topic_image


அன்புத்தோழிகளே என் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள்

எனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. எனது கணவர் என்னை நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறார். நல்ல குணமுடையவரும் கூட, ஆனால் அவர் மது அருந்துகிறார், தின்மும் வீட்டில் சண்டைதான், அவர் மிகவும் லீனாக வேற இருப்பார், மது அருந்துவதை அவரால் விடமுடியவில்லை என்கிறார், என்ன செய்வது, என் பிரச்சனையை வார்த்தைகளால் விளக்க முடியாது, இதை டைப் செய்யும் போது கூட என் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டுதான் இருக்கிறது. ப்லிஸ் என்ன செய்யலாம், எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்


Dhans
செப்டம்பர் 17, 2008 - 12:42am - வழங்கியவர் raji_jana

தங்கள் சென்னையில் இருந்தால் TTK ஆஸ்பத்திரிக்கு அழத்து செல்லுகள்

ஹாய் dhans
செப்டம்பர் 17, 2008 - 1:15am - வழங்கியவர் DEVA

கவலைப்படாதீங்க. அவரே வருத்தப்பட்டு சொல்றதால நிச்சயம் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க சான்ஸ் இருக்கு. முதல்ல டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. அவங்க rehabilation க்கு ரெகமெண்ட் பண்ணுவாங்க. அவர் மது அருந்தும் நேரங்களில் அதனை தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுங்கள். மனதை தளரவிடாதீர்கள். கணவரே வருந்தி, விடமுடியவில்லையே என்று சொல்லும்போது உங்கள் முயற்சி தோல்வி அடைய வாய்ப்பு குறைவு. ஆனால் இதற்கு உங்களின் மனதிடம் மிகவும் அவசியம். அவருக்கு பிடித்த விஷயங்களாக யோசித்து செய்யுங்கள்.

மது அருந்தும் நேரங்களில் வெளியில் வாக்கிங், ஷாப்பிங்னு அழைச்சுட்டுப் போங்க. இப்படி டைவேர்ட் பண்ணி மது அருந்தாத நாட்களை அவரிடம் குறிப்பிட்டு வித்தியாசத்தை விளக்குங்கள். குழந்தை பிறந்தால் அதன் உடல் நலம், அவருடைய ஆயுள் போன்ற விஷயங்களை பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். நீங்க எல்லாமே முயன்று இருப்பீர்கள். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அந்த முறைகளை மாற்றிப் பாருங்கள். மிக்க பொறுமை அவசியம். அதனை இழந்து விடாதீர்கள். எல்லோரிடத்திலும் மனதில் ஒரு குழந்தை உண்டு. விளைவுகளை சொல்லி புரிய வைக்க முயலுங்கள். எதனால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார் என்று தெரிந்தால் அதனைப் பற்றி மனம் விட்டுப் பேசுங்கள். உடனே எதற்கும் பலன் கிட்டாது. அவரை மொத்தமாக ஒரே நாளில் மறக்க சொன்னால் நிச்சயம் இயலாது.

முதலில் வீட்டிலேயே இந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆரம்பித்து, பிறகு அளவினை குறைக்க முயலுங்கள். இதனை நான் ஒரு முறை மங்கையர் மலரில் படித்திருக்கிறேன். மது அருந்தியப் பிறகு சாப்பிட வைத்து தூங்க வையுங்கள். சண்டை போட வேண்டாம். பொறுமையாக இருந்து உங்கள் பிரச்சனையை சரி சேய்யுங்கள். எல்லோரிடமும் சொல்லி, கூப்பாடு போட்டு, வீட்டில் தெரிவித்து என்று இல்லாமல், நீங்களே சிந்தித்து செயலாற்றுங்கள். இது அவருக்கு உங்கள் மேல் அன்பை அதிகப்படுத்தி, உங்கள் பேச்சை கேட்க வைக்கும். முதல் கட்டமாக டாக்டரைப் பாருங்கள்.