தேவையானப் பொருட்கள்
- பாசிப் பயறு -நூற்றைம்பது கிராம்
- வெங்காயம் - இரண்டு
- தக்காளி - இரண்டு
- மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
- மிளகாய் பொடி - அரை டீ ஸ்பூன்
- உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- எண்ணை - இரன்டு டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - இரண்டு கொத்து
- பட்டை, இலை, அன்னாசிப்பூ - தாளிக்க
- அரைக்க:
- தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
- வர மிளகாய் - நான்கு
- பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
- சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
- கசகசா - ஒரு டீ ஸ்பூன்
- பூண்டு - இரண்டு பல்
செய்முறை
- பாசிப் பயறை இரவு தண்ணீரில் ஊற வைத்து முறுநாள் காலையில் கழுவி நீரை வடித்து விட்டு காட்பேக்கில் போட்டு மூடி வைத்தல் மறுநாள் முளை விட்டு இருக்கும்.
- பாசிப் பயரில் இறுநூறு மி.லி தண்ணீர் விட்டு உப்பு போட்டு முக்கால் வேக்காடு வேக வைக்கவும்.
- வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை குறுக்கில் ஆறு துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.
- பயறில் உள்ள தண்ணிரை வடித்து அந்தத் தண்ணீரை ஊற்றி அரைக்க வைத்துள்ளவற்றை அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ள வற்றைப் போட்டு வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- மூன்று நிமிடம் வதக்கி மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்க்கவும்.
- வதங்கியதும் தக்காளி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பயறை சேர்க்கவும்.
- ஐந்து நிமிடம் கழித்து அரைத்த மசாலா போட்டு கொதிக்க விடவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிண்டி விட்டு பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
-
குறிப்பு
முளை விட்ட பாசிப்பயறில் புரதம் (புரோட்டீன்) அதிக அளவில் உள்ளதாம்
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
ஆறு நபர்களுக்கு |
இருபத்தைந்து நிமிடங்கள் |