topic_image


இரவில் குழந்தைகளை பெற்றோருடன் உறங்கச் செய்வது ஆரோக்கியமான முறையா? இதனால் பெற்றொரின் தனிமை பாதிக்கப்படுகின்றதா, இல்லையா?

அன்புத்தோழியர்களே, அருமைத் தங்கச்சிங்களே, பெருமைக்குரிய சகோதரர்களே, தம்பிகளே (முக்கியமாக பாபுத்தம்பி) அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.
இப்படி ஒரு அருமையான தலைப்பையும், தீர்ப்புகூறும் வாய்ப்பையும் கொடுத்த மனோகரிக்கு நன்றி.
ஒரு சாரார் சொல்லுவாங்க "அந்தக்காலத்திலே வீட்டிலே தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, அப்படி இப்படின்னு நிறைய சொந்தக்காரங்க இருந்தாங்க. குழந்தைங்க பாட்டி கிட்ட கதை கேட்டுக்கிட்டே தூங்குவாங்க. எங்க அம்மா, அப்பா எல்லாம் ஜாலியா இருந்தாங்க. நாங்கள்ளாம் பாட்டி, தாத்தா கூட தூங்குவோம். ம் இந்தக்காலத்தில அதெல்லாம் முடியுதா" அப்படிம்பாங்க. இதிலேந்து என்ன தெரியுது இவங்க வீட்டிலே குழந்தைங்களுக்கு தனி படுக்கை அறை கிடையாது.

இன்னொரு சாரார், "இதிலே என்ன தப்பு? ஒரு வயசு வந்துட்டா குழந்தைங்களை தனியாதான் படுக்கவைக்கணும். இதுதான் முறை"ம்பாங்க. இவங்களுக்கு தனிமை தேவைப்படுது.

தங்கச்சிங்களா, நீங்கள்ளாம் அவங்கவங்க பக்கத்து நியாயத்தை எடுத்து வுடுங்க. நான் கட்சீல வந்து தீர்ப்பு சொல்லுவேன்.
நம்ப கையிலே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்.
அன்புடன்
ஜெயந்தி மாமி


பெற்றோரின் தனிமைக்கு பாதிப்பு
அக்டோபர் 4, 2008 - 9:18pm - வழங்கியவர் Manohari

பட்டிமன்றத்தின் இந்த தலைபிற்கு நடுவராக இருக்க சம்மதித்து புதிய இழையத்தொடங்கி வைத்ததற்கு மிக்க நன்றி அக்கா. இந்த தலைப்பை பொருத்தவரை நான் "இதனால் பெற்றொர்களின் தனிமை பாதிக்கபடுகின்றது" என்று வாதாட வந்துள்ளேன். இந்த விசயம் அந்தக் காலம் இந்த காலம் என்று இல்லாமல் எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு விசயம் ஏன்னா குழந்தைகள் பெற்றோருடனோ அல்லது உறவினருடனோ தான் தூங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.எங்கு படுத்தாலும் தூங்க வேண்டும் அது ஒரு இயற்கையான விசயம்.ஆனால் இதுவே சில குடும்பங்களில் பெற்றோரை பிரிக்கும் ஒரு பாலமாக அமைகின்றது என்பதை எத்தனையோ பெற்றோர்களால் அதை உணர முடியாமல் இருப்பது தான் பரிதாபமான விசயம். இன்னும் பேசுவோம்.

அன்பு நேயர்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்கள் பதிவுகளின் தலைப்பில் நீங்க வாதாடும் கட்சியைக் குறிப்பிடும்படியான தலைப்பை போடவும், இதனால் நடுவருக்கு தீர்ப்பு கூறுவது சுலபமாக இருக்கும் சரீங்களா.

பெற்றோரின் தனிமக்கு பாதிபு
அக்டோபர் 5, 2008 - 4:47am - வழங்கியவர் thalika

கண்டிப்பாக அது பாதிப்பு தான் எல்லாம் தெரிந்திருந்தும் கூட தான் படுக்க வைக்கிறேன்.எப்படி தனியாக படுக்க வைக்க குழந்தை பாவம் என்பதெல்லாம் அடுத்து வரும் விஷயம்..ஆனால் பல குடும்பங்களிலும் ப்ரச்சனைக்கு முதல்க் காரணம் அது தானாக இருக்கும்..வெளியே மேலோட்டமாக கனவர் மனைவியை திட்டுகிறார் மனைவி சரியாக அனுசரிப்பதில்லை என்றெல்லாம் சொன்னாலும் உண்மையான பெருமாலான ப்ரச்சனைக்கு காரணம் இதுவாக தான் இருக்கும்..அரிகில் பிள்ளைகள் இருப்பதால் இருவரிடையே நெருக்கம் வரும் வாஇப்ப்ய் மிகவும் குறையும்...இன்னும் பல தாம்பத்திய விஷயங்களில் அருகில் குழந்தை இருந்தால் ஈடுபட மிகவும் சிரமம்..அதிலும் அது கொஞ்சம் வளர்ந்து இடையே எழுந்து விட்டால் வாழ்நாள் பூரா குற்றௌணர்வு தான்.
அதுக்காக இப்ப தாம்பத்தியமா பெரிசு என்று கேட்கலாம்.ஆம் அது தான் எல்லாத்துக்கும் முக்கிய காரணம்.அதிலிருந்து தான் எல்லா ப்ரச்சனையும் முளைக்கும்.என் கனவரின் தோளில் நான் விளையாட்டுக்கு கைய்யைப் போட்டாலே என் மகள் இருவரையும் அடிப்பாள் கைய்யை எடுக்க சொல்லி.இதில் கூடவே எப்பவும் படுக்க வைத்தால் அவ்வளவு தான்

குழந்தைகளை கண்டிப்பாக நம்முடன் படுக்க வைக்கக் கூடாது
அக்டோபர் 5, 2008 - 6:32am - வழங்கியவர் suhaina mazhar

குழந்தைகளை கண்டிப்பாக நம்முடன் படுக்க வைக்கக் கூடாது. "பத்து வயதானவுடன் படுக்கையை தனியாக்கி விடுங்கள்" என்று நபிகள் நாயகமே சொல்லியிருக்கிறார்.

ஆனால் முன்று அல்லது நான்கு வயதானவுடனே தனியாக படுக்க பழக்கி விட வேண்டும்.

ஒரு நாள் என் மகள் தூங்கி விட்டாளென்று நினைத்து நாங்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருந்தோம், பிறகு தான் தெரிந்தது அவள் தூங்கவில்லையென்று.

அடுத்த நாளே தனியாக படுக்க வைத்து விட்டேன். கொஞ்சநாள் பழகும் வரை என் கணவர் பிள்ளைகளுடன் அவர்கள் தூங்கும் வரை படுத்திருப்பார். அப்புறம் பழகி விட்டார்கள்.

நாள் முழுதும் குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களுக்கு இரவின் தனிமையில் கணவரின் அன்பும் அணுசரிப்பும் கண்டிப்பாக தேவை, அதை ஒரு போதும் இழக்க முடியாது.

மேலும் குடும்ப பட்ஜெட் போன்ற முக்கியமான விஷயங்கலை முடிவெடுக்கும் போது பிள்ளைகள் உடனிருப்பது சில பின் விளைவுகள் ஏற்படுத்தும்.

நாங்கள் டூர் போனால் கூட ஒரு முறை குழந்தைகளை அழைத்துச்செல்வோம், மறுமுறை தனியாக செல்வோம்.

இளமை முடியும் முன் நாம் சிறிது நமக்காகவும் வாழவேண்டும்.

குழந்தைகள் தூங்கும் வரை வெயிட் பண்ணும் எவ்வளவோ பெற்றோர், தங்களை அறியாமலேயே யாரோ ஒருவரேனும் தூங்கிப் போகிறார்கள். இதனால் கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படுகிறது. இது எல்லா வீட்டிலும் நடப்பது தான்.

எனவே நமக்காகவும் கொஞ்சம் வாழவேண்டுமென்றால் குழந்தைகளை தனியாகத்தான் படுக்க வைக்க வேண்டும்.

சுமஜ்லா

ஆ... ஆரம்பமாகிவிட்டதா......
அக்டோபர் 5, 2008 - 8:35am - வழங்கியவர் அதிரா

ஆ... ஆரம்பமாகிவிட்டதா......
இதோ வந்திட்டேன், நான் நினைத்தேன் எங்கே ஜெயந்திமாமி காணாமல் போய் விட்டாவோ என்று..... என்னுடைய கட்சி, குழந்தைகளை எம்முடன் தான் உறங்க வைக்க வேண்டும்....

மாமி நான் இதுபற்றி நிறைய எழுத வேண்டும்..... அதனால் அவசரப்படு தீர்ப்பை வழங்கிட வேண்டாம்... இப்போ நேரமில்லை... 2/3 நாள் போகட்டும் மாமி தீர்ப்புச் சொல்ல.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் பொண்ணுதான்! என்னோடுதான்!
அக்டோபர் 5, 2008 - 10:02am - வழங்கியவர் MarliyaNoohu

என்ன மாமி இப்படி அசத்துறீங்க வாழ்த்துகள்..எனக்கு விரிவாக போட டைம் இல்லை ஆனா குழந்தைகள் என்னோட வைத்துகனும் அதுதான் என் கருத்து :-)

அவங்க தளி சொன்னது போல அப்படி கோபமாக கையை எடுன்னு சொல்லும் அழகே தனிதான்....தூக்கத்தில் நம்மை தேடுவது..உலருவது...அரை தூக்கத்தில் வந்து என்னை கிஸ் செய்யுவது இதெல்லாம் பார்க்க மனசுக்கு எவ்லோ சந்தோசம்..இன்னும் நிறைய இருக்கு டைம்தான் இல்லை...

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹாய் சுமஜ்லா,
அக்டோபர் 5, 2008 - 10:12am - வழங்கியவர் asiya omar

நீங்கள் சொல்வதுதன் சரி.என் குழந்தைகள்,தனியாகதான் படுப்பார்கள்.நான் கொஞ்சநேரம் அவர்களோடு படுத்தால் கூட டேடி போயாச்சு ,நீங்க போங்கமானு அனுப்பிவிடுவார்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

முதலில்
அக்டோபர் 5, 2008 - 3:42pm - வழங்கியவர் santho

முதலில் எனக்கும் தலைப்ப படித்ததும் குழந்தைகள் நம்முடன் இருப்பது தான் நல்லது என்று தோன்றியது ஆனால் சுஹைனா தளிகா இவர்களின் கருத்துக்களை படித்ததும் எனக்கும் அவர்கள் கூறுவது தன் சரி என்ரு தோன்றுகிறது...அதாவது நானும் குழந்தைகள் தனியே படுத்து கொள்வது நல்லது என்று தான் வாதாட விரும்புகிறேன். அவ்வாறு தனியே இருந்து பழகுவதால் பெற்றவர்க்கு இருக்கும் இடையே அன்னியோன்யம் அதிகரிக்கிறது மேலும் குழந்தைகளை பற்றி அவர்கள் எதிர் காலம்,படிப்பு பற்றி நம்மால் கலந்து ஆலோசிக்க முடிகிறது..மேலும் குழந்தைகளும் தனியே இருந்து பழக வேண்டி உள்ளது,,அதாவது வெளியூர்,வெளிநாடு சென்று படிக்கும் போது அது அவர்களூக்கு கண்டிப்பாய் பயன்படும்.அவர்கள் தனியே படுப்பதால் அவர்களுக்கும் நமக்கும் உள்ள அன்பு குறைய வாய்ப்பு இல்லை..நாள் முழுவதும் அவர்களை நாம் கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்.மேலும் குழந்தைகளுக்கு தேவை இல்லாத பயம் அழிந்து தைரியம் வரும்..

தனியாக படுக்க வைப்பதே நல்லது.
அக்டோபர் 5, 2008 - 4:24pm - வழங்கியவர் arunbala

என் கருத்து குழந்தைகளை தனியாக படுக்க வைப்பதே நல்லது.அவர்களுக்கு என்று தனியறை இருப்பின் அதனை அவர்களின் இஷ்டம் போல் அலங்கரித்து( கார்ட்டூன் திரைச்சீலைகள் மற்றும் விரிப்புகள்) வைத்துவிடல் நல்லது.சிறிது வயதிற்கு பின் அவர்களுக்கென்ற உரிமையை தருதல் நல்லதே.கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவினை மேலும் வலுப்படுத்தவே இந்த முறை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.இரு குழந்தைகள் எனில் இந்த முறை மிக மிக எளிது.ஒரு குழந்தை எனில் சிறிது கடினமே. Every day is a little life.Live it to its fullest

.பிள்ளைகளுக்கும் பாதிப்பு தான்.
அக்டோபர் 5, 2008 - 7:17pm - வழங்கியவர் Manohari

நடுவர் அவர்களே எங்கள் கட்சி தான் ஸ்ட்ராங்காகிக் கொண்டு போவதை கவனித்திருப்பீங்க, உங்களுக்கும் இரண்டு குழந்தைகளை வளர்த்ததின் அனுபவம் நல்லாவே இருக்கும் என்பதால், கொஞ்சம் முன்னே பின்னே பார்த்து தீர்ப்பை சொல்லுங்க சொல்லுவீங்கன்னு தெரியும். இருந்தாலும் நாங்க அப்பபோ வந்து இப்படி நினைவுப்படுத்திக் கொண்டிருப்போம்.

என் கட்சியைச் சேர்ந்தவங்க ரொம்ப ரொம்ப தெளிவாக பேசுராங்க அதை யெல்லாம் பார்த்த பின்பும் எதிர் கட்சியினர் குழந்தையை கட்டிப் பிடிச்சித்தான் தூங்குவேன் என்று அடம் பிடிப்பவர்களை நாங்கள் என்னச் சொல்வது? எங்க வாதம் என்னன்னா கணவன் மனைவிக்குள் ஒரு அன்னியோன்யத்தை வளர்த்துக்கோங்க அதற்கு தடையாக குழந்தையை வைத்துக் கொண்டு பிறகு அவஸ்தைப் படாதீங்கன்னு தான், குழந்தைக்கென்று தனி அறை மற்றும் தனி உடமைகளை கொடுத்துப் பாருங்க பிறகு உங்க பக்கம்கூட தலை வைத்து படுக்க மாடாங்கன்ற உண்மை புரியும். ஏதோ நாங்க எங்க அனுபவத்தில் கண்டதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்.

நாள் முழுவதும் நீங்க இருவருமோ அல்லது உங்க கணவரோ வெளியில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டில் கிடைக்கும் ஒரே சுகம் உங்க >>>>>பாட்னரின் அரவணைப்பு மட்டும் தான் நடுவர் அவர்களே இதை நோட் பன்னிக்குங்க.அதை வேண்டாம் என்று சொல்றவங்க ரொம்ப வேடிக்கையானவங்க.புருசனுக்கு சோறாக்கி போடுவது, தலை துவட்டுவது, காது கொடாய்வது, நகத்தை வெட்டுவது போன்று அவங்க அம்மா செய்ததையே நாமும் செய்துக் கொண்டிருந்தால் பிறகு அம்மாவிற்கு டாட்டா காட்டியதுப் போல், ஒருநாள் பொண்டாட்டிக்கும் டாட்டா காட்டிடுவார்கள் சில ஆண்கள்.அதெல்லாம் வெறும் அன்பைச் சார்ந்த விசயங்கள் ஆனால் இவையெல்லாவற்றும் மேலானது தான் இல்லற சுகம் என்பது இதில் தான் கண்ணுங்களா உசாராய் இருக்கனும் இல்லையென்றால் காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தள்ளிக்கிட்டு போன கதை தான் இதை எல்லாம் கேள்விப் பட்டிருப்பீங்க தானே. பிறகு என்ன பிடிவாதம். பேசாம எங்க கட்சிக்கு வந்துடுங்க ரொம்ப ஜாலியாய் இருக்கும்.

ஆமா நான் தெரியாமல் தான் கேட்கின்றேன் குழந்தையைக் கொஞ்சுவதற்கு மற்ற சந்தர்ப்பமே இவங்களுக்கு கிடைக்காதா? இல்லற வாழ்க்கையின் உச்சக்கட்ட சுகமே, அதுவும் எந்தவித இடையூறும் இல்லாமல் அதை அனுபவிப்பது படுக்கை அறையில் தானே,அதில் பச்சிளங்குழந்தையை அருகில் வைத்துக் கொண்டு செயல்படுவது அந்த குழந்தைக்குச் செய்யும் துரோகம் என்பதை நன்கு நினைவில் வைத்துக்குங்க, மேலும் புள்ளைகள பக்கத்தில் வைத்துக் கொண்டு என்னத செய்வது ஒன்னும் புரியல. ஆணுக்கு வேண்டுமானால் அதன் பிறகு ஓய்வுத் தேவைப்படும் ஆனால் பெண்மைக்கு அதன் பிறகும் கிடைக்கும் அந்த தொடு உணர்வு தான் அதிக திருப்தியைத் தரும் இதையெல்லாம் இழந்து பின்னாளில் நினைத்து தவிக்க வேண்டுமா? மேலும் இதனால் குழந்தைக்கும்கூட மனத்தளவில் எனென்னெ அசெளகரியம் வரும் என்பதை என் கட்சியினறும் தெளிவாக கூறிவருகின்றார்கள்.

எந்த விசயத்திற்க்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தான் கடைசி வரையில் நம்மை பின் தொடரும்.கடைசியாக ஒன்று சொல்கின்றேன் கணவருடன் வாழ்க்கை முழுவதும் செல்லச் சோறு சாப்பிட வேண்டுமானால் குழந்தைகளை இப்போதிலிருந்தே ஒரு அடி தள்ளி வைத்து வளருங்க இல்லைன்னா பொண்டாட்டிக்கோ அல்லது புருசனுக்கோ கிடைக்க வேண்டிய கிஸ்ஸு வேறு பக்கம் போய்விடும் அவ்வளவு தான், இன்னும் பேசுவோம்.

இந்த
அக்டோபர் 5, 2008 - 7:19pm - வழங்கியவர் thalika

இந்த இழையின் இறுதியில் தனியாக குழந்தையை படுக்கவைப்பது எப்படி என்பது பற்றி அலோசனை வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்

வாரேவா
அக்டோபர் 5, 2008 - 7:23pm - வழங்கியவர் thalika

வாரேவா அப்படியே சாலமம் பாப்பியா பட்டிமன்றத்தில் ஒல்லியா ஒரு வாத்தியார் பேசுவாரே அது போலவே பேசிட்டாங்க மனோஹரி.இனி வறேன் நானும் பிறகு

எங்கள் பக்கமும் "ஸ்ரோங்கு" தான்:)
அக்டோபர் 5, 2008 - 7:34pm - வழங்கியவர் அதிரா

இங்கே தலைப்பு "குழந்தைகள்" என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது, அதுதான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. எத்தனை வயதானாலும் தன் பிள்ளை, பெற்றோருக்கு குழந்தைதான், அதனால், நான் குறிப்பிடுவது, குழந்தை, பள்ளி வாழ்க்கையை தொடங்கும் வரையாவது, பெற்றோருடன் உறங்குவதே நல்லது. என்னைப்பொறுத்து, இதனால் பெற்றோரின் தனிமை பாதிக்கப்படுகின்றது என்று சொல்ல மாட்டேன். கணவன் - மனைவி உறவென்பது இளமையில் மட்டும்தானா? அல்லது திருமணமான புதிதில் மட்டும்தானா? . கணவனும் மனைவியும் மனம் ஒத்த தம்பதியராக, இருவரும் கருத்தொருமித்தவர்களாக இருந்தால்... கடைசி வரைக்கும் அவர்கள் இன்பமாக இருக்கலாம், ஆனால் குழந்தையை எம்முடன் உறங்க வைக்கும் காலம் என்பது மிகக் குறுகிய காலமே. 15 வயதிலும் எம்முடனேயே உறங்கப்போகிறார்களா? நாம் கூப்பிட்டால்கூட வந்து படுக்கமாட்டார்கள்.

பிள்ளைகளுக்காக சேமிக்கிறோம், நித்திரையில்லாமல் உழைக்கிறோம், வீடு வாங்குகிறோம்... எல்லாமே பிள்ளைகளுக்காக என்று பார்த்துப் பார்த்துச் செய்யும் நாங்கள், ஒரு கொஞ்சக் காலத்திற்கு பிள்ளைகளுக்காக எம்மையும் அஜஸ்பண்ணிப்போனால் என்ன?

நான் அறிந்தேன், முந்தினகாலத்தில் திருமணத்தின் பின்னர் கணவன் வேறிடத்தில் படுப்பாராம், மனைவி அங்குள்ள பெண்களோடு படுப்பாராம், இடையில் கணவனின் ஏதோ சைகை கொடுப்பாராம் அப்போ, அதை அறிந்து மனைவி எழுந்து போவாராம் கணவரிடம். அந்தக்காலத்திலும் அவர்கள் சந்தோஷமாக இருந்து அதிகம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவில்லையா?.

எனக்கு நினைவிருக்கிறது, நான் சின்ன வயதில் ஏதாவது கனவு கண்டு பயந்தால், பக்கத்தில் படுத்திருக்கும் அம்மா , என்ன கனவு என கேட்ட்கும்வரை சிணுங்குவேன்... பின்னர் கனவைச் சொல்லி, அம்மா அது ஒன்றுமில்லை கனவுதான் படுத்துக்கொள் என அணைப்பா அப்போது பயம் தெரியாமல் உறங்குவேன்... அதை இப்போ நினைப்பதுண்டு,,, அடுத்த அறையில் படுத்திருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் அது எழுந்துபோய்த்தான் சொல்ல வேண்டும். அல்லது பயத்தில் ஏங்கியபடியே படுக்க வேண்டியதுதான். காலையில், பிள்ளை பாதி உறக்கத்தில், பெற்றோரின் மேல் காலைப் போட்டுப் படுக்கின்றபோது அவர்கள் அடையும் ஆனந்தம் இருக்கிறதே.. அது எமக்கும்தான். அந்தச் சந்தோஷம் நெடுகவும் கிடைக்குமோ.

என் கணவருடன் வேலை செய்யும் ஒருவர் (வெள்ளை) கூறினாராம், தனக்கு ஒரு மகன், அவனுக்கு சிறிய வயதாக இருக்கிறபோது நான் வேலையால் வீட்டுக்குப் போனதும், என்னை ஓய்வெடுக்க விடாமல் என் மேல் புரள்வான், ஆனால் நானோ களைப்பால், அப்படி செய்யவிடாமல் கலைப்பேன், இப்போ அவனுக்கு 13 வயதாகிவிட்டது, எங்கள் அறைக்குள் வரவே தயங்குகிறான், திரும்பிப் பார்ப்பதற்கிடையில் காலம் ஓடிவிட்டது, இப்பொழுதுதான் நான் தவறு செய்துவிட்டதாக உணர்கிறேன் என, நிறைய வருத்தப்பட்டாராம்.

எங்கள் வீட்டிலும் பிள்ளைகளுக்கென தனி அறை இருக்கிறது, அவர்கள் விருப்பப்படியே கேட்டினிலிருந்து, கார்பெட், மேசை விளக்கு, தலைஅறை உறை , சீற்..... இப்படி எல்லாமே அவர்கள் விரும்பும் கட்டூனில் போடப்பட்டுள்ளது, அப்போ அவர்கள் தங்கள் நேரத்தை அந்த அறையிலேயே கழிப்பார்கள் ஆனால் இரவில் படுப்பது மட்டும் எங்களோடு, இதனால் எந்த வகையிலும் எங்கள் தனிமை பாதிக்கப்படவில்லை. பாடசாலை போகத் தொடங்கியதும் தாமாகவே அவர்கள் தனியே படுக்க விரும்புகிறார்கள், ஏனெனில் தமது நண்பர்களும் தனியறையில் படுக்கிறார்களாம்.. இப்படி குழந்தைகள் தாமாக விரும்பிப் படுத்தால் எமக்குக் கவலை இல்லை, அதுவரை எம்முடனேயே உறங்க வைத்தால் என்ன?. பிள்ளைகள் எம்முடன் படுக்கும்போது நான் நிம்மதியாக படுப்பதாக உணர்கிறேன், ஆனால் அவர்கள் தனி அறையில் படுக்கும் போதுதான் எமது நிம்மதி குறைகிறது, அடிக்கடி எழுந்துபோய் எப்படி உறங்குகிறார்கள் என நானும் கணவரும் மாறி மாறிப் பார்ப்போம். ஆனால் கணவனும் மனைவியும் ஒரே கருத்துடன் இணங்கினால் மட்டுமே, குழந்தையைத் தம்முடன் வைத்திருக்க முடியும், ஒருவர் விரும்பாவிட்டாலும் செய்ய முடியாது.

இன்னும் தொடரும்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கணவன்மாருக்கு பாதுகாப்பு அதிகம்....
அக்டோபர் 5, 2008 - 7:57pm - வழங்கியவர் அதிரா

கணவன்மாருக்கு பாதுகாப்பு அதிகம்....
என் கணவரிடம் கேட்டேன், இப்படி ஒரு தலைப்பு போகிறது, இதில் உங்கள் கருத்து என்ன என்று, அதற்கு அவர் சிரித்தபடியே சொல்கிறார்... பிள்ளைகளுடன் படுப்பது கணவனுக்கு அதிக பாதுகாப்பைக் கொடுக்கிறதாம்:)

தளிகா!! பிள்ளையைத் தனியே படுக்க வைக்க அதிகமாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை, 2 அடி கொடுத்து கட்டிலில் படுக்க வையுங்கள் பயத்தில் அப்படியே கண்ணை இறுக்கி மூடியபடி படுத்துவிடுவார்.... என்ன எதிர்க்கட்சியினனில் கூக்குரலால் பயந்துபோய் தனி அறையில் படுக்க வைக்க யோசிக்கிறீங்களா? பின்னாளில் கவலைப்படவேண்டாமே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இப்பத்திக்கி
அக்டோபர் 5, 2008 - 8:04pm - வழங்கியவர் thalika

இப்பத்திக்கி எனக்கு ஐடியா இல்லை..இரண்டாவது பிள்ளை வந்தால் தனி அறையே தான்..அப்பொழுது பழக்க வேண்டும்..என் கனவர் இருக்கிறாரே 17 வயது வரை அம்மாவை கட்டிக் கொண்டு தூங்கி இருக்கிறார்..என் மாமனார் இன்றும் புலம்புவார்..அது போல ஆகிவிடக் கூடாது தன் மகள் என இவரும் பயப்படுகிறார்...இப்பொழுதே ஆயத்தமாகிவிட்டால் தான் அவளது 6 வயதிலாவது தனியாக விட முடியும்.நானும் என் தங்கையும் எங்களது 4 வயதில் இருந்து தனியே தான் படுத்தோம்.என்றாவது மனதில் பயம் இருந்தால் சொல்வேன் என் அம்மா கூட படுக்க சொல்வார்.
இவரைப் போல தான் என் மகளும் தூங்கிவிட்டால் பிள்ளைகள் கொர்ர்ரென்று கொரட்டை விட்டால் பள்ளியென்ன பதினேழு வரை பக்கத்தில் வைக்கலாமே..இங்கே அலாரம் அடித்தால் கூட முதலில் எழுந்து அதை ஆஃப் பன்ன சொல்வது மகள் தான் இங்கே பலதும் நாங்கள் சேக்ரிஃபைஸ் பன்னவேண்டியதா இருக்கு

அதைத்தானே குழந்தை என்கிறோம்,
அக்டோபர் 5, 2008 - 8:45pm - வழங்கியவர் அதிரா

அதைத்தானே குழந்தை என்கிறோம்,
தளிகா அப்படியெல்லாம் செய்யாதுவிட்டால் அவர்கள் குழந்தைகள் அல்லவே.

எமக்கு நண்பர்கள், இருவரும் டாக்டர்கள், அவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் குழந்தை கிடைக்கவில்லை, அப்போ அதிகம் கவலைப்பட்டார்கள், குழந்தை பெற்றுக்கொண்டுதான் ஊருக்குப் போவோம் என்றிருந்தார்கள், குழந்தை கிடைத்தது, நான்கு மாதம் வரை தாய் வீட்டிலிருந்தார்(அப்போ வேலை கிடைத்திருக்கவில்லை), நாலாவதுமாதம் வேலை கிடைத்தது, கிடைத்ததை விட்டால் கிடைக்காது என அவர் வேலைக்குப் போனார், தன் பெற்றோரை வரவழைத்தார், பிள்ளையின் தொட்டில் பெற்றோர் அறைக்கு மாற்றப்பட்டது, இரவில் குழந்தை தன் தூக்கத்தைக் கெடுக்குமாம்,கெடுத்தால் வேலைக்குப் போக முடியாதாம், இப்போதுதான் எல்லா வசதியும் இருக்கிறதே, தாய்ப்பால் போத்தலில் கொடுக்கப்பட்டது. 1 வயது வரை பெற்றோர் நின்றனர் பின்னர் ஊருக்குப் போகும்போது , குழந்தையையும் கூட்டிப்போங்கள், இங்கே சமாளிக்க முடியாதென அனுப்பினர், பின் பிள்ளையின் 1 1/2 வயதில் இவர்கள் ஊருக்குப்போய் கூட்டி வந்தனர், குழந்தையைப் பிரிய மனமில்லாமல் அதிகம் அழுதது வீட்டில் நின்ற வேலைக்காரந்தானாம், ஏனெனில் அவரோடுதான் குழந்தை அதிகம் இருந்ததாம், இங்கு வந்ததும் முளுநேர டே கெயார்.( அதில் குறை சொல்ல முடியாது, இருவரும் வேலைக்குப் போனால் குழந்தையை டே கெயாரில் விடத்தான் வேண்டும்) காலை 8.30 தொடங்கி மாலை5.30 வரை பிள்ளை அங்கேயே இருக்கும், அதன் பின் அழைத்து வந்தால், 8 மணிக்கு பிள்ளை படுத்துவிடுவாராம்.. அப்படியே தூக்கிச் சென்று அழகாக பிங்க் கலரில் அலங்கரிக்கப்பட்ட அறையில் படுக்க விடுவார்கள். சாமத்தில் குழந்தை விழித்து "டாடி" "டாடி" எனக் கத்திக்கொண்டு ஓடிவருமாம், உடனேயே தூக்கிப்போய் தாங்களும் படுப்பதுபோல் பாசாங்குசெய்து படுக்க வைத்துவிட்டு வருவார்களாம். இதை சிரித்துச் சிரித்துச் சொல்வார், எனக்கு கேட்கவே இதயமெல்லாம் என்னவோ செய்யும். ஒரு நாளைக்கு தம்முடன் படுக்க விட்டால் , குழந்தை பழகிவிடுமாம், அதனால் தனிஅறைதான். பகலில்தான் வேலைக்குப் போகிறீங்கள் கடைசி இரவிலாவது உங்களுடன் வைத்திருந்தால் அக் குழந்தை எவ்வளவு சந்தோஷமாக வழரும்.

ஜெயந்திமாமி எந்தக் குழந்தையும் தானாக விரும்பி தனி அறையை நாடாது, அதனால் பச்சிளங் குழந்தைகளின் சாபத்திற்கு ஆழாகிவிடவேண்டாம்.... தீர்ப்பை பார்த்துக் கூறுங்கள்... எதிர்க் கட்சியினர் ஸ்ரோங் இல்லை, குழப்பத்தில் இருக்கிறார்கள். இப்போ பிள்ளைகளைத் தனி அறையில் படுக்க வைப்பது பாஷனாகிவிட்டது... ஒருவரைப் பார்த்து ஒருவர் அப்படித்தான் செய்கிறார்கள்... அணைப்புத் தேவையா? பாஷன் தேவையா? முடிவு உங்கள் கையில்..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா என்ன
அக்டோபர் 6, 2008 - 1:20am - வழங்கியவர் santho

அதிரா என்ன இது பேஷன்னு சொல்றீங்க?எது பேஷன்? குழந்தைகள் தனியே தானே எல்லாம் செய்யும் நாம் எதயும் எப்போதும் வருத்தி செய்ய வைக்க தேவை இல்லை..நீங்கள் சொன்ன நண்பர் வீட்டு குழந்தை போல யாரும் செய்யவேண்டியதில்லை..நானும் என் கணவரும் பேச கூட நேரமில்லாமல் அவன் தூங்கும் நேரம் வரை அவனுடன் தான் இருக்குறோம்..பகல் முழுவதும் அவன் என்னுடன் இருப்பதால் அவர் வந்ததும் கட்டி அணைத்து விடவே மாட்டான்..இரவில் உணவு கூட அவர் தான் கொடுக்கிறார் ஆபிஸ் போய் வந்த கலைப்பிலும்..தூங்க வைப்பது நாங்கள் இருவரும்தான்..நாங்கள் உன்னடன் எப்போதும் உனக்கு துணையிருப்போம் என்பதை குழந்தைக்கு புரிய வைத்தால் எதற்கு பயம்? மேலும் இப்படி பாதுகாத்து வைத்தால் குழந்தைக்கு தனியே செயல்பட தெரியாமலே போய் பிறகு எங்காவது வெளியூரில் படிக்கும் போது மிகவும் கஷ்டபடுவார்கள்..இப்போது உலகம் உள்ள நிலைமையில் எந்த சூழ்நிலையிலும் வாழ பழக வேண்டும்..தனி அறை கொடுத்து தான் குழந்தைகளை தனியே படுக்க வைக்க வேண்டும் என்று இல்லை..ஒரே பெரிய அறையில் எதாவது ஒரு பக்கம் படுக்க பழக்கி பிறகு தனி அறை கொடுத்தால் போதும்..எனக்கு எப்போதும் குழப்பம் இல்லை..எதிரணியில் இருப்பவருக்கு குழப்பம் இருந்தால் உடனே எங்கள் அணியில் சேர்ந்து கொள்ளலாம்..மலர் தூவி வரவேற்கிறேன்
தாமரைச்செல்வி

தனியே தூங்கவைத்தல் அவசியம்
அக்டோபர் 6, 2008 - 2:03am - வழங்கியவர் DEVA

ஆஹா இப்படி ஒரு சப்ஜெக்ட் ஓடிட்டு இருக்கறத பாக்காம இருந்துட்டனே. இன்னைக்கு நேரமில்லாவிட்டாலும் இதைப் பத்தி சொல்லியே ஆகணும்னு வந்துட்டேன். மனோஹரி மேடம், நீங்க சொல்லி இருக்கற அத்தனையும் உண்மைதான். ஆனாலும் தளிகா மாதிரி நானும் புலம்பிட்டுதான் இருக்கேன்.(குழந்தைகள் நம்முடன் தூங்கினால் அல்லவா நம்முடன் தூங்க வைப்பது சரியா இல்லையா என்று சொல்ல முடியும்.) என் பையன் பிறந்தவுடன் ஒரு நாளைக்கு அதாவது 24 மணி நேரத்தில் தூங்கிய மொத்த நேரம் 30 நிமிடங்களே. என் கணவரின் மருத்துவராக இருந்தாலும் நம்பாமல், ஊரில் உள்ள அத்தனை குழந்தை மருத்துவர்களிடமும் என் மகனைக் காட்டியும் அவர்களுக்கு காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. நல்ல வெயிட், நல்லா ஆக்டிவா இருக்கான். அதனால் கவலைப்படாதீங்கன்னு சொன்னாங்க. இதில் இன்னும் பல பேர் நிறைய ஆலோசனை வேற கொடுத்தாங்க. எல்லாம் சொல்லப் போனா உலகத்தில் உள்ள அத்தனை டெக்னிக்கும் உபயோகித்துப் பார்த்து விட்டேன். ஸ்லீப்பிங் க்ளீனிக்ல கூட அவனை மாற்ற முடியவில்லை. அதுவும் அந்த 30 நிமிடத்தூக்கமும் என் மடியில்தான். அதுவும் நான் நேராக சேரில் உட்கார்ந்து இருக்க வேண்டும். கொஞ்சம் குனிந்தோ, ரிலாக்ஸ்டாகவோ உட்கார்ந்தால் அம்பேல்தான். இதில் சேர்ந்து எங்கே உறங்குவது. அவர் தனி ரூமில. நானும் இவனும் தனி ரூமில். ஏனெனில் அவர் அடுத்த நாள் ஹாஸ்பிடலில் போய் சர்ஜரி செய்யும் போது தூங்கிவிட்டால் என்ன செய்வது. ஒருவரோடு போகட்டும் என்று உறக்கமின்மை என்னோடு போகட்டும் என்று முடிவெடுக்க வேண்டியதாயிற்று. அவரும் இன்னைக்காவது மாற மாட்டானா என்று அவனைத் தூங்க வைக்க தன்னால் ஆன டெக்னிக் எல்லாம் செய்து பார்த்தார். உயிர் போவதுபோல அவன் தொடர்ந்து நிற்காமல் அழுததுதான் மிச்சம். அம்மா, வீட்டில் 2 வேலைக்காரப் பெண் என்று வெளிநாட்டில் இருந்துக் கொண்டு பிளைட் டிக்கெட் எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்து வரவழைத்து போண்டி ஆனதுதான் கண்ட பலன். தூக்கமாஅப்படின்னா என்னன்னுதான் அவன் இருந்தான்(இருக்கான்). (இதில் இப்படிப்பட்ட டாபிக்கெல்லாம் பார்த்தா என்னன்னு பதில் சொல்ல. ஆனாலும் தளிகா எனக்கு சேம் பின்ச் சொல்ல இருக்காங்க.).

என் கணவர், தயவுசெய்து நீ ஹாஸ்பிட்டல் பக்கம் வந்துடாதே. அங்கே இருக்கும் குழந்தைகள் சில ஊசிப் போடும்போது மட்டும்தான் விழிப்பார்கள். உனக்கு ஆத்திரம் வரும் என்று சொல்வார்கள். அப்போது, என் கசின் ஒருத்திக்கும் குழந்தை பிறந்திருந்தது. அதைப் பார்க்க போகலாம் என்றால் அதற்கு என் அப்பா, வேண்டாம் நீ போகாதே. அந்த குழந்தை எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறது. அந்தப் பொண்ணும் நல்லா ரெஸ்ட் எடுக்குது. நீ போனா வீணா கவலைப்படுவன்னு சொல்லிட்டாங்க. அப்படி இருந்தது என் நிலைமை. இன்னும் நிலைமை முற்றிலும் மாறவும் இல்லை. குழந்தை பெற்றுக் கொள்வது எத்தனை சுலபமாக இருக்கிறது. நான் நிறைய பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்று டெலிவரி முடிந்ததும் எல்லோரிடமும் ஆசையாக சொன்னேன். இப்போது குழந்தை என்ற வார்த்தையே அலர்ஜி ஆகிவிட்டது. இன்னொன்று பெற்றுக் கொண்டால் உன் போட்டோவிற்கு மாலைதான் போட வேண்டும் என்றே என் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர்களும் சொல்லி விட்டார்கள். ஆண்டிப்பட்டி முதல் ஆஸ்திரேலியா வரை உள்ள டெக்னிக் அத்தனையும் உபயோகப்படுத்திப் பார்த்து ரிசல்ட் ஜீரோ. காத்துக்கருப்பு என்று அவன் கையில் ஊரில் உள்ள அத்தனை கயிறையும் அம்மா கட்டிப் பார்த்தார்கள். நான் சொல்வேன் குட்டிச்சாத்தானுக்கே காத்துக் கருப்புன்னு சொல்றீங்களேன்னு.

இப்போது பரவாயில்லை. என் அருகில் உறங்குகிறான். அதுவும் நைட்டியை கையால் பிடித்துக் கொண்டு, காலால் நான் இருப்பதை கன்பர்ம் செய்துக் கொண்டு. இது என்னவோ ஒரு வியாதியாம். 10 மில்லியனில் ஒரு குழந்தைக்கு இப்படி ஒரு சென்ஸ் இருப்பதாக ஜப்பானில் கண்டு பிடித்திருக்கிறார்களாம். அம்மா அருகில் இருப்பதும், இல்லாததும் உணரக்கூடிய சென்ஸ் என்று டீவியில் பார்த்ததாக என் தம்பி சொன்னான். என்ன கருமமோ, அதை தெரிந்துக் கொள்ளக்கூட நான் விரும்பவில்லை. ஆனால் இப்படி குழந்தைகள் தூங்காமல் நம்முடம் இருப்பது நமது ஆரோக்கியத்தையும், தெளிவான சிந்தனையையும் பாழ்படுத்தி விடுகிறது. இங்கே கணவருடனான வாழ்க்கையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அதற்காக இதனை சாக்காக வைத்துக் கொண்டு தியாகம் செய்யவும் நான் தயாராக இல்லை. தினகரனில் ஒரு முறை நடந்த கருத்துக் கணிப்பை பற்றி டீவியில் காட்டினார்கள். சிறந்த கருத்தடை முறை என்ன என்பதைப் பற்றின கருத்துக் கணிப்பு. நான் சொன்னேன். என் மகன் என்று. என் வீட்டில் எல்லாரும் மிகவும் சிரித்தார்கள். நீங்கள் வேறு அர்த்தம் செய்துக் கொள்ளாதீர்கள். இப்படி தூங்காமல் ஒரு குழந்தை இருந்தால் இன்னொரு குழந்தை வேண்டும் என்ற எண்ணம் வராதில்லையா.

நேற்று இரவு அவன் எப்போது உறங்கினான் என்று கூட எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் 1 மணி வரை முயன்று பார்த்துவிட்டுத் தூங்கிவிட்டேன். இப்போது சரி தலைவலியோடு ஆபிசில் உட்கார்ந்திருக்கிறேன். அதிரா சொன்னதுபோல, இத்தனை நாள் வீட்டில் இருந்து பழக்கி விட்டோம். இப்போது வேலை செல்ல ஆரம்பித்தப் பிறகு அவனுடன் டைம் ஸ்பெண்ட் செய்வது கம்மியாகிவிடக்கூடாது என்று வேலை முடிந்து வீடு சென்ற பிறகு அவனுடனேயே இருக்க நினைக்கிறேன். ஆனாலும் அது வேறு, தூங்க வைப்பது வேறு. குழந்தைகள் நம்முடன் உறங்குவது கணவன், மனைவியின் அந்யோன்யத்துக்கு நிச்சயம் கெடுதியையே உண்டாக்கும். இதில் தியாகம், விட்டுக் கொடுத்தல் என்ற பேச்சு நிச்சயம் சொல்வதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். அறியாதப் பருவம் வரை கூட உறங்க வைக்கலாம் என்று சொல்லலாம். ஆனால் இப்போதெல்லாம் அறியாத பருவம் என்று ஒரு குறிப்பிட்ட வயதை சொல்ல முடியவில்லை. அதற்கு பதிலாக 3 வயது வரை வேண்டுமானால் நம்முடன் உறங்க வைக்கலாம். என் பையன் ஸ்பைடர்மேன் பார்க்கும்போது வந்த முத்தக்காட்சிக்கு நீ பார்க்காதே என்று நான் வந்தால் டீவியை ஆப் செய்கிறான். என்னவென்று சொல்வது. 4 வயதில் அவன் பார்க்கலாமாம். பள்ளி செல்ல ஆரம்பிக்கும்போதே தனியே படுக்க பழக்குவதும் அவசியம்.

சரியான தூக்கம் இல்லாவிட்டால் எப்படி கஷ்டமோ, அப்படியே சரியான தாம்பத்தியம் இல்லாவிட்டாலும் குடும்பத்தில் குழப்பம்தான். சின்ன சின்ன பிரச்சனையையும் பெரிதாக்க தோன்றும். இன்றும் பல இந்திய பெண்களுக்கு இன்னும் தாம்பத்தியம் என்பது கணவருக்கு மட்டும் பிடித்த விஷயமாகவும், இவர்களுக்கு என்னவோ விருப்பம் இல்லாதது போலவும் நடிக்க பிடித்திருக்கிறது. அதுவுமில்லாமல் அந்த விஷயத்தில் இது கூடாது அது கூடாது என்ற ரெஸ்ட்ரிக்ஷனோடு இருப்பவர்களும் அதிகம். இன்னும் சொல்லப்போனால் அந்த காலத்தில் இருந்தது போன்ற கூட்டுக் குடும்பத்தில் இப்படி சைகை காட்டி அழைத்துப் போய் அவசர அவசரமாக பயந்துக் கொண்டு இருந்தார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் இரண்டாம் தாரங்கள் நிறைந்து கிடந்ததும் உண்மை. இந்த ரெஸ்ட்ரிக்ஷனெல்லாம் இல்லாத ஒருத்தி வரும்போது அவர்கள் அலைந்து கொண்டு போனதும் கேள்விப்பட்டிருக்கிறோமே. இப்போது சைட் பிசினஸ் யாருக்கு இருக்கிறது இல்லை என்பது பேச்சில்லை (அப்படி ஒரு சபலத்துடன் எதுக்கு வாழணும் என்றெல்லாம் விவாதிக்காமல், அப்படி ஒரு தியாக வாழ்க்கை வாழ்வது உங்களுக்கு பரிபூரண சந்தோஷத்தை தருமா என்றுப் பார்க்க வேண்டும்) . ஆனால் அப்படி ஒரு எண்ணமே கணவனுக்கு தோன்றாத வண்னம் அவருக்கு சந்தோஷம் தர வேண்டும், தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இப்போதும் அப்போதும் குடும்ப வாழ்க்கையில் வெற்றி கண்டிருக்கிறார்கள். இது குழந்தையை கூட வைத்துக் கொண்டு நிச்சயம் சாத்தியமில்லை. அந்த காலத்தில் பாட்டி, தாத்தா கூட படுக்க வைத்தார்கள். இப்போது தனி ரூமில் படுக்க வைக்கிறார்கள். அப்படி படுக்க வைப்பதால் குழந்தைக்கு தன்னம்பிக்கை நிச்சயம் இருக்கும். தேவையில்லாத பயம் அகலும்.குழந்தை பிறப்பதற்கு முன்பு 4 வருடங்கள் எப்படி நாங்கள் இருந்தோமோ அப்படியே ஒரு வாழ்க்கையை அவன் இப்போது எங்களுடன் உறங்கும்போதும் கொண்டு வருவதென்பது பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது. தூக்கம் கெடுகிறது. அடுத்த நாள் வேலை கெடுகிறது. ஆனாலும் இதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வது என்பதெல்லாம் சான்சே இல்லை. தனியாக அவன் தூங்கினால் அனைவருக்குமே மகிழ்ச்சிதான். அவனுக்கு அதை உணர்த்துவது ஒன்றே இப்போது எனது ஒரே குறிக்கோளாகவும் இருக்கிறது.

இப்படி குழந்தையை கூட வைத்துக் கொண்டு தூங்கியே ஆக வேண்டும் என்ற ஆசையும், நிர்பந்தமும் உள்ள அம்மா, அப்பா எக்காரணம் குழந்தை இருக்கும் அறையில் எந்த விஷயமும் செய்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிவிடாதீர்கள். பதிலாக உங்களுக்கென்று ஒரு அறையை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்போது விழிப்பார்கள் என்ற எண்ணத்துடன் இல்லாமல் நிம்மதியாக இருக்க தனி அறை நிச்சயம் அவசியம். சில விஷயங்களுக்கு மட்டுமே பொய்யான விளக்கம் கொடுக்கமுடியும். ஒரே ஒரு குழந்தை என்று வரும்போது தனியே உறங்க வைத்தல் மிகவும் கடினம். அதே சமயம் இரு குழந்தைகள் எனும்போது நிச்சயம் தனியாகத்தான் படுக்க வைத்து பழக்க வேண்டும். ஒரு நைட் வாட்ச்மேனே தாங்கல. ரெண்டு பேருக்கு டிமிக்கி எங்கே கொடுக்கறது.

தனியே கணவனுடன் உறங்கும்போது பேசும் எதிர்காலத்திட்டம், நகைச்சுவை, அந்தரங்கமான பேச்சு என்று எத்தனையோ விஷயங்களை குழந்தைகள் இருக்கும்போது பேசுவதென்பது சரியல்ல. இன்றைய காலகட்டத்தையும் பார்க்க வேண்டும். 13 வயது வரை கூட படுக்க வைப்பது அவர்களின் க்யூரியாசிட்டியை தூண்டி விடுவதுபோல ஆகிவிடும். அந்தக் கால வாழ்க்கை இன்றைய கால கட்டத்துக்கு சற்றும் பொருந்தாது. அந்தக் காலங்களில் முடிவெடுக்கும் விஷயத்தை ஆண்கள் மட்டுமே செய்தனர். இன்று ஒவ்வொரு விஷயத்தில் பெண்களும் திட்டமிடுகிறார்கள். தனிமை அவசியம் தேவை. இந்த முறை இந்தியா சென்ற போது 3 நாட்கள் அவனை அம்மாவிடம் விட்டுட்டு ஊட்டி போனது பழைய வாழ்க்கையை ரீவைண்ட் செய்து வாழ்ந்தது போல இருந்தது. இப்படி வெளிநாட்டில் இருக்கும்போது சாத்தியம் இல்லை. எங்கே போனாலும் நம்முடன் அழைத்து செல்கிறோம். இரவு நேரத்தில் மட்டுமாவது நமக்கென்ற தனிமை அவசியம். சும்மா குழந்தைகளுக்காக வாழ்கிறோம் என்று நமக்கான சந்தோஷத்தை விட்டுத்தரக்கூடாது. இப்படியெல்லாம் விட்டுத் தந்து தியாக சொரூபமாய் வாழும் அம்மா அப்பாக்கள்தான் காதல் திருமணத்தை எதிர்க்கவும் செய்கிறார்கள். நாங்கள் உனக்காக எதையெல்லாம் விட்டுத் தந்திருக்கிறோம். நீ பதிலுக்கு இதையெல்லாம் விட்டுத்தா என்று பேரம் பேசத் தோன்றும். மருமகள் பேச்சை மகன் கேட்டால் அய்யோ இவனுக்காக நான் என்னலாம் தியாகம் செய்தேன் தெரியுமான்னு புலம்பி அழத் தோன்றும். குழந்தைகளுக்கு கனவுகள் வந்தால் அம்மாவை நாடாமல் அதை எதிர்கொள்ள தைரியமும் உண்டாக வேண்டும். பிற்காலத்தில், இப்போது நாமெல்லாம் சிறு சிறு பிரச்சனைகளுக்கே துவளுவது போல அவர்களும் வீக் ஹார்டாக இருக்கக்கூடாது. வயதானப் பிறகு நமக்கே, மனம் ஒத்துழைக்கிறதோ இல்லையோ உடல் இது போன்று இருக்கும் என்றும் சொல்ல முடியாது. இளமையில் கல் என்ற பழமொழியைப் போல வாழ்க்கை வாழ்வதற்கே. அந்தந்த வயதில் இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் வேண்டும். குழந்தைகளை தனியாக படுக்க வைப்பதால் நாம் அவர்களுக்கு துரோகம் செய்ததாகவோ, கவனிக்கவில்லை என்றோ, பாசமில்லையென்றோ ஆகாது.

குழந்தைகளுக்கு இன்னமும் சாப்பாடு ஊட்டிக் கொண்டு அவர்களை நன்றாக கவனிக்கும் மனோஹரி மேடத்தின் மேடத்தின் கருத்து அனுபவத்தின் கருத்து என்பதை நான் கவனிக்க வேண்டும். நிறைய எழுதி விட்டேன். சந்தடி சாக்கில் சொந்தக்கதையையும் வழக்கம்போல புலம்பியாச்சு. நடுவரின் தீர்ப்பு மெஜாரிட்டி பார்த்தா இல்லை அவரின் சொந்தக் கருத்தாக இருக்குமா என்று தெரியவில்லை.

அய்யோ தேவா
அக்டோபர் 6, 2008 - 5:07am - வழங்கியவர் thalika

அய்யோ தேவா கண்டிப்பா சேம் பின்சே தான்.ஆனால் இப்போ பரவாயில்லை இவள்..அதாவது என் கைய்யை இழுத்து அவள் கழுத்தடியில் வைத்துக் கொண்டு படுப்பாள்.அதை அவள் நல்ல ஆழ்ந்து தூங்கியபின் மெல்ல இழுத்து வெளியே எடுப்பேன் அடுத்த 5 நிமிடம் தான் எப்படியோ இருட்டில் தேடி என் கைய்யல் இழுத்து திரும்ப வைத்துக் கொள்வாள்.ரொம்ப குறைத்தால் அட்லீஸ்ட் என் கைய்யை அவள் மேலாவது வைக்க வேண்டும்.இதே தான் எனக்கும் பிறந்த குழந்தை நல்லா தூங்குது என்றோ அல்லது பகலில் குழந்தை தூங்கும்போது வேலை செய்வேன் என்றோ யாராவது சொன்னால் என் முகத்தில் சோகம் வந்து விடும்.எங்கள் விட்டிலும் இவர் அப்பப்ப தனி அறையில் ஏதாவது முக்கிய அலுவலக பணி இருக்கும் அன்று.
ஏங்க இன்னொன்னு கேக்கறேன் எப்பவுமே இந்த நைட்டி சுடியோட தான் அலையுறோம் கனவனுக்காக இரவிலாவது கொஞ்சம்.... ட்ரெஸ் பன்ன வேனாம?இப்ப என்னால் ஒரு ச்லீவ்லெஸ் கூட போட வாஇப்பில்லை அய்யே ஷேம் ஷேம் என்பாள்.
தனி அறியில் விட்டால் எப்படி வேண்டுமானால் உடைஉடுத்தலாமே அது போன்ற சில காரியங்கள் செய்வது தான் நம்மை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும்.
என் வீட்டு இளவயது பால்காரம்மா திடீர் கொண்டையில் மாறி விட்டார் கேட்டபொழுது மகள் பெரியவளாகி விட்டாள் இனி ஜடையும் கூடாது கனவருடன் ஒன்றாய் படுக்கவும் கூடாது ஊர் தப்பாய் பேசும் என்றார்.என்ன ஒரு அனியாயம் பாருங்களேன்.கனவருடன் படுக்க கூடாதாம் பின்ன?
சத்தியமா சொல்றேன் அடுத்த வருட ஹோம்ட்ரிப்புக்கு போன பொழுது வியந்து விட்டேன் அந்த கனவர் முடி நரைத்து ஒரு மாதிரி லுங்கியும் தலை விரி கோலமுமாக ரொம்ப வயதானவராக ஆகி விட்டார்.இப்போ தான் புரியுது அது எதனாலென்று.
நானும் இவளுக்கு 4 அல்லது மேக்சிமம் 6 வயதானால் தனி அறையில் தான் விடுவேன் அத்ற்குள் தூங்க பழகினால் நல்லது.எல்லா குழந்தைகளுமே வளர்ந்ததும் தானாக போய் தனி அறியில் படுக்காது..சிறு வயதில் என்றால் வேறெதும் மனதில் ஏறாது சொல்லி புரிய வைத்து படுக்க வைக்கலாம்..கொஞ்சம் நாமும் சிரமப் படுவோம் அவர்களும் படுவார்கள்..தைரியம் கொடுத்து பழக்க வேண்டும்...எனது 15 ஆவது வயதிலும் கூட எனக்கு அம்மாவுடன் படுக்கத் தான் ஆசையாக இருந்தது ஆனால் அன்று என்னடா இந்த அம்மா சரியான கொடும்மைக்காரி நம்மை கூட படுக்க விடுவதில்லையே என்று தான் நினைத்தேன் ஆனால் அன்று என் அம்மா கூடவே வைத்திருந்தால் இன்று புலம்பியிருப்பேன் அவர்களது தனிமையை நான் தான் கெடுத்தேனோ என்று என் கனவரைப் போல..
ஒரு குறிப்பிட்ட வயது சுமார் 10 வயதை தாண்டி விட்டாலே இன்று பிள்ளைகளிடம் இனி தனியா படுப்போ இனி எங்க ரூமில் வராதே என்றால் அது ஒரு சைசாக பார்க்கும் காரணத்தை ரொம்ப ஏடாகூடமாக யோசிக்கும்..அந்த வயது நெருங்குவதற்குள் தனியே பழக்கினால் பயம் தெளிந்து தன்னம்பிக்கை வளரும்.இல்லையென்றால் பிள்ளை கீஹோல் வழியே உள்ளே பார்க்கும் என்னை வெளியே தள்ளி விட்டு அங்கே என்ன நடக்கிரதென்று..
அதுக்காக தனி அறையில் தூங்கும் பிள்ளைகளின் தாய்மார்கள் எல்லாம் அரக்கிகள் என்று அர்த்தம் கிடையாது..பகல் முழுக்க உழைத்து பிள்ளையின் எதிர்காலக் கனவோடு அலைந்து இரவில் மட்டும் தனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கும் ரொம்ப சரியான புத்தியுள்ள பெண் என்று வைத்துக் கொள்வோம்:-)
அதிராவின் கனவரைப் போல் ரொம்ப சில கனவன்மார்களே விரும்புவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.பெரும்பாலானவர்கள் இரவில் மனைவு தனக்காக மட்டும் உடையுடுத்தி அழகாக தனிமையை அனுபவிக்க தான் விரும்புவார்கள்.இல்லையென்று சொல்லுங்கள் நான் என் நகத்தை வெட்டிக் கொள்கிறேன்.

ஆரோக்கியமான முறை இல்லை.
அக்டோபர் 6, 2008 - 5:15am - வழங்கியவர் Manohari

எங்கள் அணியில் சேர்ந்து எமது கட்சிக்கு மேலும் வலுவைச் சேர்த்த சகோதரி தேவா அவர்களே உங்களை வருக வருக ஏன கரகோஷமிட்டு வரவேற்கின்றோம் எதிர் அணியினறுக்கு இதைப் பார்த்ததும் ஆட்டம் கண்டிருக்கும் என்று நினைக்கின்றேன். மேலும் நமது கட்சிக்காக விவாதித்துக் கொண்டிருக்கும் அன்பர்களே பார்த்தீர்களா, எதிர் அணியினர் நமக்கு சாதகமாகவே குறிப்பெடுத்து தந்திருக்கின்றார்கள். அதாவது "பிள்ளைகளுடன் உறங்குவது கணவர்மார்களுக்கு பாதுகாப்பு என்று" நடுவர் அவர்களே இதையும் நோட் பன்னிக்குங்க, அவங்க கேலியாக சொன்னது நமக்குத்தான் சாதகமாகி விட்டது.

இதத் தாங்க நாங்க இவ்வளவு நேரமா கூறிக்கொண்ட்டிருக்கோம். தவறான செயல்கள் புரிந்துவிட்டு வந்து அதை மனைவி அறியாக் கூடாது என்று நினைப்பவர்களுக்கும், மனைவியின் கேள்விக் கணைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இருப்பவர்களுக்கும் இது மிகப் பெரிய பாதுகாப்பு தான். //இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்ரெடுத்த தாயும் வேண்டாள், செல்லாது அவன் வாயின் சொல்// என்பதில் நம்மாளுங்க ரொம்ப தெளிவாய் இருக்காங்க இது தெரியாமல் இன்னும் ஏமாளிகளாக இருக்கும் மனைவிமார்களே தூங்கினது போதும் இனி முழிச்சுக்குங்க.

எதிர் தரப்பினர் எந்த காலத்தில் இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை!!!!குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் பெற்றோருடன் தூங்குவார்கள் பிறகு நாமே அழைத்தால்கூட வரமாட்டாங்க என்பது உண்மை தான் ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் அவங்க அந்த வயதை எட்டும் வரை பெற்றொரின் வயதும் வாலிபமும் மாறாமல் அப்படியே வா இருக்கும். இதெல்லாம் பதிமூன்று பதினாலு வயதில் கல்யாணம் செய்து பிள்ளை பெறும் காலத்திற்கு தான் ஒத்துவந்ததே ஒழிய இப்பொழுது நிலைமையே வேறுங்க.

அது ஒரு ஆணானாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நன்கு படித்து, வேலைக்கு போய் சுயமாக சம்பாதித்து, அதன் பிறகு வரனைத் தேடி கல்யாணம் செய்வதற்குள் குறைந்தப் பட்சம் முப்பதை தொட்டுடுராங்க. அதன் பிறகு ஏற்ப்படும் பல சிக்கல்களை சமாளித்து பிள்ளையைப் பெற்றெடுக்கின்றார்கள், ஆனால் இவங்க சொல்வது என்னன்னா அவ்வாறு பெற்ற குழந்தைங்க வளர்ந்து அவங்க வயசுக்கு வரும் வரை காத்திருந்து அதன் பிறகு வாழ்க்கையை அனுபவிப்பது என்பது இலவு காத்த கிளி மாதிரி வேடிக்கையாய் இருக்கின்றது. அந்தந்த வயதில் அந்தந்த காலகட்டத்தில் அனுபவிப்பதை அனுபவிக்க வேண்டும் இல்லையென்றால் காலம் வேண்டுமானால் காத்திருக்கும் ஆனால் இளமைப்பருவம் யாருக்காகவும் காத்திருக்காது அது போனது போனது தான் திரும்ப வராது. இதை நடுவரும் ஒத்துக் கொள்வார் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை ஆகவே எங்கள் கட்சிக்கு ஒரு குழப்பமும் இல்லை.

பெற்றோரின் தனிமை என்று கூறுவது அது ஒரு குழந்தையாய் இருந்தாலும் பல குழந்தைகளைக் கொண்ட பெற்றோராய் இருந்தாலும் அவர்களின் சுதந்திரம் பாதிக்கபடுவது என்னவோ உண்மை.பெற்றோர்கள் வெறும் செக்ஸ் வைத்துக் கொள்வதும் பிள்ளப் பெருவதும் தான் வாழ்க்கையில்லை, அதை போல் பிள்ளைகளுக்காவே தான் வாழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. குழந்தைகளை உருவாக்கிய பெற்றொருக்கு அவர்களுக்கு நல்ல வாழ்க்கை முறையை நல்லா ஆகாரத்தை நல்ல கல்வியை நல்ல வாழும் சூழ்நிலையை உருவாக்கித் தருவது தான் அவர்களின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும். அதற்காக எப்பேற்ப்பட்ட தியாகங்களையும் தங்கள் குழந்தைக்காகச் செய்ய வேண்டுமே ஒழிய, எந்த நேரமும் புள்ளையை தூக்கி வைத்துக் கோண்டு கண்ணே மனியே முத்தே வைரமே என்று அதைக் கொஞ்சிக் கொண்டிருந்தால் புருஷனை யார் கவனிப்பது? பிறகு //மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல நல்ல வேசம் தான் வெளுத்து வாங்கறேன்// என்று, அவர்பாட்டுக்கு வேசம் கட்ட ஆரம்பித்துவிடுவார். பிறகு பிள்ளையையும் கவனிக்க முடியாமல் புருசனையும் தொலைத்து விட்டு சோக கீதம் பாட வேண்டியது தான். நடுவரே வந்து நிறுத்தும் வரை இன்னும் பேசுவாம்.

வாதம்
அக்டோபர் 6, 2008 - 5:30am - வழங்கியவர் Janaki2411

மனோகிரி மேடம், தளிகா, தேவா மற்றும் அனைவருக்கும் எனக்கு இதில் அனுபவம் இல்லை. ஆனால் உங்களுடைய பதிவுகளை வரவேற்கிறேன். தேவா டெய்லி புலம்பவதை கேட்டு எனக்கு பயமே வந்து விட்டது. அதனால் தேவா எனக்கு நிறைய அட்வைஸ் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் நான் உங்கள் கட்சி என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்

ஜானகி

பெற்றோருடன் தூங்குவது போன்ற ஃபீலிங்
அக்டோபர் 6, 2008 - 6:09am - வழங்கியவர் suhaina mazhar

என் கணவர், குழந்தைகளுடன் குழந்தையாய் விளையாடுவார். பக்க்த்துவீட்டுக் குழந்தைகள் பொறாமை படுமளவுக்கு ஜாலியாக விளையாடுவார். என் பையனுக்கு சாப்பாடு ஊட்டி விடுவார். குளிக்க வைக்கிறேன் என்று பாத்டப்பில் அவனுக்கு சரிக்கு சரியாய் விளையாடுவார்.

ஆனால் இரவில் தனி ரூமில் படுக்க வைத்து விட்டு சிறிது நேரம் முடி கோதி, முதுகு சொறிந்து விட்டுவிட்டு வந்து விடுவார். பின் காலை எழுந்தவுடன், மெதுவாக காலைப் பிடித்து விட்டு எழுப்புவார் (இதெல்லாம் நான் செய்ய மாட்டேன்).

இதனால் அவர்கள் பெற்றோருடன் தூங்குவது போன்ற ஃபீலிங்குடன் நிம்மதியாகத் தூங்குவார்கள். இதெல்லாம் தினம் தினம் நடக்காது. அப்படி செய்தால் அதை ஒரு பழக்கமாக்கி விடுவார்கள். எப்போதெல்லாம் அப்பாவிடம் அதிகமாக விளையாடுகிறார்களோ அப்போதெல்லாம் நடக்கும்.

ஆனால் ஒரு போதும் எம்முடன் அவர்களை படுக்க வைக்க முடியாது, அப்படி அவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் கூட, நாங்கள் தான் யாராவது ஒருவர் அவர்களுடன் சென்று படுத்துக் கொள்வோம்.

குழந்தைகளை தம்முடன் படுக்க வைக்கும் பெற்றோர், தாம்பத்திய நேரத்தில் எழுந்து வேறு அறைக்கு சென்று விடுவார்கள். தாம்பத்தியம் என்பது தானாக கனிய வேண்டும், திட்ட மிட்டு வரக்கூடாது. கேலிப்பேச்சும், நிறைய தொடுதலும் தான் அதை ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகலை நம்முடன் படுக்க வைக்கும் போது அது எவ்வாறு முடியும்?

தாம்பத்தியதிற்காக எழுந்து வேறு அறைக்குப் போவதென்பது, சீக்கிரம்முடித்து விட்டு குழந்தை விழிப்பதற்குள் திரும்பிவிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அது, முழுசுகத்தை ஒரு போதும் வழங்காது. அதனால் பெண்களுக்கு உலர்வுத் தன்மை ஏற்பட்டு, எரிச்சல், வலி உண்டாக காரணமாக அமைகிறது.

மேலும் இப்பொதெல்லாம், தாம்பத்தியத்தில் பல்வேறு நிலைகளை முயன்று பார்க்க ஆசைப் படுகிறார்கள். திரை மறைவில்லாது எல்லாம் நடக்க வேண்டுமானால், குழந்தைகளை தனியே படுக்க வைத்தால் மட்டுமே முடியும்; இனிமையான தாம்பத்தியம் என்பது பசியெடுத்தால் சாப்பிடுவது என்பதல்ல; பசியைத் தூண்டி சப்பிடுவது.
வாழ்க்கை ஒரு முறைதான், பகலெல்லாம் குடும்பத்திற்காக ஒதுக்கும் பெண்கள்,இரவிலாவது, தனக்கென வாழ வேண்டாமா?

குழந்தைகள் நம் மேல் கை கால் போட்டு உறங்குவதைவிட, உறவு கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், கணவன் மேல் கை கால் போட்டு உறங்க பெண்கள் ஆசைப் படுவார்கள். தூங்கும் போது விலகிவிட்டாலும், அரைத்தூக்கத்தில் அனிச்சையாக கை மனைவியை துளாவி இழுத்து அணைத்துக் கொள்ளும் அந்த சுகத்தை எதற்காகவும் இழக்க முடியாது.

சுமஜ்லா

குழந்தைகளை தனியே படுக்க வைத்தல்
அக்டோபர் 6, 2008 - 6:25am - வழங்கியவர் Thanisha

என்னைப் பொருத்தவரை குழந்தைகளை தனியாக படுக்கவைப்பதினால்தான் தன்னம்பிக்கை வரும் என்பது தவறான கருத்து. எங்கே படுக்கவைத்தாலும் நாம் அவர்களிடம் நடந்து கொள்ளும் முறைதான் அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும். என் தம்பி 11 வயது வரை அம்மா பக்கத்தில்தான் படுத்தான். இன்னைக்கு அவன் ஒரு என்ஜினியர். 5 வருடம் ஹாஸ்டலில் தங்கிதான் படித்தான்.பயங்கர போல்ட்னஸ் அவன்.

அதிரா சொல்வது போல் குழந்தை இல்லை என்று ஏங்கி பின் குழந்தை கிடைத்தபின் அதை தனிஅறையில் போட்டு வாட்டுவது முறையா. இதே கதை இங்கும் எங்க ப்ளாட்டிலும் நடக்குது. திருமணமாகி 5 வருடம் குழந்தைஇல்லாமல் ட்ரீட்மெண்ட் எடுத்து குழந்தைப்பெற்றார்கள். தேவதை போல் இருப்பாள் அந்த குழந்தை அப்படிஒரு அழகு. இப்போ இருவரும் வேலைக்கு போறாங்க குழந்தைய பேபிசிட்டிங்ல விட்டுட்டு. அங்கு எப்படி பார்ப்பார்களோ வீட்டிற்கு வரும்போது ஏங்கிபோய் வருவாள். குழந்தைக்கு யார் சாப்பாடு ஊட்டுவது என்று அவர்களுக்குள் பெரிய போட்டி. ஏதாவது ஒரு கஞ்சியகாய்ச்சி கொடுப்பாங்க. கொடுத்துட்டு 2 பேரும் கட்டிலில் படுத்து கொள்வார்கள். அவளை கீழேபடுக்க வைத்துவிட்டு. டிஸ்டர்பாக இருக்குமாம் அவர்களுக்கு. என்னிடம்தான் அதிகநேரம் இருப்பாள்.

அழகான திரைச்சீலைகளும், பொம்மைகளும், கார்ட்டூண் பதித்த ரூம்கள் மட்டும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை. பெற்றோரின் அரவணைப்புதான் முதலில். பாரின்ல இருக்கும் குழந்தைகள் பொதுவாக தனிமையில்தான் இருக்கு. பகலில் முழுவது டாய்ஸ், கேம்ஸ், டீவி இப்படியே பொழுது போகுது. அப்பா வந்தபின்பும் இதுதான் உன் அறை உனக்காக இங்கு எல்லா வசதியும் பண்ணிட்டோம். இங்குதான் நீ படுக்கனும், என் கடமை முடிந்து விட்டது என ஒதுங்குவது நியாயமா?

நாங்களும் சன்னியாசி அல்ல எங்கள் இருவருக்கும் வாழ்க்கையை அனுபவிக்க ஆசை உள்ளது. என்னவர் என்னை அணைத்து கொண்டால்போதும் என்மகள் எங்கள் இருவருக்கும் இடையில் வந்து புகுந்து கொள்வாள்.இருவரின்மேல் கடந்து புரளுவாள். அதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கததான் செய்கிறது. இடையில் முழித்தால் அவள் மேல் கைப்போட்டு படுத்தால் போதும் அம்மாபக்கத்தில்தான் இருகோம்னு அந்த செக்யூர்னஸ்ல தூங்கிடுவா அந்தரங்கமான நேரங்களில் கூட முழித்து தொல்லைக் கொடுக்கத்தான் செய்வாள். எனக்கு கூட கொஞ்சம் கோபம் வரும் ஆனால் அவர் ரொம்ப அட்ஜஸ்டபுள். எதுவுமே நடக்காது போல் மகளை சிர்க்கவைப்பதிலே குறியா இருப்பார். ஒருசில நேரங்களில் அவள் தூங்கட்டும் என்று வையிட்பண்ணி யாராவது ஒருத்தர் தூங்கி விடுவோம். இதெல்லாம் எல்லோர் வீட்டிலும் சகஜம். தேவா இதெல்லாம் தியாகம் இல்லை. நம்குழந்தைகளுக்காக சின்னசின்ன அட்ஜஸ்மெண்ட் அவ்ளோதான். நாம் எல்லோருமே உணர்ச்சிகளுக்கு அடிமையான சாதரண மனிதர்கள்தான். நம்மால தியாகம் எல்லாம் செய்ய முடியாது

தளிகா சொல்வது போல் விதவிதமாக ஆடைஅணிந்து கணவரின் முன்நிற்க எல்லா பெண்களுமே விரும்புவோம்,கொஞ்சகாலம்தானே! காலம் எங்கே போயிடப் போவுது கட்டாயம் விதவிதமா போட்டு கலக்கலாம். முதல் குழந்தைக்கு 4 வயதானப்பின், இன்னொரு குழந்தை வந்தபின் நம்ம பெட்ரூம்லேயே ஒரு காட்போட்டு இருவரையும் அதில் படுக்க வைக்கலாம். நீதான் பாப்பாவை நல்ல பாத்துகனும் என்று பெரியவள் மனதில் பதிய வைக்கனும். அதிரா சொல்வது போல் ஸ்கூல் டேஸ் ஸ்டார்ட் பண்ணீயதும் தனிரூம் கொடுத்து படுக்கவைத்து 10 நாள் நாம வாட்ச் பண்ணனும். போக போக குழந்தைகள் பழகி விடுவார்கள். முதலிலேயெ குழந்தைகளை தனிமைப்படுத்துவது என்னை பொறுத்தவரை தவறு

தனியே தூங்க வைத்தல்...
அக்டோபர் 6, 2008 - 6:35am - வழங்கியவர் senthamizh selvi

நானும் தோழி மனோகரி கட்சியே! நிறைய எழுதத்தான் ஆசை. ஆனால் உடல் ஒத்துழ