கீரை பொறித்த கூட்டு

image

வழங்கியவர் : srividhyaiyer

தேதி : செவ்வாய், 15/12/2009 - 02:53

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • கீரை ஒரு கட்டு
  • (அது எந்த கீரையாகவும் இருக்கலாம்)
  • பயத்தம் பருப்பு அரை கப்
  • உப்பு தேவையான அளவு
  • வறுத்து அரைக்க:
  • உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  • மிளகு அரை டீ ஸ்பூன்
  • சீரகம் ஒரு டீ ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் 2
  • பெருங்காயம் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு

 

  • முதலில் கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேக வைத்து கீரையுடன் சேர்க்கவும்.
  • அடுத்து, வருக்கக் கொடுத்துள்ள பொருட்களை (மிளகாயைத் தவிர) எல்லாம் வெறும் வாணலியில் பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு வாணலியின் சூட்டிலேயே மிளகாயை போட்டு வறுத்து பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரவென அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு பருப்புடன் கூடிய கீரையில் இந்தப் பொடியைத் தூவி நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். விரும்பினால் தேங்காய் துருவலும் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கலாம்.

Note:

குறிப்பு: மேற்கண்ட பொடியை மொத்தமாக செய்து பத்திரப் படுத்திக் கொண்டு அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் எந்த காய்கறி யையும் வைத்து போரித்த் கூட்டு செய்யலாம்>