பட்டாணி உருளை குருமா

வழங்கியவர் : ஆமினா
தேதி : ஞாயிறு, 07/08/2011 - 21:05
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- பட்டாணி- 50 கிராம்
- உருளை-கால் கிலோ
- வெங்காயம்-2
- தக்காளி-2
- பச்சை மிளகாய்-2
- கொத்தமல்லி-சிறிதளவு
- இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
- தேங்காய்- கால் மூடி
- கறிமசாலா தூள்- 6 ஸ்பூன்
- பட்டாணியும் உருளையும் பாதியாக வேக வைக்கவும்
- உருளையை தோலுரித்து நான்கு பாகமாக நறுக்கிக்கொள்ளவும்
- தேங்காயை மையாக அரைத்துக்கொள்ளவும். கடைசியில் கறிமசாலா தூளை சேர்த்து ஒரு சுற்று விடவும்
- எண்ணெயில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- பின்னர் கொத்தமல்லி, தக்களி சேர்த்து கிளறவும்
- பின் தேங்காய் விழுதில் நீர் கலந்து கரைத்து அதில் சேர்க்கவும்
- மசாலா வாசனை போனதும் உருளையும் பட்டாணியும் சேர்த்து வேகும் வரை வைத்திருந்து பின் இறக்கவும்
Note:
சப்பாத்தி பூரி இடியாப்பம் தோசை ஆகியற்றுடன் சாப்பிடலாம்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
வாழ்த்துகள் ஆமி
சூப்பர்ப் ரெசிபி. டிரை பண்ணி பார்க்கிறேன்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
ரொம்ப நன்றி மஞ்சு
செய்து பார்த்துட்டு சொல்லுங்க
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா