வாழைக்காய் கல்யாண கறி

image

வழங்கியவர் : srividhyaiyer

தேதி : புதன், 16/12/2009 - 00:08

ஆயத்த நேரம் : 10 minutes

சமைக்கும் நேரம் : 20 minutes

பரிமாறும் அளவு : for 2 people

0
No votes yet
Your rating: None
 

 

  • நன்கு முற்றிய வாழைக்காய் ஒன்று
  • தேங்காய் துருவல் 4 டீ ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சள் பொடி கால் டீ ஸ்பூன்
  • தாளிக்க
  • 2 டீ ஸ்பூன் எண்ணெய்
  • கடுகு கால் டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு கால் டீ ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் 2
  • கறிவேப்பிலை ஒரு கொத்து
  • வறுத்து அரைக்க:
  • 2 ஸ்பூன் தனியா
  • ஒரு ஸ்பூன் கடலை பருப்பு
  • அரை ஸ்பூன் சீரகம்
  • ஒரு காய்ந்த மிளகாய்

 

  • வாழைக்காயை தோல் சீவி சிறிது சிறிதாக (பொடிப் பொடியாக அல்ல) நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து ஒரு விசில் வரும் வரை குக்கரில் போடவும்.
  • பிறகு வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள வற்றை வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். (கடலை பருப்பு பொன்னிறமாக வேண்டும்.) பிறகு வறுத்த சாமான்களை ரவை போல் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து அதில், வேக வைத்த வாழைக் காயை வடித்து அதில் போட்டு கங்கு பிரட்டவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு வறுத்து வைத்துள்ள பொடியை வாழைக்காயில் தூவி நன்கு கலந்துவிடவும். கடைசியாக தேங்காய் துருவலையும் அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இப்போது சூப்பர் கல்யாண கறி ரெடி. பிறகென்ன...ஜாம் ஜாமென்று உள்ளே தள்ள வேண்டியதுதான்.

Note:

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மொத்தமாக அரைத்து பத்திர படுத்தி வைத்துக் கொண்டால் அவ்வப்போது செய்ய எளிதாக இருக்கும்.







தேங்காய் போடுவது புது மாதிரியா இருக்கு.இந்த வார இறுதியில் செய்து விடு சொல்கிறேன்.ஏன் கல்யாண வழக்கை நு பேரு??

Anbe Sivam

Anbe Sivam

வணக்கம் ,
நான் இந்தியா சென்றிருந்ததால் உடனே பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும். இப்போதுதான் உங்களின் மெயிலைப் பார்க்கிறேன்.
பொதுவாக பிராமணர் வீட்டு கல்யாணங்களில் பரிமாறப் படும் வாழைக்காய் கறியை இம்முறையில்தான் செய்வது வழக்கம். அதனால்தான் வாழைக்காய் கல்யாண கறி என்று பெயர்.
நன்றி
ஸ்ரீவித்யா

நல்ல டேஸ்ட்,கொஞ்சம் கரகரப்பாக டேஸ்டியா இருந்தது.

என்னுடைய குறிப்பைப் பார்த்து சமைத்து மறக்காமல் பின்னூட்டமும் அளித்துள்ளது மிகவும் உற்சாகமாக உள்ளது. மிக்க நன்றி ரீம். அந்த பொடி செய்து டப்பாவில் பத்திர படுத்திக் கொண்டுவிட்டால் பிறகு அவசர சமையலுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அன்புடன் ஸ்ரீவித்யா