topic_image


தோழியர்களே, தோழர்களே, தம்பி, தங்கைகளே

என் சின்ன மாமனார் திரு கே.கே.வி. நாராயண ஐயர் அவர்கள் 24.04.2008 வியாழக் கிழமை காலமாகி விட்டார். அவர் தன் உடலையும், கண்களையும் முன்பே தஞ்சை மருத்துவமனைக்கு தானம் செய்து விட்டார். 25.04.2008 அன்று காலையே ஒரு சிறுவனுக்கும், ஒரு பெண்ணுக்கும் அவரது கண்கள் பொருத்தப்பட்டுவிட்டன. அவரது உடல் தஞ்சை மருத்துவமனையில் உள்ளது.
அவருக்கு வயது 87. அவர் தனது 18வது வயதிலிருந்து இறக்கும் வரை உப்பு, புளிப்பு, இனிப்பு போன்ற எந்த சுவையும் இல்லாத உணவை உட்கொண்டு வாழ்ந்து வந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை.
நாம் கூட உடல் தானம் செய்யாவிட்டாலும் நம் கண்களை தானம் செய்யலாம். நாம் இறந்த பின்னும் நம் கண்கள் மூலம் இந்த உலகைப் பார்த்துக் கொண்டிருபோம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
உடல்தானம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அன்புடன்
ஜெயந்தி மாமி


ஜெயந்தி மாமி ஆழ்ந்த அனுதாபங்கள்....
மே 7, 2008 - 6:48am - வழங்கியவர் இலா

ஜெயந்தி மாமி... இப்படி ஒரு மாமனார் கிடைக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.அவரது நல்ல மனதை நான் பாராட்டுகிறேன்....

இவ்வளவு நல்ல குடும்பத்தினரை இழந்து வாடும் உங்கள் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....
லிவர் கிட்னி போன்ற உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியும் ஆனால் அதன் மெடிக்கல் இம்ப்ளிகேஷ்ன்ஸ் என்ன என்று தெரியாது.

இந்தியாவிலே லிவர் கிடைத்தாலும் புது டெல்லியில் தான் வெற்றிகரமாக டிரன்ஸ்ப்லேன்ட் செய்ய முடியும்.

Hope is just the part of the equation

ரொம்ப நல்ல தானம்
மே 7, 2008 - 7:14am - வழங்கியவர் kothai.R

ஹலோ ஜெயந்தி மேடம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். உண்மையிலேயே இதுப் போல மனிதர்கள் இருப்பது அரிது தான். இதைப் போல் ஒவ்வொருவரும் நினைத்து விட்டால் பல பேரின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் இல்லையா? ஆனால் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு நிறைய விழிப்புணர்வு உள்ளது. நானும் கண் தானம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.