உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

வத்தல் குழம்பு

 


தேவையானப் பொருட்கள்

  • சுன்டைக்காய் வற்றல் - இருபது கிராம்
  • சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
  • எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
  • புளி - சிறிய எலுமிச்சையளவு
  • மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
  • கடுகு - அரை டீ ஸ்பூன்
  • வெந்தயம் - கால் டீ ஸ்பூன்
  • கடலைப் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - இரண்டு கொத்து
  • உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
  • வதக்கி அரைக்க:
  • பெ. வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - இரண்டு
  • சாம்பார் பொடி - இரண்டு டீ ஸ்பூன்

செய்முறை

  • முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு வற்றலைப் பொரித்து வைக்கவும்.
  • சி. வெங்காயத்தை தோல் நீக்கி அப்படியே முழுதாக வைக்கவும்.
  • தக்காளி, பெ. வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
  • ஒரு டீ ஸ்பூன் எண்ணை விட்டு பெ. வெங்காயம் போட்டு வதக்கி, பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி, சாம்பார் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.
  • புளியை ஊற வைத்து நானூறு மி.லி தண்ணீரில் கரைத்து வடி கட்டி வைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள எண்ணை ஊற்றி கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு, வற்றல் சேர்த்து ஒரு நிமிடம் பிறட்டி பின் புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
  • ஐந்து நிமிடம் கழித்து அரைத்த விழுது சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

வழங்கியவர்

திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

ஐந்து நபர்களுக்கு பத்து நிமிடங்கள் இருபது நிமிடங்கள்
random food image


comments