தேவையான பொருட்கள்
- முந்திரி பருப்பு 50கிராம்
- கடலை மாவு 200கிராம்
- அரிசி மாவு 200கிராம்
- வெங்காயம் பெரியது 3
- புதினா ¼ கட்டு
- பச்சை மிளகாய் 2 அல்லது 3
- இஞ்சி 1துண்டு
- பூண்டு 5 அல்லது 6 பல்லு
- சோம்பு 1தேக்கரண்டி
- சமையல் சோடா 1சிட்டிகை
- எண்ணெய் பொரிப்பதற்கு
- உப்பு தேவையான அளவு
|
செய்முறை
- முந்திரி பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
- புதினாவை மண் இல்லாமல் கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும்.
- பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு,இவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலாமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, உடைத்த முந்திரி பருப்பு, வெங்காயம், புதினா இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- சிறிது எண்ணெயை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
- சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
- மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டுபிசிறினால் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொரிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
- இனிமையான மாலை நேர Tea timeக்கு மொறு மொறு முந்திரி பக்கோடா ரெடி.
|
வழங்கியவர்
Vijaya Amarnath
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 |
3 நிமிடங்கள் |
20 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
14 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
28 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 30 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
40 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
42 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
43 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
52 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -