தக்காளி பருப்பு பச்சடி

image

வழங்கியவர் : CHITHRA DURAI

தேதி : Sat, 19/08/2006 - 13:53

ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • தக்காளி – கால் கிலோ
  • வெங்காயம் – இரண்டு
  • பச்சை மிளகாய் – ஆறு
  • துவரம் பருப்பு – நூறு கிராம்
  • எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வரமிளகாய் - இரண்டு
  • சோம்பு – கால் டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – இரண்டு கொத்து
  • மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
  • அரைக்க:
  • சோம்பு – அரை டீஸ்பூன்
  • சீரகம் – அரை டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
  • பூண்டு – ஒரு பல்

 

  • பருப்பை இருநூறு மில்லி தண்ணீரில் மலர வேக வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாயை வாய் பிளந்தும் வைக்கவும்.
  • தக்காளிகளை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • பிறகு வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு இறக்கி மீதமுள்ள எண்ணெயில் கிள்ளிய வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி, மல்லி இலை தூவி மூடவும்.

Note:

இந்தப் பச்சடி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் மிக நன்றாக இருக்கும்.