topic_image


அறுசுவை உறுப்பினர் அனைவருக்கும் வணக்கம்

நான் தான் மஹாபிரகதீஸ்,உங்களில் பலபேருக்கு என்னை தெரியாது,இந்த திரட் மூலமாக என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன். அனைவரும் ஒருவழியாக தோட்டகலையில் ஈடுபட்டு செடியை வளர்க்க ஆரம்பித்திருப்பீர்கள்.செடி வளர்ந்து வரட்டும் நாம் அந்த இடைவேளையில் நாம் அனைவரும் flashback போகலாம் வாருங்கள்.

1.இப்பொழுது குறிப்புகள் கொடுக்கும் நாம், முன்பு சமையலில் தவறு செய்து முழித்திருப்போம்,அதை சமாளிக்க ஏதேனும் செய்து நல்ல பெயரும் வாங்கியிருப்போம்,அல்லது நல்ல அசடும் வழிந்து இருப்போம் அதில் ஏதேனும் இருந்தால் இங்கே கூறலாம், நாங்களும் ENJOY பண்ணுவோம்ல,
2.ஏதோ சமைக்க இறங்கி ஏதோ சமைத்திருப்போம்
3.சமையலில் கத்துக் குட்டியாக நாம் இருந்து ஏதேனும் Bacholars சாப்பிட வந்தால் அவங்க பாடு திண்டாட்டம் தான்.

என்ன எல்லாரும் ஒன்றுமே தெரியாது போல் இருக்கிறீங்க ஏதாவது இருந்தால் share பண்ணுங்க


மஹா
மே 21, 2008 - 5:25am - வழங்கியவர் thalika

மஹா இதற்கு முன் இப்படி ஒரு த்ரெட் இருந்தது அது பாதியில் உறையாடல் முடிந்து போனது..திரும்ப போட்டீர்க நன்றி..பிறகு சொல்கிறேன்
என் சித்திக்கு காய்ச்சல் வரவே என் சித்தி மகளிடம் பருப்பு வைக்க சொன்னார்கள் ஜீரகம் சேர்த்து.சாப்பிட உட்கார்ந்த தம்பி நல்லாவே இல்லை என்றான்..அவளிடன் கேட்டபொழுது நான் சரியாக தான் செய்தேன் என்றாள்..என்ன்டா இது வம்பு என்று கிச்சனுக்கு கூட்டிப் போய் ஜீரகத்தை காட்டு என்றதற்கு அவள் காட்டியது ஏலக்காய்.
அப்பொ தான் விவரம் புரிந்தது எதனால் பருப்பு வெறுப்பாகியதுன்னு.இது போன வாரம் நடந்தது

எனக்கு
மே 21, 2008 - 5:37am - வழங்கியவர் Mahalakshmiprag...

எனக்கு தெரிந்த ரஸியா,ஜலீலா,விஜி,kr,வின்னி,
எனக்கு தெரிந்த ஆனால் என்னை தெரியாத மர்ழியா, தளிகா,காயத்திரி, அதிரா,இலா,அனிக்ஷா
அனைவரும் வாருங்கள் அள்ளி அள்ளி தாருங்கள் உங்கள் flashbackai

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

தோசையா பெட்ஷீட்டா...
மே 21, 2008 - 10:26am - வழங்கியவர் இலா

இது நடந்து ஒரு 2 வருஷம் இருக்கும்... ஒரு பிரெண்ட் அவங்க அம்மா அப்பாவுடன் நியுயார்க் சுத்திபாக்க வந்தாங்க... நானும் ரொம்ப சமத்தா.. காலைல ப்ரெக்பாஸ்ட் சாப்பிடே போகலம்ம்ன்னு சொல்லியாச்சு.. 2 விதமா சட்னி/சாம்பார்ன்னு தட புடல்..
சரி அஞ்சாறு பேர் இருக்கோமேன்னு இட்லி ஊத்தி வச்சா.. வழக்கமா ஒரு குஷ்பூவுக்கும் நமீதாவிக்கும் இடைதரமா இருக்கும்.. இன்னைக்கு பாத்து... வடிவேலுக்கும் ஓமகுச்சி நரசிம்மனுக்கும் இடைதரமா வந்துச்சி... செரி... தோசையாவது சுட்டு சமாளிபிகேஷன் பண்ணலாம்ம்ன்னு பாத்தா... தோசை கல்லோடு சுருண்டு போகுது... வந்தவரோ ரொம்ப கலாய்ப்பாரு... என்னங்க தோச சுட சொன்னா பெட்ஷீட் மாதிரி மடிகிறீங்கன்னு சொல்லி ரொம்ப கலாச்சிட்டாரு... எப்படியோ... கொஞசம் அரிசி மாவு கலந்து அப்படி இப்படின்னு பிச்சிட்டு போன தோசையை வித விதமான சட்னி எல்லாம் வச்சு ... சாப்பிட்டாச்சு...

போகும் போது சொன்னது " சட்னி ரொம்ப நல்லா இருந்துச்சி.. ரெசிபி சொல்லுங்க" நானோ ஙே!! ஙே!!!

மஹாபிரகதீஸ்,இலா
மே 21, 2008 - 11:20am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் மஹாபிரகதீஸ் நலமா?என்னை ஓஹ் உண்மையில் இப்போதான் கேள்விபடுறேன்..நைஸ் டு மீட் யூ....

பிலாஸ்பேக்?புரியல என்ன பிலாஸ் பேக் வேணும் சொல்லுங்க தர தயாராக இருக்கோம்...

இலா...அய்யோ மறந்தும் கூட உங்க வீட்டு பக்கம் வர மாட்டேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

மஹாபிரகதீஸ்,
மே 21, 2008 - 11:32am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் மகா இபோதான் மேலே இஉர்க்கும் தலைப்பையே பார்த்தேன்....சாரிப்பா திடிர்னு பிலாஷ் பேன்னுனதும் புரியல...பிறகு கண்டிபா போடுறேன்...அன்புடன்,
மர்ழியாநூஹு

Flashback
மே 21, 2008 - 11:34am - வழங்கியவர் aniaksh

இது எங்க கல்யாணம் ஆன புதுசுல நடந்தது. காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம் நடந்ததால, சமையல் நாலெட்ஜ் சுத்தம்:)) வரும் போதே பெரிய பெரிய குக்கிங் மேனுவல்ஸ்ம் (!?!) சீதனமா கொண்டுவந்தேன். என் ஹஸ் ரொம்ப பெருந்தன்மையா ஒரு 10 நாள் நான் எப்படி சமைக்கனும்னு காமிக்கிறேன், அப்புறம் நீ சமைக்கலான்னார். நான் அதைவிட பெருந்தன்மையா பரவாயில்ல நானே சமைக்கிறேன், எங்கிட்ட குக்கிங் புக் எல்லாம் இருக்கு. உங்களுக்கு என்ன புடிக்குமோ சொல்லுங்கன்னு பந்தாவா லிஸ்ட் எல்லாம் வாங்கிட்டேன். அவருக்கு புளி குழம்பு புடிக்கும்னு சொன்னதால , எல்லா புக்கையும் புரட்டி எனக்கு புடிச்ச ரெசிபியை எடுத்து ஒரு வழியா சமைச்சு முடிச்சுட்டு சாப்பிடு பார்த்தா சும்மா சொல்லக்கூடாது காரசாரமா நல்லாவே இருந்தது. இவருக்கு போன் செஞ்சு வரச்சொன்னேன். அவர் கூட ஒரு ஆந்திரா ப்ரண்டையும் கூட்டிட்டு வந்தார். எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சோம். அந்த அக்காவும் ரொம்ப நல்லா இருக்குனு பாராட்டிக்கிட்டு என் கூட பேசிகிட்டே சாப்பிட்டு இருந்தாங்க. திடீர்னு அழுகிற சத்தம் பார்த்தா இவரு. என்னாச்சுன்னு பார்த்தா காரம் தாள முடியலைன்னார். எங்க 2 பேருக்கும் நார்மலாதான் இருந்தது. பாவம் உண்மையிலேயே கண் எல்லாம் சிவந்து புது பொண்டாட்டி சமைச்சதை ஒன்னும் சொல்லமுடியா அவரு கண்ல தண்ணி வழிய சாப்பிட்டு இருந்தைப்பார்த்து எங்களுக்கு சிரிப்பு தாங்கலை. அதை இப்ப நினைச்சாலும் சிரிப்பு தான்.
Rajini

இலா சூப்பர்
மே 21, 2008 - 11:40am - வழங்கியவர் aniaksh

போகும் போது சொன்னது " சட்னி ரொம்ப நல்லா இருந்துச்சி.. ரெசிபி சொல்லுங்க"

இதைவிட ஜென்டிலா யாரும் "குட்ட" முடியாது. இலா சூப்பர்
Rajini

மர்ழியா வரமட்டேன்னா எப்படி...
மே 21, 2008 - 11:44am - வழங்கியவர் இலா

நாங்க வருவோமில்ல... வந்து அஙகயும் அலப்பரதான்...
இதே பிரெண்ட் வீட்டுக்கு போய்.. வந்த விஷயம் என்னான்னா... அவங்க மேங்கோ லஸ்ஸியும்/ பக்கோடாவும் செய்தார்கள்... நானோ ரொம்ப டயட் கான்சியஸ்ன்னு பீலா விட்டுட்ட்டு... சரி சரி நீங்க பக்கோடா போடுங்க நானே டீ போட்டுக்குறேன்னு சொல்லி டீயும் போட்டாச்சு... இஞ்சி ஏலக்காய் எல்லாம் போட்டு... வந்த மற்ற 2 நண்பர்களயும் டீ குடிக்க கட்டாயம் வேறு.. அப்புறம் என் கணவரிடம் எனக்கு டீ குடிக்க கம்பெனி குடுங்கன்னு சொல்லி ரெண்டு பேரும் டீ கப்பில் ஊத்தியாச்சு.. ஒரு வாய் குடிச்சவர்.. யாருக்கும் தெரியாம மெதுவா.. டீல என்ன போட்டேன்னார்.. அப்போதான் புரிஞ்சது... சக்கரைக்கு பதில் உப்பு போட்டாச்சுன்னு...

கேக்கவா வேணும் மானம் கப்பலேரி... கண்டம் விட்டு கண்டம் போகுதுன்னு...

அய் ரஜினி..
மே 21, 2008 - 11:48am - வழங்கியவர் இலா

என்னது "குட்டா" அப்போ அவங்க எனக்கு பல்பு தான் குடுத்தாங்களா... ஆ!!... நங்க குட்ட குட்ட குனிய மாட்டோமில்லா... கொஞ்சம் குனிஞ்சாலே போதும் அவங்களுக்கு நான் எட்ட மாட்டேனே....

இலா
மே 21, 2008 - 12:01pm - வழங்கியவர் aniaksh

இலா, இதைத்தான் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் சொன்னங்களா. பாவம் உங்க ப்ரன்ட்ஸ். நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க அந்த ஏரியா பக்கமே வரமாட்டேன்
Rajini

ஹேய் இலா
மே 21, 2008 - 12:03pm - வழங்கியவர் MarliyaNoohu

எனக்கு ஒரே சிரிப்புப்பா..இப்படிலாம பன்ணுவீங்க?ஹா ஹா ரஜினியோடது இன்னும் பார்கல..அவங்க என்னத்தை சொல்லி இருக்காங்களோ?வாசிக்கும் போதே நினைத்தேன் சீனியை விட்டு இருப்பீங்களோன்னு...

எனக்கு இப்ப சமயல் அத்து புடி எல்லோரும் குடும்பத்தில் பாராட்டுவார்கள் நீ இப்படி முன்னேருவான்னு தெரியாதேன்னு என்னிடம் மெனக்கெடுத்து போன் போட்டு கேட்பாங்க சமையல் சந்தேகத்தைலாம் காரணம் உண்டு கல்யாணத்துக்கு முன் சுத்தம் ஒரு பிலேட்டை கூட எடுத்து வைக்க மாட்டேன்..சீரகம் கூட என்ன கலரில் இருக்கும்னு தெரியாது//அவ்லோ அனுபவசாலி நான்..நான் கதீஜா வீட்டுக்கும் கதீஜா என் வீட்டுக்கும் அடிக்கடி தங்கி இருப்போம்..ஒரு முறை அவ என் வீட்டுக்கு வந்தப்ப (சரியா நியாபகம் இல்லை)சாப்பாடு இல்லைன்னு நினைக்குறேன் அப அய்யோ பாவம் கதீஜா க்கு பசிக்குமேன்னு என்ன யோசித்தேன் எனக்கு அப்ப மேகிதான் போட தெரியும் ஓகே போடலாம்னு எடுத்தேன் ஆனா அதில் மசாலா இல்லை அது இல்லாமல் பண்ண தெரியாது சரின்னு தண்னீரில் போட்டுட்டு கண்ணில் பட்டதுலாம் போட்டேன் சீரகம்,வெந்தயம்,சோம்பு,பட்டை,க
ிராம்பு,ஏலம்,சீனி,உப்பு,பெருங்
காயத்தூள்..இப்படி என்னலாம் கண்ணில் பட்டதோ அதைலாம் தண்ணீரில் போட்டேன்..கதீஜாக்கும் அப்போ அவ்வலவா தெரியாது இருந்தாலும் என் சமையலில் பயம் அவளுக்கு பயப்படுறது கண்ணில் தெரிஞ்சது அப்ப சொன்னேன் அயப்படாதே நல்லா வாசனையை இழுத்து பாரு கால் கறி வாசனை வருதுன்னு சொன்னேன் பாருங்க ஒரே ஓட்டம் அவ என்னை விட்டுடுன்னு இன்னும் சொல்லி காட்டுவா..

மற்றது நியாபகம் வட்ந்ஹால்சொல்லுறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
மே 21, 2008 - 12:18pm - வழங்கியவர் aniaksh

மர்ழியா,
எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க:))

நல்லவிதமாதான்பா சொல்றேன். கோபப்பட்டு எனக்கும் ஒரு நூடுல்ஸ்[ மேகி] போட்டுறாதீங்க. வுடு ஜூட்.............

மர்ழியா,
அப்பிடியே இதையும் பார்த்துருங்க
http://www.youtube.com/watch?
v=bAH2I33tCJ4&feature=related
Rajini

ரஜினி
மே 21, 2008 - 12:39pm - வழங்கியவர் MarliyaNoohu

நீக்களும் என் கேஸ்தான் போல கல்யாணம் முன் ஒன்னும் தெரியாதா?ஹா ஹா

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியா
மே 21, 2008 - 1:31pm - வழங்கியவர் aniaksh

மர்ழியா,
கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி நீங்க எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சொல்லலாம். அதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன். எனக்கு கண்டிப்பா ஒன்னு தெரியும். அருமையா ருசிச்சு சாப்பிடத் தெரியும்னு சமையல் வல்லுனர்கள் (இலா எங்க இருக்கீங்க) நிறைந்த சபையில் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன். ஹி,ஹி,ஹி...................

மர்ழியா நீங்களும் கட்சியில வந்து சேர்ந்துக்கங்க. நாம கூட்டனி கட்சின்னு சொல்லிடலாம்

Rajini

ஹாய்
மே 21, 2008 - 1:34pm - வழங்கியவர் அதிரா

ஹாய் மஹா மற்றும் அனைவருக்கும்,
எனக்கும் நிறைய அனுபவங்கள், எல்லாம் முழுவதுமாக நினைவிலில்லை. இலங்கையில் இருந்தபோது எங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பார்சல் வரும். யாராவது வந்தால் கொடுத்துவிடுவார்கள். இப்படி ஒரு தடவை வந்தபோது, எங்கள் வீட்டில் மாமியின் மகள் விசிற்றிங்காக வந்திருந்தார். அப்போ அவருக்கு ரீ கொடுப்பதற்கிடையில், பார்சலைக் கொண்டுவந்து தந்தார்கள். திறந்து பார்த்தோம்.... அதற்குள்... உடுப்புகள்.. சுவீட்.... இப்படி நிறைய... அதனுடன் ஒரு பெரிய பவுடர் பக்கட்டும்(மில்க் பவுடர் மாதிரி) இருந்தது. இலங்கையில் நாங்கள் மில்க் பவுடர்தான் ரீக்குப் பாவிப்போம். அப்போ அம்மா உடனே அதை வாசிக்கவுமில்லை... அவசரமாக அவர் போய்விடப் போகிறார் என்று... எங்களுக்கும் சேர்த்து ரீ ஊத்திக்கொண்டு வந்தார். அந்தப் பவுடரைப் போட்டு. நல்ல காலம் நாங்கள் வாய்க்குள் வைப்பதற்கிடையில் அம்மாக்கு கொஞ்சம் டவுட் வந்துவிட்டது, உடனே ஓடிப்போய் சின்ன எழுத்துக்களை வாசித்துப் பார்த்தா, அதில் வாசிங் பவுடர் என இருந்தது. பெட்டியில் இருக்கும் பெயர் வேறு இலங்கையில் இருக்கும் பெயர் வேறு என்பதால் புரியவில்லை. நல்லகாலம் ஒருவரும் வாயில் வைக்கவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் மகா
மே 21, 2008 - 2:14pm - வழங்கியவர் rasia

எப்படி இருக்கீங்க?உங்கள் நாடு சகஜ நிலமைக்கு வந்துவிட்டதா?
அப்புறம் என்னிடமும் கேட்டு இருக்கீங்க
எனக்கு சின்ன வயதில் இருந்து சமைப்பதில் ஆர்வம் 8 வயதில் என் அம்மா குழம்பு தாளிக்கும் போது நான் நச்சரிச்சு தாளித்தேன் என் கவணம் அடுப்பில் இருந்த சட்டியில் இருக்க நான் தாளித்த பின்பு அதில் ஊர்ருவதர்க்கு வேகவைத்து நன்கு கொதிக்கும் குழம்பில் காலை விட பாதமே வெந்துவிட்டதை மறக்க முடியாது 9 வது வயதில் சோறு ஆக்குவேன் என்று பிடிவாதம் பிடித்து ஆக்கினேன் அப்பொழுது எங்கள் வீட்டி விறகு அடுப்பு தரையில் இருக்கும் அடுப்பு
சவுக்கை தோகைகளை வைத்து அடுப்பை ஊதூ ஊதுன்னு ஊதி நல்லபடியாக சமைத்தாச்சு,பிறகு எல்லோருக்கும் சாப்பாடு வைக்கும் போது சோற்றில் சின்ன சின்ன குச்சிகள் அன்று என் நிலமை ஆனால் என்னை யாரும் கோபிக்கவில்லை என் தந்தை எங்களுக்கு ரொம்பவும் சப்போர்ட் நீ செய்மா நான் சாப்பிடுறேன் என்று அவர்கள்சொல்லும் ஊக்கம்,ஆனால் நான் 15 வயதில் நல்லா சமைக்க கத்துக்கிட்டேன் வேறு சொதப்பிய அனுபவம் இல்லை

அரிசி சாதம்
மே 21, 2008 - 2:38pm - வழங்கியவர் vinnie

மர்ழியா,ரஜினி நானும் உங்க கூட்டணிதான்:-)

நான் என் சித்தி வீட்டில் தங்கி வேலைக்கு போகும்போது நடந்தது இது. சித்தி திடீரென்று ஊருக்கு செல்லவேண்டி இருந்ததால் அவரின் இரண்டு குழந்தைகளையும் என் பொறுப்பில்(!) விட்டுவிட்டு சென்று விட்டார். இத்தனைக்கும் குழம்பு எல்லாம் வைத்து விட்டுத்தான் சென்றார். என்னுடைய ஒரே வேலை சாதம் வைப்பது மட்டுமே. குக்கரின் அடியில் இரண்டு கப் தண்ணீரும் அரிசியை களைந்து ஆறு கப் தண்ணீரும் வைக்க சொல்லியிருந்தார். நாம்தான் சமையல் புலியாச்சே. நாம் அப்படியே உல்டாவாக குக்கர் அடியில் ஆறு கப்பும், அரிசியில் 2 கப் தண்ணீரும் வைத்து விட்டோம். அவசர அவசரமாக குழந்தைகள் பள்ளி போகும்போது குக்கரை திறந்தால் அரிசி அப்படியே மணி மணியாக என்னைப் பார்த்து சிரித்தது. பிறகு அனைவரும் மதிய லன்ச்சுக்கு கையில் கிடைத்த ஸ்னாக்ஸை எடுத்து கொண்டு ஓடினோம்:-)

இதெல்லாம் சரி மஹா உங்கள் குறிப்புகள் வித்தியாசமாக உள்ளது. அம்மாவிடம் கற்று கொண்டதா?

பிலாஷ்பாக்
மே 21, 2008 - 4:21pm - வழங்கியவர் anjali73

த்ரெட்யிலுள்ளதை படிச்சுட்டு எனக்கு ஒரே சிரிப்புப்பா
Rajini அதை இப்ப கற்பனை பண்ணி நினைச்சாலும் சிரிப்பு தான்.
இலா உப்பு போட்டாச்சுன்னு சொனேங்களே கற்பனை பண்ணி பார்த்தேன் ஒரே சிரிப்பாயிருக்கு
இப்படிலாம பன்ணுவீங்க?ஹா ஹா
vinnie அப்படியே உல்டாவாக பண்ணிடீங்களே......

ஹாய் மகா இபோதான் தலைப்பையே பார்த்தேன்....
சாரிப்பா திடிர்னு பிலாஷ் பேன்னுனதும் ......................பிலாஷ்பா
க் .......பிலாஷ்பாக் ...........பிலாஷ்பாக் ................பிலாஷ்பாக்
இப்படிதான் எனக்கு 10 வயத்திரும் லீவுக்கு பாட்டி வீட்டு வந்திருந்தேன்,பாட்டி சித்தியிடம் வீட்டை பொறுப்பாக பாத்துக்கோ சொல்லிவிட்டு வெளியுர் சென்றார்கள்.சித்திக்கும் அவ்வளவா சமைக்க தெரியாது,காலேஜ் படித்து கொண்டிருந்தார்கள். மறுநாளெழுந்து டீ தண்ணீர் வைத்தார்கள்,பாட்டிவீட்டில் கருப்படிகாப்பிதான் வழக்கம் காப்பிக்கு தான் கருப்படிதண்ணீயை கொதிக்கவிடுருக்காங்க நினைச்சுகிட்டு காப்பிதூளை போட்டூ,நான் ரொம்ப பொறுப்பாயிருக்கிராதா நினைச்சுகிட்டு பாத்திர கழுவிகிட்டுயிருக்கிர சித்திகிட்ட தண்ணி கொதிச்சுகிட்டுயிருந்தது நான் க்ரெட் காப்பிதூளைபோட்டுன் மெல்லமா பாத்திரகழுவுன்னு சொல்ல,அடா இப்ப்தானே டீதூளை போட்டு வந்தேன் சித்திசொல்ல ............
மாமா,தாத்தா மற்றும் வீட்டுக்கு வந்தவர்களுக்கும் நானும்,சித்தியும் சேர்ந்த்து போட்ட காப்பிடீதான் குடிச்சாங்க,குடிச்சுடு ரொம்ப வித்தியாசமாயிருக்கே நல்லருக்கு சொன்னங்க நாங்க ரெண்டுபேரும் சிரிச்சி சமாளிச்சிட்டோம்.

தளிகா
மே 21, 2008 - 8:27pm - வழங்கியவர் Mahalakshmiprag...

ஹா ஹா தளிகா உங்கள் சித்திப்பொண்ணு புதியதோர் ரைஸ் டிரையல் செய்து பார்த்திருப்பார்கள் போல இருக்கே,ஜீர ரைஸ் தெரியும்.ஆனால் இது தெரியாது ஒருவேளை இது இலாச்சி ரைஸ் போல.

இலா எனக்கு தோசை,ஸ்பெஷல் தோசை,நெய் ரொஸ்ட்,மசாலா தோசை,ஊத்தப்பம் தெரியும் ஆனால் உங்களுக்கு மட்டும் பெட்ஷீட் தோசை சுட தெரிந்திருக்கிறதே வாவ், நீங்க போட்ட டீ............................
....................அப்பபாஆஆஆஆ
ஆ எவ்வளவு உங்க ஆத்துகாரர் ரசித்திருந்தால் ஓடி வந்து டீயில் என்ன போட்டுருக்க என்று கேட்டாங்களோ?உங்கள் முகம் விருந்திரனர் முன் எப்படி இருந்திருக்கும்...............
..............................
..............................
..............................
..........

ரஜினி நீங்களுமா? "சேம் பின்ச்" நானும் எனது கணவரை கல்யாணம் ஆன புதுதில் நிறய்ய அழ வைத்ததுண்டு. சமைக்கிறேன் பேர்வழியா பாவம் இப்பவும் நினைக்கையில்................சி
ரிப்பு தான் வருது

மர்ழியா நான் நீங்கள் எழுதியதில் இருந்து உங்களுக்கு தான் மேகி போட தெரியுமே அப்புறம் ஏன் தவறாக கண்ணில் பட்டதெல்லாம் போட்டு தண்ணீரில் போட்டு கதீஜாவை கலங்கடித்தார்கள் என்று நினைத்து,மறுபடியும் வாசித்தேன்,நீங்கள் தான் எழுதியிருக்கிறீங்களே "எனக்கு அப்ப மேகிதான் போட தெரியும் என்று" அப்படினா உங்களுக்கு தண்ணீர்ல் மேகியை போடதான் தெரியும், செய்யதெரியாது.................
......ஆக கடைசியில் ஒரு சின்ன மசால பாக்கட் செய்த வினை கதீஜா ஓடியே போய்விட்டாங்களே...............
.

அதிரா தப்பித்தார் வாசிங் பவுடரை வாயில் போடாமல் காப்பாற்றியவர் அவரது அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஅந்த அம்மாவிற்கு ஒரு ஓ போடுங்க (ஜெமினி பட பாட்டு இல்லைங்க.......... ஓ போடு ஓ போடு நெஞ்சு துடிக்குது ஜெமினி.........)

ரஸியா..........8வயதிலேயே சமையல் ஆரம்பமா? நான் இன்னமும் சமையல் கத்துக்குட்டி தான்.உங்களுக்கு ஒரு அப்பா எப்படி சப்போட்டா இருந்தாங்களோ அதேபோல் எங்களுக்கு ஒரு சப்போடா அப்பா இருக்கிறார், அவர் தான் எங்கள் முதல் டெஸ்டர் (எனக்கு,எனது அக்கா மற்றும் தங்கைக்கு) அம்மாவெளி ஊர் செல்லும் போது நாங்க தான் சமையல்கட்டை ஆளுவோம் எங்க அப்பா அப்போம் சொல்வார் நீங்க மண்ணை அள்ளி கொண்டு வைத்து சாப்பிட சொன்னாலும் நான் சாப்பிடுவேன் என்று(அதற்கு வேண்டி மண்ணை கொண்டுவைத்ததில்லை)அவர் சொன்னது இப்போதுதான் தெரியுது நாங்க சமைக்கிறதைவிட மண் தேவையில்லை போல...........................
.....

வின்னி என்னாற்று குக்கருக்கு முதலில்.......ஆக மொத்தம் சித்தியே சாதத்தையும் அவங்களே வைத்து விட்டு போய் இருக்கலாம்.அல்லது இந்த பாருமா வின்னி குக்கரில் சாதம் வைத்துள்ளேன் 3 விசில் வந்ததும் அடுப்பை ஆப் செய்து விடு என்று இருக்கலாம். அதை விட்டுட்டு உங்களை நம்பீஈஈஈஈஈ ஆஆஆஆஆஆஆஆஆஆஅ அன்று எல்லோரும் அரை குறை வயிற்று பசியோடு இருந்திருப்பீங்க

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மஹா
மே 21, 2008 - 8:56pm - வழங்கியவர் இலா

என்னை பத்தி உங்களுக்கு தெரியாது.. ஏதாவது இப்படி நடந்தால்.. முதலில் என்னையே நான் ரொம்ப கலாச்சுக்குவேன்... யாருக்கும் சான்ஸ் குடுக்க மாட்டேன்... ஒரு திருத்தம்.. டீ விஷயம் நாங்க கெஸ்டா போன வீட்டில்..
நாங்க எல்லோரும் அனுபவங்கள சொன்னாலும்.. அதுக்கு ஒரு காமென்ட் சொல்லி இருப்பது ரொம்ப நல்லா இருக்கு....

Hope is just the part of the equation

மறக்க முடியாத ஜூஸ்
மே 21, 2008 - 10:19pm - வழங்கியவர் Vijitvm

ஹாய் மஹா என்னோடது சொல்லபோனால் நிற்ய அநுபவம் அதில் சிலது நான் கத்துகொண்டேன்.
என்வீட்டிற்க்கு வந்த் கெஸ்டுக்கு குடிக்க என்ண்டா வேண்டும் என்று ஹஸ் கேட்டார். அதற்க்கு அவர்கள் சொன்னார்கள் நல்ல ஜூஸ் குடுடா ஆனால் ஆரஞ்ச் ஜூஸ் வேண்டாம்ட குடிச்சு ரொம்ப போரடிச்சு. நான் நிறய்ய க்ளாஸ் அடுக்கி ட்ரேயில் வைத்து இருந்தேன். அதற்க்கு பக்கத்தில் பெர்ய பௌலில் சமோசாவுக்காக ஒரு இனிப்பு சட்னி வைத்து சாப்பிடுவோம் தெரியுமா அதை எதோ பேசிகொண்டே எல்லா க்ளாஸிலும் கோக் பாட்டில்லில் உள்ள அத்தனை கோக்கையும் அதில் ஊற்றி நிற்ய்ய சர்ர்கரையும் போட்டு எல்லாருக்கும் குடுத்து ஒருத்தருக்கு மட்டும் கோக் கேட்டார் அவருகும் அதில் இதை நான் கொஞ்சம் க்ளாஸில் விட்டு குடுத்தேன். எல்லாரும் கொஞ்சம் கூட வேஸ்ட் பண்னாமல் குடித்துவிட்டு என்னடா ரொம்ப ந்ல்லா இருக்கு இந்த ஜூஸ் என்ன பழம்டா இவ்வள்வு ந்ல்ல இனிப்பா புளிப்பா அப்ப்பாபப் நல்லா இருக்கு என்று.நிறய்ய ஜூஸ் இருக்குட வீட்டில் ,விஜி எதை குடுத்தா என்று அவள்ட்டேயே கேள் என்று சொன்னார்கள். நானும் உடனே ஏங்க நான் எல்ல்லாருக்கும் கோக் தானே குடுத்தேன். என்று. அப்புறம் பார்த்த நான் இனிப்பு சட்னியில் கோக் மிக்ஸ் பண்ணி குடுத்துள்ளேன். எனக்கும் அவங்களுக்கும் சிரிப்பு தாங்க முடியல்ல. இன்றக்கும் சொல்வார்கள் விஜி காக்டெயில் குடுத்தாடா ரொம்ப நன்றாக இருந்தது.

ஹஹஹஹா
மே 21, 2008 - 10:37pm - வழங்கியவர் thalika

ஹஹஹஹா..இப்ப தான் யஹூவில் உள்ள லாஃபிங் அவுட் லவுட்லி எமோடிகான் வேனும்..ரொம்ப பொருத்தமா இருக்கும். எல்லா கதையும் ரொம்ப அருமை..அதிலும் அந்த நன்பரின்"சட்னி நல்லா இருக்கு"அதை பாராட்ட வார்த்தையே இல்ல ..ஹஹஹா
ஹ்ம்ம் எனக்கும் அப்பவும் சரி இப்பவும் சரி சாதம் வச்ச ஓட்டைப் பாத்திரத்தில் அப்படியே கவுக்க தான் தெரியும் வடிக்க...மூடி போட்டு வச்சு வடிக்கிற வேலையெல்லம் நமக்கு தெரியாது..அன்று என் அத்தை வீட்டில் நாங்கள்.
அன்று யாரோ இறந்துவிட என் அத்தைமற்ரதெல்லம் வைத்து விட்டு சாதம் மட்டும் வடிங்கன்னு சொல்லிட்டு போயாச்சு..நானாவது சரி பனிறென்டாவது படிக்கிறேன்..என் கசின் அப்ப ஃபைனல் இயர் படிக்கிஅரா அவளாவது தெரிஞ்சு வச்சிருக்க வேனாம்??..அவளும் எனக்கு தெரியாது வடிக்கன்னு சொல்லிட்டா.
சரி இப்ப என்ன பன்றதுன்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்து அவளும் இன்னொரு கசினும் சேந்து சட்டியை மூடி போட்டு பிடிக்க நான் வேற சட்டியை பிடிக்க அதுக்குள்ள ரெண்டு பேருமா சேந்து சாதத்தை கவுக்கரதா ப்லான்.
எல்லாரும் சுமோ வீராங்கணைகள் மாதிரி ஒரு கால் ஒரு பக்கமும் இன்னொரு கால் இன்னொரு பக்கமுமாக பாலன்ஸ் பன்னி நின்னுட்டு ரெடி 1 2 3..கவுத்தாங்க சட்டியை..நானும் சரியா தான் புடிச்சேன் சட்டியை.
பிறகு அது எப்படின்னே தெரியலங்க எல்லா சாதமும் சட்டிலிருந்து வெளிய வுழுந்து கடக்குது.
சூடு வேற தாங்க முடீல இப்ப என்ன பன்றதுன்னு என் கசின் திரும்ப சட்டியை பாத்திரத்திலிருந்து வெளிய எடுக்க முயர்ச்சிக்க கொஞ்சமா மூடியிருந்த மூடி மொத்தமா தனியா வர இருக்குற கொஞ்சம் சாதமும்"பலீச்"
அவ வுடுவாளா...நாங்க தான் சின்ன புள்ளைகளாச்சே கரண்டீல கோரி உள்ளயே சாதத்தை போட்டுட்டு எல்லாருக்கும் ஒவ்வொரு குழிப்பாத்திரத்தில் கொஞ்ச கொஞ்சமா கஞ்சி சோறை அன்னதானம் பன்னிட்டு ரூல்ஸ் வேற"அத்தை வர்ரதுக்குள்ள மரியாதையா எல்லாரும் சப்பிட்டுட்டு கைய்யை கழுவிடனும்"
ஹ்ம்ம் தலையெழுத்து கரண்டியால் வாரி வாரி சாப்பிட்டு முடித்தோம்...அத்தைக்கு பொட்டக்கண்ணா என்ன ??வந்ததும் கண்டு புடிச்சாச்சு கிச்சன் பூரா அடை அடையா கஞ்சி அங்கங்க.
அப்பரம் அந்த வேகேஷனில் எல்லா அம்மமார்களும் பிள்ளைகளுக்கு சமையல் கத்துக் கொடுக்கனும் என்று குழு முடிவு பன்னினாங்க.

மஹா தலைப்பு
மே 21, 2008 - 10:47pm - வழங்கியவர் thalika

மஹா மேலே பெரிய தலைப்பு இடவெளி இல்லாமல் கொடுத்ததால் தலைப்பு முகப்பில் பாருங்க எப்டி இருக்குன்னு..முகப்பு ஒடஞ்ச மாதிரி

என்னுடைய அனுபவம்....
மே 21, 2008 - 11:54pm - வழங்கியவர் Subha Jayaprakash

திருமணத்திற்கு முன் நான் சமைத்தது கிடையாது..ஆனால் அபுதாபி வந்தபின் நானே தான் சமைத்தேன்.. எந்தஒரு பிரச்சினையும் இல்லை.. அம்மா சமைப்பதை பார்ப்பேன் அவ்வளவு தான்.. இன்று வரை அதுதான் கை கொடுக்குது.. திருமணத்திற்கு முன் மிக்ஸியில் அரைத்து கொடுப்பேன்..கீரை பார்த்து கொடுப்பேன்...நல்லா செய்ரதை சப்பிடுவேன்...நடுவில் கமெண்ட்ஸ் வேற இப்போ நமக்கு கமெண்ட்ஸ் கிடைக்கிறப்போ!! கஷ்டமா இருக்கு...
அவ்ளோ நேரம் சமைத்தபின் நல்லா இல்லைனா யாரும் வருத்த படத்தானே செய்வோம்....

என்னுடைய அனுபவம்....

அடைக்கு அரைத்து வைத்து இருந்தேன்..
வீட்டுக்கு ஃப்ரண்ட்ஸ் வருவதாக இருந்ததும் தேங்காய் சட்னி, ஊறுகாய்,சர்க்கரை, என்று தொட்டுக்கொள்ள எல்லாம் ரெடி.
யாராவது வர்ராங்கன்னா நல்லா இருக்கனும்னு நினைத்து கொஞ்சம் கூட கேர் எடுத்து சொதப்புவோம்...
அது போல ஒரு கரண்டி மாவுக்கு பதில் 2 கரண்டி மாவு ஊத்தி மந்தமாக அடை வார்த்து 3, 4 என வைத்து விட்டேன் .. அவருக்கு வயது 50 க்கு மேல்.... சாப்பிட்டும் போய்விட்டார்கள்... நல்லா இருக்கு வீட்டு சாப்பாடே தனிதான் என்று....
மறுபடி ஒரு மாதமிருக்கும் திரும்ப திடீரென்று வீட்டுக்கு வந்தார்கள்... அப்போவும் அடை தான் வீட்டில் (அதே மாவு இல்லை வேற மாவு)... நான் அடை என்றதும் அரண்டு விட்டார்...
வேண்டாம்மா சப்பிட்டு வந்துட்டேன்னு வேற சொல்லி டென்ஷனாயிட்டாரு.... (கண்ணுல தண்ணி வேற (ஆனந்த கண்ணீர் தான்))
அப்பறம் என்னன்னு விசாரிக்க ரொம்ப திக்கா இருந்தது சாப்பிட முடியலைன்னு.... அப்பறம் எப்பவும் மெல்லியதாக சுடுவது போல் சுட்டு கொடுத்ததும் 5, 6 என சாப்பிட்டு இன்று நிஜமாவே ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினார்...

இப்பவும் அடை சுட்டால் இவர் 3 கரண்டி ஊத்தி தாராளமா சுடு.. என்பார்..

வந்து விட்டார் சாலமன் பாப்பையா
மே 22, 2008 - 1:38am - வழங்கியவர் MarliyaNoohu

ஹா ஹா ஆமா ரஜினி டேஸ்ட் சரி இல்லைனா நோ சாப்பாடு..இப்பதான் தெஇர்யுது இப்படியாலாம் அனியாயம் பண்ணி இருக்கோமேன்னு..தலைவலியும்,காய்
சலும் நமக்கு வந்தாதானே தெரியும்...

ஆஹா அதிரா ஜஸ்ட் மிஸ் நீங்க அதை குடித்து இருந்தால் நான் எவ்லோ சந்தோச பட்டு இருப்பேனேமா ;-D

ஓஹ் ரஸியா கிரேட்..நாங்கலம்தான் மக்கா இருந்து இருக்கோம்.சுமா கம்பியூட்டர்,படிப்பு,பிரண்ஸ்,ல
ூட்டின்னு...

வின்னி வாங்க வந்து சேர்ந்துகங்கப்பா..ஹா ஹா..ஆனா ஒன்னு அன்பு தொல்லைலாம் தர கூடாது இருப்பா சமைத்து தாரேன்னு...

இப்போதய்க்கும் இவ்லோதான் அக்கா வந்தாச்சு அப்புறமா வாரேன் பிரி யானதும்..அப்புறமாமா மற்றவர்களின் படைப்புகளை பார்கோனுமாக்கும்
பைப்பா..அனேகமா நைட் வருவேன் தூங்கும் முன்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அஞ்சலி/இலா/விஜி/தளிகா/சுபா
மே 22, 2008 - 4:55am - வழங்கியவர் Mahalakshmiprag...

அஞ்சலி/இலா/விஜி/தளிகா/சுபா

அஞ்சலி கருப்பட்டிகாப்பிடீ நன்றாகதான் இருக்கும் போல் இருக்கே,வீட்டுக்கு வந்தவர்கள் எனக்கு காப்பி, எனக்கு டீ என்று கேட்டால் இதை செய்து கொடுக்கலாம் போல் இருக்கே.ஒரு கல்லில் இரு மாங்காய் போல் ஒரு தண்ணீரில் காப்பி,டீ குறிப்பு தரவும்

சாரி இலா எல்லாருக்கும் டங் சிலிப் ஆகும் ஆனால் எனக்கு இங்கு கொஞ்சம் கை சிலிப் ஆகி உப்பு டீ நீங்க போட்டுவிட்டதாக நினைத்துவிட்டேன்.

ஆஹா விஜி கிரேட் எஸ்கேப், உங்கள் விருந்தினர் அனைவருக்கும் நல்ல சுவையை தேடி வந்து இருக்கிறார்கள், நல்ல இனிப்பா,புளிப்பா ஜீஸை குடித்ததும் பிடித்து விட்டது அதனால் நீங்க கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டீங்க

தளிகா இதே போல நானும் சோற்று பானையை வடிக்கிறேன் பேர்வழியாக 2 கை கட்டை விரல்களிலும் வீர தழுப்பு எல்லாம் வாங்கியுள்ளேன்.இப்பொழுதும் எங்கள் வீட்டில் சோற்று பானையை வடிக்க கூப்பிட்டால் எடுப்பேன் ஓட்டம்.

அது சரி சுபா அவர் முதலில் உங்கள் மனம் வேதனை அடைய வேண்டாம் என்று சொல்லாமலே போனவரை மீண்டும் அடை என்று சொல்லி அவரை டென்ஷனாக்கி ஆனந்த கண்ணீரைவர வைத்து இருக்கிறீங்க. அதனால் தான் உண்மை எல்லாம் வெளி வந்து இருக்கிறது.ஆனால் அவர் இப்பொழுது 3 கரண்டி ஊத்தி தாராளமா சுடு என்றார் என்றால் அவருக்கு உங்கள் அடை மிகவும் பிடித்துவிட்டது போல

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

நான் போட்ட காபி
மே 22, 2008 - 5:30am - வழங்கியவர் Renuka

எல்லாத்துடைய பிளாஷ் பேக்கும் சிரிப்பு தான் வருது.நம்மளுடைய ஆரம்ப கால சமையல் எவவளவு அழகா இருக்கு.இதோ என்னுடைய காபி.

என் கணவர் சொந்தம் தான்.அவரும் திருச்சியில் படித்து கொண்டிருந்தார்.நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் என்று நினைக்கிறேன்.அப்பொழுது என் தாத்தாவிற்க்கு உடல் சரியில்லை என்று மருத்துவ மனையில் இருந்தார்.என் குடும்பம் கூட்டு குடும்பம்.அம்மா,பெரிம்மா எல்லாரும் ஹாஸ்பிட்டலில் இருந்தார்கள்.என் பெரியம்மா போகும் போது 5 மணிக்கு மாமா வருவாங்க.காபி கொடுத்து.துணி எடுத்து வைத்திருக்கேன் ஹாஸ்பிட்டலுக்கு கொடுத்து விடு என்று சொல்லிவிட்டு போயிட்டாங்க.நானும் இவர் வந்ததும் மாமா காபி சாப்பிடுங்க என்று சூப்பரா காபி போட்டு கொடுத்து வழி அனுப்பி வைத்தேன்.மறுநாள் பாலை காய்ச்சி விட்டு காபி போட்டேன். என் பெரிம்மா காபிக்கு அப்பதான் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு சென்றார்.2 நிமிடத்தில் காபி போட்டுவிட்டேன் என்றதும் அவர்களுக்கு சந்தேகம் எப்படி காப்பி போட்ட என்ன்றார்கள்.சூடானா பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் சத்தம் கேட்கும் அல்லவா...நான் அப்படி சத்தம் கேட்டால் கொதிப்பது என்று நினைத்துவிட்டேன்.உடனே பாலை ஊற்றி சர்க்கரை கலந்து காப்பி என்று கொடுத்து விட்டேன்.காப்பிதூள் போட்டு கொதிக்க வைக்கவேயில்லை.இது தான் காபியா என்று எல்லோரும் சிரித்து விட்டார்கள்.இவரிடமும் நேற்று காபி நல்லா இருந்ததா என்று கேட்டார்கள்.அவரோ காபி நல்லாதான் இருந்தது ஆனா சூடுதான் இல்லை ரெம்ப ஆத்திடுச்சு போல என்று பாவமாக சொன்னார்.

நான் முதன் முதலில் செய்த சமையல் காபி தான்.அது யாருக்கு போட்டு கொடுத்தேனோ அவரே என் சமையலை ஆயுசுக்கும் சாப்பிடும்படி ஆயிற்று.இன்றும் என்னை அனைவரும் கிண்டல் செய்வார்கள்.சிவாவுக்கு எப்படி காபி போட்டு கொடுத்த இன்னும் அப்படிதான் போடுவியா என்று..

இது போல் நிறைய கூத்து இருக்கு.ஒவ்வொன்றாக சொல்கிறேன்...

ஸூப்பர் இட்லி
மே 22, 2008 - 7:35am - வழங்கியவர் Vijitvm

எனக்கு இட்லி என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை என் ஸிஸ் கல்யானதிற்காக எல்லா சொந்தகாரங்களும் வீட்டிற்க்கு வந்திருந்த டைம். அப்ப பார்த்து என் அம்மா ரொம்ப பிஸியாயிட்டாங்க. என்னிடம் சொன்னாங்க கொஞ்சம் இட்லி மாவை ஊத்தி குக்கரில் வைச்சுடு என்று. நானும் நல்ல 16 இட்லி மாவு விட்டு குக்கரில் வைத்து வெயிட்டும் போட்டு விட்டேன். நார்மலா என் அம்மா எப்பவோ என் ஸிஸ்க்கு சொன்ன ஞாபகம் 3 விசில் வந்த பிறகு ஆப் பண்ன வேண்டும் என்று. நானும் அதை மாதிரி 3 + ஆப் பன்னின பிறகும் 1 விசில் வந்து அதை அப்பிடியே அடுப்பை அணத்து விட்டேன். அதே மாதிரி அடுத்த குக்கரிலும் மாவு விட்டு அதிலும் 3 விசில் வந்துவிட்டது. என் அம்ம வேலை எல்லாம் முடிந்த பிறகு எல்லாரயும் சாப்பிட அழைத்தார்கள். என் கஸின் எல்லாருக்கும் முதலில் ஸ்விட் வைத்து விட்டு ப்ளேட்டில் அடுத்தாக சட்ணியும் போட்டாள். பின் என் கஸின் போட்ய் குக்க்ரை ஒப்பன் செய்து இட்லி எடுத்தாள் எடுத்தாள் எடுத்தாள் எடுத்தாள் இன்றைக்கும் இட்லி என்றால் என்னிடம் கேட்பாள் குக்கரை தான் யூஸ் செய்யறயா என்று. நிங்களே நிணத்து பாருங்க என்னோட இட்லி எப்பிடி வந்து இருக்கும் என்று.அப்புறம் என்னிடம் சொன்னாங்க நான் உங்கிட்டே சொன்னது குக்கரில் வை என்று நான் எப்ப சொன்னேன் வெயிட் போடு என்று. எனக்கும் இன்றைக்கும் நிணத்தால் சிரிப்பா வரும்.
இதில் என்ன விஷேசம் என்றால் நான் இப்பவும் இட்லி குக்க்ரில் தான் செய்கிறேன். நான் வெயிட் போடமாட்டென். 10 நிமிடத்தில் நல்ல சாப்ட் இட்லி.
என் கஸின் இப்பவும் என் ஹஸிடம் சொல்வா பார்த்து விஜியிடம் மட்டும் குக்கரில் இட்லி செய் என்று சொல்லாதிங்க. என்க்கு ஒருத்டவை ஒரு இட்லி குக்கர் வாங்கி குடுத்தா. மறக்க முடியல்ல.

சமையல் திலகம்
மே 22, 2008 - 9:50am - வழங்கியவர் mali

ஒவ்வொருத்தர் அனுபவங்களை படிச்சா சிரிப்பு சிரிப்பா வருது.இலா அதுக்கப்புறம் அந்த ஃப்ரென்ட் உங்க வீட்டுக்கு வந்தாங்களா? விஜி உங்க காக்டெய்ல் கோக் ப்ரமாதம்.கல்யாண்த்திற்கு முன் சமயலறை எங்க இருக்குன்னு கூட தெரியாத வின்னி அக்கா இப்ப அறுசுவைய பாத்து எக்ஸ்பர்ட் .எங்க அம்மாவிற்கே இப்ப சமயல் குறிப்பு கத்து குடுப்பான்னா பாத்துக்கோங்க.

என்னோட அனுபவம்
மே 22, 2008 - 10:17am - வழங்கியவர் pradeebala

அப்பப்பா எல்லோரோட சமையல் அனுபவங்களையும் படித்து சிரித்து வயிறு வலிக்கிறது.எங்க வீட்ல ரெண்டு அக்கா அப்பறம் தான் நான் அதனால அவங்க கல்யாணம் ஆகி போகிற வரை நான் அவ்வளவாக சமையல் செய்ததில்லை ஆனால் ஒரளவு தெரியும்.எங்க வீட்ல அப்பாவும்,அம்மாவும் எங்காவது வெளியில் போனால் நான்,எங்க ரெண்டு அக்கா மற்றும் அண்ணா மூவரும் சேர்ந்து ஏதாவது புத்தகத்தில் படித்ததை செய்து சாப்பிட்டு அவர்களுக்கும் வைப்போம்.அதுபோல தான் ஒருமுறை கேக் செய்தோம் அதில் முட்டை சேர்த்து நன்றாகவே வந்திருந்தது நாங்கள் சாப்பிட்டு அப்பா,அம்மாவுக்கும் கொஞ்சம் வைத்திருந்தோம் அவர்களும் சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்கு என்ன சேர்த்து செய்தீர்கள் என்று கேட்டார்கள் அக்காவும் மைதா,முட்டை,சர்க்கரை எல்லாம் சேர்த்து செய்தோம் என்றாள்.அம்மா உடனே அய்யய்யோ ஒரு மாசமா இருந்த விரதம் எல்லாம் வேஸ்டா போயிடுச்சே என்று சொல்ல எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியல பின்ன வைகாசி மாசம் முழுவதும் எங்க வீட்ல யாரும் முட்டை நான்வெஸ் எதுவுமே சாப்பிட மாட்டோம் அன்னைக்கு தான் அந்தமாசத்தின் கடைசி நாள்.அப்பறம் ஒரு முறை என் சித்தி பெண் ரசம் வைத்தாள்.சாப்பிட்டால் புளிப்பு சுவையே இல்ல இது ரசம் மாதிரியே இல்லையே என்னன்ன போட்ட என்று கேட்க அவ சொன்ன பிரகு தான் தெரிந்தது அவ புளியே போடல ரசத்தில் என்று அப்பறம் என்ன ஒரே அசடு வழிந்தாள் என்று சொல்லவும் வேண்டுமா.நான் ஒரு முறை புத்தகத்தில் பார்த்து முத்துலாடு செய்தேன் ஜவ்வரிசி சேர்த்து செய்தபிறகு தட்டில் கொட்டி வில்லை போட சொல்லி இருந்தார்கள் டேஸ்ட் பார்த்தேன் நல்லா தான் இருந்தது அம்மா சொன்னார்கள் கொஞ்ச நேரம் விடு ஆறட்டும் என்று.நானும் கொஞ்ச நேரம் கழித்து கத்தி எடுத்து வில்லை போட்டால் கத்தி பதியவே இல்ல ஜவ்வரிசி தட்டை விட்டு வரவேஇல்ல.நான் விடுவேனா முதன் முதலில் நான் செய்த ரெசிபியாச்சே ஒவ்வொரு ஜவ்வரிசியா எடுத்து சாப்பிட்டேன்.இன்னைக்கும் எங்க வீட்ல சொல்லி கிண்டல் பன்னுவார்கள்
அன்புடன் தீபா

43 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »