பாலக் டோபு

image

வழங்கியவர் : Nila2006

தேதி : வெள்ளி, 17/07/2009 - 02:44

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு : 4 நபர்கள்

0
No votes yet
Your rating: None
 

 

  • ஸ்பினிச் கீரை - 1 கட்டு
  • டோபு - 8 அவுன்ஸ்
  • தக்காளி - 2
  • வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
  • இஞ்சி - 1அங்குல துண்டு
  • உள்ளி - 5 - 6 பற்கள்
  • பெரிய சீரகம் - 1/2 தேக்கரண்சி
  • கடுகு - 1/4 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - 2
  • மஞ்சள் தூள் - 1/4 தேகரண்டி
  • கறித்தூள் - 1தேக்கரண்டி
  • சீரகதூள் - 1/2 தேக்கரண்டி
  • விப்பிங் கிறீம்/ - 3மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு
  • கறிவேப்பிலை

 

  • டோபுவை சிறிய துண்டுகளாக வெட்டி 1 மேசைக்கரண்டி எண்ணெயில் சாட்டே செய்து எடுக்கவும்.
  • கீரையை சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
  • பின்னர் அதனை வடித்து புட் புரோஸஸரில் போட்டு தண்ணீர் விடாது அரைத்து எடுக்கவும் (கரைய அரைக்க வேண்டாம்)
  • தக்காளி, உள்ளி, இஞ்சியை பிளன்டரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு வெங்காயம், பெரிய சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  • பின்னர் இதனுள் அரைத்த தக்காளி கலவை, மஞ்சள் தூள், கறித்தூள், சீரகதூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கலவை நன்கு கொதித்ததும் அதனுள் உப்பு, அரைத்த கீரையை சேர்த்து கொதிக்க விடவும்.
  • கீரை நன்கு சேர்ந்ததும் அதனுள் டோபு, கறிவேப்பிலை, விப்பிங் கிறீமை சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • சுவையான பாலக் டோபு தயார். இதனை நாணுடன் சேர்த்து பரிமாறவும். சப்பாத்தி, சாதத்துடனும் இது நன்றாக இருக்கும்.

Note:

இதற்கு extra firm or firm டோபு பாவிக்கவும். ஏனைய டோபுவிலும் செய்யலாம். ஆனால் அவை உடைய பார்க்கும். கவனமாக கிளற வேண்டும்.