காட்டு புளிச்சாறு (ரசம்)

வழங்கியவர் : asiya omar
தேதி : வியாழன், 04/06/2009 - 18:44
ஆயத்த நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- மிளகாய் வற்றல் - 3
- வெந்தயம் - அரைஸ்பூன்
- உளுத்தமபருப்பு - 2 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- பூண்டு - 4 பல்
- மல்லி, கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 2- 3 டேபிள்ஸ்பூன்
- பெருங்காயம் - 2 பின்ச்
- தக்காளி - 1 சிறியது
- வெங்காயம் - 1 சிறியது.
- உப்பு - தேவைக்கு
- புளியை ஊறவைத்து ருசிக்கு தகுந்தபடி உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.
- இரண்டு மிளகாய் வற்றல், கால்ஸ்பூன் வெந்தயம், 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, பூண்டு வறுத்து எடுக்கவும். அவற்றை மிக்ஸியில் தூள் செய்து அத்துடன் பாதி வெங்காயம், தக்காளியை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கிள்ளிய மிளகாய்வற்றல், வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மிக்ஸியில் அரைத்தவற்றை கொட்டி வதக்கவும்.
- பின்பு அத்துடன் புளித்தண்ணீர் சேர்த்து, மல்லி இலை சேர்த்து நுரைத்ததும் இறக்கவும்.
- சுவையான காட்டு புளிச்சாறு ரெடி.
Note:
இது விட்டு சாப்பிட்டால் புளியோதரை சாப்பிட்டது போல் மணமாக இருக்கும். இதற்கு பொட்டுக்கடலை துவையல், அப்பளமே போதும். இது ரசத்தை விட கொஞ்சம் கெட்டியாக இருப்பது போல் பார்த்துக்கொள்ளவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஆசியா எப்படி இருக்கீங்க? இந்த வித்தியாசமான ரசம் மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் கூறியது போல் இதனுடன் அப்பளம் ஒன்றே போதும். நன்றி உங்களுக்கு.