அதிரசம்

வழங்கியவர் : திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்
தேதி : புதன், 31/05/2006 - 16:45
ஆயத்த நேரம் : ----------
சமைக்கும் நேரம் : முப்பது நிமிடங்கள்
பரிமாறும் அளவு : பதினைந்து நபர்களுக்கு
- ப.அரிசி - அரை கிலோ
- வெல்லம் - கால் கிலோ
- ஏலக்காய் - ஐந்து
- நெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
- ரீபைண்ட் ஆயில் - அரை லிட்டர்
- ஏலக்காயை தோல் நீக்கி பொடித்து வைக்கவும்.
- அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி நீரை நன்கு வடித்து விட்டு ஈரமாக இருக்கும் போதே மிக்ஸியில் போட்டு திரித்து சல்லடையில் சலித்து மாவு தாயாரிக்கவும்.
- மாவு ஈரமாக இருக்கும் போதே அடுப்பில் வாணலியை வைத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வெல்லத்தை பொடித்து சேர்க்கவும்.
- பாகு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து முத்துப் பதத்திற்கு பாகு வைக்கவும்.
- பாகு பதத்திற்கு வந்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு கிண்ட வேன்டும்.
- பிறகு ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
- மாவு இருக்கமாக இருக்கக் கூடாது. சிறிது தளர இருக்க வேண்டும். மாவை உருண்டைய்யாக உருட்டினால் வெடிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, மாவை ஒரே உருண்டையாக உருட்டி சுற்றி நெய் தடவி அதில் போட்டு மூடி வைக்கவும்.
- மறுநாள் மிதமான தீயில் எண்ணையை சூடாக்கவும்.
- சிறிய எலுமிச்சையளவு மாவை உருண்டையாக உருட்டி பிறகு லேசாக தட்டி எண்ணையில் போட்டு பொறித்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
Note:
*முத்து பதம் என்பது ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, சிறிது பாகை விட்டு ஒரு நிமிடம் கழித்து கையால் உருட்டினால் மெதுவான உருண்டையாக இருக்க வேண்டும். (கடினமாக இருக்க கூடாது)
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
migavum nandranna kurippu
Naan ikarukalai ellam padikum bodum.. migavum kavalaiyaga irukum..ennakum ippadipatta karuthukalai therivikka mudiyalai..endru. adan karanam..i dontknow..how to do joint this website.thank god..i can do it successfully.. hello friends ..my name is aleena fathima , am housewife,i can share lot of things with u all hope so.