப்பாருங்கள். அதனைத் தொடர்ந்து ஹலிமா15 என்ற பெயரில் வந்து சில பதிவுகள். இந்தியாவின் படிப்பு மதிப்புதான் என்று ஒன்று., அடுத்து சந்தேகம் வராமலிருக்க "பார்த்தவுடனே சாப்பிடணும் போல இருக்கு" என்று சமையல் குறிப்பிற்கு ஒரு பின்னூட்டம். பின்னர் தளிகாவுடன் சண்டையிடுவதுபோல் சில பதிவுகள். தவறுகள் செய்வதற்கும் சில திறமைகள் வேண்டும். சில விசயங்களில் அவர் கவனம் செலுத்தவேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை. அடுத்து நீங்கள் வேறு மிகவும் கோபப்பட்டு ஒரு பதிவு கொடுத்து இருந்தீர்கள். ஆழ்ந்த இரங்கல்கள் என்றெல்லாம் அபத்தமாக எழுதுனீர்கள்.

இணையத் துறையில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றேன். இவை இணையத்தில் சாதாரண விசயம் என்பது எனக்கு தெரியும். ஆனால், என்னை நன்கு அறிந்த ஒருவர் சம்பந்தமேயில்லாமல் எனக்கு கெட்ட பெயரை உண்டாக்குவதுபோல் ஒரு பதிவு இட்டது என்னை மிகவும் பாதித்தது. அந்த விவாதம் பக்கமே வரக்கூடாது என்று முடிவு செய்து, தேவா அவர்களை விட்டு 'அட்மின் நடுவரல்ல' என்று பதிவு கொடுக்கச் சொன்னேன். அதன் தொடர்ச்சியாக அவர் வருத்தம் தெரிவித்ததால் மீண்டும் அந்த விவாதத்திற்கு வந்தேன். ஏன் என்று காரணம் கேட்டு ஒரு நீண்ட மெயில் ஒன்று டைப் செய்தேன். பின்னர் அதை அனுப்ப மனதில்லாமல் விட்டுவிட்டேன். அதன்பிறகு அவருக்கு சமாதானம் சொல்வது போல் அந்த வெளிநாட்டு த்ரெட்டிலேயே ஒரு பதிவு கொடுத்தேன். அதில் சகோதரி அஸ்மா அவர்களும் நானும் விவாதத்தில் சண்டையிட்டுக் கொண்டதையும் பின்னர் சமாதானமானதையும் தெரிவித்தேன். அந்த விவாதத்தினால் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை என்பதை சொல்லவே அந்த பதிவு. பின்னர் அவர் மகன் பிறந்த நாள் என்ற போதுகூட மறக்காமல் வாழ்த்து தெரிவித்தேன். நேற்று அவர் 'நல்ல கவிதைகள் எங்கே' என்று கேட்டு நிதி96 பெயரில் கொடுத்திருந்த பதிவிற்கும், உடனே பதில் கொடுத்தேன். முடிந்தவற்றை மறக்கும் நேரத்தில் நீங்கள் மீண்டும் இப்படி ஒரு பதிவு கொடுத்து என்னை எழுதவைத்துவிட்டீர்கள்.

நீங்கள் சொல்லியிருக்கும் விசயத்திற்காக நான் சிறிதும் வருத்தப்படவில்லை. எதனால் ஏற்பட்ட கோபம் இது என்பதை தெரிந்துகொள்ளத்தான் ஆவலாக இருக்கின்றேன். வெளிநாடு த்ரெட்டில் எதிரணியில் நின்று வாதம் செய்த ஒரே காரணத்தால் உண்டான வெறுப்பா? திருக்குறளையெல்லாம் உதாரணம் காட்டிவிட்டு போயிருக்கின்றீர்களே?! எப்படி இப்படியெல்லாம்?!!

எனக்கு இப்போது எல்லாமே போலிதானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. இத்தனை நாட்கள் அண்ணா அண்ணா என்று கூப்பிட்டவர்கூட உண்மையில் பெண் இல்லையோ என்று எண்ண தோன்றுகின்றது.

மனதை காயப்படுத்தும் கருத்துக்கள்
நவம்பர் 7, 2007 - 6:10am - வழங்கியவர் admin

இங்கே ஹரிராம் என்பவர் கொடுத்திருந்த கருத்துக்கள் தங்களை பாதிப்பதாக சிலர் தெரிவித்ததின் அடிப்படையில் அவரது முழுப்பதிவையையும் நீக்கியுள்ளோம். அப்படி ஒருவர் உண்மையிலேயே இருந்தால், மீண்டும் இங்கே வந்து விளக்கம் கொடுப்பாராயின், அவரது முந்தைய பதிவில் உள்ள நியாயமான கருத்துக்களை மட்டும் இங்கே மீண்டும் வெளியிடுவோம். அதில் எமக்கு பிரச்சனையில்லை.

பிழைத்துக்கொண்டேன்
நவம்பர் 7, 2007 - 6:23am - வழங்கியவர் vidhubha

ஹரிராம், அப்பு,ஷமி எல்லாமே நான் தான் என்றும் சொல்லுவீர்களோ என்று நினைத்தேன். நல்லவேளை சொல்லவில்லை. இன்று தான் vpn ல் கனெக்ட் செய்தேன். அதையும் நீங்கள் கண்டுபிடித்திருக்கமுடியுமே..

இல்லை
நவம்பர் 7, 2007 - 6:34am - வழங்கியவர் admin

ஹரிராம், அப்பு, ப்ரீத்தி எல்லாம் வேறு. ஷமி, தல்கா, etc, வேறு. அவர்கள் நீங்கள் அல்ல என்பது எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் கனெக்ட் செய்வது VPN ல்லா broadband ல்ஆ என்ற தகவல்களை என்னுடைய logல் அறிய முடியாது. நீங்கள் சொன்னதை வைத்து சொன்னேன். ஆனால், உங்களது நிரந்தர IPs கொண்ட இணைப்பு என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

அட்மின் அவர்களுக்கு
நவம்பர் 7, 2007 - 6:38am - வழங்கியவர் haleema

அட்மின் அவர்களுக்கு
ஹலீமா 15 என்பது நான் அல்ல.என் பதிவு ஹலீமா மட்டும்

51 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »