topic_image


தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


divyaa
ஜூலை 4, 2008 - 9:18am - வழங்கியவர் shadiqah

திவ்யா,
நல்ல படி பிரசவமாகி, நற்குழந்தை கிடைக்க என் வாழ்த்துக்கள்.
ஒரு தாய்க்கு பிரசவம் அதுவும் தலைபிரசவம் என்பது வாழ்வில் இன்றியமையாதது.
இது அனுபவித்தால்தான் புரியும்.லேபர்வார்டுக்கு அழுகையுடன் போகும்,கர்ப்பிணி முறுவலுடன் தாயாகி திரும்ப வருவாள்.இது அனைத்து தாய்மார்களுக்கும் கிட்டும் அனுபவம்.
முதல் குழந்தைக்கு லேபர் வார்டுக்கு திகிலுடன் சென்ற நான்,இரண்டாவது குழந்தைக்கு தைரியமாகப் போனேன்.
மருத்துவரை அதிகம் தொந்தரவு தராமல் இணக்கமாக இருப்பது அவசியம்.
அரைகுறை மயக்கத்துடன் நாம் ஈன்றெடுத்த சிசுவை பார்க்கும் அந்த தருணம் இருக்கிறதே ஆஹா..மாந்தராய் பிறந்ததற்கு நல்ல மாதவம்செய்திடல் வேண்டுமம்மா.
தங்கைதிவ்யா,குழந்தை பேறுக்கு முன் அந்தகுழந்தை வேண்டும்,அழகான குழந்தை வேண்டும்,சிவப்பு பிள்ளை,சுருள்முடிபிள்ளை,கொழுக்
மொழுக் குழந்தை ..என ஏகப்பட்ட லிஸ்ட் நீண்டுஇருக்கும்.எல்லாம் குழந்தை பிறக்கும் வரைதான்.அந்த லிஸ்ட் காணாமல் போய் விடும்.
எப்படி குழந்தையானாலும் அது நம் குழந்தை நாம் பெற்றெடுத்த மகவு என்ற நினைப்பு மட்டுமே மனதில் இருக்கும்.நீண்ட லிஸ்ட் போடுங்கள்.உங்கள் லிஸ்ட் பிரகாரம் குழந்தை கிடைக்க என் வாழ்த்துக்கள்.
ஸாதிகா

ஸ்னேகிதிகளே..
ஜூலை 4, 2008 - 11:35am - வழங்கியவர் shadiqah

ஸ்னேகிதிகளே..
எல்லோரும் எங்கே போய் விட்டீர்கள்?மன்றத்தில் ஒருவரையும் காணவில்லையே/?
வாருங்கள்.மன்றத்தில் வந்து ஒரு கலக்குகலக்குங்கள்.
ஸாதிகா

hi shadiqah,
ஜூலை 5, 2008 - 12:10pm - வழங்கியவர் Divya Arun

நீங்க சொல்வது உண்மைதான்.குழந்தையை முதலில் பார்க்கும் அந்த நேரத்தை நினைத்தாலே ஆசையாக இருக்கு.அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.தைரியமாக இருந்தாலும் முதல் குழந்தை என்பதால் அவ்வப்பொழுது சிறிது பயம் வருகிறது.

தோழிகளே,எங்க போனீங்க?உங்க பதிவுகளை காண ஆவலுடன் ஓடி வந்த என்னை ஏமாத்தாதீங்க! உங்க கருத்துக்களை பதிக்க வாங்க...வாங்க....

ஹலோ திவ்யா
ஜூலை 5, 2008 - 12:49pm - வழங்கியவர் shadiqah

ஹலோ திவ்யா,
எந்த ஊரில் இருக்கீங்க?எப்போ EDD?இன்னும்சில வாரங்களில் குவாகுவா தான்.இப்பவே நல்லா ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
இனி ஓய்வு என்பது அரிதாகி விடும்.
ஸ்னேகிதிகள் அநேகர் தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள் போலும்.
லைனில்யாரையுமே காணோம்.
என் தம்பி ஊரில் இருந்து வருகிறான்.பிளைட் லேட். வரும்வரை தூங்காமல் இருக்கிறேன்.நீங்கள் போய் தூங்குங்களேன்.
---ஸாதிகா

ஹாய் ஸாதிகா,
ஜூலை 5, 2008 - 10:41pm - வழங்கியவர் Divya Arun

நான் நாமக்கல்லில் அம்மா வீட்டில் இருக்கிறேன்.முதலில் மும்பையில் இருந்தோம். இப்பொழுது சென்னை வந்துவிட்டோம்.என்னோட ஹஸ் 1 மாசமா அலைந்து இப்பொழுது தான் வீடு பார்த்திருக்கிறார்.நான் செல்ல இன்னும் 3 மாதங்கள் ஆகும்.நீங்க எங்க இருக்கீங்க?

ஹாய் திவ்ஸ்
ஜூலை 6, 2008 - 5:38am - வழங்கியவர் thalika

ரொம்ப நேரமே பாடுபடறேன் பதிவு போட ஆனால் முடியலை.என் பொண்ணு ஆட்டம் போடுவதற்குள் சீக்கிரம் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறேன்.
எனது அனுபவம் சொல்கிறேன்
நான் எப்பவும் போல ஒரு குடைச்சல் பேர்வழி தானே 7 மாசத்திலேயே பேக் ரெடி பன்னியாச்சு..அதில் ஹாஸ்பிடலுக்கு தேவையான எல்லத்திஅயும் வச்சுட்டேன்..இன்னொரு கார்டனில் திரும்ப வன்ததும் குழந்தைக்கான பொருட்கள்..என் அம்மா உதவிக்கு இருந்தாலும் எனக்கு எப்பவும் யாரையும் நம்பிக்கை வராது..எல்லாம் நானே செய்யனும்னு நெனச்சு அதை நானே எடுத்து வச்சு ஒரு பக்கம் வச்சாசு..ஒழுங்க யாரடயாவது சொல்லியிருக்கனும்.அப்படி எனக்கு 34 வாரம் தான் ஆகுது செக் அப்க்கு போனவ தான்..அவங்க இஞெக்ஷன் போடனும்னாங்க..எதுக்குன்னு கேட்டேன் சும்ம ஹார்மோனல் இஞெக்ஷன் தான் ஒன்னும் ஆகாது நல்லதுக்கு தான்னு சொன்னாங்க..அப்ப என் புத்தி எப்படி மழுங்கிப் போச்சோ சரின்னு ஒத்துக்கிட்டேன்..அந்த ஊசி போட்டுட்டு அந்த நர்ஸ்கள் என்னை 30 நிமிஷம் படுக்க சொன்னாங்க..பாத்தா நர்ஸ்கள் எல்லரும் அடிக்கடி ஓரக்கண்ணால் என்னை ஒரு மாதிரி பார்வை..அப்பவும் அது என்னன்னு எனக்கு புலப்படலை..ஆனால் எனக்கு படுத்து போர் அடிச்சப்ப என்ன என்னை இப்படி படுக்கவச்சுட்டு எல்லாரும் வந்து வந்து பாக்கரீங்கன்னு கேட்டேன்..ஹிஹிஹீன்னு ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சுட்டு ஒன்னுமில உங்களுக்கு மயக்கம் வருதான்னு பாத்தோம்னு சொல்லிட்டு அவங்களுக்குள் பேசி என்னை வீட்டுக்கு அனுப்பிநாங்க..ஆனால் கடைசியாக டாக்டர் ஒரு பரிதாப பார்வை என்னைப் பார்த்துட்டு என் அம்மா கிட்ட "பொண்ணை ந்நல்ல பார்த்துகுங்க"ன்னு சொல்லி அனுப்பிநாங்க..என் அம்மாவும் வீட்டுக்கு வந்துட்டு ஒரே டென்ஷன் என்னது இப்படி டாக்டர் சொன்னாங்கன்னு.
வழக்கம்போல் மாலை 7 மணிக்கு வாக்கிங் போனோம்.நடக்க நடகவே எனக்கு என்னவோ போல் இனி போதும் நடக்க வேண்டாம் என்பது போல் ஒரு உணர்வு.ஆனால் யாரிடமும் சொல்லல..எப்படியோ வீடு வந்து சேர்ந்தேன்.
என் கனவரிங்கே இருந்ததால் வீடு வந்த பின் வழக்கம்போல் சாடிங்..அன்றும் இரவு 8 மணிக்கு சாட் பன்ன தொடங்கி இரவு 10 மணி வரை சாட்டிங்..கனவரிடம் சொனேன் அந்த இஞெக்ஷன் போட்ட பின் என்னவோ மாதிரி இருக்குன்னு.
அப்படியே சரி பாவம் அம்மாவுக்கு டென்ஷன் கொடுக்க வேண்டாம் நெனச்சு சொல்லாமல் எப்படியோ சஹிச்சுகிட்டேன்..இது பிரசவ வலி தானென்று சுத்தமா தெரியலை.அதுக்கு இன்னும் 3 வாரம் இருக்கேன்னு ஜாலியா இருந்தேன்.
அப்படியே சஹிச்சு இரவு மணி 1 எல்லோரும் மேட்ச் பார்ப்பதில் இருந்தாங்க..என் அம்மாவும் ஒரு விளையாடு பைத்தியம் அதனால் என்னை கண்டுக்கலை.நான் பிறகு மெல்ல வந்து அம்ம சுடு தண்ணி கொடுங்க குளிச்சு பாக்க்றேன் என்னக்கு என்னவோ போல இருக்குன் என்றேன்..என் அம்மா அடிச்சு புடிச்சு ஓடி வந்தாங்க..எப்படி இருக்கு என்ன பன்னுதுன்னு கேட்டாங்க..
என்ன சொல்லவும் தெரியல எப்படின்னு..ஒரு மாதிரி ஆனால் ஒன்னும் இல்லை..அடிவயிற்றில் ஒரு பாறையை வெச்ச மாதிரி ஒரு ஃபீலிங் ஆனால் சஹிச்சுக்கர அளவுக்கு தான்..அம்மா நல்ல டோஸ் ஏன் முன்னயே சொல்லலன்னு.பிறகு உடனே ஹாஸ்பிடலுகு போகலாம்னு அம்மா சொன்னாங்க..அத்தனை நேரம் வலி மட்டும் இருந்த எனக்கு கூட டென்ஷனும்...அந்த பேகை மறந்தாச்சு காலில் ரெண்டு விதமான செருப்பு ஒரு அப்பாவோடது ஒன்னு தங்கையோடது..கிறுகி மாதிரியே ஹாஸ்பிடலுக்கு போனேன்.
எனக்காகவே காத்திருந்தமாதிரி நர்ஸ்களுகு புன்முறுவல் நேரா லேபர் வார்டுக்கு கொன்டு போய் பிரசவத்திற்கான எல்லா ஆயத்த வேலைகளும் தொடகியாச்சு..எனக்கு ஒன்னும் புரியல"என்னது டெஸ்ட் பன்னாமலே நீங்க எப்படி முடிவு பன்னிநீங்க..இது ஃபேக் பெயினா இருக்கும் டாக்டர் வரட்டும் நான் கேட்டுக்கறேன்னு"சொன்னேன்.
அதை அவங்க கண்டுக்கரதா இல்லை...இல்லை டாக்டரும் இது தான் சொல்வாங்க பேசாம இருங்கன்னு சொல்லியாச்சு.
அது முடிஞ்சு டாடர் வந்தாங்க நான் ஹவ் ஆர் யூ டாக்டர்னு கேட்டேனே அவங்களுக்கு சிரிப்பு தாங்கல..இந்த நிலமையில் நலம் விசாரிப்பு பாருன்னு நெனச்சிருப்பாங்க போல.பின்ன லேபர் பெயின் குறித்து மனதளவில் நான் முன்னயே தயார் படுத்திக்கிட்டதால் அப்ப முதலே நான் எல்லாத்துக்கும் தயாராக இருந்தேன்.
என்னை ரூமுக்கு அனுப்பிட்டு நல்ல பெயின் வந்து கடைசி கட்டத்தில் வார்டுக்கு கொண்டு வந்தால் போதுமென்று சொல்லி ரூமில் கொண்டு விட்டார்கள்.ரூமில் வந்து ஒரு 4 மணி வரை பொறுக்கும் அளவு வலி தான்.அப்ப யார் இருக்கங்கன்னெல்லாம் நான் பார்க்கலை..எனக்கு எது சுகமோ அது போலவெல்லாம் படுத்துகிட்டேன்..குப்புற முட்டியை மடக்கை படுக்கும்போது கொஞ்சம் நல்ல இருந்தது.
ஆனால் அதன் பிறகு தாங்க முடியாத வலி அதாவது அத்தனை நேரம் இடையிடையே அரட்டை அடித்துக் கொண்டு இருந்தேன்..வலி 10 நிமிடத்திற்கொருமுறை இருந்தது..ஆனால் அதன் பின் 3 நிமிடத்திற்கொருமுறை என இருந்தது..என்ன செய்வது எல்லாம் செஞ்ச வேலை தானே நான் சஹிச்சுதானே ஆக வேனும்னு மன்சை எதிலாவது திசை திருப்பி விட்டு சமாளித்தேன் அப்படியே காலை விடிந்து ஒரு 7 மணி அளவில் நல்ல வலியுண்டு ஆனால் அரை மயக்கம் போல ..சரியாக நியாபகம் வராத மாதிரி.நர்ஸ் வந்து பார்த்து விட்டு இப்போ லேபர் வார்டுக்கு போகலாம் என்றார்கள்.
வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது ரொம்ப வலி வந்து அழுகை வருவது போல இருக்கும்பொழுது உடனே எல்லாம் நம்ம குழந்தைக்குத் தானேன்னு யோசிப்பேன் வலி குறையும்.
டாக்டர் வந்து பார்த்து விட்டு மணி 8 தான் ஆகுது இன்னும் 6 மணிநேரம் இருக்க வேண்டுமென்றார்கள்..நான் இடையிடையே நர்சிடம் டைம் கேட்டுக் கொண்டே எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தேன்.கடைசியில் என்னையறியாமல் நர்சிடம் இனி போதும் என்றேன் ..நர்ஸ் ஒரே சிரிப்பு என போதும்னு கேட்டு.
அந்த கட்டத்தில் எனக்கு சிசேரியன் கேட்கலாமா என்பது போல உள்ளுக்குள் ஒரு யோசனை பிறகு திரும்ப சரி இன்னொரு 4 மணிநேரம் எப்படியாவது சமாளிப்போம் என்று உருண்டு பிறன்டு படுத்தேன்..மணி அப்பொழுது காலை 11 ஆனது திடீரென வலி போய் விட்டது..எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் என்னடா இது வலி இல்லையென்று..குழந்தையின் அசவு தெரிகிறதா என்று கேட்டார்கள் எனக்கோ எதுவும் தெரியவில்லை..எனக்கு உள்ளுக்குள் பயம் கவ்விக் கொண்டது அய்யோ அசைவே தெரியவில்லையே வலியும் இல்லையே நான் என்ன செய்வேன் என்று.நர்ஸ் ஒன்னும் பயம் வேண்டாம் எல்லம் சரியாகும் என்றார்கள்.
பிறகு ஒரு 10 நிமிடம் தான் என்னையறியாமல் குழந்தை பிறந்தது..மருத்துவரும் அதற்கு தயாராகியிருக்கவில்லை அதனால் அடித்து பிடித்து ஓடி வந்து தான் பிரசவம் பார்த்தார்.கடைசி 10 நிமிடம் தான் பிரச சமயத்திலேயே சுகமானது என புரிந்து கொண்டேன்..நான்ன் அதற்கு தான் அவ்வளவு நாள் பயந்தேன்.
டிவியில் கடைசி நேரத்தில் தொண்டையை கிழித்துக் கொண்டு ஒரு கத்து கத்துவார்களே ஆஆஆஆஅ என்று அதுக்கு தான் நான் பயந்தேன் பார்த்தால் அந்த கடைசி நேரத்தில் ஒரு பயமும் வலியும் இல்லை பின் எதனால் இந்த சினிமாவில் மனுஷன் மானத்தை வாங்குகிறார்கள் என புரியவில்லை.
அப்படி என் குழந்தை பிறந்ததும் அடுத்த ரூமுக்கு கொண்டு போனார்கள்..குழந்தை அழுகாததால் அடித்தார்கள் எனக்கு ரொம்ப வலித்தது..அப்பொழுது ஒரு மெல்லிய பூணைக் குட்டி போல ஒரு சத்தம் எல்லோர் முகத்திலும் சந்தோஷம் குழந்தை அழுதால் தான் அது இவ்வுலகத்தில் வாழ தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
என்னிடம் பெண் குழந்தை என்றார்கள் அது மட்டும் தான் நினைவிருகிறது பிறகு மயக்கம் தெளிந்து பார்த்தால் ரூமில் என் குழந்தையை இன்னும் நான் பார்க்கவில்லை..அருகிலுள்ள தொட்டில்ல் பார்த்தால் குழந்தை இல்லை நான் ஒரு வித பயத்துடன் அம்மாவிடம் குழந்தை எங்கே என்றேன்..அம்மா பயப்படாதே குழந்தை முன்கூட்டி பிறந்தது தானே அதனால் பிலிலைட்டில் வைத்திருகிறார்கள் நான் போய் கொண்டுவந்து காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்..எனக்கு அம்மா திரும்ப வரும்பொழுது என் குழந்தை கைய்யில் இருக்குமே என்று நினைத்தபொழுது இது கன்வா இல்லை நினைவா என்பது போல என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்..என் உடம்பே கனமில்லாம இருந்தது..வாழ்க்கையில் முதன் முறையாக நான் ஒரு வித முழுமையான மனநிம்மதி என்ற சுகத்தோடு இருந்தேன் .
அமா வந்தார் அருகில் குழந்தையை வைத்தார் நான் உடனே கை கால் எல்லம் எண்ணிப் பார்த்தேன் எனக்கு உள்ளுக்குள் படாம்பூச்சி..குழந்தை மிக அழகாக இருந்தது ..எனக்கு சந்தோஷம் தாங்கலை..
தோ அந்த குட்டி இப்பொழுது ஒரே கத்து நான் போறேன்

ஹாய் தளிகா,
ஜூலை 6, 2008 - 6:40am - வழங்கியவர் Divya Arun

எப்படி இருக்கீங்க?ரீமா குட்டி எப்படி இருக்கா?எனக்கு இது 36வது வாரம்.உங்க பதிவு படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.நல்லா எழுதறீங்க.அந்த நேர அனுபவத்தை கூட இவ்வளவு நகைசுவையா சொல்ல தளிகாவால தான் முடியும்.ஆமா உங்க அனுமதி இல்லாம,தெளிவா எதற்குனு சொல்லாம ஊசி எப்படி போட்டாங்க?நம்ப ஊர்ல கூட இப்படி செய்றாங்களா?

என்னுடைய அனுபவம்
ஜூலை 6, 2008 - 9:05am - வழங்கியவர் அதிரா

முதலில் என்னைப்பற்றிக் கொஞ்சம் சொல்கிறேனே. நான் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு குழந்தை என்றால் சரியான விருப்பம். என்னை விட ஒரு வயது குறைந்த பிள்ளைகளைக்கூட முக்கித்தக்கித் தூக்கிக் கொண்டு திரிவேன். எங்கள் சொந்த இடம் வேறு ஆனால் நாங்கள் இருந்தது படித்ததெல்லாம் வேறிடம். விடுமுறைக்கு ஊருக்குப் போவோம். போனால், அயல் குழந்தைகளையெல்லாம் நான் தான் டே கெயார் பண்ணுவேன். எனக்கு எப்பவும் அழகாக மேக்கப் போட்டுத்தான் வைத்திருக்க விருப்பம். அதனால் நானே அக் குழந்தைகளுக்கு பவுடர் போட்டு பொட்டு வைத்து தூக்கித் திரிந்து நித்திரையாக்கி பின் உடனேயே தட்டி எழுப்பி தூக்கித் திரிவேன்.

எனக்குத் திருமணமாகி வேறு ஒரு திருமணத்திற்குப் போனபோது அங்கே ஒருவர் தன் பிள்ளைக்கு என்னைக் காட்டிச் சொன்னார் பார்த்தாயா இந்த அக்காதான் சின்னனில் உன்னைத் தூக்கித் திரிவார் எனச் சொல்வேனே என்று. இப்படிப் பட்ட எனக்கு குழந்தை வயிற்றில் கிடைத்ததும் சொல்லவா வேண்டும்.

எங்கள் முறைப்படி என்னவோ 7 மாதத்தின் பின்தான் குழந்தைக்கு தேவையான பொருட்கள் வாங்குவது. அப்போ நான் கிட்டத்தட்ட 5 வது மாதமே என் கணவரையும் அழைத்துக்கொண்டு கடைக்கு அடிக்கடி போவேன் அங்கே போய் குழந்தையின் ஆடைகள் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வருவேன். பின் 7 வது மாதம் வந்ததும் போய் எல்லாம் வாங்கியாகிவிட்டது. அதன்பின் தினமும் குறைந்தது ஒரு நாளைக்கு இரு தடவையாவது குழந்தைக்கான பாக்கைத் திறந்து அவ்வளவு உடுப்புகளையும் விரித்துப் போட்டு ரசிப்பேன். என்னோடு நிறுத்தாமல் அப்பா, அம்மா வையும் அழைத்துக் காட்டி கணவருக்கும் காட்டுவேன். அதைப் பார்த்தாலே ஏதோ குழந்தை கையில் இருப்பதுபோல் சந்தோசமாக இருக்கும். ஆனால் நான் நினைக்கிறேன் என்னுடைய இந்தச் செயல் அப்பா,அம்மாவிற்கு எவ்வளவு ஆக்கினையாக இருந்ததோ தெரியாது, ஆனால் ஒவ்வொரு தடவையும் அவர்களும் என்னுடன் சேர்ந்து புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்து ரசிப்பார்கள்.

எப்போ குழந்தை கிடைக்கும் எப்போ தூக்கலாம் என்பதுதான் என் முளுக்கனவாகவே இருந்தது. அப்போ அம்மா சொன்னார், இப்போ குழந்தை கிடைக்கவேண்டும் என ஏக்கமாக இருக்கும் பின்னர் குழந்தை எப்ப சாப்பிடும் எப்ப தவழும் எப்ப நடக்கும்...... இப்படியே எல்லாமே தொடரும் என்று அது எவ்வளவு உண்மை இப்ப கூட நினைப்பேன் பெரியவர்களாக வளர்ந்தால் எப்படி இருப்பார்கள், இதே போல் என்னுடன் இருப்பீங்களா எனக் கேட்டால் யேஸ் என்று சொல்வார்கள். இப்படி நிறையக் கதைகள்.

அது போகட்டும். எனக்கு எதுவித பிரச்சனையும் இருக்கவில்லை. நான் நோர்மல் டெலிவரியைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் என் கணவருக்கு சீசர் செய்தால் நல்லதென விரும்பினார். அந்த நேரம் பார்க்கலாம் என விட்டாயிற்று. குறித்த திகதிக்கு 3 கிழமைக்கு முன்னர் கடைசியாக ஒரு செக்கப் இருந்தது அதற்காகப் போனோம். செக் பண்ணிய இடத்தில் சாடையாக பிறசர் இருக்கிறது, என்றும் கொன்சல்ரன் 2 நாட்களால் வெளியூர் போகப்போவதாகவும் வர 1 மாதமாகும் என்றும் சொன்னார். என் கணவருக்கு அதே கொன்ச;ல்ரந்தான் பிரசவம் பார்க்கவேண்டும் என விரும்பினார். உடனேயே கதைத்துப்பேசி அடுத்த நாள் சீசர் என முடிவானது.

அடுத்தநாள் காலை சீசர் எனக்கு எந்த வலியும் இல்லைத்தானே. விடிய பச்சை உடுப்பெல்லாம் போட்டு தொப்பி எல்லாம் போட்டார்கள், கணவரும் அதே உடையில் வெளிக்கிட்டார் (தியேட்டருக்குள் வருவதாயின் போடவேண்டும்) ஸ்ரெச்சரில் படுக்கச்சொல்லி தள்ளிக்கொண்டுபோக வந்தார்கள் அப்போதான் எனக்கு ஒரே உதறலாக இருந்தது, சாதாரணமாக நானே போனால் பயமில்லை இது என்னவோ செய்யப்போகிறார்கள் போல் பயப்பட்டேன். அப்பா, அம்மாவும் வந்துவிட்டார்கள் அப்பா திருநீறு பூசிவிட்டார்.

தியேட்டருக்குள் போய் படுத்தாயிற்று. முதுகெலும்பில் ஊசி போட்டார்கள். எனக்கு பெரிதாக விறைக்கவில்லை. ஆனால் அப்படித்தான் தெரியும் அது சரியாகும் எனச்சொல்லி கொன்சல்ரன் வயிற்றில் கத்தியை வைத்ததும்தான் நான் எனக்கு தெரிகிறது வைக்க வேண்டாம் எனக் கத்தினேன். பின்னர் பார்த்தால் விறைப்பு வரவில்லை. உடனே மாஸ்க் வைத்தார்கள் மயங்கிவிட்டேன். குழந்தையை எடுத்து கணவரிடம் கொடுத்து அவர் அப்பா, அம்மாவிடம் கொடுத்துவிட்டு என்னுடன் நின்றார். கண்விழித்தேன், வெளியில் வந்ததும் பெரிய சத்தம் அந்த வோட்டே அதிரும்படி கத்திக் கேட்டது , கையில் தந்தார். அப்படியே அவித்த வெள்ளைக்கட்டியாக சிகப்புச் சொண்டுடன் பெரிய சத்தமாக கத்தியபடி எனக்கு அழுகையே வந்துவிட்டது சந்தோசத்தில்........ இது முதல் பிரசவம் அடுத்ததுக்கு எனக்கு எந்தப்பயமும் இருக்கவில்லை, குழந்தை முகத்தை எப்போ பார்ப்பேன் என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது.

நிறைய எழுதிவிட்டேன். தளிகாவும் விரிவாக எழுதியிருக்கிறீங்க. சாதிகா அக்காவும் எழுதியுள்ளார். இப்படி படிக்கிறபோது நல்ல அனுபவங்களாக இருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா,
ஜூலை 6, 2008 - 10:39am - வழங்கியவர் Divya Arun

நீங்க சொல்வதை எல்லாம் கேட்க கேட்க எனக்கு எப்போ குழந்தை பிறக்கும், எப்போ குழந்தைய பார்ப்போம்னு ஆசை அதிகமாயிட்டே இருக்கு.அதிரா உங்க தமிழ் அழகா இருக்கு.

//அப்படியே அவித்த வெள்ளைக்கட்டியாக சிகப்புச் சொண்டுடன் பெரிய சத்தமாக கத்தியபடி எனக்கு அழுகையே வந்துவிட்டது சந்தோசத்தில்........ //
எப்படிங்க இப்படி எழுதறீங்க? உங்களால இலங்கை தமிழ் கற்று கொள்ள எனக்கு ஆசை வந்துவிட்டது.

அன்பு திவ்யா
ஜூலை 6, 2008 - 10:25pm - வழங்கியவர் thalika

அன்பு திவ்யா நேற்று அவசரமாக பதிவு போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.திவ்யா உண்மையில் பிரசவத்தை குறித்து முன்னமே பயப்பட தேவையே இல்லை ஏனென்றால் அது சில மணிநேர வலி தான் ஆனால் அது எல்லாமே மறந்து போய்விடும்.குழந்தை பிறந்து விட்டால் எனக்கு தெரிவிப்பாய் தானே திவ்யா.
ஆம் அதிரா நானும் அதே போல் குழந்தைக்கு எடுத்து வைத்த ட்ரெஸை அடிக்கடி எடுத்து விரித்துப் பார்ப்பேன் அவ்வளவு சுகமாக இருக்கும்.என் மகளுக்கு முதன் முதலில் ஆர்ஞ் நிற ரோம்பெரும், இரண்டாவது பின்க் ரோம்பெரும்,மூன்றாவது எல்லா நிறத்திலும் கோடுகள் உள்ள ஒரு ரோம்பெரும்..இந்த மூன்றும் தான் இன்றும் கண்ணில் நிறைந்து நிற்கிறது.
என் மகளுக்கு முதல் முதலாக மட்டி விட்டது பின்க் ரோம்பெர்/பின்க் கேப்/பின்க் மிட்டென்ஸ்/பின்க் சோக்ஸ்.குழந்தையும் பின்க் ,செக்க சிவந்த உதடு.அவ்வளவு அழகாக இருந்தது.
ஆமாம் திவ்யா நம்மூரில் அதிகளவில் செய்கிறார்கள்..சொல்லாமல் கொள்ளாமல் இன்டியூஸ் பன்னுவது இப்பொழுது சர்வ சாதாரணமாகி விட்டது..இது எனது மகளின் பீடியாட்ரீஷியன் கவலையாக சொன்னது.அதனால் எப்பொழுதும் நீங்கள் உஷாராக இருங்கள்.தானே பழுப்பதற்கும் தல்லிப் பழௌப்பதற்கும் வித்யாசம் உண்டு என்பார்கள் மலையாளத்தில் அது மாதிரி இயற்கையாக வரும் வலி தான் நல்லது என நன்புகிறேன்.
என் மருத்துவர் சொல்கிறார் அவருக்கு தெரிந்த நர்ஸ்கள் சர்வ சாதாரணமாக சொல்வார்களாம் 8 மாதம் முடியும்பொழுதே நிறைய பேருக்கு நாங்கள் அவர்களுக்கு சொல்லாமல் இன்டியூஸ் பன்னி விடுவோம் அப்ப தான் எங்களுக்கு பெட் ஃப்ரீயா கிடைக்குமென்று.
எனக்கு டெலிவெரி ஆகி 1 வாரம் கழித்து என் மருத்துவர் 1 மாதம் வெளியூரில் இருந்தார் அப்பொழுது தான் புரிந்தது அவரது சவுகரியத்திற்காக தான் அப்படி பன்னிநார்கள் என்று.

தளிகா நான்
ஜூலை 6, 2008 - 11:59pm - வழங்கியவர் Divya Arun

தளிகா நான் கூட முதலில் பிங்க் கலர்ல தான் டிரஸ்,சாக்ஸ்,கேப்,கிளவுஸ் எல்லாம் வாங்கினேன்.அது தான் முதலில் போட்டு விட ஆசை.குழந்தை பிறந்ததும் கண்டிப்பா சொல்வேன் தளிகா.உங்களுக்கு சொல்லாமையா?

மருத்துவர்கள் இப்படி மனசாட்சி இல்லாம நடந்துகிறது எவ்வளவு வருத்தமான விஷயம்.நம்பி வருகிறவர்களை ஏமாற்றாமல் சிகிச்சை அளிக்க வேண்டாமா?

ஹாய் திவ்யா
ஜூலை 7, 2008 - 12:55am - வழங்கியவர் JeevaKrishnan

வாழ்த்துக்கள் திவ்யா. எத்தனை மாதம் ஆகிறது. எத்தனை கனவுகளோடு இருக்கின்றீர்கள் என புரிகிறது.
தாளிகா, அதிரா உங்கள் அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளீர்கள். சில டாக்டர்கள் இப்படியும் இருக்கிறார்கள். தைரியம் சொல்லி நார்மலாய் பிறக்கவைக்கும் நல்ல டாக்டர்களுக் இருக்கிறார்கள்.

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

திவ்யா.
ஜூலை 7, 2008 - 1:02am - வழங்கியவர் kr

திவ்யா,
இது ரொம்ப அருமையான திரெட்,எத்தனை விதமான அனுபவங்கள்.ரூபி,அதிரா அனுபவங்களை சொன்னது போல் எல்லோரும் வந்து சொல்லுங்கள்.குழந்தையின் முகத்தை முகத்தை பார்க்கும் அந்த தருணம்,ஆஹா,உலகில் மிக சந்தோஷமான நொடி அது தான்.

நானும்,என்னுடைய பதிவை போடரேன்,பிறகு........

திவ்யா,என்னுடைய வாழ்த்துக்கள்,நீங்கள் தாயாக பிரமோஷன் ஆவதற்க்கு..

சபாஷ்.
ஜூலை 7, 2008 - 2:23am - வழங்கியவர் shadiqah

அதிரா,தளிகா,
உங்கள் பிரசவகால அனுபவங்களை அழகாக,தெளிவாகவும் விளக்கி இருந்தது நன்றாக இருந்தது.விளக்கி இருந்த முறையில் சம்பவத்தை நேரில் பார்ப்பதைப் போல் காட்சிகள் கண் முன்னே விரிகிறது.சபாஷ்.
திவ்யா,நான் சென்னையில் தான் இருக்கிறேன்.
---ஸாதிகா

முதல் அறிமுகம்
ஜூலை 7, 2008 - 3:50am - வழங்கியவர் Pooja_r

ஹலொ All,

கொஞச நாட்கள் முன்பு தான் அருசுவை வளைதளம் பற்றி அறிந்து கொண்டேன்.

அஹா எத்தனை தோழிகள்........ எத்தனை அனுபவங்கள்......

ரொம்ப ஜாலியா இருக்கு பார்க்க... படிக்க...

இது தான் முதல் படிவம்.....

பூஜா

திருமதி. திவ்யா அருண்
ஜூலை 7, 2008 - 4:21am - வழங்கியவர் Shardha

திருமதி. திவ்யா அருண்

சுகப்ப்ரஸவம் ஆகி நல்லபடியாய் தாயும் சேயுமாய் ஆக வாழ்த்துக்க்ள் மற்றும் ப்ரார்த்தனைகள்.

என் மகளுக்கு 8 மாதங்கள் ஆகிறது. உண்மையில் நான் ஆசைப்பட்டது ஆண் குழந்தைக்கு. (ஆனால் அந்த எதிர்பார்ப்பு தவறான்து என்று இப்பொது உரைக்கிறது.)

எனக்கு சிசேரியன் என்று எனக்கு 5ம் மாதத்திலேயே முடிவாகிவிட்டது. காரணம். நான் சைட்டஸ் இன்வர்சிஸ் மதர். அப்படின்னா உடல் உறுப்புகல் (ஹார்ட், லிவர் உட்பட பொஸிஸன் மாறி அமைந்திருக்கும். மேலும் எனக்கும் ஹார்ட்டில் ஒரு சின்ன ஹோல் (இது எனக்கு 5 மாதத்தில் தான் தெரிந்தது.), மூச்சு கன்னா பின்னா வென்று வாங்கும்.

10ம் மாதம் ஆரம்பித்தவுடன் டாக்டர் 4 நாளைக்கொரு முறை செக் அப் வர சொன்னார். 4வது செக் அப் முடிவில் ஸ்கேன் எடுக்க சொன்னார். ஸ்கேன் ரிசல்ட் வந்தவுடன் குழந்தை தலை பெரிதாக இருப்பதாகவும், உடனே ஆப்பரேஸன் பண்ணவேண்டும். என்ன செய்வது. அந்த நேரத்தில் டாக்டர்களைத்தான் தெய்வமாய் நம்ப வேண்டியிருக்கிறது. சொன்னதற்கெல்லாம் தலையாட்ட வேண்டியிருக்கிறது.

டாக்டரே காலண்டரை எடுத்து நல்ல நாள் கிழ்மை பார்த்து , நவம்பர் 24 (அன்றுதான் என் உயிரினும் மேலான எனது அமிர்தவர்ஷினி என் வயிற்றில் இருந்து இந்த பூமிக்கு வந்த நாள்) அன்று நிறைந்த பவுர்ணமி , கார்த்திகை அன்றே ஆப்ரேஸன் செய்யலாம் என்று சொன்னார். எனக்கு இதில் சற்றும் உடன்பாடு இல்லை. என்ன செய்வது. குழந்தையின் தலை பெரிதாய் இருக்கிறதே இதனால் அவளுக்கு ஏதாவது சிரமமாகி விட்டால் அதனால் ஒத்துக்கொண்டேன்.

நவம்பர் 23 இரவே ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிவிடுங்கள். கையில் ப்லட் வெயினில் மூலமாக ஒரு இஞ்சக்ஸன் போடவேணும். ஏனெனில் எனக்கு ஹார்ட்டில் ஹோல் இருப்பதால் இன்பெக்ஸனை தடுக்க குறைந்தது ஆப்பரேசனுக்கு 7 மணி நேரத்திற்கு முன்னதாக போடவேண்டும்.
நான் டாக்டரிடம் சொல்லி விட்டேன். என்னால் ஹாஸ்பிட்டலில் இரவு பொழுது தங்க முடியாது. ஊசி போட்டு என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் என்று. இரவு 10 1/2 மணிக்கு ஊசி போட்டு காலை 5 மணிக்கு அட்மிட் ஆகவேண்டும், 8 1/2 மணிக்கு ஆபரேஷன்.

எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. எனது அக்காவை எழுப்பி அழுப்பி மணி கேட்டு அவர்களையும் தூங்கவிட வில்லை. என் ஹஸ் பவுர்ணமி கிரிவலத்திற்கு சென்றுவிட்டார். அவரை 1/2, 1 மணி நேரத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டு அவரை வேறு டென்ஷன் பண்ணிவிட்டேன்.

எப்போதடா 5 மணி ஆகும். ஹாஸ்பிட்டலுக்கு போவோம் என்றாகிவிட்டது. 4 1/2 மணி ஆனவுடன் குளித்துவிட்டு நானும் எனது அக்காவும் ஹாஸ்பிட்டலுக்கு போய்விட்டோம்.

8 மணிக்கு ஆபரேஸன் தியெட்டருக்கு போனேன். எனக்கு முதுகில் ஊசி போடவில்லை மாறாக அனஸ்தீஸியா கொடுத்தார்கள். அந்த அனஸ்தீஸிஸ்ட் என்னம்மா இதுதான் முதல் குழந்தையா என்று கேட்டார். ஆமாம் என்று சொல்லி முடிக்கும் முன்னரே மயக்க நிலைக்கு போயாகிவிட்டது. பின்னர் ஒரு 15 நிமிடம் கூட ஆகியிருக்காது. எங்கேயோ ஒரு குரல் எனது பெயர் சொல்லி அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வந்து பாருங்கள் என்று. அப்போது என் காதையே என்னால் நம்ப முடியவில்லை. வலி வேறு உயிர் போகிறது. என் கணவர் என் பெண்னை என்னிடம் காட்டி பாரு "பையன் பையன்" ரொம்ப எதிர்பார்த்த இல்லை. நமக்கு பொண்ணு பொறந்திருக்கு, பாப்பா எவ்வளவு ரோஸா இருக்கா, குண்டா இருக்கா. அந்த ஒரு நிமிடம் கண்ணை திறந்து பார்த்து பின்பு மூடிகொண்டேன்.
அப்போது நான் பார்த்த எனது குழந்தையின் முகம் என் வலியினையெல்லாம் வாங்கிக்கொண்டது.

நீஙகளும் இந்த பேரின்பத்தை வெகு விரைவில் நலமாய் எதிர்கொள்ள எனது வாழ்த்துக்கள்.

(தளிகா, அதிரா சீனியர்ஸ் உங்களின் எழுத்துக்கள் பார்த்தபின்பு தான் நான் எழுத துணிந்தேன். மிக நன்றி. நீங்கள் பதிவிட்ட விதம் அருமையாக இருந்தது.)

ஜீவா கிருஷ்ணன் சீக்கிரமே நல்ல செய்தி சொல்ல வாழ்த்துக்கள்.

அன்புள்ள திவ்யா
ஜூலை 7, 2008 - 4:49am - வழங்கியவர் thalika

அன்புள்ள திவ்யா இப்படி ஒரு த்ரெட் நீ தொடங்கியதில் ஒரு பெருமை உண்டு.
ஆங்கிலத்தில் நிறைய தளங்களில் பேர்த் ஸ்டோரீஸ் டயரீ இருக்கும் ஆனால் உலகிலேயே எனக்கு தெரிந்து முதன் முறையாக இங்கு தான் தமிழில் நாம் நமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.
ஆம் ரொம்ப சரி எனக்கு என்னை இரண்டாக கிழிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் என்னிடம் அனுமதி கேட்டு செய்தால் கவலைப் படமாட்டேன்..ஆனால் என்னிடம் மருத்துவர் சொல்கிறார் நிறிய பெண்கள் சொல்வார்களாம் அய்யோ டாக்டர் என்கிட்ட எதுவும் சொல்லாதீங்க நிங்களே எதுவாவது செய்யுங்க எனகு டென்ஷன் வேண்டாமென்று அதனால் நாங்கள் சொல்வதில்லை என்று..அது ஒரு நொண்டி சாக்கு.
நான் கர்ப்பமாக இருக்கும்பொழுது செக் அப்கு போகும்பொழுதே திருத்தமான எனது தேவைகளை சொல்லி விட்டேன்
1)எனக்கு நார்மல் டெலிவெரி ஆக முழு முயற்சி எடுக்க வேண்டும்
2)எபிசியோடமியை கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும்
3)பிரசவம் பார்ப்பது ஆண் மருத்துவர்களாக இருக்க கூடாது
என்பது தான் என் நிபந்தனைகள்
இதுவெல்லாம் அவர் நிவர்த்தி செய்து தந்தார்.எனக்கு உண்மையில் லேபர் பெயினெல்லம் ஒன்னும் ப்ரச்சனை இல்லை..அதை சஹிச்சுக்கலாம்..ஆனால் எல்லம் முடிந்து குழந்தையோடு ரூமுக்கு வந்து பார்த்தால் கைய்யில் ஐவி போட்டிருபார்கள்..அதில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்கும்...அதன் பின் 3 நாட்கள் தொடர்ந்து காலை மாலை ஒரு இஞெக்ஷன் பன்னுவார்கள் ஐவி வழியே..கடவுளே முதல் மூன்று நாட்கள் குழந்தையை தூக்க முடியவில்லை..கை வீங்கி கை நீல நிறமாகி நான் கெஞ்சி கூத்தாடியும் அதை அவிழ்க்க விடவில்லை.
மூன்றாவது நாள் ஒரே முடிவில் இறங்கினேன்..இந்த ஐவியை நீங்கள் கழற்றாவிட்டால் நாளை என் கைய்யை முறிக்க வேண்டி வரும் கை நீல நிறமாகி விட்டது எல்லாத்துக்கும் நீங்க தான் பொறுப்பு என்று திட்டிவிட்டேன்...அப்பொழுது தான் பயந்து கொண்டு அதனை கழற்றிநார்கள்.
கைய்யில் ரத்தம் கட்டி கட்டி அதன் வழியாகவே பொடி மருந்தை கலக்கி ஊசி போட்டால் பின்ன வலிக்காம என்ன செய்யும்..அப்பா எனக்கு மறக்க முடியாத அனுபவம்..இரவு நான் மூன்று நாட்கள் இந்த வலியால் தூங்கவே இல்லை ...திவ்யா உனக்கது போல ஐவி போட்டு விட்டு வலியோ அல்லது அனாவசியமாக எதுவாவது தாங்க முடியாத வலி என்றால் உடனடியாக மருத்துவரிடம் சொல்லி அதற்கு தீர்வு காண வேண்டும்
எனக்கு அதன் பின் கைய்யில் நேரடியாகவே தான் ஊசி ஏற்றிநார்கள் அப்ப கூட வலி கம்மி தான்.
ஷார்தா இப்படி ஒரு டேர்ம் நான் இப்பொழுது தான் கேள்விப் படுகிறேன்..ப்ரேவ் மோம்மி

பூஜா வாருங்கள்
ஜூலை 7, 2008 - 5:08am - வழங்கியவர் faleela

பூஜா வாருங்கள் உங்களை அறுசுவை வரவேற்கிறது.கலக்குங்கள்.

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

ஹலோ திவ்யா
ஜூலை 7, 2008 - 6:24am - வழங்கியவர் T S JAYANTHI

எப்படிம்மா இருக்கே. என் முதல் தோழியே. முதலில் நல்ல முறையில் பிரசவிக்க வாழ்த்துக்கள்.

என் அனுபவம்
முதல் பிரசவம்.
என் பையன் பிறந்தது. 27.03.1984. 24 வரை ஆபீஸ் சென்றேன். 26 அன்றும் சென்றிருப்பேன். ஆனால் என் பெரிய மைத்துனருக்கும் குழந்தை பிறந்திருந்தைப் பார்க்க என் மாமியார் சென்னை வந்ததால் திங்கள் முதல் லீவ் போட்டேன். செவ்வாய் அன்று பிறந்து விட்டான். திங்கள் இரவு பாத்ரூமில் போய் உட்கார்ந்து கொண்டேன். என் அம்மா பாத்ரூம் வாசலில். வேளியே வா, இல்லைன்னா அங்கேயே குழந்தை பிறந்துடும்ன்னுன்னு தவித்துக் கொண்டிருந்தார்கள். திங்கள் இரவு 9 மணிக்கு வலி வர ஆரம்பித்து உடனே ஆந்திர மஹில சபா ஆஸ்பத்திருக்கு அழைத்துச் சென்றார்கள் இரவு 12 மணிக்கு. செவ்வாய் மதியம் 2.45க்கு பிறந்தான். முதலிலிருந்தே பெரிய வலி வந்துவிட்டது. ஆஸ்பத்திரி வாசலில் என் அம்மா, மாமியார், மைத்துனர்கள், என் கணவர் என்று ஒரு பெரிய படை. ரோஜாப் பூ போல் இருந்த பிள்ளையைக் காண்பித்தார்கள். வலி எல்லாம் மறந்து போச்சு. உறவினர்கள் எல்லாம் குழந்தையைப் பார்க்க என்னவர் மட்டும் நர்ஸிடம் ஜெயந்தி எப்படி இருக்கிறாள் என்று கேட்டாராம். இன்றும் அதை நினைத்து சந்தோசப்படுவார் என் அம்மா.
முதல் திருமண நாள் அன்று கையில் ஒரு மாதக் குழந்தை.

இரண்டாவது பிரசவம்
நன்றாக அனுபவித்து ரசித்து பெற்றுக் கொண்டேன். பெண்ணுக்கு புதன் காலை ஆஸ்பத்திருக்குச் சென்றோம். லேட்டாகத்தான் வலி வந்தது. வியாழன் விடிகாலை 2 மணிக்கு சந்தியா தேவியார் வெளியே வந்தார்.
இரண்டாவது குழந்தைக்கு என்னைவிட என் பையன் தான் ஆவலாகக் காத்திருந்தான். ஆனால் அவன் பையன் கேட்டான். அப்புறம் தங்கையின் மேல் இன்று வரை ரொம்ப ஆசையாக இருக்கிறான்.
கடவுள் புண்ணியத்தில் இரண்டும் நார்மல் டெலிவரிதான்.

திவ்யா உங்களுக்கும் நார்மல் டெலிவரியாக இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

பூஜா வருக
ஜூலை 7, 2008 - 6:44am - வழங்கியவர் T S JAYANTHI

உங்க பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்ல தமிழ் எழுதறீங்க. நல்லது. எப்பவும் தமிழைலேயே எழுதுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி ஆன்டி
ஜூலை 7, 2008 - 8:34am - வழங்கியவர் faleela

ஜெயந்தி ஆன்டி,உங்களுடன் இன்றுதான் பேசுகிறேன். என் வயதில் உங்களுக்கு பையன் இருக்கிறாரா?என் அம்மா உம் என்னை பிறந்ததும் ரோஜா பூ போல் இருந்தாய் என்று சொல்லுவாங்க.கேட்கவே சந்தோசமாக இருக்கும்.

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

I really enjoyed reading
ஜூலை 7, 2008 - 1:03pm - வழங்கியவர் rumya

I really enjoyed reading your experience. I love the way you write. Excellent. Take care.

ஆகா...
ஜூலை 7, 2008 - 2:20pm - வழங்கியவர் அதிரா

ஆகா...

எத்தனைபேர் மிக அருமையாக தம் அனுபவங்களைப் பகிந்துள்ளார்கள். திவ்யா, அழகா ரசித்து ரசித்து பதில் எழுதுறீங்க, உங்கள் குட்டி வெளியே வந்ததும் எம்முடன் அனுபவத்தைப் பகிந்து கொள்ளுங்கள்.

ஜீவா, நாங்கள் கேட்டதால்தான் எனக்கு சீசர் செய்தார்கள் இல்லையெனில் நோமலாகவே பிறந்திருக்கும். டாக்டர்கள் வற்புறுத்தவில்லை.

ஆனால் யாரும் பயப்பட வேண்டாம், சிலபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன், குத்தத் தொடங்கி நான்கு மணி நேரத்தில் குழந்தை கிடைத்துவிட்டது, காரால் இறங்கியதும் தான் கட்டிலில் படுத்ததும் பெற்றுக்கொண்டேன் இப்படி நிறைய இருக்கிறது. எனவே ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்தும் பிரசவ வலிகள் மாறுபடும். எனவே முதல் பிரசவத்திற்காகக் காத்திருப்பவர்கள்... அதுவும் ஒரு சுகமான வலிதான் தைரியமாக , சந்தோசமாக எதிர்கொள்ளுங்கள்.

தளிகா, சொல்ல மறந்துவிட்டேன், என்ன கை, கால் எல்லாம் எண்ணிப்பார்த்தீங்களா? எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கு.

சாரதா... எவ்வளவு தைரியமாக எல்லாவற்றையும் எதிர்கொண்டிருக்கிறீங்கள்.

ஜெயந்திமாமி, உங்களைப்போல்தான் இங்கும் பெண்கள் வேலைக்குப் போகிறவர்கள் கடைசி நேரம் வரை காரோடிப் போகிறார்கள் வேலைக்கு, லீவுப்பிரச்சனைதான் எல்லாவற்றிற்கும் காரணம். ஆனால் அது உடம்பிற்கு நல்லதுதானே. ஏனையோரும் எழுதுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமா அதிரா
ஜூலை 7, 2008 - 2:35pm - வழங்கியவர் thalika

ஹஹஹா ஆமா அதிரா..என் கனவர் ப்ரெக்னன்டா இருக்கப்ப அப்பப்ப சொல்வார் அய்யோ பிள்ளை கறுப்போ காக்கையோ கை காலில் 10 விரல் இருக்கனும்.எல்லா அவையங்களும் நல்லா இருக்கனும்னு..அவர் சொல்ல சொல்லவே எனக்கு மனசுக்குள் பயம் அதிகரித்து விட்டது அதுக்கு தகுந்தா மாதிரி கடைசி இரண்டு முறை ஸ்கேன் பன்னினார்கள் முதுகில் என்னவோ காணவில்லை என்று..அது இன்னும் பயம் அதிகமாகிவிட்டது அதனால் முதலில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் பன்னினேன்.
ஆமா அதிரா எனக்கு சந்தேகம் உங்களவர் டாக்டர் தானே டாக்டரே சிசேரியனை விரும்பி கேட்டுக் கொன்டார் என்று கேட்டபொழுது மிகுந்த ஆச்சரியம்..எதுவாவது காரணம் இருக்கனுமே..மருத்துவ ரீதியாக இருந்தால் அதனை யோசிக்கலாமே என்று தான் கேட்கிறேன்.

நினைத்தாலே இனிக்கும்
ஜூலை 7, 2008 - 8:05pm - வழங்கியவர் DEVA

ஹாய் திவ்யா, எப்படி இருக்கீங்க? நீங்க கேட்ட பிரசவ அனுபவம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் இப்படி முன்னாடியே கேட்டு வெச்சுக்கறது ரொம்ப நல்லது. உங்களுக்கு நல்ல தைரியத்தையும், தன்னம்பிக்கையும் கொடுக்கும். நானும் இப்படி எல்லார்க்கிட்டயும் ஓவ்வொரு ஸ்டெப்பா சொல்லுங்கன்னு கேட்டுட்டே இருந்தேன். நான் முதன் முதலில் பிரெக்னன்சி டெஸ்ட் வீட்டில் எடுத்துட்டு டாக்டர்கிட்ட செக்கப் பண்ண போனேன். அப்ப அங்கே இருந்த ஸ்டாஃப்ஸ் கிட்ட இங்கே ரூமெல்லாம் சுத்தமா இருக்குமா. நான் பாக்கணும்னு சொன்னேன். அதுக்கு அவங்க நீங்க ரூம் நம்பர் 206 ல தான் இருப்பீங்க. அதைமட்டும் காட்டறோம்னு சொன்னாங்க. அது எப்படி உங்களுக்கு தெரியும். எனக்கு இப்பதான் 45 டேஸே ஆகுது. எந்த ரூம்னு எப்படி தெரியும்னு கேட்டேன். அதுக்கு ஒரு லேடி, அதுதானே ஆபரேஷன் தியேட்டருக்கு பக்கத்து ரூம். அதனால உங்கள அங்கேதான் ஆபரேஷன் முடிஞ்சதும் கொண்டு போவாங்கன்னு சொன்னாங்க. அந்த லேடி சொல்லிட்டு இருக்கும்போதே பக்கத்தில் இருந்த லேடி கண்ணை காண்பிச்சு சொல்லாதேன்ற மாதிரி தலையை அசைச்சுது. எனக்கு ஒரே ஷாக். இத்தனைக்கும் டாக்டர் என் பெரியம்மாவின் கிளாஸ்மேட். பேமிலி பிரெண்ட் வேற. ஆனால் என் பெரியம்மா பெண்ணுக்கு இதே மாதிரி சிசேரியன் தான்னு முன்பே சொல்லி கடைசியில் சிசேரியன் தான் ஆச்சு. இதே என்னடா இது இப்படி சொல்றாங்கன்னு நினைச்சு குழப்பமா ஆயிடுச்சு. டாக்டர் கிட்ட என்னலாம் செய்யணும்னு கேட்டதுக்கு அவங்க என்னை பெட்டிலேயே இரு, எந்த வேலையும் செய்யாத, வீக்கா இருக்க, எக்ஸர்சைஸ் செய்யவே செய்யாதன்னு சொல்லிட்டாங்க. ஆரம்பித்திலிருந்தே ஒரே டாக்டர்கிட்ட காண்பிச்சதால வேற டாக்டர்கிட்டயும் போகல.

வீட்டுக்கு வந்ததும் ஒரே குழப்பம். ஆனாலும் சிசேரியன் இருக்கவே கூடாதுன்னு மட்டும் நினைச்சுட்டே இருந்தேன். சின்ன சின்னதா வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சேன். அப்படியே 4 மாதத்திலிருந்து தினமும் பெல்விக் ப்ளோர் எக்சர்சைஸ் மட்டும் மெதுவா செய்ய ஆரம்பிச்சேன். வேற எக்சர்சைஸ் செய்யல. 8 மாதத்திலிருந்து ஸ்க்வாட்டிங் பொசிஷன் செய்தேன்.மற்ற நேரமெல்லாம் எது உண்மையான வலி, அந்த டைமிங்கை எப்படி சரியா தெரிஞ்சுக்கறது, எப்படி மூச்சு விடணும், எப்ப புஷ் பண்ணனும்னு தொடர்ந்து படிச்சு ஞாபகம் வெச்சுட்டு அதை பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன். 8 மாதம் வரை மாதம் ஒரு இன்சக்ஷன்னு ஆயில் இஞ்சக்ஷன் போட்டுட்டு இருந்தேன். அப்பதான் பேபிக்கு நல்லது, ஸ்ட்ராங்காக இருக்கும்னு சொன்னாங்க. அதை ஒரு வழியா போட்டு முடிச்சு 9 வது மாதம் வளைகாப்பையும் முடிச்சுட்டு, டாக்டர்கிட்ட என் கணவரை இப்ப நான் பார்த்தே ஆகணும், ஒரு வாரத்தில் திரும்பி வந்துடறேன்னு சொல்லி, கெஞ்சி ஒரு லெட்டரும் வாங்கிட்டு, டெலிவரி டேட்டுக்கு 4 வாரம் முன்னாடி பிளைட் பிடிச்சு, வயிரை துப்பட்டாவினால் முடிஞ்ச அளவு மறைச்சுட்டு மலேஷியா போயிட்டேன். அங்கேயே டெலிவரின்னு முடிவும் பண்ணேன். அதுக்கு முக்கிய காரணம் சிசேரியன் பயம், ஹாஸ்பிட்டல் சுத்தம் அப்புறம் எப்படி இருந்தாலும் என் கணவர் டெலிவரி பார்த்தால் நார்மல் டெலிவரியா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

எனக்கு ஜூலை 15 டெலிவரி டேட். காலண்டர் படி. ஆனால் ப்ரைம் (முதல்) பேபி பொதுவாக நாள் கழித்தே ( 5 முதல் 10 நாள் வரை) பிறக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள். டெலிவரி வரை தினமும் வாக்கிங் தான். வேறு ஒரு எக்சர்சைஸும் செய்யல. ஆனால் இரவு சூடான தண்ணீரில் குளித்து விட்டு தூங்குவேன். எங்கள் வீட்டில் எல்லாரும் ஒரு வாரம் முன்னாடிதான் விசா கிடைத்து வந்தார்கள். வீட்டு சமையல் வேலை தவிர மற்ற வேலைகள் எதுவும் செய்யவில்லை. குழந்தை உண்டான மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் டாக்டர் செக்கப்புக்கு செல்லும்போது டாக்டரிடம் என்ன குழந்தை என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். அவரும் இந்த முறையும் பார்க்க முடியல, குழந்தை சுருண்டு படுத்து தொடையால் மறைச்சுட்டு இருக்குன்னு ஒவ்வொரு முறையும் சொல்வார். உடனே எல்லாரும் நிச்சயம் பெண் குழந்தைதான் என்று சொன்னார்கள். மலேஷியாவிலும் எத்தனையோ முறை நாங்கள் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு ஒரு டாக்டரிடம் ஸ்கேன் செய்தும் முடியவில்லை. அதனால் பெண் குழந்தைதான் என்று நினைத்து நானும் பிங்க் டவல் மற்றும் ஒரு செட் டிரஸ் வாங்கினேன். எங்கள் வீடுகளில் குழந்தை பிறக்கும்வரை குழந்தைக்கு எதுவும் வாங்கும் பழக்கம் இல்லை. ஆனால் மற்ற நாடுகளில் நாம் ஒரு பேபி செட் வாங்குவது அவசியம். எனவே சிறிய சைஸ் பேபி நாப்கின் பேக், லோஷன்,லிக்விட் சோப், பவுடர் செட் ஒன்று வாங்கி வைத்தேன். ஒரு பேகில் எனக்குத் தேவையான நைட்டி மற்றும் டிரஸ், சில பெரிய காட்டன் துப்பட்டாக்கள், நர்சிங் பேட்ஸ், டவல், குழந்தையின் கிட், பிரஸ்ட் பம்ப், ஒரு பீடிங் பாட்டில், பிளாஸ்க், ஒரு டிஷ்யூ பேக், டெலிவரி முடிந்து உபயோகிக்க சானிடரி நாப்கின் ( கடைகளில் மதர் சைஸ் என்று கேட்டால் கிடைக்கும். அதிக Flow விற்கு இதுவே நல்லது), கொஞ்சம் பெரிய கைக்குட்டை அளவில் இருக்கும் காட்டன் துணிகள் 15 போல வாங்கி இரண்டு முறை துவைத்து வைத்துக் கொண்டேன். குழந்தை பிறந்தவுடன் அதன் வாய் துடைக்க மற்றும் அவசரத்திற்கு துடைக்க என்று இந்த துணிகள் உதவும். புதிதாக வாங்கினால் ஈரத்தை உறிஞ்சாது. எனவே முன்பே 2 முறை துவைத்துக் கொள்வது நலம். குழந்தைக்கு வாங்கும் டிரஸ், துண்களையும் ஒரு முறை துவைத்து விடுவது நல்லது. பிறந்த குழந்தைகளுக்கு Wet Tissue சில சமயம் ஒத்துக்கொள்ளாது. என் குழந்தைக்கு வெட் டிஷ்யூ, நான் வாங்கிவைத்த Pampers இரண்டுமே அலர்ஜி ஏற்படுத்தி விட்டது. பிறகுதான் Huggies மாற்றினேன். எனவே முதலில் சிறிய அளவில் வாங்கி உபயோகித்து அலர்ஜி ஏற்படுத்தாவிட்டால் பிறகு பெரிய அளவுகளில் வாங்கிக் கொள்ளலாம்.

ஜூலை 15ந் தேதி ஆகியும் ஒரு வலியும் வரவில்லை. 17 ந்தேதி போல் மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்தபோது ஆண் குழந்தை என்று தெரிந்தது. குழந்தை மிகவும் உயரமான குழந்தை. ரொம்ப கஷ்டப்பட்டு தொடையை, காலைக் குறுக்கிட்டு உள்ளே இருக்குன்னாங்க. சிசேரியன் இருக்க நிறைய சான்ஸ் இருக்கிறது என்று இன்னொரு டாக்டர் சொன்னார். 20 ந்தேதி ஆகியும் வலி வரவில்லை. வலி வருகிறதா என்று இன்னும் ஒரு நாள் பார்த்துவிட்டு இண்ட்யூஸ் செய்து விடலாம் என்று முடிவெடுத்தார்கள். அப்போது என் கசினுடன் போனில் பேசினேன். அவள் சொன்னாள்,"அக்கா, வலி வந்து அட்மிட் ஆகும் நேரத்தில் இங்கே நம்ம ஊர் மாதிரி எனிமா கொடுக்க மாட்டார்கள். அதனால் முடிந்தவரை லிக்விட் அல்லது ஆகாரம் குறைத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். நிறைய லேடீஸ் புஷ் பண்ணுங்க என்று டாக்டர் சொல்லும்போது ஆக்சிடெண்ட் செய்து விடுவோம் என்று வெட்கப்பட்டுக்கொண்டு செய்ய மாட்டார்கள். நானும் அப்படியே வெட்கப்பட்டுட்டு டாக்டர்கிட்ட நல்லா திட்டு வாங்கினேன்னு சொன்னாள். அம்மாவிடன் கேட்டதுக்கு இதெல்லாம் உனக்கு தெரியும்னு நினைச்சேன். அவள் சொன்னது சரிதான். அதே போல என்னதான் புஷ் செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தாலும்( வலி அதிகமாக இருக்கும்போது அப்படி தோன்றும்) டாக்டர் சொல்லும்போதுதான் செய்ய வேண்டும். அவர் நிறுத்துன்னு சொன்னா நிறுத்திடணும். மீண்டும் சொல்லும்போது செய்யணும்னு சொன்னாங்க. நானும் ஞாபகம் வெச்சுக்கிட்டேன்.

அந்த வாரமே என் கணவரிடம் நான் ஒரு டெலிவரியை நேரில் பார்த்தே ஆக வேண்டும் ரொம்ப நச்சரித்து, அவரும் ஒரு நாள் லேபர் வார்டுக்கு கூட்டிட்டுப் போனார். ஒரு 20 வயசுப் பொண்ணு மாதிரி ஒருத்தி ரொம்ப கூலா படுத்துட்டு இருந்தாள். நானும் என்னடா இவ அழவே மாட்டேங்கறாளேன்னு பார்த்துட்டே இருக்கேன். நர்ஸ்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பேபி பொறந்துடும்னு சொல்லிட்டு ஏதேதோ பண்ணிட்டு இருக்காங்க. அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. பத்தாததுக்கு என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ணாள். நேரம் ஆக ஆக எனக்கு பயமா ஆயிடுச்சு. நான் போறேன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். ஏன் இவ அழவே இல்லைன்னு கேட்டா இது அவளுக்கு 9 வது குழந்தை. அதான் அழலன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் நான் அங்கே நிக்கவே இல்லை. வீட்டுக்கு வந்துட்டேன். இன்னைக்கு அவளை நினைச்சாலும் எனக்கு சிரிப்பா வரும்.

22 ந்தேதி மதியம் இண்ட்யூஸ் செய்து விட்டார்கள். அப்போதிருந்து எதுவும் சாப்பிடவில்லை. தண்ணீர் மட்டும் அவ்வப்போது சிப் செய்துக் கொண்டேன். அதுவும் ரொம்பவும் கொஞ்சமாக அரை வாய் அளவுதான் தந்தார்கள். 23 ந்தேதி காலை 3.30 மணி வரை பார்த்துவிட்டு , அதுவரைக்கும் சரியான டைலேஷன் இல்லாவிட்டால் சிசேரியன் எடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்கள். நர்ஸ் எனது கால்விரல்களில் இருந்த நெயில் பாலீஷை ரிமூவ் பண்ண ஆரம்பித்தார்கள். சிசேரியனுக்கு கொண்டு செல்வதாக இருந்தால் அனஸ்தீஷியா கொடுக்கும்போது விரல் நகங்களில் நெயில் பாலீஷ் இருக்கக்கூடாதாம். நான் போட்டிருந்த நெயில் பாலீஷை அவரால் ஸ்ப்ரிட் கொண்டு அழிக்க முடியவில்லை. எனக்கு சிசேரியன்தானா , இவ்வளவு ப்ராக்டிஸ் செஞ்சும் ஒரு ப்ரயோஜனமும் இல்லையா என்று இருந்தது. சிறிது நேரம் கழித்து வலி கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது. தாங்கிக் கொள்ளும் அளவுதான் இருந்தது. அதுவுமில்லாம வலி முதலில் ஆரம்பிக்கும்போது அதிக இடைவெளி விட்டுதான் வரும். அப்போது ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மீண்டும் வலி வரும் என்று முன்கூட்டியே தாங்கிக் கொள்ள மனதை ரெடி செய்து கொள்வது நல்லது. அந்த வலி கடுமையான பீரியட்ஸ் வலியைப் போன்று இருந்தது. வலி வரும் இடைவெளி குறையும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் புஷ் செய்ய வேண்டும் (உள்ளிருந்து தள்ளுவது போன்ற உணர்வு) என்ற உணர்வு வர ஆரம்பிக்கும். அப்படி தோன்றும்போது மூச்சை உள்ளிழுத்து வாய் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை வெளியேற்றினால் தள்ள வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்தலாம். நம்மால் இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது, என்னதான் மூச்சை உள்ளிழுத்து நிறுத்தினாலும் உள்ளிருந்து தள்ளுவது போன்று தோன்றினால் டாக்டரிடன் சொல்லலாம். 4 மணிக்கு மேல் இன்னும் கொஞ்ச நேரத்தில் டெலிவரி ஆகிவிடும் என்று எனக்கே தெரிந்தது.

ஜூலை 23ந்தேதி காலை 5.30 மணிக்கு என் பையன் பிறந்தான். அப்போது அதே சமயத்தில் அங்கே 7 குழந்தைகள் பிறந்தது. இவன் தான் அதுவரை அந்த ஹாஸ்பிட்டலில் பிறந்த குழந்தைகளிலேயே உயரமான குழந்தை. அப்போது பிறந்த குழந்தைகளில் ஒரே ஆண் குழந்தை. பிறந்தவுடனேயே ஒரே கத்தல். என்னிடம் காண்பித்து என்ன பேபின்னு சொல்லுங்கன்னு நர்ஸ் கேட்டாங்க. அதான் ஏற்கனவே தெரியுமேன்னு சொன்னேன். இல்லை, நீங்க பார்த்து கன்பர்ம் பண்ணி சொன்னப்பிறகுதான் நாங்க குளிக்க எடுத்துட்டுப் போவோம், நல்லா உங்க குழந்தையை பாருங்கன்னு சொன்னாங்க. பார்த்தேன். என் கண்ணிற்கு ரொம்ப நிறம் கம்மியா தெரிஞ்சான். என்னடா இது, நாமதான் குடும்பத்திலேயே கலர் கம்மின்னா என் பையனும் என்னை மாதிரியே பொறந்திருக்கானேன்னு நினைச்சிட்டு இருந்தேன். குழந்தை பிறந்த மறு நிமிடம் என் கணவரை காணவில்லை. பையனைக் குளிப்பாட்டறதைப் பாக்க ஓடியாச்சு. என்னை இன்னொரு டாக்டர்கிட்ட ஒப்படைச்சுட்டு, அவர் குழந்தையை என் அம்மாக்கிட்ட காட்ட போயிட்டார். மறுபடியும் அரை மணி நேரம் கழிச்சு தூக்கிட்டு வந்தார். என் கண்ணை என்னாலேயே நம்ப முடியல. அவ்வளவு ரோஸ் கலரா இருந்தான். இன்னைக்கு வரைக்கும் என் வீட்டில் என்னை ஓட்டுவாங்க. உனக்கு இத்தனை நிறமா ஒரு பையனான்னு. அவன் மத்த குழந்தைங்க மாதிரி இல்லாம கண்ணை நல்லா திறந்துட்டு, ஏற்கனவே வயத்துலேயே நல்லா வளர்ந்த மாதிரி 6 மாச குழந்தை மாதிரி இருந்தான். இப்பவும் அந்த ஒவ்வொரு நிமிஷமும் நல்லா ஞாபகம் இருக்கு. அவனையும் என்னையும் உடனே எங்க ரூமுக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டாங்க. என் அம்மாவுக்கு அவனைப் பாக்க பாக்க அதிசயம். சிறு வயதில் இறந்துப் போன என் அண்ணனின் பிறந்த நாள் அன்றுதான் நான் கர்ப்பம் என்று தெரியவந்தது. அதேபோல என் மகன் அவனை அப்படியே அச்சில் வார்த்ததுபோல பிறந்திருக்கிறான் என்று என் அப்பா சொன்னார்கள். இன்றும் அவனை அம்மா என் மகன் உனக்கு பிறந்திருக்கிறான், ஒழுங்கா பார்த்துக்கோ என்றுதான் சொல்வார்கள்.

தளிகா சொன்னதுபோல் அந்த கடைசி நிமிடங்கள்தான் வலியே தெரியாத நிமிடங்கள். நாம் நன்றாக ஒத்துழைத்தால் நிச்சயம் பிரசவம் என்பது எளிதாக இருக்கும். சிலர் வலி தாங்க முடியாமல் எபிடியூரல் எடுத்துக் கொள்வார்கள். டெலிவரிக்கு பின்பு அதனால் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனை தவிர்ப்பது நல்லது. எபிசியாட்டமி என்பது முதல் பிரசவத்தில் எல்லாருக்கும் பொதுவாக செய்யப்படுவதுதான். குழந்தை பெரிதாக இருந்தால் Vagina வில் சேதம் ஏற்படாமல் இருக்க அப்போது வஜினாவில் சைடில் கட் செய்வார்கள். குழந்தை பிறக்கும்போது அங்கே ஒரு வித numbness (மரத்துப்போன உணர்வு) இருப்பதால் அங்கே கட் செய்வது வலிக்காது. பிறகு குழந்தை பிறந்ததும் லோக்கல் அனஸ்தீஷியா கொடுத்து தையல் போட்டு விடுவார்கள். இப்போதெல்லாம் தையல் போடும் நூல் தானாகவே சேர்ந்துவிடுதைப் போன்று போடுகிறார்கள். முன்பெல்லாம் அந்த தையலைப் பிரிக்க டெலிவரி முடிந்து சில வாரம் கழித்து டாக்டரை பார்க்க வேண்டியிருக்கும். இப்போது தேவையில்லை. டெலிவரி முடிந்தப் பிறகு நல்ல நார்ச்சத்து மிக்க உணவு வகைகள் சாப்பிடுவது அவசியம். டெலிவரிக்கு முன்பும், பின்பும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குழந்தைக்கு பால் தரும்போது முடி கொட்டும் பிரச்சனை ஏற்படும். அதனை தவிர்க்க கீரை, பேரிச்சை சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றை சாப்பிட்டவுடம் பால் அருந்த வேண்டும். இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்.

திவ்யா, நல்லபடியாக தைரியமாக பிரசவத்தை எதிர்நோக்குங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காக இதனையெல்லாம் சொல்ல வேண்டும் என்றே நேரம் கிடைக்காவிட்டாலும் எப்படியோ சமாளித்து டைப் அடித்துவிட்டேன். உங்க குட்டிப் பாப்பா பிறந்தவுடன் தெரியப்படுத்துங்கள். ஜெயந்தி மேடம் உங்க அன்பான விசாரிப்புக்கு உடனடியா பதில் எழுத முடியாததுக்கு மன்னிச்சுக்குங்க. தளிகா, பிரதிபாலா எப்படியாவது இந்த வாரக் கடைசியிலாவது உங்களுக்கு மெயில் அனுப்பனும். திட்டாதீங்க.

ஹாய் தேவா
ஜூலை 7, 2008 - 11:54pm - வழங்கியவர் thalika

யூ ஆர் ரியலி க்ரேட் ..ரொம்ப தெளிவாக முழுவதும் எப்படி சொல்ல முடிஞ்சதுன்னு யோசிக்கிறேன்.
ஆமாம் திவ்யா அதை சொல்ல மறந்து விடேன்..ஷகீலா இதைப் படிப்பதாக இருந்தால் கட்டாயம் அந்த வேலையை செய்யுங்க...குழந்தைக்கான க்லோத் டயஒஅர் துணிகள் நல்ல காட்டனில் வெள்ளை வெளேர் என கிடைக்கிறது...அது நல்ல ஈரத்தை உறிஞ்சும்..குழந்தையை குளிக்க வைத்த பின் அதில் துடைக்கவும் செய்யலாம் அந்தளவுக்கு சாஃப்டாகவும் சுத்தமாகவும் இருக்கும்.வேற எல்லாத்துக்கும் யூஸ் பன்னலாம்.
நான் அதில் 3 துணியை குழந்தையை குளித்த பின் துடைக்க வேண்டி ஃபேப்ரிக் பெயின்டால் அதன் மூலையில் மார்க் பன்னினேன்.
மற்ற துணியில் 4 துணியை முகம் ,கக்கி வைத்தால் துடைக்க தனியாக மாரக் பன்னினேன்..மீத துணியை சும்மா வைத்திருந்தேன்..அது மிகவும் உபயோகமாக இருந்தது..
ஆமாம் தேவா சொன்னது போல் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.நம்ம ஊரில் பல ஹாஸ்பிடலிலும் டெலிவரி ஆகியபின் 3 அல்லது 4 நாட்களில் மோஷன் போனால் மட்டுமே டிஸ்சார்ஜ் பன்னுவார்கள்..எனக்கு சிரிப்பே தாங்கலை அதை கேட்டுட்டு.
பெரும்பாலனவர்கள் ஸ்டிச்செஸ் இருப்பதால் வலிக்குமேன்னு பயந்தே அடக்கி வச்சுட்டு பின்னாடி கஷ்டப்படுவார்கள்...பயப்படாமல் எரிச்சலை தாங்கி