topic_image


ஹாலோ தோழிகளே ,
இப்பொழுதெல்லாம் அமெரிக்கவில் அரிசியின் விலை ஏறிக்கொண்டே போகிறது.இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீகள்


பீகரமாயொரு தமாஷா
மே 11, 2008 - 11:34pm - வழங்கியவர் thalika

ஹாய் கவி
அமேரிக்காவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் விலைவாசி கிடுகிடுவென உயர்கிறது.அரிசி ஒரு சிறிய மூட்டை 50 திர்ஹம்ஸ் இருந்தது தற்பொழுது 80 திர்ஹம்ஸ்
மீதமுள்ள பல பொருட்களும் இரட்டிப்பு விலை உயர்ந்தது..முன்பு வெளிநாட்டில் இருந்து கொண்டு அடுத்த தலைமுறையினருக்கென்று சொத்து சேர்த்து வைக்கும் பழக்கம் இருந்தது அது தற்பொழுது மாறி அன்றாடம் நமது தேவைக்கு கிடைக்கிற சம்பளம் போதுமா என்று யோசிக்க வைக்கிறது
இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் நான் வசிக்கும் இடத்தில் வீட்டு வாடகை முதல் இதர பொருட்களுக்கு மும்மடங்கு விலை ஏறும் என்று நேற்றைய பத்திரத்தில் வாசித்தறிந்தேன்..எல்லாம் கிளம்ப வேண்டியது தான் ஊருக்கு.
பாவம் நம்ப ஜார்ஜ் புஷ்ஷ் அழகாக அவரது அறிவை பயன்படுத்தி காரணம் சொல்லியிருக்கிறார்.இத்தனை விலைவாசிக்கும் காரணம் கேரளாவில் மிடில் க்லாஸ் ஆட்கள் எல்லோரும் சத்தான போஷான உணவை உண்ணத் தொடங்கியது தான் காரணமாம்.
அதற்கு பல மந்திரிகளும் நாங்கள் எவ்வளவு சாதம் சாப்பிட வேண்டுமென்பதை புஷ் தீர்மானிக்க தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில்
மே 12, 2008 - 12:23am - வழங்கியவர் thalika

ஹ்ம்ம் இந்தியாவில் என்பதற்கு கேரளாவில் என்று தவறி எழுதியிருக்கிறேன்.

தளிகா
மே 12, 2008 - 5:05am - வழங்கியவர் MarliyaNoohu

தளி குலசை அண்ணன் சொன்ன மாமனா மச்சானா வாசகம் எனக்கு எதையோ நியாபக படுத்துது ஹா ஹா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அமெரிக்கா வாழ் சகோதரிகளே
மே 12, 2008 - 8:54am - வழங்கியவர் arunkavi

ஹலோ சுல்தான் சார்,
அநேகமாக அமெரிக்க அதிபர்க்கு நம்ம இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வருவது அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அதனால்தான் அவர் நம்மை குறை கூறிக்கொண்டிருக்கிரார்.நம் நாட்டில் உள்ளவர்கள் இதற்காக சத்தானது சாப்பிடமல் இருக்கமுடியுமா. இதுதான் முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்.

நன்றி,
கவிதா

விலைவாசி உயர்கிறது
மே 12, 2008 - 9:56am - வழங்கியவர் Mahalakshmiprag...

அனைவருக்கும் வணக்கம்

புஷ் என்ன கூறினார் என்பதுப்பற்றி எனக்கு தெரியாது,நான் விலைவாசி இங்கும் கூடுகிறது என்பதைப்பற்றி தான் கூற வருகிறேன். நான் சீனாவில் வசித்து வருகிறேன்.இங்கு தினசரி பொருட்களின் விலை திடீரென்று ஏறி விட்டது.நான் 2008 ஜனவரியில் இந்தியா போவதற்கு முன்பு பாலின் விலை 1 லிட் RMB(yuan) 5.50,அரிசியின் விலை RMB(yuan)29, கான் ஆயில் 5லிட்டர் RMB(yuan)43,என்று இருந்தது. மார்ச் மாதம் இங்கு வந்துவிட்டேன் அந்த 1மாத இடைவெளிக்குள் பால்RMB(yuan) 9.50, அரிசி RMB(yuan)43, கான் ஆயில்RMB(yuan) 105 ,என்று மாறிவிட்டது. இன்னமும் ஏன் தீடீரென்று இப்படி விலை உயர்ந்துவிட்டது என்று தெரியவில்லை. காய்கறி விலை கேட்கவேவேண்டாம் அப்படி ஒரு விலை ஏற்றம்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China