புடலங்காய் குழம்பு

image

வழங்கியவர் : Mrs vathsala Na...

தேதி : செவ்வாய், 07/07/2009 - 13:02

ஆயத்த நேரம் : 15 நிமிடம்

சமைக்கும் நேரம் : 30 நிமிடம்

பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு

5
1 vote
Your rating: None
 

 

  • புடலங்காய் - 1
  • வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 3
  • பூண்டு - 4 பல்
  • தக்காளிப்பழம் - 1
  • புளி - ஒரு எலுமிச்சை அளவு
  • பால் - 1 கப்
  • மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு நெட்டு

 

  • புடலங்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு புடலங்காயைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • அதில் புளிக்கரைசலை ஊற்றி ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  • மிளகாய்த்தூளின் பச்சை வாசனை போனதும் பாலை விடவும்.
  • ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்த புடலங்காயைப் போடவும்.
  • குழம்பு தடிப்பாக வந்ததும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  • இது சோறு, புட்டு, இடியப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.






hai friends
pudalakai kulabuku pal utra vadum endru erukuthula athu etha pal udra vadum endru thareyala. pl explanin friends