உப்பு நார்த்தங்காய்

image

வழங்கியவர் : senthamizh selvi

தேதி : வெள்ளி, 16/01/2009 - 19:48

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • நார்த்தங்காய் - 12
  • கல் உப்பு - 100 கிராம்.

 

  • நார்த்தங்காயை கழுவி துடைத்து, சுருள் சுருளாக நறுக்கவும். தனியாக வராமல் ஸ்பிரிங் போல் வரவேண்டும்.
  • உப்பை சுருளுக்குள் திணித்து, 3 நாட்கள் அப்படியே வைக்கவும். தினமும் குலுக்கி மட்டும் விடவும்.
  • நான்காம் நாள் தண்ணீரிலிருந்து (உப்பு கரைந்து தண்ணீராக இருக்கும்) எடுத்து காயை மட்டும் வெய்யிலில் காய வைக்கவும்.
  • மாலையில் திரும்ப எடுத்து, அந்த தண்ணீருக்குள் போட்டு குலுக்கி வைக்கவும்.
  • இது போல் தண்ணீர் வற்றும் வரை செய்யவும்.
  • பிறகு வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும். மேலே உப்பு பூத்து விடும்.
  • அப்போது எடுத்து டப்பாவில் வைத்துக் கொண்டால் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.

Note:

இதை காய வைத்திருப்பதே ஒரு அழகு. கயிறு கட்டி அதில் வரிசையாக தொங்க விட்டிருப்பார்கள்.