தேவையானப் பொருட்கள்
- புளிச்ச கீரை - ஒரு கட்டு
- சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
- தக்காளி - இரண்டு
- ப. மிளகாய் - மூன்று
- து. பருப்பு - நூறு கிராம்
- எண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன்
- கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
- சீரகம் - கால் டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - இரண்டு கொத்து
- உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் பொடி - அரை டீ ஸ்பூன்
- சாம்பார் பொடி - ஒரு டீ ஸ்பூன்
|
செய்முறை
- து. பருப்பில் இருநூறு மிலி தண்ணீர், மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
- கீரையில் உள்ள நரம்பை நீக்கி நறுக்கி ஒரு டீ ஸ்பூன் எண்ணையில் நன்கு வதக்கி வைக்கவும்.
- வெங்காயம் தக்காளியை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை இரண்டாக வாய் பிளந்தும் வைக்கவும்.
- பருப்பு நன்கு வெந்ததும் தக்காளி, வெங்காயம், ப. மிளகாய், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
- பின் கீரையைப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறுக மூடவும்.
|
வழங்கியவர்
திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
ஐந்து நபர்களுக்கு |
பத்து நிமிடங்கள் |
இருபத்தைந்து நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
8 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -