topic_image


hai arusuvai friens,iam anjali

இன்று பெருங்காயத்தை பற்றி தெரிந்துகொள்ளலாமா? arusuvai friens.பெருங்காயம் எதிலிருந்து நமக்கு கிடைக்கிறது என்று தெரியுமா?

இதை முழுக்க முழுக்க அரட்டைக்குன்னே அர்பணிச்சாச்சு.. தொடங்குங்க உங்க கச்சேரிய.. பாருங்க நாம அரட்டை அடிச்சாலும் உபயோகமான தகவல்களும் தானா நடுவில் வந்து விழுது பாருங்க.

அதுதான் அறுசுவை அரங்கத்தோட ஸ்பெஷாலிட்டியே.
எனக்கே இது சீரியசான பக்கமோன்னு சந்தேகம் வந்துடுச்சு.

இதனால் எல்லோருக்கும் சொல்வது என்னவென்றால் இது அரட்டை பக்கம்தான்.ஆனால் நம்மை 1 நிமிடம் பெருங்காயத்தைபற்றி

சிந்திக்க வைக்கிற பகுதிகூட சும்மா அள்ளிவழங்குங்க உங்க க்ருத்துக்களை வாங்க வந்து எல்லோரும் இங்க அரட்டை அடிங்க...

[ பெருங்காயத்தை பற்றி எனக்கு தெரிந்த விஷயத்தை நானும் நாலு பதிவு போடுறேன்....]

பெருங்காயம் எதிலிருந்து நமக்கு கிடைக்கிறது என்று தெரியுமா? தெரிந்தால் எனக்கு பதிலனுப்பவும். எனக்கும் பெருங்காயத்தை பற்றி

தெரிந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசையா இருக்கு! இப்படிக்கு உங்கள்தோழி,
அஞ்சலி


அஞ்சலி
மார்ச் 29, 2008 - 1:08pm - வழங்கியவர் thalika

அஞ்சலி உயரமான இடத்தில் இருந்து விழுந்தால் பெருங்காயம் கிடைக்கும்,விபத்து நேர்ந்தால் பெருங்காயம் கிடைக்கும், ...........
இன்னும் நிறைய சொன்னாலும் பெருங்காயம் கிடைக்கும்..ஹி ஹிஹீ

ஹாய் அஞ்சலி
மார்ச் 29, 2008 - 1:20pm - வழங்கியவர் seyedkatheeja

எதில் இருந்து பெருங்காயம் கிடைக்கிறது இப்படி சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே.எனக்கு இதற்க்கு விடை தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்ததை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்.

அன்புடன் கதீஜா.

பெருங்காயம்
மார்ச் 29, 2008 - 1:20pm - வழங்கியவர் அதிரா

தளிகா நீங்க சொல்கிற பெருங்காயம் பற்றித்தான் எனக்கும் நிறையத் தெரியும். ஆனால் அஞ்சலியின்ர பெருங்காயம் பற்றி எதுவுமே தெரியாது. நான் கண்ணால கண்டதே சில வருடங்களுக்கு முன்னர்தான். ஏதோ ஒரு மரக் காய்தான் என நினைக்கிறேன்.

கரெக்டா அஞ்சலி? பரிசு ஏதும் இருக்கா? சொல்லுங்க சொல்லுங்க நிறைய சொல்லுங்க நம்ம தளிகா நித்திரைக்குப் போக முதல் சொல்லுங்க.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா பெருங்காயம்
மார்ச் 29, 2008 - 1:27pm - வழங்கியவர் seyedkatheeja

சரியா சொல்லிட்டீக்களா பரவாயில்லை உங்களுக்கு நம்ம அஞ்சலி வந்து கண்டிப்பா பரிசு தருவாங்க.அஞ்சலி இதற்க்கு சீக்கிரம் பதிலை சொல்லுங்க. இப்பதான் பையனை தூங்க வச்சிட்டு அறுசுவைக்கு வந்தேன் யாரையும் காணோமேன்னு நினைத்தேன் அதிரா ஆன்லைனில் தானா.

அன்புடன் கதீஜா.

ஹி ஹிஹீ, thalika [anjali]
மார்ச் 29, 2008 - 1:28pm - வழங்கியவர் anjali73

ஹி ஹிஹீ thalika நல்லா ஜோக்கு அடிக்கிறேங்க! அரட்டைஅடிங்க வேண்டானு சொல்ல கொஞ்சம் சீரியச்ஸா திங்பண்னுங்க சமையல் பெருங்காயம் பற்றி[ பெருங்காயம்] ok.

கதீஜா, அஞ்சலி...
மார்ச் 29, 2008 - 1:48pm - வழங்கியவர் அதிரா

கதீஜா.. நான் ஓன் - லைன் லயா அல்லது ஓன் - லைன் என்னிலயா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கு. வீட்டில நினைக்கப்போறாங்க நான் மணித்தியாலக் கணக்கா இதில இருக்கிறன் என்று.. ஆனா இவ்வளவு நேரத்தில 2 பதில்தான் போட முடிந்தது அவ்வளவு ஸ்லோவாக இருக்கு.

அஞ்சலி... இதுதானே வேணாம் என்கிறோம்... வந்தோமா பதில் தந்தோமா என்றிருக்கிறதை வீட்டிட்டு புதிர் போடுறீங்களே... எனக்கும் நித்திரை நேரம் வருகிறது சீக்கிரம் சொல்லி முடிங்க இல்லாட்டில் கனவெல்லாம் பெருங்காயம்தான்..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஸ்லோவாக இருக்கு[net] anjali
மார்ச் 29, 2008 - 2:51pm - வழங்கியவர் anjali73

ஹாய் தோழிகளே! naan anjali.நான் பதில் போட மணிக்கணக்கா ட்ரை பண்னினேன் ஸ்லோவாக இருக்கு[net]

அதிரா நீங்க சொன்னது தப்பு. காயிமில்ல,பூமில்ல.உங்களுக்கு பரிசுமில்ல.

தெரிந்துகொள்வோம்! பெருங்காயம் பற்றி!

நீண்ட நாட்களாக பெருங்காயம் எதிலிருந்து நமக்கு கிடைக்கிறது என்ற கேள்வி மனதிலே இருந்தது. தேடி தெரிந்துக்கொண்டேன். உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

பெருங்காயம் "ஃபெருலா ஃபொட்டிடா" (Ferula foetida) அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து வருகிறது. இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இலைகலோ மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும் (Radical). அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக நாற்றமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர்களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது.

வரலாறு:
டிபேட் மற்றும் பெர்ஷியா நாடுகளில் இது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது வட இந்தியாவில் "ஹிங்காரா" (அ) "ஹிங்" என்று என்று அழைக்கப்படுகிறது.

எல்லோருக்கும் தெரிந்தது போல, பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா (Hysteria) மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது. வயற்றுக் கோளாறா, கபால்னு கொஞ்சம் பெருங்காயத்தை விழுங்குங்க .ok.bye,bye.

அஞ்சலி (பெருங்காயம்)
மார்ச் 30, 2008 - 10:13am - வழங்கியவர் seyedkatheeja

அஞ்சலி பெருங்காயம் பற்றி கூறியதுக்கு நன்றி.மிகவும் பயனுள்ள தகவல் இது. இதுவரை பெருங்காயம் எதில் இருந்து கிடைக்கிறது என்று தெரியாமல் இருந்த எங்களுக்காக உங்களுக்கு தெரிந்ததை விளக்கிவிட்டீர்கள்.அதிரா உங்களுக்கு பரிசு கிடையாதாம் நம்ம அஞ்சலி சொல்லிட்டாங்க.

அன்புடன் கதீஜா.

அன்பு அஞ்சலி
மார்ச் 30, 2008 - 1:13pm - வழங்கியவர் julaiha

பெருங்காயம் பற்றி மிகவும் நல்ல தகவல் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி .இதுவரை எதில் இருந்து பெருங்காயம் கிடைக்கிறது என்று தெரியாது

போனால் போகட்டும் போடா
மார்ச் 30, 2008 - 2:27pm - வழங்கியவர் அதிரா

போனால் போகட்டும் போடா... தோல்விதான் வெற்றியின் படிக்கட்டுகள்....

அடுத்தமுறை எனக்குத்தான் பரிசு.....
என்ன அஞ்சலி நான் சொல்வது சரியா?
இருந்தாலும் பெருங்காயத்துக்கும் நன்றி... அஞ்சலிக்கும் நன்றி,....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அஞ்சலி
மார்ச் 31, 2008 - 3:27am - வழங்கியவர் thalika

அஞ்சலி உங்க சின்சியாரிடிக்கு ஒரு அளவே இல்லை போங்க..அட்மினுக்கு ஒரு வாக்கு கொடுத்தது தான் பிறகு ஒரே உபயோகமான தகவள் களஞ்சியமா மாறிட்டீங்க...வெரி குட்..இன்னும் நிறிஅய் எங்களுக்கு சொல்லிக் கொடுங்க

Anjali
ஜூன் 12, 2008 - 2:58am - வழங்கியவர் HAJAJASMINE

MANY MANY THANKS ANJALI SUMMA ASATHURENGA .SAMAYALIL PERUNGAYAM UPPU POLA MUKKIYAM.