வழங்கியவர் : திருமதி. சாந்தி விஸ்வநாதன்
தேதி : புதன், 24/02/2010 - 17:29
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- வல்லாரைக்கீரை - 2 கட்டு
- தேங்காய் துருவல் - ஒரு கப்
- தக்காளி - ஒன்று
- பெரிய வெங்காயம் - ஒன்று
- இஞ்சி - அரை அங்குல துண்டு
- புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
- கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- பெருங்காயம் - சின்ன கட்டி
- பச்சை மிளகாய் - 3
- உப்பு - அரை தேக்கரண்டி
![]() |
கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். |
![]() |
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம் போட்டு 30 நொடி வதக்கவும். |
![]() |
அதில் நறுக்கின வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கவும். |
![]() |
வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதனுடன் ஆய்ந்து வைத்திருக்கும் கீரையை போட்டு வதக்கவும். |
![]() |
அதனுடன் புளி, இஞ்சி, உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். |
![]() |
ஆறியதும் மிக்ஸியில் வதக்கியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும். சுவையான வல்லாரை துவையல் ரெடி. இந்த குறிப்பினை நமக்காக செய்து காட்டியவர் திருமதி. சாந்தி விஸ்வநாதன் அவர்கள். |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்






வணக்கம்
நான் புதிதாக வந்துள்ளேன் அருசுவை உணவுவகைகளைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் உங்கள் பணி சிறக்க வழ்த்துக்கள். மோகனம்0672