www.arusuvai.com
வத்தல் குழம்பு
தேவையானப் பொருட்கள்
- சுன்டைக்காய் வற்றல் - இருபது கிராம்
- சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
- எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
- புளி - சிறிய எலுமிச்சையளவு
- மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
- கடுகு - அரை டீ ஸ்பூன்
- வெந்தயம் - கால் டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - இரண்டு கொத்து
- உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
- வதக்கி அரைக்க:
- பெ. வெங்காயம் - ஒன்று
- தக்காளி - இரண்டு
- சாம்பார் பொடி - இரண்டு டீ ஸ்பூன்
செய்முறை
- முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு வற்றலைப் பொரித்து வைக்கவும்.
- சி. வெங்காயத்தை தோல் நீக்கி அப்படியே முழுதாக வைக்கவும்.
- தக்காளி, பெ. வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
- ஒரு டீ ஸ்பூன் எண்ணை விட்டு பெ. வெங்காயம் போட்டு வதக்கி, பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி, சாம்பார் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.
- புளியை ஊற வைத்து நானூறு மி.லி தண்ணீரில் கரைத்து வடி கட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள எண்ணை ஊற்றி கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு, வற்றல் சேர்த்து ஒரு நிமிடம் பிறட்டி பின் புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
- ஐந்து நிமிடம் கழித்து அரைத்த விழுது சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
ஐந்து நபர்களுக்கு |
பத்து நிமிடங்கள் |
இருபது நிமிடங்கள் |