தேவையானப் பொருட்கள்
- வாழைக்காய் – இரண்டு
- சி. வெங்காயம் – நூறு கிராம்
- தக்காளி – இரண்டு
- பெ. வெங்காயம் – இரண்டு
- மிளகாய்ப் பொடி – இரண்டு டீ ஸ்பூன்
- மல்லிப் பொடி – ஒன்றரை டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
- புளி – ஒரு நடுத்தர எலுமிச்சையளவு
- உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- எண்ணை – மூன்று டேபிள் ஸ்பூன்
- சோம்பு – ஒரு டீ ஸ்பூன்
- வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை – மூன்று கொத்து
- பூண்டு – இரண்டு பல்
|
செய்முறை
- புளியை நானூறு மிலி தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும்.
- வாழைக்காயில் அடியையும் நுனியையும் லேசாக நறுக்கி விட்டு நீளத்தில் நான்காக பிளந்து அரை அங்குல கணமான துண்டுகளாக குறுக்கில் நறுக்கி தண்ணிரில் போட்டு வைக்கவும். (தோல் நீக்க வேண்டாம்)
- சி. வெங்காயத்தை தோலுரித்து குறுக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்.
- பெ. வெங்காயம் , தக்காளியை நறுக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி பெ. வெங்காயத்தை போட்டு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கி விழுதாக அரைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணை ஊற்றி சோம்பு, வெந்தயம் தாளித்து சி.வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் கழித்து ம. பொடி, மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து வதக்கவும்.
- பொடிகளின் பச்சை வாடை போனதும் உப்பு, அரைத்த விழுது, புளிக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- ஐந்து நிமிடம் கழித்து வாழைக்கய் துண்டுகளைப் போட்டு மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு பூண்டு தட்டிப் போடவும்.
- நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
ஆறு நபர்களுக்கு |
பத்து நிமிடங்கள் |
இருபத்தைந்து நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
49 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
55 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -