topic_image


இன்று மதியம் 2 மணிக்கு மேல் பெங்களூரில் தொடர்ச்சியாக எட்டு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து உள்ளன. அதிகாரப்பூர்வமான தகவல்கள்படி இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஜெய்ப்பூர் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, வெடித்த குண்டுகளின் எண்ணிக்கை ஒன்றாய் இருந்தாலும் பாதிப்பு குறைவுதான். அரசாங்கமும், அமைப்புகளும் கைத்தட்டி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.

2005ல் டில்லியில் பிடிப்பட்ட சில தீவிரவாதிகள், பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களை வெடிவைத்து தகர்க்கும் திட்டம் இருப்பதாக விசாரணையில் தெரிவித்தார்கள். அப்போது பெங்களூர் நகருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கே வெடிக்குண்டு, இங்கே வெடிகுண்டு என்று தினம் ஒரு புரளி வந்துகொண்டிருந்தது. ஒருவழியாக 3 வருடங்கள் கழித்து தீவிரவாதிகள் தாங்கள் திட்டமிட்டதை செயல்படுத்திவிட்டார்கள்.

அடுத்து என்ன.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், நடத்தியவர்களுக்கு கண்டணங்களையும் தெரிவித்துவிட்டு, நாம் நம்முடைய வழக்கமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டியதுதான். அடுத்த குண்டுவெடிப்பு செய்தி வர இன்னும் சிறிது நாட்கள் ஆகலாம்.

வாழ்க பாரதம்..


சோகமாக உள்ளது
ஜூலை 25, 2008 - 11:06am - வழங்கியவர் Vijitvm

நானும் இன்று கேள்விபட்டேன். என் ஹஸ் சொன்னார், ரொமபவும் மோசமா இருக்கு என்ன நடக்குது என்றே தெரியல்லை எப்படி எல்லாமோ பாதுகாப்பு கொடுக்கிறாங்க அப்படியும் இதெல்லாம் இன்னும் நிறய்யவே நடக்குது என்று தனியும் இந்த வேட்டை தெரியல்லை.இது படித்தவுடன் கஸ்டமா இருக்கு.

என்று தணியும் இந்த ..........
ஜூலை 25, 2008 - 11:28am - வழங்கியவர் இலா

பயங்கரவாதம்.. ஒன்றும் அறியாத மக்களை இப்படி செய்வதன் மூலம் எந்த இலக்கை அடைகிறார்கள்... நமது நாட்டிலே இப்படி பாதுகாப்பில்லை என்றால் நமக்கு வேறு எங்கு இருக்கும்... என் தம்பி சில மாதங்களுக்கு முன் தான் இந்த குண்டு வெடிப்பு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து சென்றான்... இது போல கோவையில் நடந்த குண்டு வெடிப்பும் மிக அதிர்ச்சியாக இருந்தது...

தொடர் குண்டு வெடிப்புகள்.. தொடரும் பயங்கரவாதம்..
ஜூலை 26, 2008 - 11:48am - வழங்கியவர் babu

நேத்து இந்த பதிவைப் போட்டப்ப, அடுத்த பதிவுக்கு இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும்.. அதுவரைக்கும் நம்ம வழக்கமான வேலையைப் பார்க்கலாம்னு நினைச்சேன். அது எப்படின்னு கேட்டு இன்னைக்கு மறுபடியும் கைவரிசையை காமிச்சு, இன்னொரு பதிவு போட வச்சிட்டாங்க..

என்ன எழுதறதுன்னு தெரியல.. இப்ப நான் வசிக்கிறது எந்த நாட்டுலன்னு ஒரு குழப்பம் மட்டும்தான் மனசுல எஞ்சி இருக்கு..
முன்னெல்லாம் காஷ்மீர் பக்கம் எங்கேயோ குண்டு வெடித்ததா அப்பப்ப செய்திகள் வரும். அப்படியான்னு ஒரு "உச்சு" கொட்டிட்டு, டெலிபோன் பில் கட்டினோமா, ஹாலில் இரண்டு நாளா எரியாத பல்ப்பை மாத்தினோமா, தண்ணி லாரியை விரட்டிக்கிட்டு தெரு கடைசி வரைக்கும் ஓடினோமான்னு நம்ம அன்றாட வேலையை பார்க்கப் போயிடுவோம். அது காஷ்மீர் மட்டில்ல இருந்தவரைக்கும் நமக்கு எதுவும் தெரியலை. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டில்லி, ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத், பெங்களூர்னு கீழே இறங்கி வர்றதை பார்க்கையில, வெறுமனே உச்சு கொட்ட முடியலை. சிட்டியில எந்த ஒரு முக்கியமான இடத்துக்கு போனாலும், நம்ம அறியாமலே ஒரு பயம் வர்றது நிஜம். இப்ப இங்க ஒரு பாம் வெடிச்சா என்னாகும்னு ஒரு சின்ன விபரீத கற்பனை மனசுக்குள்ள வந்துடுது.

இப்ப மனசுக்குள்ளே நிறைய கேள்விகள் ஓடுது.. யார் இவங்க? எத்தனை பேர்? எங்க இருக்காங்க? ஒரு நாள் டில்லியில, ஒரு நாள் பெங்களூர்ல, அடுத்த நாளே அஹமதாபாத்துல.. அப்படின்னா, இவங்க நெட்வொர்க் எவ்வளவு தூரம் பரவி இருக்கு? இவங்க கோரிக்கை என்ன? நோக்கம் என்ன? நாங்க இந்தியா முழுக்க இருக்கோம்.. உன்னால என்ன செய்யமுடியும்னு கேள்வி எழுப்பறாங்களா? நாங்க நினைச்சா எந்த நகரத்தையும் தாக்க முடியும்னு தகவல் தெரிவிக்கிறாங்களா? இது அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதலா? இல்ல ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு எதிரான தாக்குதலா? இவங்களுக்கு ஆதரவு தர்றது யாரு? அப்பாவி மக்களை கொன்னு குவிக்கிறது மூலமா இவங்க சாதிக்க நினைக்கிறது என்ன? .. ஒன்னு ரெண்டு கேள்வி இல்ல.. ஆயிரம் கேள்விங்க இருக்கு..

கடைசியா வர்ற கேள்வி இதுதான்.. எப்படி வளரவிட்டோம்? இதுக்கு தீர்வுதான் என்ன?

பிரச்சனைகள் இல்லாத நாடு கிடையாது.. இன்னைக்கு அமைதி தேசம்னு எந்த நாட்டையும் சொல்ல முடியல.. இருந்தாலும் எந்த நிமிசம் என்ன நடக்குமோன்னு மக்கள் பயந்து வாழ்ற நாடுகள், most dangerous countries ன்னு
பட்டியல் போடப்பட்ட நாடுகள் சில இருக்கு. சீக்கிரம் இந்தியாவும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துடுமோன்னு பயமா இருக்கு.

இந்த மாதிரி எதாவது நடந்த பிறகு, தூக்கத்தில இருந்து எழுந்திரிக்கிற அரசாங்கம் அவசர அவசரமா எதாவது நடவடிக்கை எடுக்கிறதும், அப்புறம் கொஞ்சம் சூடு தணிஞ்சவுடனே மறுபடியும் தூங்க போயிடுறதும் வழக்கமா நடக்கிற விசயமாச்சு.. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் பண்ண போறாங்க.. முள்ளு குத்துறப்ப மட்டும் கிளைகளை கழிச்சு விட்டுட்டு, வேருக்கு தண்ணி விடுற விளையாட்டைத்தான் இன்னமும் விளையாடுறாங்க.. ஆணிவேரை தேடி நறுக்காத வரைக்கும் இது விருட்சமா வளர்ந்து பரவிக்கிட்டுதான் இருக்கும். வேற என்ன சொல்றது?

நேற்று பெங்களூர், இன்று அஹமதாபாத்.. நாளைன்னு ஒரு கேள்வி குறி போட்டு முடிக்கணுமோ?

ஏன் இந்த தீவிர வாதம்?
ஜூலை 26, 2008 - 10:36pm - வழங்கியவர் kavisiva

தினமும் செய்தி கேட்பதற்கே பயமாகவும் வேதனையாவும் இருக்கு.
அட்மின் அண்ணா கேட்ட மாதிரி இந்த தீவிரவாதிகள் என்னதான் சொல்ல வர்றாங்க?அவங்க நோக்கம்தான் என்ன?
அதை விட கொடுமை போலீஸ் இன்னும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லைன்னு அறிக்கை விடுறதுதான்.இன்னும் கொஞ்ச காலம் போனல் இந்த வீட்டில் திருட்டு நடந்திருக்கிறது இன்னும் எந்த திருடனும் பொறுப்பேற்கவில்லைன்னு அறிக்கை விட்டாலும் விடுவாங்க போல.
நாமளும் எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்ச மாதிரி நாளயிலிருந்து வேர வேலைகளை பாத்துகிட்டு போய்டுவோம்.ஹ்ம்ம்ம்ம்ம்ம்

ஓம் முருகா
ஜூலை 26, 2008 - 11:31pm - வழங்கியவர் ohm_muruga

இந்த நாட்டை இனி அந்த முருகந்தான் காப்பாத்தணும்.

ஓம் முருகா..

pathu hapu eilai
ஜூலை 27, 2008 - 1:01am - வழங்கியவர் noorul

etha natai eilaraiyum pataitha eraivan than kapathanum goverment sari eilai

ஏன் இந்த கோபம்
ஜூலை 27, 2008 - 2:41am - வழங்கியவர் Thanisha

பெங்களூர், அகமதாபாத் குண்டு வெடிப்பு மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. டீவியில் நியூஸ் பார்க்கவே பாவமாக இருக்கிறது. அப்பாவி மக்கள் மீது என்ன கோபம் குண்டு வைத்தவர்களுக்கு.

பிரார்த்தனை செய்வோம்.
ஜூலை 27, 2008 - 3:29am - வழங்கியவர் shadiqah

குண்டு வெடிப்புச் சம்பவம் மனதினைப் பதறச் செய்கிறது.மனச்சாட்சியை விற்றுச் சாப்பிட்டவர்கள் செய்யும் அநீதம்.தீவிரவாததை எந்த மதமும் அனுமதிப்பதில்லை.சுய லாபங்களுக்காக நடக்கும் இப்படிப் பட்ட அநீதம் நிச்சயமாக களையப்பட வேண்டும்.இதுபோல் இனி நடக்காமல் இருக்க அநியாயக் காரர்களின் அட்டூழியம் ஒழிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
ஸாதிகா

ஜார்கண்ட்
ஜூலை 27, 2008 - 5:47am - வழங்கியவர் Thanisha

பாவிகள் ஜார்கண்டிலும் குண்டு வைத்து விட்டார்களாம். இன்னும் எத்தனை இடமோ... இறைவன் தான் காப்பாத்தனும்

மனம் பொறுக்கவில்லை!
ஜூலை 27, 2008 - 7:33am - வழங்கியவர் MarliyaNoohu

எவ்லோ சின்ன குழந்தைகளெல்லாம் காயம் மற்றும் மரண விழும்பில் இருக்கிறது கவர்மெண்ட் சரி இல்லை எல்லா இடமும் பணம் பந்தாட படுகிறது அதுக்கு விலை மனித உயிர்கள் அதிலும் அப்பாவி மக்கள்..தலைவர்களெல்லாம் பயப்பட வேண்டாம் இனி நடக்காது என்கிறார்கள் ஆனா வெடிப்பது வெடிக்கதான் செய்கிறது அப்படிபட்ட தலைவர்களை பொது இடத்தில் நிறுத்தி வைத்தால் தெரியும் மக்களின் பீதி!இப்பலாம் டிவியை பார்கவே கஸ்டமா இருக்கு இறைவனிடம் வேண்டனும் நாமெல்லாம் இனியும் இது தொடர கூடாது சரியான கவர்மெண்ட் வரனும்னு!மக்கள் முதலில் விழிப்புணர்வுடன் இருக்கனும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

நெஞ்சு பொறுக்குதில்லையே
ஜூலை 28, 2008 - 3:34am - வழங்கியவர் T S JAYANTHI

அவர்களுக்கு என்னதான் வேண்டும்.
பாபு சொல்வது போல் குண்டு வெடித்ததும் செய்திகள் வந்ததும் மூலைக்கு மூலை அனுதாப அலை வீசுகிறது. பிறகு அடங்கி விடுகிறது. அப்பாவி மக்களைக் கொல்வதால் யாருக்கு என்ன லாபம்?
குழந்தைகளைக் காணாமல் பெற்றோர் தேடி அலைவது மனதை உலுக்குகிறது. இதன் முடிவுதான் என்ன.
உள்ளூர் தீவிரவாதி, வெளியூர் தீவிரவாதி, சர்வ தேச தீவிரவாதி என்று ரகம் ரகமாகத் தீவிரவாதிகள்.
இதை எப்படித்தான் ஒழிப்பது?
அன்புடன்
ஜெயந்தி மாமி

கேரளாவில் நடந்த கொடுமை
ஜூலை 28, 2008 - 4:06am - வழங்கியவர் kavisiva

நாட்டில் குன்டு வைத்து தீவிரவாதிகள் சேதம் உன்டாக்கறாங்களேன்னு கவலை பட்டா கேரளாவில் ஒரு செய்தி.இது வீட்டு தீவிரவாதம்.ஒருவன் முதல்நாள் மனைவியை கொன்று வீட்டில் மறைத்து வைத்து விட்டு அடுத்த நாள் வீடில் இருந்த அவன் இரன்டு குழந்தைகளையும் கொன்று செப்டிக் டேங்கில் மறைத்து வைத்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் அதே வீட்டிலிருந்து வெலைக்கும் போய் வந்திருக்கிறான் .10 நாள் கழித்து ரு ஆச்ரமத்தி ல் தங்கி படித்த தன் மற்ற இரன்டு குழந்தைகளையும் கூட்டி வந்து அவர்களையும் கொன்றுவிட்டான் அந்த பாவி.அதை விட கொடுமை அவனுடைய மோத்த பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு கொன்றிருக்கிறான்.இப்போ போலீசில் பிடிபட்ட பிறகு நாந்தான் கொன்றேன்னு சொல்லி கூலா ந்க்கறான்.டீவியில் அவன பார்க்கும் போது அவனை அப்படியே எண்ணெய் கொப்பறையில் தூக்கி போட்டா என்னன்னு ஆத்திரமா வருது?
ஏன் இப்படி எங்கெ பிரச்சினை?புரியவில்லை

என்று தணியும் இந்த மரண தாகம்
செப்டம்பர் 13, 2008 - 3:59pm - வழங்கியவர் kavisiva

மீன்டும் ஒரு தொடர் குண்டு வெடிப்பு.இந்த முறை தலைநகர் டெல்லியில்.20பேர் மரணம்.90 பேருக்குமேல் காயம்.
என்று அடங்குமோ இந்த மிருகங்களின் கொலை வெறி

மனது மிகவும் கலங்குகிறது
செப்டம்பர் 13, 2008 - 7:10pm - வழங்கியவர் Thanisha

டெல்லி குண்டு வெடிப்பு மிகுந்த வேதனை தருகிறது. இதை எப்படி சரிசெய்யும் அரசாங்கம். அநியாயமாய் சாகும் அப்பாவி மக்களுக்கு எப்போது விடிவு காலம் கிடைக்கும்

அக்கிரமம்
செப்டம்பர் 14, 2008 - 9:17am - வழங்கியவர் thalika

முன்ன இது போன்ற சம்பவங்கள் வந்தால் உடனே லஷ்கரே த்வயிபா சிமி அது இதுன்னு எதெதுவோ அமைப்பை சொல்வாங்க சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க...ஆனால் அது அவங்க தான் செய்தாங்க என்றால் அவங்களுக்கு கிறுக்கா?அவங்களுக்கு எதிர் யாரோ அவர்களை அல்லவா குறி பார்க்க வேண்டும் ஆனால் அதில்லையே படுவதெல்லாம் அப்பாவிகள்..
இதுக்கு பின்னால் முழுக்க முழுக்க இன்டெர்னேஷனள் அளவில் சதி தான்...ஷாதிகா அவர்களின் வரிகள் ரொம்ப சரி..சிலரது பெரிய அளவு லாபத்துக்காக இப்படி நம்முடைய சதையை கொடுக்க வேண்டியதாக இருக்கு.
இது எங்கு கொண்டு போய் விடுமோ எதுவுமே புரியவே இல்லை.இதற்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்று இன்னமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு லூசு என்று அர்த்தம்.
இது மதமோ மண்ணாங்கட்டியோ கிடையாது என்பதே எனது கருத்து.அது என்ன அதிசயமோ அழகா நம்ம நாட்டு தலைவர்களும் குடும்பங்களும் மட்டும் எல்லாத்திலிருந்தும் தப்பிச்சுக்குது.
மனுஷங்க வரவர ரொம்ப சுயநலவாதிகளாக மாறிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது அது கூட இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம்