topic_image


மனதுக்கு மிகவும் வேதனையான செய்தி.

இன்று நம் தோழி மர்ழியாவின் மாமி இறந்துவிட்டார்கள்,இந்த செய்தியை நம் அனைவருக்கும் தெரியப்படுத்தும் படி மர்ழி சொன்னார்கள்.

அவர்களுக்கு இறைவன்,மேலான சுவர்க்கபதவியை தருவான்.இன்ஷால்லாஹ்....


ஒரு இறப்பு செய்தி.
ஜூன் 21, 2008 - 12:00am - வழங்கியவர் kr

மனதுக்கு மிகவும் வேதனையான செய்தி.

நம் தோழி மர்ழியாவின் மாமி இறந்துவிட்டார்கள்,இந்த செய்தியை நம் அனைவருக்கும் தெரியப்படுத்தும் படி மர்ழி சொன்னார்கள்.

அவர்களுக்கு இறைவன்,மேலான சுவர்க்கபதவியை தருவான்.இன்ஷால்லாஹ்....

எல்லாம் வல்ல இறைவனை ப்ரர்ர்த்திப்போம்.
ஜூன் 21, 2008 - 12:15am - வழங்கியவர் Shardha

இந்த துக்கத்திலிருந்து மர்லியாவும் அவர் குடும்பத்தாரும் சீக்கிரம் ஆறுதல் அடைய , அவர் மாமியின் ஆத்மா சாந்தி அடையவும் எல்லாம் வல்ல இறைவனை ப்ரர்ர்த்திப்போம்.

தூவா கேட்போம்
ஜூன் 21, 2008 - 12:24am - வழங்கியவர் Jaleela Banu

மர்லியா

மர்லியா உங்க மாமி நிவுஸ் கேள்வி பட்டேன்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைகி ராஜிவூன்//

கவலை படாதீர்கள்.
ரொமப்வே அவர்கள் அவஸ்தை பட்டிருப்பார்கள்.
அவர்களுக்கு அல்லா சொர்க்க பதவியை கொடுக்க தூவா கேட்போம்.

மெயில் போட்டதும் என்னால் தாங்க முடியல,
என்னால் அங்கு ப்திவு போட கூட
முடியல
ஜலீலா

அமைதி,மர்லியா,அமைதி.......
ஜூன் 21, 2008 - 12:24am - வழங்கியவர் vimalakandaswamy

மர்லியா,உங்கள்மாமியின் ஆத்மாசாந்தி அடைய நாங்கள் அனைவரும் மனதார ப்ரார்த்திக்கிறோம்.விரைவில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அமைதியடையவும் இறைவனைவேண்டுகிறோம்.

அடடா
ஜூன் 21, 2008 - 12:33am - வழங்கியவர் T S JAYANTHI

நிஜமாகவா? எவ்வளவு நம்பிக்கையுடன் மர்ழியா அவர் பிழைத்துவிடுவார் என்று சொன்னார். எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை விஷயம் தெரிந்து டாக்டர்கள் இவர்களிடம் சொல்லாமல் மறைத்திருப்பார்களோ.
என் அக்காள் கணவர் ஜூன் 2007 16 அன்று இரவு 845க்கு இறந்தார். 830 மணிக்குக் கூட ஒன்றும் பிரச்சனை இல்லை. நன்றாக இருக்கிறார் என்று சொன்னார்கள் டாக்டர்கள். நமக்கு ஒன்றும் புரிவதில்லை.
இறப்பு என்பது ஈடு கட்ட முடியாத இழப்பு. மர்ழியா உங்கள் மாமியின் ஆத்மா சாந்தி அடையவும், அவரின் இழப்பைத் தாங்கும் சக்தியை உங்களுக்கு கொடுக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இதே நேரத்தில் உங்கள் குடும்பத்தையும், உங்கள் மகளையும் நினைத்து உங்கள் ஆரோக்கியத்தையும் மனதில் கொள்ளுங்கள் என்று உரிமையுடன் சொல்லுகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

வறுத்தமாக உள்ளது
ஜூன் 21, 2008 - 12:41am - வழங்கியவர் sasikala murugesan

மர்ழியா அவர்களின் மாமியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திப்போம்.

என் ஆழ்ந்த அனுதாபங்கள்
ஜூன் 21, 2008 - 12:46am - வழங்கியவர் aniaksh

மர்ழி மற்றும் அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். நல்ல மனோதிடத்துடன் இந்த துக்கத்தில் இருந்து மீளவும், அவரது மாமியின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Rajini

மனத்திற்கு கஷ்டமாக உள்ளது
ஜூன் 21, 2008 - 1:40am - வழங்கியவர் Mahalakshmiprag...

மனத்திற்கு கஷ்டமாக உள்ளது

மர்ழி,
உங்கள் நம்பிக்கை நாங்களும் நம்பினோம்,ஆனால் இறைவன் அவர்களை அழைத்துவிட்டான், மனத்திற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது இந்த செய்தியை பார்த்தப்பின்பு, உங்கள் மாமியின் ஆத்மா சாந்திஅடைய நான் ஆண்டவனை கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்கும் நல்ல மனதைரியத்தை ஆண்டவன் அருளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மனதை கஷ்டப்பட வைக்கிறது
ஜூன் 21, 2008 - 6:28am - வழங்கியவர் harigayathri

மர்ழி மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. மாமி எதுவும் பிரச்சனை இல்லை என்று சொன்னதும் நீங்கள் சந்தோஷபட்டீர்களோ அதைப் போல நாங்களும் நினைத்தோம். ஆனால் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை. மர்ழி கடைசி கொஞ்ச நாட்களாவது உங்க கூட அவர்கள் இருந்தார்கள், அவர்களுக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பாவ்து கிடைச்சதே. அவர்கள் உங்க கூட இருந்த தருணங்களை நினைத்து மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்க மனம் தளரக் கூடாது. தைரியமாக இருக்கவும். காலபோக்கில் எல்லாம் சரியாகும் நாள் வரும். உங்கள் ஆரோக்கியமும் ரொம்ப முக்கியம் மர்ழி, மரியத்தை பார்த்துக் கொள்ளவும்.

Sorry
ஜூன் 21, 2008 - 8:13am - வழங்கியவர் savithaprabu

மர்லியா மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.மாமி ஆன்மாவால் உங்களுடனெ இருக்கிறார்.கவலை படாதீங்க.

திடீரென ஒரு செய்தி,
ஜூன் 21, 2008 - 10:11am - வழங்கியவர் அதிரா

திடீரென ஒரு செய்தி,
இப்படிக் கேட்டதும், மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. மர்ழியா அதிகம் நம்பித்தானே இருந்தார். இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி நடந்தது.

லிவருக்கு கான்சர் வந்துவிட்டால் அதன் காலம் அதிக பட்சம் 6 மாதங்கள்தான், நான் இதை முன்பு சொல்ல விரும்பவில்லை, ஏதோ அங்கே டாக்டர்கள் சொல்வார்கள் தானே என நினைத்தேன், மர்ழியா அறிந்தால் தாங்க மாட்டார் அறியாமல் இருக்கட்டும் என்று இருந்தேன், ஆனால் இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதே, உள்ளுக்குள் பரவி விட்டது போலும், உலகில் என்னென்னவோ எல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் ஆனால் இன்னும் சில குறிப்பிட்ட வருத்தங்களுக்கு மட்டும் தீர்வே இல்லாமல் இருக்கிறது.

என்ன செய்வது அவர்கள் குடும்பம் ஆறுதலடைய பிரார்த்திக்க மட்டும்தான் எம்மால் முடியும். மர்ழியா , நீங்களும் சீக்கிரம் தேறிவர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

துக்கம்
ஜூன் 21, 2008 - 10:25am - வழங்கியவர் pradeebala

மர்ழியா உங்க மாமி இறந்த செய்தி படித்தவுடனேயே ரொம்ப கஷ்டமா இருந்தது.நீங்க இந்த துன்பத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வர ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
அன்புடன் பிரதீபா

இறங்கல் செய்தி
ஜூன் 21, 2008 - 11:43am - வழங்கியவர் Manohari

மீளாத் துயரில் இருக்கும் அன்பு சகோதரி மர்ழியா அவர்களுக்கு உங்க மாமியின் மரணச் செய்தி மிகுந்த வருத்தத்தை தந்தது, அந்த அன்பு உள்ளம் இந்த உலகத்தில் உங்களை விட்டு பிரிந்தாலும் உள்ளத்தளவில் என்றுமே பிரியாமல் உங்களுடனே வாழ்ந்துக் கொண்டுதான் இருப்பார்.ஆகவே அந்த ஆறுதலில் மனதை தேற்றிக்கொள்ளுங்கள் அதற்கான மன வலிமையை எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வழங்குவார் கவலைபட வேண்டாம்.உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இறங்கல் செய்தி
ஜூன் 21, 2008 - 12:41pm - வழங்கியவர் arunkavi

மர்ழியா உங்க மாமி இறந்த செய்தி கேட்டு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.உங்களுக்கு நல்ல மனோபலத்தையும்,தைரியத்தையும் தர நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

மர்ழியாநூஹு
ஜூன் 21, 2008 - 1:04pm - வழங்கியவர் மாலினி

மர்ழியாநூஹு
உங்களுக்கும்,மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்,மனத்திற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது இந்த செய்தியை பார்த்தப்பின்பு, உங்கள் மாமியின் ஆத்மா சாந்திஅடைய நான் ஆண்டவனை கேட்டுக் கொள்கிறேன்.

மர்ழியா அக்கா,
ஜூன் 21, 2008 - 1:15pm - வழங்கியவர் Nirupama

மர்ழியா அக்கா,

உங்கள் மாமி நற்சுகம் அடைந்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் இருந்தேன்.இந்த செய்தியை படித்தவுடன் மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது.கவலைப்படாதீங்க அக்கா, உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, உங்களுக்கு என்ன வார்த்தை சொல்லி ஆறுதல்படுத்துவது என்றே தெரியவில்லை.உங்கள் மாமியின் ஆத்மா சாந்தி அடையவும்,இந்த கஷ்டத்தை தாங்கக் கூடிய மனவலிமையை உங்களுக்கு இறைவன் தந்தருளவும் நான் பிரார்த்திக்கிறேன்.

நிருபமா

மர்ழியா
ஜூன் 21, 2008 - 1:42pm - வழங்கியவர் gk

மர்ழியா
உங்கள் மாமியின் ஆத்மா சாந்தியடையவும் அவர்கள் இழப்பிலிருந்து மீண்டு வரும் சக்தியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்கவும் இறைவனை வேண்டுகிறேன்
கோதை

துக்க செய்தி கேட்டு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது
ஜூன் 21, 2008 - 5:25pm - வழங்கியவர் anjali73

மர்ழியா உங்கள் மாமியின் இறங்கல் செய்தி கேட்டு

மிகவும் கஷ்டமாக உள்ளது .
இந்த செய்தியை பார்த்தப்பின்பு, உங்கள் மாமியின் ஆத்மா சாந்திஅடைய நான் ஆண்டவனை கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த கஷ்டத்தை தாங்கக் கூடிய மனவலிமையை உங்களுக்கு இறைவன் தந்தருளவும் நான் பிரார்த்திக்கிறேன்.

மர்ழியா
ஜூன் 21, 2008 - 5:46pm - வழங்கியவர் Vijitvm

என்னப்பா ரொம்ப மனதுக்கு வேதனயா இருக்கு, இது இப்படி நட்ந்துச்சு. நல்லா தானே இருக்காங்க என்று எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். மார்ழி எனக்கு உங்களை நினச்சா தான் கஷ்டமா இருக்கு. பாவம் அவங்க என்ன வேதனை அனுபவித்தாங்களோ ஒன்னும் தெரியல்ல. உங்க மாமியின் ஆதமா சாந்தியடையா எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். மார்ழியா நிங்களும் உங்க குழந்தைக்காகவது மனதை நல்ல் தைரியமா வைத்துகுங்க. அவங்களுக்கா நம்ம எல்லாரும் ப்ராத்தனை செய்வோம். மர்ழியா உங்களுக்கு எப்பிடி அறுதல் சொல்வது தெரியல்லை.

ஆழ்ந்த அனுதாபங்கள்
ஜூன் 21, 2008 - 7:10pm - வழங்கியவர் Nila2006

மர்ழியா,
உங்களுக்கும், மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் மாமியின் ஆத்மா சாந்திஅடைய நாம் பிரார்த்திக்கின்றோம்.
-நர்மதா.

அனுதாபங்கள்
ஜூன் 21, 2008 - 7:41pm - வழங்கியவர் abinavi

மர்ழியா!
ஒருவரை இழப்பதைப் போல வேறோர் துன்பம் இந்த உலகில் இல்லை. எனக்கு என்னோட அப்பா இறந்தப்போ எல்லாம் முடிந்து விட்ட மாதிரி இருந்திச்சு. ஆனா அது தான் இயற்கை என மனசை தேற்றினேன். உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் மாமியின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.
அபி

அன்பு மர்லி!!!
ஜூன் 21, 2008 - 11:03pm - வழங்கியவர் இலா

உங்க மாமியின் நல்ல குணங்களை நினத்துக்கொள்ளுங்க... அவங்க எப்போதும் மானசீகமா உங்களுடன் இருப்பாங்க. கவலை படாதீங்க. உங்களுக்கு மன நிம்மதியை தர நான் ப்ரே செய்யறேன்...

I pray that you and your family gets the strength to deal in this time of need. Please take care of your health and your family.

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

அன்புள்ள மர்ழியா
ஜூன் 21, 2008 - 11:31pm - வழங்கியவர் seyedkatheeja

எப்படி இருக்கே. மாமி நம்மை விட்டு போனது மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என் தாத்தா என்னை விட்டு போன துக்கத்துல இருந்து இப்ப தான் மீண்டு வந்தேன் அதற்க்குள் மாமியின் மரணம் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நான் ஊரில் இருந்தால் அவங்களை பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்து இருக்கும் அதுவும் எனக்கு கிடைக்கலை என்பது தான் மிகவும் கஷ்டமாக இருக்கு. நீ எதுவும் பயப்படத்தேவை இல்லை நல்லா இருக்காங்கன்னு சொன்னது கேட்டு சந்தோஷமாக இருந்தது அதற்க்குள் இப்படி ஒரு செய்தி என் கணவர் எனக்கு நேற்று தான் சொன்னாங்க. அதுவே என்னால் தாங்க முடியலை. நீ என்னிடம் சொல்லாமல் இருந்தது கூட நான் தனியா இருக்கேன் கவலைபடுவேன் என்கிற எண்ணத்துல தான் என்றாலும் எனக்கு 3 நாள் கழித்து சொன்னது மிகவும் கஷ்டமாக இருக்கு. நாம அவங்களுக்காக துஆ செய்வோம். அல்லாஹ் சுவன பதவியை கொடுப்பான் ஆமீன். தாத்தா இறந்தப்ப நான் எப்படி இருந்தேன்னு உனக்கு தெரியும் தானே நீ என்னை போல ஆகிடதேப்பா ஊரில் அம்மா,பாட்டி, நீ எல்லாரும் எனக்கு ஆறுதல் சொல்ல இருந்தும் கூட நான் தைரியமாக இல்லை. அதனால் கடைசில எனக்கு உடம்பு சரியில்லாமல் டாக்டரிடம் அலைந்தது தான் மிச்சம். என் பையனை கூட என்னால் ஒழுங்கா கவனிக்க இயலாமல் போய்விட்டது.ப்ளீஸ் நீ மரியத்தை கவனிக்கவாவது ஒழுங்காக மனதை திடப்படுத்தி தைரியமாக இரு. நீ வேற சென்னைல தனியா இருக்கே உனக்கு ஒன்னுன்னா எனக்கு கஷ்டமாக இருக்கும் தயவு செய்து ஒழுங்கா இருப்பா. நீ ஆன்லைனில் வந்தால் மற்றவை பேசலாம்.

அன்புடன் கதீஜா.

மர்ழியா
ஜூன் 22, 2008 - 3:15am - வழங்கியவர் ramani-ka

மர்ழியா அவர்களின் மாமியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ramani

டியர்
ஜூன் 22, 2008 - 3:50am - வழங்கியவர் vijaya51

டியர் மாழியா.
எனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துகொள்கிரேன்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
ஜூன் 22, 2008 - 4:15am - வழங்கியவர் shadiqah

அல்லாஹு அக்பர் அன்பு மர்ழி,அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
உங்கள் மாமி வபாத் ஆன செய்தி இப்பொழுதான் அறிந்தேன்.இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிஊன்.
குல்லு நபுஸின் ஸைகதுல் மவுத்.ஒவ்வொரு உயிரும் மரணத்தை அனுபவித்தே தீரும்.
அவர்கள் மக்பிரத்துக்காக வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதுடன். மறுமையில் ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் அழகிய சுவர்க்கம் கிடைக்கவும்,வருத்ததில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் ஸபர் எனும் அழகிய பொறுமை கிடைக்கவும் துஆ செய்கிறேன்.
ஸாதிகா

மர்ழியா
ஜூன் 22, 2008 - 4:19am - வழங்கியவர் thalika

மர்ழியா இப்போ உனக்காக எத்தனை பேர் வருத்தம் தெரிவித்து ப்ராத்திக்கிறார்கள் பார்த்தாயா.என்னாலும் அது தான் செய்ய முடியும்..மனது கொஞ்சம் அமைதியானதும் பழையது போல வா.

அன்புள்ள
ஜூன் 22, 2008 - 12:23pm - வழங்கியவர் MarliyaNoohu

அன்புள்ள கே.ஆர்,மானசா,சார்தா,ஜலீலாக்கா,
மனோகிரி மேம்,விமலா,ஜெ.மாமி,சசிகலா,ரஜின
ி,மஹா,ஜெயந்தி,சவிதா,அதிரா,பிரத
ீபா,அனு,மாலி,நிருபமா,கோதை,அஞ்ச
லி,விஜி,நர்மதா,இலா,கதீஜா,ரமனி,
விஜயா,சாதிகா ராத்தா,தளி அனைவரின் பதிவுக்கும் நன்றி எனக்கு என்ன சொல்லன்னு தெரியல இது எனக்கு சரியான அடி..நினைத்து கூஈட பார்கல மாமியை சும்மா பார்கலாம்னு அவங்களுக்கு சாமான்கள் வாங்கிட்டு ஊர் போனேன் அங்கு போனா என் மாமியின் உடல்தான் இருக்கு உயிர் இல்லை..அல்லாஹ் மறதி என்னும் அற்புதமான மருந்தை தந்து இருக்கான் அதுதான் எனக்கு ஓரளவு மறக்க வைத்து இருக்கு..நம்ம தளி ஆரம்பித்த மறையாத உயிகள் க்கு எனக்கும் அனுப்ப ஒரு பதிவு இருந்தது..ஆனால் நேரம்மின்மையால் அனுப்ப முடியல ஆனால் என் மாமி உடநிலை சரி இல்லைனதும் அந்த பதிவு பக்கமே தலை காட்ட படிக்க கூட பயம் என் மாமியை போடும் நிலையாகிடுமோன்னு..அதனாலயே பதிவுகள் இருந்தாலும் படிக்காமல் விட்டுட்டே இருந்தேன் இப்ப அதுல் என் மாமியை சேர்க்கும் நிலை!எல்லாம் இறைவன் செயல் இந்த உலகவாழ்கையே அல்பம் போல இருக்கு அனைவருக்கும் உண்மையா நடந்து,நல்ல காரியங்களை செய்து,பிரே பண்னிட்டு இருந்தாலே போதும் மரணம் எப்ப வரும்னே தெரியாது அதிரா சொன்னது போல என் மாமி இன்னும் அதிக வேதனை பட கூடாதுன்னுதான் அல்லாஹ் அவன் பக்கம் எடுத்துட்டான்..இறைவன் அறியாததை நாம் அறிய மாட்டோம்..யாருமே எதிர் பார்கல எவ்வலவோ டிரீட்மெண்ட் எல்லாம் வேஸ்ட்..இறைவனுக்கு அஞ்சி சபூர் செய்து கொண்டேன்..இன்னும் அப்பப்பா நியாபகம் வருது..இப்ப கூட என்னுடன் பேசுறாபல இப்படிலாம் நியாபகம் வருது..அவங்க என்னிடம்தான் அதிகம் இருப்பாங்க திடீர்னு சொந்தத்தை தேடி ஊர் போவாங்க ரிட்டன் வந்துடுவாங்க..அவங்க கட்டில் எல்லாம் நியாபகத்தை அதிகமா தூண்டுது ஓரளவு நல்லா இருக்கேன் திடீர்ன்னு அழுகை வருது இறந்துட்டாங்கன்னு நம்ம முடியல இப்படிலாம் மனசு குழம்புது..நாளடைவில் சரியாகிடுவேன்..கதீஜா வேனும்னு மறைக்கல எல்லாம் உன் நன்மைக்குதான் அதோட அந்த சில நாட்கள் நான் எப்படிலாமோ ஆகிட்டேன்,எல்லோரும் சாமாதனம் செய்தும் மீளல அவ்வலவு அவஸ்தை பட்டேன் அதை சொல்ல கூட முடியாது நீ அரிந்து இருப்பாய்!அப்புறம் ஓரளவு சரியானதும் உன் வீட்டுக்காவது சொல்லலாமான்னு தோனியது அப்படி சொன்னா நீ என்னவாவீயோன்னு பயம் அதனால்தான் சிறிது நாள் போகட்டுனு விட்டுட்டேன் அப்புறமா சொன்னேன் ஆனால் அதுக்கு முன் நீ தெரிஞ்சு கொண்டாய் சபூர் செய்..என் மனதளவில் அவங்க இப்ப ஊரில் இருக்காங்க அப்படிதான் என் மனசுக்கு அடிக்கடி தோனுது..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அஸ்ஸாலாமு அலைக்கும் மர்ழியா
ஜூன் 23, 2008 - 1:47am - வழங்கியவர் rasia

உங்கள் மாமியின் இறப்பு செய்தி எனக்கு அதிர்ச்சியை தந்தது நான் அருசுவை பக்கம் 2 நாட்க்களாக வராததால் நான் அறியவில்லை!
எனக்கு மஹா தான் போன் செய்து சொன்னார்கள்(நன்றி மஹா)அதன் பின்பு அருசுவை பார்க்கும் போது விபரம் அறிந்து மனதிர்க்கு வருத்தமாக இருந்தது,இருந்தும் என்னால் உடன் உங்களுக்கு பதிவு போட முடியவில்லை,எனக்கு பதிலளி ஆப்ஷன் வரவில்லை!அத்தோடு கதீஜாவுக்கு போன் செய்து உங்களுக்கு எனது இறங்களையும் ஆருதலையும் சொல்ல சொன்னேன்!உங்கள் நம்பிக்கை இவ்வளவு சீக்கிரம் வீனாகிவிட்டதே என்ற வருத்தம்ன எனக்கும் இருக்கிறது,சாதிக்கா அவர்கள் சொன்னது போல் பிறக்கும் போதே நம்மின் இறப்பும் நிச்சயமாகிறது!
நாம் இந்த சமயங்கலில் பொருமயாக இருப்பது அவசியம்!அல்லாஹ் அவர்களுக்கு சுவனபதவியைகொடுக்க நாம் இறையை இறஞ்சுவோம்!ஆமீன்!

மர்ழியா
ஜூன் 23, 2008 - 3:10am - வழங்கியவர் arunbala

அன்பு மர்ழியா,உங்கள் மாமியின் மரண செய்தி மிகவும் வேதனையாக இருந்தது.எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் ஆத்மாவிற்கு சாந்தி அளிப்பார்.நீங்களும் துயரத்தில் இருந்து வெளிவர வேண்டுமென்பது எங்களனைவரின் ஆவல்

38 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »