வழங்கியவர் : திருமதி. செல்வி செந்தில்
தேதி : வியாழன், 25/02/2010 - 16:56
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- இறால் - ஒரு கப்
- பொட்டுகடலை - கால் கப்
- தேங்காய் துருவல் - அரை கப்
- சின்ன வெங்காயம் - அரை கப்
- மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
- உப்பு - ஒரு தேக்கரண்டி
![]() |
இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். |
![]() |
பொட்டுகடலை, தேங்காய் துருவல் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். |
![]() |
சுத்தம் செய்த இறாலையும் நன்கு மையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். |
![]() |
பிறகு தேங்காய் விழுதுடன் அரைத்த இறால், மிளகாய் தூள், சோம்பு தூள், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கின வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும். |
![]() |
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி கையில் வைத்து தட்டி எண்ணெயில் போடவும். |
![]() |
இரு பக்கமும் வெந்ததும் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும். |
![]() |
சுவையான இறால் வடை தயார். இந்த வடை குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக விளக்கப்படங்களுடன் செய்து காட்டியவர் திருமதி. செல்வி செந்தில் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும். |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்







ரொம்ப ஈசியாக ருசியாக செய்து அசத்திட்டீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆவலைத் தூண்டுகிறதே.. ;)
இமா