topic_image


சிம்ரன் Vs விஜய் ஆதிராஜ் சண்டை (நாடகம்) - மேலும் ஆலோசனைகள்

தமிழ் தொலைக்காட்சி சானல் ஒன்றில் நடைபெற்ற சிம்ரன் Vs விஜய் ஆதிராஜ் சண்டையை ரசித்தீர்களா? உங்களில் எத்தனை பேர் இதை உண்மை என்று நினைக்கின்றீர்கள்? ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொடரும் இதுபோன்ற நாடகங்கள் நமக்கெல்லாம் உணர்த்துவது என்ன? மக்கள் மற்றவர்களின் பிரச்சனையை, நேரடி குடுமிப்பிடி சண்டையை ரசிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்ற பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றார்களா? அல்லது அப்படி ஒரு பலவீனம் நம்மீது திணிக்கப்படுகின்றதா?

எது எப்படியோ அவர்கள் ரேட்டிங் தற்காலிகமாக உயர்கின்றது. ஆனால் ஒரே மாதிரி வாய்ச்சண்டையையும், கோவித்துக்கொண்டு போய்விட்டு பிறகு சமாதானம் ஆகி வருவதையும் மீண்டும் மீண்டும் எல்லா சானலிலும் காண்பித்துக்கொண்டிருந்தால் கொஞ்சம் காலத்திற்கு பின்பு மக்கள் வெறுத்துப் போய்விடுவார்கள். பாவம், நமது தொலைக்காட்சி சானல்காரர்களுக்கு ஐடியாஸ் பஞ்சம் இருக்கிறது. நாம் கொஞ்சம் உதவலாமே..

என்னவெல்லாம் செய்தால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பரபரப்பாக்கி, பிரபலமாக்கலாம் என்று உங்களுக்கு தோன்றும் ஐடியாக்களை இங்கே அள்ளிவிடுங்கள். ஆலோசனைகள் நகைச்சுவையாக இருக்கட்டும். உருப்படியான, உண்மையான ஆலோசனைகள் இருந்தாலும் கொடுங்கள். பரவாயில்லை.. பிழைத்துப்போகட்டும்.


ஹஹஹா
ஏப்ரல் 22, 2008 - 3:54am - வழங்கியவர் thalika

ஹஹஹா ஒரே ஜோக் அது..பாவம் சிம்ரன் அளவுக்கு விஜய் ஆதிராஜுக்கு நடிக்கத் தெரியலை அதனால பாவமா இருந்தது.
ஆனால் இதில் ஒரு ரஹசியம் சொல்லட்டா..உண்மையில் அது என்ன ப்ரோக்ராம் ஏதுன்னு எனக்கு தெரியாது இது வரை பார்த்ததும் இல்லை..ஆனால் எதேச்சையாக அன்று அந்த காட்ச்சியைக் காட்டி பாருங்கள் இத்தனை மணிக்குன்னதும் நானும் சண்டையை பார்த்தேன்...இது தான் பலவீனம்.நான் சரி தமாஷா
இருக்கும் சண்டைன்னு நெனச்சேன் ..ஆனால் பாவம் அவங்களுக்கு அதுக்கு மேல ட்ராமா பன்ன தெரீல.

எனக்கும் தெரியாது
ஏப்ரல் 22, 2008 - 4:31am - வழங்கியவர் babu

எனக்கும் அந்த ப்ரோக்ராம் பற்றி எதுவும் தெரியாது. அது சம்பந்தமான விளம்பரம்கூட பார்க்கவில்லை. என்னை twenty twenty cricket match பார்க்கவிடாமல், அந்த சேனலுக்கு மாத்து, அந்த சேனலுக்கு மாத்து என்று சத்தம் போட்டு மாற்றவைத்து, என்னையும் பார்க்க வைத்துவிட்டார்கள். என்ன ஒரு ஆர்வம் பாருங்கள்!!

சிம்ரன்-இப்படியொரு கேள்வி
ஏப்ரல் 22, 2008 - 4:45am - வழங்கியவர் அதிரா

இப்படியொரு கேள்வி கேட்பீங்க என்று தெரிந்திருந்தால்.... நான் சமையல் சாப்பாடெல்லாம் விட்டுவிட்டு ஒழுங்காகப் பார்த்திருப்பேன்... இடையிடையே பார்த்தேன்... எனக்கென்னவோ அவ்வளவாக பிடிக்கவில்லை.

ஆனால் ஒருவர் நினைத்தால் எவ்வளவு தூரம் நல்லபிள்ளையாக நடிக்க முடிகிறது... யாராவது அப்படி நடித்தால் நம்பிவிடுவது... மனித இயல்புதானே.... எனக்கென்னவோ நாடகங்களை அதிகம் எபிசோட்டுக்கு கொண்டுபோகாமல் 100/200 க்குள் முடித்தால் ஓரளவு விறுவிறுப்பாகவும் ஆசையாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது. கல்கியெல்லாம்... 600 ஐத் தாண்டிப் போகிறது.... எப்படா முடியும் என்றுதான் இருக்கு....

எனக்கொரு சந்தேகம்... இனியும் கிரிக்கெட் பார்த்து என்னத்த சாதிக்கபோறீங்க.... பேசாமல் சீரியல் பார்ப்பதுதான் நல்லதாக படுகிறது... :) .. (மர்ழியா இப்பவும் உங்கட கையைப் பிடிச்சிட்டுத்தான் நிக்கிறன்......)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நல்ல தமிழில்
ஏப்ரல் 22, 2008 - 5:08am - வழங்கியவர் malathi

நல்ல வேளை நான் டி.வி-யில் எந்த ப்ரோக்ராமையும் குறிப்பிட்டு பார்ப்பதில்லை. இந்த மாதிரி ' நிகழ்ச்சி' யெல்லாம் எப்ப நடந்தது? ஜோக்ஸ் மட்டும் எப்போதாவது பார்த்துவிட்டு விலகிவிடுவேன். இந்த மக்கள் டி.வி யின் நிகழ்ச்சிகளும் அதன் ப்ரஸண்டேஷனும் நல்லா இருக்கே. அவர்களின் சமையல் நிகழ்ச்சியில் கூட பாரம்பரியம் மிக்க, சத்தான உணவு வகைகளின் செய்முறையை அளிக்கும் விதம் பாராட்டும்படி இருக்கிறது. அந்த உடை கட்டுப்பாடு ரொம்ப பாராட்டவேண்டிய ஒன்று. கண்ணியமான உடையில் வந்து நல்ல தமிழில் பேசுவது புத்துணர்ச்சியை தருகிறது. மக்கள் டி. வி - யில் எல்லோருக்கும் பயன் தரும் வகையில் ஒளிபரப்பாகும் தொழில் வளம், வேலை வாய்ப்புச் செய்திகள், சந்தை, சொல் விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள் பக்கம் போய் பாருங்களேன். மனதிற்கு இதமாக தெம்பாக இருகிறது.

தேடுறாங்க
ஏப்ரல் 22, 2008 - 5:17am - வழங்கியவர் malathi

ஐயோ அதிரா!......ஸீரியலுக்கு சப்போர்ட் பண்ணி நல்லா மாட்டிக்கிட்டீங்களே....எப்படி அதிரா பொருமையாக சீரியல் எல்லாம் பார்க்குறீங்க? உங்களுக்கு ' பொருமையின் திலகம் ' என்ற பட்டத்தை தரலாம்.... வாங்க ..வாங்க ஓடிப்போயிடலாம்... அங்க உங்களை அந்தாஷரியில் தேடிக்கிட்டு இருக்காங்க.

உண்மை தான் மாலதிக்கா,
ஏப்ரல் 22, 2008 - 5:48am - வழங்கியவர் thalika

உண்மை தான் மாலதிக்கா,
மக்கள் டிவி மிகவும் அருமை..அதில் சந்தை மிக மிக அருமை..ஆபாசம் எதுவுமில்லாமல் மூளையை மழுங்கடிக்காமல் கூட நிகழ்ச்சிகள் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு மக்கள் டிவி ஒரு எடுத்துக்காட்டு.ஊருக்கு போனால் அது தான் எனது ஃபேவரைட்..ஆனால் சன் டிவி ரொம்ம்ப அனியாயம் பன்றாங்க..கடவுளே ஒரு திருவாளர் திருமதின்னு ஒன்னு இருந்ததே..அது இப்ப இல்லைன்னு நினைக்கிறேன்..எதேச்சையாக அதை ஓரிருமுறை பார்க்க நேர்ந்தது..உடம்பிலுள்ள தோல் எல்லாம் உலிந்து வந்து விடும் அதில் காணும் கூத்து.
டென்ஷனாகாதீங்க..நான் பிறகு பொறுமையாக மெயில் பன்றேன்..

சூப்பர் ஸ்டார்ஸ்
ஏப்ரல் 22, 2008 - 6:34am - வழங்கியவர் kothai.R

நான் ரிஜிஸ்டர் பண்ணதிலிருந்து தமிழில் டைப் செய்ய பழகிக் கொண்டிருந்தேன் இப்படி ஒரு பதிவை கொடுக்க தான் என்று நினைக்கிறேன்.
முதலில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த நடுவர்களை கொண்டு மதிப்பிடப்பட வேண்டும். நடுவர்கள் என்ற பெயரில் வந்து கலந்துக் கொள்பவர்களின் மனதையும் புண்படுத்துவது சரியல்ல.அவர்களின் திறமையை வெளிபடுத்தும் சுற்றுகளை கொண்டு தேர்ந்தெடுக்கலாம். சமீபகாலமாக சின்னதிரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகள் தான் அதிகம் அதிலும் திறமைசாலிகள் நிராகரிக்கப்படுகிறார்கள். நம்மில் பலர் பொழுதுபோக்காக டிவி பார்க்கிறோம், பலர் சிந்தனையையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளும்படியான நிகழ்ச்சியையும் பார்க்கிறோம். நிகழ்ச்சிகள் இருசாரரையும் திருப்திபடுத்தும்படி அமைந்திருந்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கிடையில் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கிறது. அந்த டிவி அந்த மாதிரி நிகழ்ச்சி கொடுக்கறாங்க நாமும் கொடுப்போம். அதுவல்ல போட்டி அந்த டிவியில் அந்த மாதிரி நிகழ்ச்சி கொடுக்கறாங்க, நாம அதை விட தரம் வாய்ந்த நிகழ்ச்சி கொடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சமூகத்திற்கு ஏதாவது நல்ல செய்திகளைக் கொடுக்கும் நிகழ்ச்சிகளை கொடுக்கலாம். இப்போதெல்லாம் திங்கள் முதல் வெள்ளி எந்த டிவியை திறந்தாலும் சீரியல்கள் தான் தலை விரித்து ஆடுகிறது. அதை பார்க்கவும் மக்கள் இருக்கிறார்களே அதை சொல்லனும். போனாபோகட்டும் என்று சனி, ஞாயிறு சீரியலுக்கு லீவு.
அட்மின் அவர்களுக்கு நான் கூறியதில் தவறேதும் இருந்தால் நீக்கி விடவும்.

மாலதியக்கா,
ஏப்ரல் 22, 2008 - 7:00am - வழங்கியவர் அதிரா

நான் சீரியலுக்கு அடிமை இல்லை. விடிந்தால் தொடர்ந்து சீரியல்தான் போகுது.... நான் ஏதோ செலக் பண்ணி 1 or 2 பார்ப்பேன். அதுவும் இரவில் மட்டும்தான். கொஞ்சம் றிலாக்ஸ் ஆக இருக்கட்டுமே என்றுதான்... பார்த்து... அழுது வடிவதெல்லாம் இல்லை. நீங்க பார்க்கவே மாட்டீங்களா? ,ஆனால் பாவம் தொடர் நாடகங்கள் மக்களை நம்பித்தானே தொடர்கிறது.... ... ஆனால் நீங்கள் ஊரில் இருப்பதால் தேவையில்லை. வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இப்படியான காட்சிகளைப்( ஊர்) பார்க்க கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்,
என்றுதான் நினைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சீரியல் பாருங்க அதிரா
ஏப்ரல் 22, 2008 - 8:20am - வழங்கியவர் malathi

அதிரா!....நீங்கள் சீரியல் பார்ப்பதற்கான காரணம் என் மனதை தொட்டுவிட்டது.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தங்கள் தாய்நாட்டை ஞாபகப்படுத்தும்விதமாகவும், இங்கு சுற்றத்தாருடன் இருக்கும் ஒரு உணர்வையும் தருகிறது. என்பது போல கூறி இருக்கிறீர்கள். எங்களுக்கு சீரியல் என்றாலே அலர்ஜியாக இருப்பதால் உங்கள் உணர்வு புரியாமல் போய்விட்டது. ஸாரி அதிரா!......இப்படி ஒரு கண்ணோட்டம் இருப்பது தெரியாமல் சொல்லிவிட்டேன். சந்தோஷமாக பாருங்கள்.

இது என்ன மாலதியக்கா
ஏப்ரல் 22, 2008 - 9:09am - வழங்கியவர் அதிரா

இது என்ன மாலதியக்கா, ஸாரி எல்லாம் சொல்லுறீங்க எனக்கு வெட்கமாக இருக்கு.

உண்மைதான் நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். வேலையால் வீட்டுக்கு வந்து ஒரு தொடர் பார்த்தால் எல்லாக் கழைப்பையும் மறந்து கொஞ்சம் மனம் றிலாக்ஸ் ஆகிறதென்று... அவ்வளவுதான்...

ஐயோ அதிரா!......ஸீரியலுக்கு சப்போர்ட் பண்ணி நல்லா மாட்டிக்கிட்டீங்களே....வலையில் மீன்கள் சிக்கலாம் தண்ணி சிக்குமா? --- மாலதியக்கா நான் தண்ணிபோல்.... எஸ்கேப்....:)

இன்று எனக்கு அறுசுவை ரொம்ப ஸ்லோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சரியானால் நன்று
ஏப்ரல் 22, 2008 - 11:00am - வழங்கியவர் malathi

எனக்கு என்றுமே மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அருசுவை ரொம்ப ரொம்ப ஸ்லோ - வாகத்தான் இருக்கும். ஓபன் பண்ணுவதற்கே கிட்டதட்ட 15 நிமிடம்..........அப்புறம் பதிவு போடுவற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்றே சொல்லமுடியாது. என்ன காரணம் என்று கண்டுபிடித்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.

ஊர்க்கோயில்கள்
ஏப்ரல் 22, 2008 - 1:13pm - வழங்கியவர் அதிரா

அப்போது அவசரமாகப் பதில் போட்டுவிட்டு வெளியே போய் விட்டேன். நான் சீரியலில் அதிகமாக பார்ப்பது. அதில் வரும் ஊர்க்கோயில்கள். எவ்வளவு அழகாக இருக்கும் பெரிய கோயில்களை விட, மரங்களுக்கிடையே ஓரளவான கோயில்கள். பார்த்துக்கொண்டேயிருக்கலாம்போல
் இருக்கும். நான் சிலவேளை பெயரைப் பாடமாக்குவேன்.. இந்தியா போனால் இதைப் பார்க்க வேண்டுமென்று. அதேபோல் ஊர் மார்கட் எனக்கு மிகவும் பிடிக்கும்... அந்த இலைவகைகள்... மரக்கறிகள் அதை விற்கும் விதம் வாங்கும் விதம் ... இப்படியான வற்றைத்தான் விரும்பிப் பார்ப்பேன்.

பெரிதாக படங்கள் நித்திரை முழித்து பார்ப்பதில்லை ஆனால் கிராமத்துப் படங்கள் எனக்குப் பிடிக்கும். இவற்றையெல்லாம் தொடர்களில் காணலாம்.

ஆனால் வெளிநாட்டில் எல்லோருக்குமே பிடிக்குமென்பதில்லை. ஒவ்வொருவரின் எண்ணமும் , விருப்பமும் ஒவ்வொருமாதிரி தானே. எனக்கு இவைகள் பிடிக்கும் அவ்வளவுதான்.

மாலதியக்கா நான் நினைக்கிறேன் உங்களுக்குள்ள பிரச்சனை அறுசுவையுடன் சம்பந்தப்பட்டதல்ல, அது நெற்வேர்க் பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் அந்த நேரத்தில் எல்லோருமே இன்ரநெட்டில் தான் இருப்பார்கள் அதனால் மிகவும் தாமதமாகும். எனக்கு இலங்கையில் இருக்கிறபோது, நீங்கள் சொன்ன நேரத்தில் அப்படி பிரச்சனை இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அருசுவை மட்டும்
ஏப்ரல் 22, 2008 - 11:47pm - வழங்கியவர் malathi

இல்ல அதிரா!...நெட்வொர்க்கில் ப்ராப்ளம் என்றால் மற்ற வெப்ஸைட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் அல்லவா. ஆனால் அருசுவை மட்டும்தான் மாலை 6 டு 10 இழுபறி. நான் அந்த நேரங்களில் பெரும்பாலும் வேறு வெப்ஸைட்டில் (Blogger)இருப்பேன்.

மக்கள் தொலைக்காட்சி
மே 15, 2008 - 8:25am - வழங்கியவர் januma

நான் இப்போது சன், ஜயா, டி.வி பார்ப்பதை குறைத்து கொண்டேன் ஆனால் இப்போது மக்கள் தொலைக்காட்சியில் சில நல்ல நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்புகிறார்கள் அதை தான் பார்க்கிறேன். மலேசியாவில் விஜய் டிவி , கலைஞர் டிவி வருவதில்லை :(

sharme
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்