தேங்காய்பால் சாதம்

image

வழங்கியவர் : ஆமினா

தேதி : செவ்வாய், 24/08/2010 - 02:40

ஆயத்த நேரம் : 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 3 நபர்கள்

4.5
2 votes
Your rating: None
 

 

  • அரிசி - 2 டம்ளர்
  • தேங்காய் பால் -4 டம்ளர்
  • கறிவேப்பிலை -2 கொத்து
  • ஏலக்காய் -2
  • பட்டை- ஒரு துண்டு
  • கிராம்பு-3
  • பிரிஞ்சி இலை - ஒன்று
  • எண்ணெய் அல்லது நெய்-தாளிக்க தகுந்தபடி

 

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
  • பின் கறிவேப்பிலை சேர்த்து, வெடித்து முடித்ததும் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதி வந்த பின் களைந்த அரிசியை கொட்டி உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் சற்று வற்றியதும் தீயை மிதமாக வைத்து பாத்திரத்தின் கீழே தோசைகல்லும் மூடியின் மேல் கனமான பொருள் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தம்மில் போடவும்.
  • 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் போது திறந்தால் போதும்.

Note:

கறிவேப்பிலை தான் இதற்கு வாசம் கொடுப்பது. தேங்காய் முதல் பால் தான் உபயோகிக்க வேண்டும். தரமான அரிசியில் செய்யலாம். பாஸ்மதி தேவையில்லை.வெங்காய ரெய்தா, கோழி குழம்பு,கிரேவி இவைகளோடு சேர்த்து சாப்பிட சுவை கூடும். செய்ய சுலபமானதும்,சுவையானதும் கூட







ஆமினா ,
நல்ல குறிப்பு
நீங்க முன்னாடி சொன்ன தேங்காய்பால் சாதம் இது தானா?
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புடன்,
கவிதா

ஆமி,
தேங்காய் பால் சாதம், நானும் இப்படி தான் செய்வேன், கறிவேப்பிலை சேர்க்காமல். ஆனால் பிரிஞ்சி சாதம் என்று ஏமாற்றி விடுவேன்.
குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

ஆமினா தொடர்ந்து கலக்கிகிட்டு இருகீங்க வாழ்த்துக்கள் தேங்காய்பால் சாதம் சுலபமாக உள்ளது செய்துபார்கிறேன்பா
ஆமி ஆமினு பதிவுபோட்டு கீபோர்டுல என்னை பார்த்து அழுவுதுபா, கண்ணை தொடச்சுவிட்டு அழுவாதுனு இப்பதான் சமாதானபடுத்திட்டு வந்தேன்,

தொடர்ந்து நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ஆமி....

அன்புடன்
நித்யா

இதே தான் கவிதா!

திடீர்ன்னு தேங்காய் சாதம் செய்யனும்னு ஆசை வந்தா இப்படி செய்து விடுவேன். வேலையும் சுலபமா முடிஞ்சுடும்.

தொடர்ந்து தரும் ஊக்கங்களுக்கு நன்றி கவிதா!

செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹர்ஷா

கறிவேப்பிலை சேர்த்து செய்து பாருங்க.நல்லா வாசனை கொடுக்கும். நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்காது தானே!

கிடைத்தால் இந்த முறையில் செய்து பார்த்துட்டு சொல்லணும்!

நன்றி பா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நித்யா,நித்யான்னு டைப்பண்ணி அந்த எழுதுக்களே மறஞ்சு போச்சு!
இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா
புது கீபோர்ட் தான் மாத்தணும்

உங்கள் ஆதரவும்,ஊக்கமும் தான்!

சுலபமானது பா. செய்து பாருங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
இங்கு கறிவேப்பிலை கிடைக்கிறது. ஆனால் விலை கொஞ்சம் அதிகம். அவ்வளவு தான். கண்டிப்பாக செய்துட்டு சொல்றேன்.

கிடைக்கும் போது கண்டிப்பா இந்த முரையில் செய்து பாருங்க. சாப்பிட்டுட்டு மறக்காம பதில் போடுங்க. காத்திட்டு இருப்பேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
கறிவேப்பிலை கை வசம் இருக்கு. செய்துட்டு, போட்டொவே அனுப்புறேன். wait பண்ணுங்க.

சீக்கிரம் அனுப்புங்க. காத்திட்டு இருக்கேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா உங்க குறிப்பு பாத்துதான் இன்னைக்கு தேங்காய்பால் சாதம் செய்தேன். ஆனால் அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு செய்தேன். மிக அருமையாக வந்தது.. குறிப்புக்கு மிக்க நன்றிப்பா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

செய்து பார்த்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி!

நீங்கள் செய்வதும் தேங்காய் சோறு தான்.நானும் அப்படி தான் செய்வேன். ஆனால் நெய் ஊற்றுவேன்.பாஸ்மதியில் செய்வேன். இந்த முறையில் ஒரு நாள் செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

நன்றி ராதா. மறக்காம பின்னூட்டமிட்டதற்கு!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா நான் தேங்காய் சாதம் இதற்கு முன் காய்கறி எல்லாம் போட்டு செய்வேன். ஆனால் இது தான் முதல் முறை வெறும் தேங்காய் பால் மட்டும் விட்டு செய்தது. என்ன ஒரு கஷ்டம் என்றால் என் கணவருக்கு பட்டை, சோம்பு போட்டு தாளித்தால் பிடிக்காது. எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவருக்காக நானும் சேர்க்காமல் தான் சமைக்கிறேன். உங்க குறிப்பு பாத்ததும் பட்டை சோம்பு சேர்க்காமல் வெங்காயம் இஞ்சி புண்டு சேர்த்து செய்துவிடலாமே என்று செய்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. நானும் நீங்க சொன்ன மாதிரி பாஸ்மதி அரிசில தான் செய்தேன். நெய் சேர்த்தேன்.... நான் குத்துமதிப்பா செய்தேன்.. அப்ப இதுக்கு பேரும் தேங்காய் பால் சாதம் தானா?....அப்பாடி... தேங்ஸ் ஆமினா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நன்றி பா.

கண்டிப்பா....

நாம்ம என்ன வைக்கிறோமோ அதானே பேரு:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா .கல்யாணத்திற்கு போனதால் தேங்காய் நிறைய சேர்ந்து விட்டது .ஆதலால் இன்று தேங்காய் வைத்து சாதம் செய்யலாம் என்று என் கணவர் சொன்னார் .அவர் சொன்னால் அப்பீல் ஏது .உங்களின் இந்த சாதம் தான் இன்று மதியம் .நான் தம்மில் சமைத்தது இல்லை .ஆதலால் மிகவும் பயந்தேன் ஆனால் நன்றாக வந்தது.நான் அறுசுவை பார்த்து சமைத்த முதல் சமையல் இது.என் சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தவறுதலாய் இங்கே பேஸ்ட் செய்துவிட்டேன்
மன்னியுங்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தவறுதலாய் இங்கே பேஸ்ட் செய்துவிட்டேன்
மன்னியுங்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா