தேவையானப் பொருட்கள்
- முட்டை -6,
- தக்காளி - 1,
- சின்ன வெங்காயம் - 15,
- பெரிய வெங்காயம் - 1,
- பூண்டு - 4 பல்,
- காய்ந்த மிளகாய் - 5,
- தேங்காய் துருவல் - 1 மூடி,
- சோம்பு - 1 தேக்கரண்டி,
- கசகசா - 1 தேக்கரண்டி,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - சிறிது,
- மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 2 ஸ்பூன்.
|
செய்முறை
- சிறிய வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
- வதக்கியவற்றோடு சோம்பு, கசகசா, சீரகம், தனியா தூள் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
- பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கிய பின், அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
- குழம்பு கொதித்ததும், முட்டையை உடைத்து ஒவ்வொன்றாக பக்கம், பக்கமாக ஊற்றவும்.
- முட்டை வெந்து மேலே மிதக்கும் போது இறக்கவும்.
|
குறிப்பு:
சாதத்திற்கும், சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
20 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
43 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -