topic_image


கோடை காலத்திற்கேற்ற உணவு வகைகளை பற்றி இந்த புதிய ' த்ரட்டில் ' பேசுவோமா? கோடைக்கேற்ற உணவு வகைகளில் சமைப்பதற்கு எளிதாகவும் அடுப்பில் வேக வைக்கத்தேவை இல்லாத அல்லது அதிக நேரம் அடுப்பருகே நின்று சமைக்கத்தேவை இல்லாத உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். மற்றபடி கோடை காலத்தில் உடல்நலம் காப்பது பற்றியும் பேசலாம்.

நானே ஆரம்பித்து வைக்கிறேன்.
-----------------------
1.வேக வைக்கத் தேவைஇல்லாத சாலட் வகைகள்:
கேரட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம் சேர்த்தது.
2.பழ சாலட்கள்
பழங்களை நறுக்கி தயிரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
3. அவலை ஊறவைத்து வெல்லம் மற்றும் பழங்கள் சேர்த்து சிற்றுண்டியாக உண்ணலாம்.
4.மற்றும் தயிர் அவல், பாலில் ஊறவைத்த அவல் இவற்றை அடுப்பில்லாமலே தயாரித்து சாப்பிடலாம்.

அடுத்து எளிய முறையில் தயாரிக்கும் ரெஸிப்பீஸ்:
1.தயிர் சேமியா ( இது என்னுடைய குறிப்பில் உள்ளது.)
2.பாசிப்பருப்பு சுண்டல்
3. மோர்குழம்பு
4.அவல் உப்புமா
5. ஜவ்வரிசி உப்புமா ( இதுவும் என்னுடைய குறிப்பில் உள்ளது.)
இன்னும் உங்களுக்கெல்லாம்தான் நிறைய தெரியுமே. எழுதுங்கள் சகோதரிகளே!


ஹாய் மாலதிக்கா
ஏப்ரல் 28, 2008 - 9:21am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் மாலதிக்கா,நல்ல திரட்தான் இது...எனக்கு இப்ப சடன்னா மூலைக்கு படுறது ஒன்னுத்தான் நெய் சோறு,தேங்காய் சோறு,பிரியாணி இதெல்லாம் அதிக வெயில் இருக்குறப்ப சாப்பிட்டால் பட படன்னு வரும்...இவைகளை கொஞ்சம் அவாய்ட் பண்றது பெட்டர்...
அன்புடன்,
மர்ழியாநூஹு

அடுப்பில் சமைக்காதவை
ஏப்ரல் 28, 2008 - 9:47am - வழங்கியவர் malathi

ஆமாம் மர்ழியா!.. நீங்க சொல்வது சரி. ஸ்பைசியான ஐட்டங்களை இப்ப தவிர்க்கவேண்டும். தேங்காய் பால் கஞ்சி, இட்லி, பழைய சாதம் வித் தயிர், இதெல்லாம் வயிற்றுக்கு இதமாக இருக்கும். கம்பு பிடித்தவர்கள் கூழ் செய்து அதில் சின்ன வெங்காயம், வெள்ளரிக்காய் பொடிப்பொடியாக நறுக்கிப்போட்டு குடிக்கலாம்.
அடுப்பில் வைத்து சமைக்காத ரெஸிப்பீஸ் இருந்தால் எழுதுங்க மர்ழியா.

மாலதியக்கா,
ஏப்ரல் 28, 2008 - 10:17am - வழங்கியவர் அதிரா

மாலதியக்கா,
கொஞ்ச நாளாக காணவில்லை. நலமா?. கோடை வெயில் எல்லோரையும் வாட்டுகிறதா? உண்மைதான் நான் அறிந்து மோர், தேசிக்காய் தண்ணீர், சர்பத் நல்லது குடிப்பதற்கு. அடிக்கடி குளிர் நீரில் முகம் கழுவ வேண்டும். பருத்தி ஆடைகள்தான் குளிர்மையைக் கொடுக்கும். பிறகும் யோசித்து எழுதுகிறேன்.

மர்ழியா நலமா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கம்பு பிடித்தவர்கள்?
ஏப்ரல் 28, 2008 - 10:17am - வழங்கியவர் MarliyaNoohu

ஆமாம் மாலதி அக்கா நீங்க சொல்லுறது சரிதான்..அதென்ன கம்பு பிடித்தவர்கள்?அப்படின்ன என்ன ?

புரூட் ஸாலட்,இளம் தயிர்,கடல் பாசி,யோகார்ட்,இதெல்லாம் ரொம்ப நல்லது அதிகம் தண்ணீர் குடிப்பது,தினம் தலை குளிப்பது...அடிக்கடி பாடி வாஷ் பண்ணுறது இதெல்லாம் நம்மை பிரஷ்சா வைத்துக்க உதவும்..வியர்குறு நம்மை அண்டாது..(சமையல் பற்றிய திரட்டில் குளிப்பை பற்றி சொல்லியதற்க்கு மன்னிக்கவும் மாலதிக்கா)

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
ஏப்ரல் 28, 2008 - 10:21am - வழங்கியவர் thalika

ஹஹஹா இன்னைக்கி நல்ல ஜோக் மர்ழியா..அதாவது கம்புன்னா உங்க ரேஞ்சுக்கு குச்சின்னு நெனச்சுக்காதீங்க..கம்பு,ராகி இருக்கில்லையா..அதில் கம்பங்கூழ் ரோட்டோரத்தில் பார்க்கலாமே அதை சொன்னாங்க

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க
ஏப்ரல் 28, 2008 - 10:24am - வழங்கியவர் MarliyaNoohu

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க....அதென்ன தேசிக்காய் தண்ணீர் அப்படினா தேங்காய் தண்ணீரா?அதிரா இப்பதான் மாலதிக்காவிடம் கம்பு பற்றி பதிவு போட்டுட்டு வாரேன்..அதுகுள்ள நீங்க?எங்க போக நான்?

நான் நலம் அதிரா ரொம்ப நாள் ஆயிற்று நாம் பேசி...பசங்கள்ளாம் நல்மா?இப்ப அங்கு ஏதோ விடுதலை புலீ பிரட்சனையாமே?இப்ப சரியகிட்டா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா , தளிகா
ஏப்ரல் 28, 2008 - 10:53am - வழங்கியவர் அதிரா

என்ன இன்னும் நித்திரை வரவில்லையா? நான் செல்வியக்காவிற்காக காத்திருக்கிறேன்.

ஐயையோ மர்ழியா... நான் எதுபற்றியும் கதைக்கமாட்டேன் ஒன்லி சமையல் மட்டும்தான்.
தேசிக்காய் அதுதான் " தாய் பரட்டை, மகள் உருண்டை - அது என்ன?" விடை எலுமிச்சை.
புரிந்ததா?
தளிகா, நான் கூட ஏதோ தடி என்றுதான் நினைத்தேன்.. ஆனால் எல்லாவற்றிற்கும் ஏன் விளக்கம் கேட்டுகொண்டிருப்பான் என்று விட்டு விட்டேன். நல்ல காலம் சொன்னீங்கள்.

இந்தப் பதிலை அனுப்ப நிறைய நேரம் கஸ்டப்பட்டிட்டேன். அவ்வளவு ஸ்லோவாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கம்பு சுத்தாதீங்க
ஏப்ரல் 28, 2008 - 11:10am - வழங்கியவர் malathi

எஸ்...... கடல் பாசியை மறந்துவிட்டேன் மர்ழியா!...... ஞாபகப்படுத்திவிட்டீர்கள். தளிகா சொன்னமாதிரி கம்பு என்பது ஒரு வகை தானியம். சரி தளிகா..... விளக்கம் கரைக்ட். எங்கே அடுப்பில் சமைக்காத ரெஸிப்பீஸ்? ரெடி பண்ணிட்டீங்களா? ஜலீலா புதுசு புதுசா சட்...சட்...னு சொல்லிடுவாங்களே!

கேபேஜ் சாலட்
ஏப்ரல் 28, 2008 - 11:51am - வழங்கியவர் Vijitvm

கேபேஜ் சாலட்

கேபேஜ் - 1 கப் நிள வாக்கில் அரிந்தது.
பெரிய வெங்காயம் - 1 நிள வாக்கில் அரிந்தது
சின்ன தக்காளி - 5
முளை விட்ட ப்யறு - 1 கப்
வால்நட் ரோஸ்ட் பண்ணினது - 1 தே.க
வெள்ளரிக்காய் - 1 கப் நிள வாக்கில் அரிந்தது
குடமிளகாய் - மஞ்சள் நிறமுள்ளது 1 நிள வாக்கில் அரிந்தது
உப்பு - 1 தே.க
மிளகு - 1 தே.க
ஆலிவ் ஆயில் - 1 தே.க

எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பௌலில் போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

தளிகா,அதிரா,
ஏப்ரல் 28, 2008 - 12:17pm - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் டியர் அன்புள்ள(கூழ் பண்ணத்தான்)நீங்க இப்ப சொன்னது இதோ தம்மாந்துண்ண்டு எழுமிச்சையா?என்னமே நீங்க இதயா கேட்டேன் அய்யே அசிங்கமா இருக்கேம்மே...

தளிகா இது ரொம்ப ஓவ்ர் என்னனுதான் கேட்டேன் குச்சியான்னா கேட்டேன் ஏன் இப்படி அசிங்க படுத்துறீங்க? ஷேம் ஷேம் ஆயிட்டு எனக்கு

அன்புடன்,
மர்ழியாநூஹு

கடல் பாசி
ஏப்ரல் 28, 2008 - 1:29pm - வழங்கியவர் MarliyaNoohu

ஆமாம் மாலதிக்கா கடல் பாசி ரொம்ப நல்லது...நான் கண்டிப்பாக அடிக்கடி பண்ணிடுவேன் ஒருநாள் இளநீர் கடல்பாசி ஒருநாள் நட்ஸ் கடல்பாசி ஒருநாள் நொங்கு கடல்பாசி,புரூட்ஸ் கடல்பாசின்னு ஏதாவது பண்ணி போட்டுடுவேன்....ஹெல்த்க்கு ரொம்ப நல்லது
என் பொண்னு பால் குடிக்க அடமபிடிக்குறப்ப இதை கொடுத்துடுவேன்...இளநீர் மறந்துட்டோம்னு நினைக்குறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

கடல் பாசி
ஏப்ரல் 28, 2008 - 2:15pm - வழங்கியவர் அதிரா

எல்லோருமாக இப்ப என்னை குழப்பிவிட்டீங்கள். தயவு செய்து கடல் பாசி என்றால் என்ன என்று சொல்லுங்கள் பிளீஸ். உண்மையிலேயே கடலில் கிடைக்கும் பாசியா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா! செல்வி!
ஏப்ரல் 29, 2008 - 1:32am - வழங்கியவர் malathi

அதிரா! உங்களுக்கு காலையிலிருந்தே பதிவு போட ட்ரை பண்ணிக்கொண்டிருக்கிறேன். அருசுவை ரொம்ப ஸ்லோவாக இருப்பதால் பதில் சொல்ல முடியவில்லை. கடல் பாசி என்றால் ஆங்கிலத்தில் சைனா க்ராஸ் என்று சொல்வார்களே அதுதான். கோடை உணவுகள் என்ற தலைப்பில் நீங்கள் உடல் நல பாதுகாப்பு பற்றியும் எழுதியதில் தவறொன்றும் இல்லை அதிரா....
அருசுவை இருக்கும் ஸ்லோ-வில் இன்னுமொரு பதிவு கொடுக்கமுடியுமா என்று தெரியவில்லை அதனால் செல்விக்கும் இதிலேயே ஒரு மெஸேஜ் சொல்லிவிடுகிறேன்....... செல்வி! எனக்கு தெரிந்து நீங்க அதிகமாக மன்றத்தில் உரையாட வருவதில்லை. ஆனால் இது உணவு சம்மந்தமான ' த்ரட்' என்பதால் சமையலில் அனுபவசாலியான உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்களேன்.

கோடை காலம்
ஏப்ரல் 29, 2008 - 3:20am - வழங்கியவர் அதிரா

கோடை காலத்தில் ஜவ்வரிசிப் பாயாசம் மிகவும் நல்லது. உணவிற்கு வெந்தயம் அதிகமாக சேர்த்தாலும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அதைவிட நான் கேள்விப்பட்டேன் வெண்டிக்காய் மிகவும் குளிர்ச்சி. அதிலும் வெண்டிக்காயில் செய்யப்படும் மோர்க்குழம்பு கோடையில் நிட்சயம் உண்ண வேண்டுமாம். நான் இதுவரை செய்ததில்லை. ஆனால் இங்கே குறிப்புகளில் கிடைக்குமென்று நினைக்கிறேன். தேடிச் செய்ய வேண்டும்.

வெந்தயக் கீரையும் குளிர்மை என்றார்கள். சரியாகத் தெரியவில்லை. நான் ஒரு முறை அதில் வறை செய்தேன். கொஞ்சம் கைப்பாக இருந்ததால் விட்டு விட்டேன். அதுபற்றியும் அறிந்தவர்கள் எழுதினால் நல்லது.

மாலதியக்கா கடல் பாசி பற்றி சொன்னதற்கு நன்றி, ஆனால் நான் இதுவரை கண்டதில்லை என நினைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளிகா!..பியூட்டிஃபுல்...
ஏப்ரல் 29, 2008 - 3:24am - வழங்கியவர் malathi

தளிகா!...உங்களுக்கு பியூட்டிஃபுல் பெயிண்டிங்ஸ் ஆன் தி ஹேன்ட் என்று ஒரு மெயில் ஃபார்வர்ட் பண்ணி இருந்தேனே ஓபன் பண்ணி பார்த்தீர்களா? என்ன ஒரு க்ரியேட்டிவிட்டி!!
........அப்புறம் அந்த மெயிலின் ஆரம்பத்தில் ரியல் ஃப்ரன்ட்ஷிப் பற்றி ஒரு மெசேஜ் இருக்கு. அத படிக்க மிஸ் பண்ணிடாதீங்க.

அன்பு சகோதரி மாலதி...
ஏப்ரல் 29, 2008 - 1:36pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு சகோதரி மாலதி,
நலமா? உண்மை. நீங்கள் குறிப்பிட்டது போல் உரையாடல்களில் அதிகம் கலந்து கொள்வதில்லை. நான் ஆபீஸ் போய் விடுவதால் நேரம் இருப்பதில்லை. ஞாயிறு வருவேன், அன்று பார்த்து எல்லோரரும் அறுசுவைக்கு லீவு போட்டுருவாங்க:-((
அதல்லாமல் இப்ப வீடு முடியும் தறுவாயில் உள்ளது. அதான் ரொம்ம்ம்ம்ம்ப பிசி. எனக்கும் ஆசைதான் உங்களோடெல்லாம் உரையாட, என்ன செய்ய?

கோடை வெய்யிலுக்கு சிறந்தது கம்மங்கூழ் தான். சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து சாப்பிட எவ்வளவு சூடு இருந்தாலும் தணிக்கும். வெந்தயக்கீரை, பச்சை சுண்டக்காய், வெண்டைக்காய், வெள்ளரி, மோர்(தயிர் கூடாது), இளநீர், நுங்கு, வெள்ளரிப்பழம் தர்பூஸ், கிர்ணி இதெல்லாம் உடலுக்கு நல்லது.

காலையில் காபி, டீ தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் சத்துமா கஞ்சி குடிக்கலாம்.

புளி, காரம் குறைத்தல் நலம். பச்சை மிளகாய் தவிர்ப்பது ரொம்ப நல்லது.
மாம்பழ சீசன் தானேன்னு அதிகம் சாப்பிட்டா சூடுதான்.
வெந்தய் களி, உளுத்தங்களி அடிக்கடி சேர்க்கலாம்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
தர்பூஸ், வெள்ளரிப்பழம் ஜூஸாக குடிப்பதை விட பழமாக சாப்பிடலாம்.
காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் நீராகாரம் குடித்தால் இன்னும் நல்லது.
சீரகம் சேர்த்து தண்ணீர் பருகினால் நீர்க்கடுப்பு வராது.
பொதுவாகவே காய்கறி, பழ சாலட் நல்லது.
சமைத்ததும் சூடாக சாப்பிடாமல், சிறிது ஆறிய பிறகு சாப்பிடுவது நல்லது.

அதிரா, என்னுடைய குறிப்பில் உள்லது போல் வெந்தயக்கீரை செய்து பாருங்கள். கைக்காது. எப்போதும் வெந்தயகீரையை மசிக்கக் கூடாது.
இன்னும் பிறகு சொல்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

மாலதி மேம்
ஏப்ரல் 29, 2008 - 3:41pm - வழங்கியவர் Vijitvm

என்ன மாலதி மேம் என்னோட கேபேஜ் சாலட் பற்றி ஒன்றும் சொல்லவேயில்லை.

விஜி!...சாலட்
ஏப்ரல் 29, 2008 - 11:23pm - வழங்கியவர் malathi

விஜி!...நேற்று அருசுவை ஓபன் ஆக ரொம்ப ப்ராப்ளம் ஆக இருந்தது. உங்க சாலட் நல்ல கலர்ஃபுல் ஆக இருக்கும். பார்ட்டிகளில் சர்வ் பண்ண ஏற்றது. நீங்க எந்த நாட்டில் இருக்கீங்க? இங்க தமிழ்நாட்டில் மஞ்சள் குடமிளகாய் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும். கற்பனையில் நினைத்துப் பார்த்தாலே ஒரு தடவை செய்து சாப்பிடனும்போல தோன்றுகிறது.

அதிரா!..ஜிகர்தண்டா
ஏப்ரல் 29, 2008 - 11:35pm - வழங்கியவர் malathi

அதிரா!... செல்வி சொன்னது கரைக்ட். வெந்தயக்கீரையை கடையக்கூடாது. கூட்டு மாதிரி செய்யனும். பொடியாக நறுக்கி சப்பாத்தி மாவில் சேர்த்து பிசைந்து சுடலாம்.
அதிரா......கடல்பாசி நல்ல குளிர்ச்சி. அதில் ரெஸிப்பி செய்வதும் ரொம்ப ஈஸி. குறிப்புகளில் தேடிப்பாருங்கள் கிடைக்கும். ஜிகர்தண்டாவில்கூட சேர்ப்பார்கள்.

ஜலீலா!..மருந்து
ஏப்ரல் 30, 2008 - 3:16am - வழங்கியவர் malathi

நாட்டு வைத்தியர் ஜலீலா! இங்க கொஞ்சம் வாங்க. எனக்கு நேற்றிலிருந்து ரொம்ப சளி, தொண்டை வலி. நல்ல கை வைத்தியமாக ஏதாவது சொல்லுங்க. ரன்னிங் நோஸ் வேற கஷ்டமா இருக்கு. சீக்கிரம் சொல்லுங்க.

தண்ணீர் சாதம்
ஏப்ரல் 30, 2008 - 5:30am - வழங்கியவர் kothai.R

வெயில் காலத்தில் இரவு சாப்பாட்டிற்கு எங்கள் வீட்டில் நாங்க சாப்பிடுவது, மதியம் வடித்த சாதத்தில் தண்ணி ஊத்தி வச்சிட்டு நைட் அதில தயிர் இல்ல மோர் ஊத்தி சாப்பிடலாம். சின்ன வெங்காயம் தான் சைட் டிஷ். அட இத விட சூப்பர் சாப்பாடு வேறு என்ன இருக்கும் இல்ல, இத அனுபவிச்ச வங்களுக்கு தெரியும்.

snacks suggestion pls
ஏப்ரல் 30, 2008 - 5:45am - வழங்கியவர் kothai.R

யாராவது இப்ப செய்றது போல ஏதாவது ஸ்நாக்ஸ் சொல்லுங்க சகோஸ். அதுவும் நம்ம அறுசுவையில இருந்து செய்றது போல இருக்கனும். நான் 20 நிமிடம் வெய்ட் பண்ணுறேன்.

5 நிமிட ஸ்னாக்ஸ்
ஏப்ரல் 30, 2008 - 7:19am - வழங்கியவர் Vijitvm

ப்ரெட் இருந்தால் அதை நான்காக கட் பண்னி பஜ்ஜி மாவில் போட்டு பொறித்து சாப்பிடால் நன்றாக இருக்கும்.

மைதா மாவு கைவசம் இருந்தால் அதில் உப்பு பச்சமிளகாய்,வெங்காய்ம்,கேபேஜ் கட் பண்னி போட்டு நன்றாக தண்ணிர் விட்டு மிக்ஸ் பண்னி போண்டாவாக போட்டு சாப்பிடலாம்.

போதுமா இனியும் வேண்டுமா?

மாலதி மேம்
ஏப்ரல் 30, 2008 - 7:26am - வழங்கியவர் Vijitvm

ரொம்ப நன்றி,நான் பாஸ்டனில் இருக்கேன்.நிங்க எங்க இருக்கிங்க? சென்ன்யில் என்றால் எங்கு? மாலதி உங்க ரெசிப்பிஸ் கூட நான் பார்த்து இருக்கேன்.
நன்றாகவே இருக்கும்.

சளிக்கு, சீரக் தண்ணிரை நன்றாக் கொதிக்க வைத்து ஆறின பிறகு அரை டம்ளார் குடிய்யுங்க.
பாத் ஷவ்ரில் சூடு தண்ணிர் வந்தால் அதை நன்றாக் ஒபண் பண்னிவிட்டு அங்கேயே 10 நிமிடம் கதவை மூடி விட்டு நில்லுங்க. அந்த வேப்ரைஸரில் சளி அப்பிடியே இற்ங்கி விடும். இது இங்க டாக்டர்கள் சொல்வது.ட்ரை பண்னி பாருங்கள். சுடு தண்னிரில் கொஞ்சம்ம் விக்ஸ்/டைகர் பாம் போட்டு நல்ல டவலால் முகம்/தலை எல்லாம் கவ்ர்ப்டும் படி வைத்து ஆவி பிடித்தால் நன்றாக் போய் விடும். ஆனால் 2 தடவையாவது ஒரு நாளக்கு பண்னனும்.

எல்லாவற்றையும் விட சுக்கு காப்பி போட்டு குடியுங்கள்.

இங்கு டாக்டர்கள் சொல்வது நல்ல ஹாட் சூப் பெப்பர் போட்டு குடிக்க சொல்வார்கள்.
ட்ரை பண்னி பாருங்க.

தேங்க்யூ விஜி!.
ஏப்ரல் 30, 2008 - 8:10am - வழங்கியவர் malathi

தேங்க்யூ விஜி!... கண்டிப்பாக நீங்க சொன்னமாதிரி செய்கிறேன். ஆனால் இங்கு பாத் ஷவரில் ஹாட்வாட்டர் ஃபெஸிலிட்டி கிடையாது. சுக்கு காஃபி ட்ரை பண்ணி பார்க்கிறேன். தொண்டை புண்ணுக்கு நல்ல ஹாட்வாட்டரில் கொஞ்சம் பால் ஊற்றி அதன் ஆவியை பிடிக்கலாம் என்று சொல்கிறார்கள். விக்ஸ் ஆவியும் பிடிக்கிறேன்.

கோடை டிப்ஸ்
ஏப்ரல் 30, 2008 - 4:38pm - வழங்கியவர் Gowrimeena

1. தினமும் தலைக்கு குளிக்கலாம். கேரளாவில் செய்வது போல் தேங்காய் எண்ணை அல்லது நீங்கள் தடவும் எண்ணை யை சூடு செய்து பஞ்சினால் தொட்டு தலை முழுவதும் தடவி 1/2 மணி நேரம் கழித்து குளிக்கலாம்.....சூடு குறைந்து முடி கொட்டாது....
பொடுகும் வராது.....வெயில் காலத்தில் வரும் பிசுபிசுப்பும் இருக்காது

2. சீரக தண்ணீர் குடிக்கலாம்.

3. அதே போல் நன்னாரி வேர் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அதை ஊர போட்டும் குடிக்கலாம் ...குளிர்ச்சியாக இருக்கும்

4. அதே போல் இரவு சாதத்தை வென்னீர் ஊற்றி ஊற வைத்து காலையில் பாசி பருப்பு துவையல் தொட்டு சாப்பிடலாம்....அவ்வுளவு குளிர்ச்சி.....அந்த நாள் முழுவதும் உடம்பு குளு குளு என்று இருக்கும்......இது எங்கள் வைத்தியர் சொன்னது....வென்னீர் பழையது என்று பெயர்...செய்து பாருங்களேன்....

5. 2 பெரிய நெல்லிக்காயை நறுக்கி மிக்சியில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து அதை குடி தண்ணீர் பானையில் ஊற்றி விடுங்கள். அதை குடித்து வந்தால் சூடே தெரியாது......

6. இது முகத்திற்கான டிப்ஸ்.......கத்தாழை ஜெலை எடுத்து மோருடன் கலந்து பூசி 1/2 மணி நேரம் கழித்து கழுவினால் முகம் குளிர்ச்சியாக இருக்கும்.
Gowri,NewJersey

மாலதியக்கா, செல்வியக்கா
மே 1, 2008 - 4:33pm - வழங்கியவர் அதிரா

செல்வியக்கா, வெந்தயக்கீரை உங்கள் குறிப்பில் உள்ளதா? தேடிப் பார்த்துச் செய்கிறேன். எங்களுக்கு பக்கத்தில் வெந்தயக்கீரை வாங்க முடியாது. முக்கால் மணித்தியாலம் மோட்டவே(motor way) ஓட்டத்தில் போய்த்தான் வாங்க வேண்டும். அடுத்தமுறை போகிறபோது வாங்கி வருகிறேன்.

மாலதியக்கா- இப்பதான் இந்தப் பதிவுகளைப் பார்க்கிறேன். உங்களுக்கு தொண்டை வலியா? ஜலீலாக்காவின் லெமன் ரீ நல்ல மருந்து. ஒரு கப் பிளேன் ரீக்கு ஒரு தேசிப்பழம் விட்டு சீனி அல்லது தேன் நல்லது - 2/3 தடவை குடியுங்கள் போய்விடும்.
கடல்பாசி நான் இன்னும் கண்டு பிடிக்கவில்லை--அதற்குள் இன்னொரு புதுப்பெயர் கூறிவிட்டீங்கள் - ஜிகர்தண்டா -- என்ன இது?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வெந்தய கீரை
மே 1, 2008 - 5:31pm - வழங்கியவர் Vijitvm

அதிரா வெந்தய் கீரை வீட்டிலேயே வளர்க்கலாம். ஒரு use in throw cup/any plastic container அடியில் ஒரு துளை போடவும் பிறகு ஒரு தட்டு வைத்துஅதில் மண் போட்டு 1 தே. க வெந்தய்ம் போடுங்க அவ்வள்வு தான் 2 வாரத்தில் வெந்தய கீரை ரெடி. இதே மாதிரி தணியா விதை போடுங்க கொத்தமல்லி இலை ரெடி. இது எல்லா சீசன்னிலும் வள்ரும்.

அதிரா - வெந்தயகீரை புலவு
மே 1, 2008 - 5:33pm - வழங்கியவர் aniaksh

அதிரா,

வெந்தயக்கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது. குளிர்ச்சியும் கூட. எனக்கு தெரிந்த ரெசிபி ஒன்று சொல்கிறேன் செஞ்சு பாருங்க.வேறுயாரும் மன்றத்தில் இந்த ரெசிபி கொடுத்து இருக்காங்களான்னு தெரியல.

வெந்தயகீரை புலவு

வெந்தையகீரை 1 கட்டு பொடியா நறுக்கியது
பச்சை மிளகாய் 4 அல்லது 5
பூண்டு 8 பல்லு
அரிசி 2 கப்
எண்ணெய் 2 அல்லது 3 ஸ்பூன்
தண்ணீர் 3 1/2 கப்
உப்பு தேவையான அளவு
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய கீரையும் உப்பும் சேர்த்து நல்லா வதக்கவும். பின் தண்ணீர், உப்பு , அரிசி சேர்க்கவும். 3 விசில் வந்ததும் எடுக்கவும். ரொம்ப நல்லா இருக்கும்.
Rajini

விஜி, ரஜினி,
மே 2, 2008 - 3:04am - வழங்கியவர் அதிரா

விஜி உண்மையாகவா? எனக்கு இந்த வெந்தயம் முளைக்கும் என்று தெரியாமல் போய் விட்டதே. என்னிடம் நிறைய பிளாஸ்ரிக் பூச் ஜாடிகள் உள்ளது, மண்கூட உள்ளது. இன்றே போட்டு விடுகிறேன். வீட்டுக்குள் நிறைய வளர்க்கிறேன் மரங்கள். கத்தரி கூட போட்டு முளைத்து நிற்கிறது கொஞ்சம் வளர்ந்ததும் வெளியில் நடப்போகிறேன். உருளைக்கிழங்கு, மார்ச்சில் நட்டால் யூலையில் பிடுங்கலாம் என்றார்கள், எத்தனை சாக்குகள் பிடுங்கினேன் என்று நிட்சயம் தெரிவிக்கிறேன். நீங்கள் விதை போட்டீங்களா? அல்லது கன்றாக வாங்கி நட்டீங்களா? இங்கு கன்றுகள் வாங்க முடியாது போல் தெரிகிறது.

இங்கு சுப்பர் மார்கட்டில் புதினா கன்று வாங்கி வந்து வெளியே நட்டேன், வின்ரருக்கு தண்டுமட்டும் இருந்தது இப்போ நிறைய குருத்துகள் வந்தது, நான் அதற்கு சிறிய பலகை துண்டுகள் போட்டு அடையாளப் படுத்தியிருந்தேன், என் சின்னவர் அந்தப் பலகையை விளையாடும்போது எடுத்துவிட்டார், நான் அவற்றைக் கவனிக்கவில்லை, புல்லு வெட்டுபவர்கள் புதினாவையும் வெட்டி விட்டார்கள். இப்போ மீண்டும் குருத்து வருகிறது. நன்றி விஜி சொன்னதற்கு.

ரஜினி, நல்ல குறிப்பு சொல்லியிருக்கிறீங்க நான் நிட்சயம் செய்கிறேன், நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

44 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »