தேவையான பொருட்கள்
- சிறிய காரட் - இரண்டு
- சிறிய உருளைக் கிழங்கு - இரண்டு
- காலிபிளவர் - நூறு கிராம்
- ப. பட்டணி - ஐம்பது கிராம்
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - இரண்டு
- எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
- மிளகாய்ப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் பொடி - அரை டீ ஸ்பூன்
- உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- பட்டை. இலை, அன்னாசிப்பூ - தாளிக்க
- கறிவேப்பிலை - இரண்டு கொத்து
- அரைக்க:
- தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
- பொட்டுக்கடலை - ஒரு டீ ஸ்பூன்
- சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
- ககசா - ஒரு டீ ஸ்பூன்
- பூண்டு - இரண்டு பல்
|
செய்முறை
- காரட், உருளையை தோல் நீக்கி அரை அங்குல கணமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
- காலிபிளவரை உப்பு கலந்த வெண்ணீரில் போட்டு வைக்கவும்.
- வெங்காயத்தை நீளமான துண்டுகளாக நறுக்கவும்.
- தக்காளியை குறுக்கில் ஆறு துண்டுகளாக நறுக்கவும்.
- அரைக்க வைதுள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைதுள்ளவற்றை போடவும்.
- வாசனை வந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- பிறகு காய்களைப் போட்டு பாதி வதங்கியதும் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
- பொடிகளின் பச்சை வாச்னை போன பின் தக்காளியைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
- ஐந்து நிமிடம் கழித்து ப. பட்டணி, அரைத்த விழுதைப் போட்டு அடிக்கடி கிண்டி விட்டு மேலும் பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
|
குறிப்பு:
ப. பட்டாணி வேக எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவு என்பதால் கடைசியில் சேர்த்தால் போதும்.
வழங்கியவர்
திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
ஆறு நபர்களுக்கு |
பத்து நிமிடங்கள் |
இருபது நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 4 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 4 நாட்கள் முன்பு -