topic_image


தூத்துக்குடி மாவட்ட கடலோர ஊர்களில் பிரசித்திப் பெற்ற தேங்காய் சோறு (சரக்கு பொடிகள் கலந்து) சமைப்பது எப்படி என்று அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பினை இங்கு பதிவு செய்தால் நன்றாக இருக்கும். சுவையோ அலாதியானது.
எங்கள் ஊரில் இந்த சோரு ரெம்பவும் பிரசித்தம்.
குலசை சுல்தான்.


குலசை அண்ணா(தேங்காய் சோறு)
மார்ச் 27, 2008 - 4:37am - வழங்கியவர் seyedkatheeja

நீங்கள் சரக்கு பொடி கலந்து என்று எதை சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. எங்கள் ஊரில் செய்யும் தேங்காய் சோறு செய்முறை எனது குறிப்பில் உள்ளது அதுதானா நீங்கள் தேடியது என்று பார்க்கவும்.

அன்புடன் கதீஜா.

சகோ.கதீஜா
மார்ச் 27, 2008 - 5:32am - வழங்கியவர் kulasaisulthan

அதே அதே சோறு தான். உங்களின் குறிப்பையும் ஜலீலா அளித்துள்ள குறிப்பையும் கொஞ்சம் மிக்ஸ் பண்ணினால் அது தான் எங்க ஊர் தே.சோறு. குலசை,காயல்,உடன்குடி போன்ற ஊர்களில் இது ரெம்பவும் பேமஸ். வாழை மீன் ஆணம் சூப்பர் காம்பினேஷன்.
ஆமா! ஏன் உங்க அண்ணியின் பதிவுக்கு பதில் போடலையென்று கேட்கிறார்கள்.
குலசை.சுல்தான்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

குலசை அண்ணா மற்றும் அண்ணி
மார்ச் 27, 2008 - 6:00am - வழங்கியவர் seyedkatheeja

நீங்கள் இருவரும் எப்படி இருக்கிறீர்கள். நீங்கள் கேட்ட குறிப்பு கிடைத்ததில் சந்தோஷம் அண்ணா. நான் நேற்று அண்ணியின் பதிவை பார்த்த உடனேயே பதில் போட்டு விட்டேன் ஆனால் அது பதிவாகவே இல்லை. திரும்பவும் இன்னைக்கு போடலாம் என்று நினைத்தேன் அந்த த்ரெட்டை தேடிட்டு இருந்தேன் அதற்க்குள் கேட்டு விட்டீர்கள்.

அன்புடன் கதீஜா.